Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'காயமடைந்த அரசியல் கைதிகளை சட்டத்தரணிகள் பார்வையிடுவதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

prison(9).jpg

[size=2][size=4]29ஆம் திகதி நடைபெற்ற சம்பவத்தை அடுத்து ஏற்பட்ட நெருக்கடி நிலைமையினால் மஹர சிறைசாலைக்கும் ராகம மருத்துவமனைக்கும் காயமடைந்த நிலையில் கொண்டுவரப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை பார்வை இடுவதற்கு சட்டத்தரணிகள் முயற்சி செய்ததனர். ஆனால், இந்த காயமடைந்த கைதிகளை பார்வையிடுவதற்கு சட்டத்தரணிகளுக்கு உள்ள உரிமை மறுக்கப்பட்டுள்ளது என தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் மக்கள் கண்காணிப்பு தெரிவித்தது.

இது தொடர்பில் குறித்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது,

"மக்கள் கண்காணிப்பு குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டு கொழும்பில் இன்று கூடிய அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், சட்டத்தரணிகள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் அடங்கிய கூட்டத்தில் இது தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் மஹர சிறைச்சாலையில் வைக்கப்பட்டு ராகம மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி நிர்மலரூபன் மரணமடைந்துள்ளார் என்ற செய்தி எங்களுக்கு கிடைத்துள்ளது.

மஹர, போகம்பர சிறைச்சாலைகள், அனுராதபுர, ராகம, வெலிசர மருத்துவமனைகளுக்கு சென்று சம்பந்தப்பட்ட அனைத்து கைதிகளையும் பார்வை இடுவதற்கு கைதிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கும் சட்டத்தரணிகளுக்கும் உள்ள உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என நாம் கோருகிறோம்.

காயமடைந்த கைதிகளை பார்வையிட்டு அவர்களுக்கு சிகிச்சைகள் மற்றும் மனிதாபிமான உரிமைகள் வழங்கப்படுவதையும் நடந்த சம்பவம் தொடர்பான பக்கசார்பற்ற முழு விசாரணைகள் நடத்தப்படுவதையும் உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என நாம் சர்வதேச செஞ்சிலுவை சங்கம், இலங்கை மனித உரிமை ஆணைக்குழு ஆகியவற்றை கோருகிறோம்.

அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் இனிமேல் ஒத்திவைக்கப்பட முடியாத நிரந்தர தீர்வுக்கு அரசாங்கம் உடனடியாக வர வேண்டும் என வலியுறுத்தி கூறுவதுடன் இது தொடர்பான மேல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இங்கு இன்று கூடிய நாம் அனைவரும் திட சங்கற்பம் பூண்டுள்ளோம்.

இது தொடர்பில் உடனடியாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கும் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கும் உரிய பல்வேறு முடிவுகளை நாம் எடுத்துள்ளோம்.

மக்கள் கண்காணிப்பு குழு இணை தலைவர்கள் நிமல்கா பெர்னாண்டோ, சிறிதுங்க ஜெயசூரிய, ஏற்பாட்டாளர் மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஸா, சுரேஷ் பிரேமச்சந்திரன், ஜயலத் ஜெயவர்தன, எம்.ஏ.சுமந்திரன், சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், ஈ.சரவணபவன், அப்பாதுரை விநாயகமூர்த்தி, பொன் செல்ராசா, கட்சி தலைவர்கள் வி.ஆனந்த சங்கரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.[/size][/size]

[size=2][size=4]

http://www.tamilmirr...4-11-35-00.html[/size][/size]

[size=4]இவர்களை அதாவது 'தடுத்து வைக்கப்பட்ட சட்டத்தரணிகளை' பாராளுமன்ற உறுப்பினர்கள் போய் விடுவிக்க வேண்டிய நிலை. [/size]

[size=4]உலகில் சாதாரண மக்கள் தடுத்து வைக்கப்படும்பொழுது சட்டத்தரணிகளை நாடுவார்கள். சட்டத்தரணிகள் தடுக்கப்படும்போழுது இங்கே பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகிறார்கள். அவர்களும் தடுக்கப்படும்பொழுது ......[/size]

எல்லாவற்றையும் மறைக்கிறார்கள். ரம்புகவெல போன்ற கோமாளிகள்தாம் இதற்காக பயன் படுத்தபடும் ஆயுதங்கள். தங்கள் திருதாளங்களை மறைப்பதற்கு அவர்களுக்குஅரசின் திருதாளங்களை மறைக்க துணை போகவேண்டியிருக்கிறது.

Edited by மல்லையூரான்

தமிழ் மக்கள் தங்களது தமிழ் பதிப்பை வாங்குவதற்காக இச்செய்தியை தமிழில் வெளியிட்ட மிரர் இணையத்தளமானது, அதன் ஆங்கில, சிங்கள பதிப்பிலோ/இணைய செய்திகளிலோ இப்படிப்பட்ட செய்திகளை வெளியிடுவதில்லை .. நம்மிலும் முன்னர் தான் ஜனநாயகத்துக்கு திரும்பியோர் என்றவர்களும்/ இன்று அரசியல் வெற்றிடத்தில் சுழலும் மாகமாக்களின் இணையங்கள் கூட இப்படியான செய்திகளை வெளியிடுவதில்லை!

இச்சம்பவத்தை ததேகூ ஆனது இன்னும் சர்வதேசத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லவில்லை! இச்சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உடனடியாக எவ்வித எதிர்ப்பு நடவடிக்கைகளையும் நடாத்தவில்லை! ... சிங்களவன் இப்படியான சம்பவங்களை மறைக்க முன்னர் நம்மவர்களே மறைக்க எத்தனிக்கின்றார்கள்!!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.