Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக காங்.,கில் சிதறி ஓடுது சிதம்பரம் கோஷ்டி !

Featured Replies

[size=5]தமிழக காங்.,கில் சிதறி ஓடுது சிதம்பரம் கோஷ்டி ![/size]

[size=3][size=4]ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் வேட்பாளரான பின், மத்திய அரசில் சிதம்பரத்தின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. ஆனால், மாநில அரசியலில் அவரது கோஷ்டியில் இருந்த பிரமுகர்கள், நெல்லிக்கனிகள் போல சிதறி ஓட்டம் பிடிப்பதால், வலு குறைந்து வருகிறது. நாட்டின் பாதுகாப்பு பிரச்னைகள், மத்திய அரசின் கொள்கை முடிவுகள், முக்கிய திட்டங்கள் குறித்த முடிவுகளை எடுக்கும் போது, சிதம்பரத்தின் ஆலோசனையை பிரதமரும், சோனியாவும் கேட்கும் அளவுக்கு, முக்கிய தலைவராக டில்லியில், அவர் வலம் வருகிறார். தமிழக காங்கிரசில் மத்திய அமைச்சர் வாசன் அணிக்கு அடுத்த அணியாக, சிதம்பரம் அணி திகழ்கிறது.[/size][/size]

[size=3][size=4]அரசியலில் கவனம்: வாசன் அணிக்கு இணையாக, தமிழகம் முழுவதும் சிதம்பரத்தின் அணியை பலப்படுத்தும் வகையில், அவரது ஆதரவாளர்கள் ஒரு சிலர், மூளையாகச் செயல்பட்டனர். சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கட்சிப் பணியில் தீவிரமாக இறங்கியதும், அந்த அணிக்கு பலம் ஏற்பட்டது. தேசிய அரசியலில் சிதம்பரமும், மாநில அரசியலில் அவரது மகன் கார்த்தியும் கவனம் செலுத்தினர். இதனால், கடந்த முறை நடந்த இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் தேர்தலில் இரண்டாவது இடத்திலும், மாணவர் காங்கிரஸ் தேர்தலில் முதலிடத்திலும், சிதம்பரம் அணி வாகைச் சூடியது.[/size][/size]

[size=3][size=4]ஓட்டம் ஆரம்பம் : [size=5]ஆனால், தமிழக காங்கிரசில் சிதம்பரத்தின் செல்வாக்கு தொடரவில்லை[/size]. அவரது ஆதரவாளர்களாக மாவட்ட வாரியாக இருந்த பிரமுகர்கள் அவிழ்த்துவிட்ட மூட்டையிலிருந்து, சிதறி ஓடும் நெல்லிக்கனிகளை போல வரிசையாக ஓட்டம் பிடித்து வருகின்றனர். இதனால், சிதம்பரம் அணி கலகலத்து வருவதாக கூறுகிறது, கதர் வட்டாரம்.[/size][/size]

[size=3][size=4]கோஷ்டிக்குள் கோஷ்டி: இதுகுறித்து, காங்கிரஸ் பிரமுகர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:[/size][/size]

[size=3][size=4]சிதம்பரம் அணிக்குள்ளே இரண்டு அணி செயல்படுகிறது. ஒரு அணி முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவர் தலைமையிலும், இன்னொரு அணி கார்த்தி சிதம்பரம் தலைமையிலும் செயல்படுகிறது. சிவகங்கை தொகுதியில், மக்கள் குறைகளை தீர்க்கும் பணிகள் மற்றும் டில்லியில் அரசியல் பணிகளை நிறைவேற்றுவதில், முன்னாள் எம்.எல்.ஏ., ஈடுபடுகிறார்.கட்சி விழாக்களுக்கும், திருமண விழாக்கள் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில், சிதம்பரம் பங்கேற்பதற்கு, முன்னாள் எம்.எல்.ஏ.,விடம் அனுமதி பெற வேண்டும். எனவே அவரை சுற்றி ஒரு கூட்டம் எப்போதும் காணப்படுகிறது.[/size][/size]

[size=3][size=4]விளையாட்டில் ஆர்வம் : சிதம்பரம் அணியை வலுவாக்குவதில் ஆர்வம் காட்டிய அவரின் மகன் கார்த்தி சிதம்பரமும், சமீப காலமாக, டல் அடித்து வருகிறார். துவக்கத்தில், தந்தை அணியிலே தனக்கும் ஒரு அணியை உருவாக்கியதால், ஒரு ஜூனியர் எம்.பி.,க்கும், கார்த்திக்குக்கும் கருத்து வேறுபாடு உருவாகியது. இதனால், அரசியல் களத்தில் இருந்து ஒதுங்கி, டென்னிஸ் களத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். அவரை நம்பி இந்த கோஷ்டிக்கு வந்தவர்கள், இதனால் அப்செட் ஆகியுள்ளனர். முன்னாள் எம்.எல்.ஏ., கோவை செல்வராஜ், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் சிரஞ்சீவி, முன்னாள் கவுன்சிலர் ருக்மாங்கதன், செங்கம் குமார் என, சிதம்பரம் அணியிலிருந்து வெளியேறும் பிரமுகர்கள் பட்டியல் நீண்டு வருகிறது. இதில், ருக்மாங்கதன் மட்டும் விரைவில், தி.மு.க.,வில் சேர முடிவு செய்துள்ளார். சென்னையில், சமீபத்தில் நடந்த மாணவர் காங்கிரஸ் பிரமுகர் இல்லத் திருமணத்தில், சிதம்பரம் [/size][size=4]பங்கேற்றுள்ளார். அவருக்கு வரவேற்பு கொடுக்கும் வகையில், வழி நெடுகிலும் விளக்குகளை அமைத்துள்ளார், வடசென்னை மாவட்டத்தை சேர்ந்த சிதம்பரம் ஆதரவாளர் ஒருவர். இதை விரும்பாத சிதம்பரம், அந்த பிரமுகரை கண்டித்ததோடு, அவர் கொடுத்த பூங்கொத்தை கூட வாங்க மறுத்துவிட்டராம். இது போன்ற கண்டிப்பான நடவடிக்கைகளால், அதிருப்தியடையும் ஆதரவாளர்களும், அவரை விட்டு விலகி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். [/size][/size]

[size=3][size=4]- நமதுசிறப்பு நிருபர்- [/size][/size]

[size=3]http://tamil.yahoo.c...-093700131.html[/size]

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக காங்கிரஸ், தமிழ்நாட்டில் தனித்து போட்டியிட்டால்... கவுன்சிலர் பதவி கூடக் கிடைக்காது.

தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை, காங்கிரஸ் தலைவர்களும்.... திராவிடக் கட்சிகளின் துணை இன்றி, டெல்லிக்குப் போயிருக்கவே முடியாத நிலையில்....

இவர்களுக்கு, வாய்க்கொழுப்பு அதிகம். இதில் சிதம்பரம் என்பவர்... கள்ள வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவர் என்றும்.., அவரின் தெரிவை இரத்துச் செய்யவேண்டும் என்னும்... குற்றச்சாட்டை தெரிவித்து, தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அடுத்த தேர்தலும்.. வரப்போகுது. இந்தியாவில் இது எல்லாம்... சாத்தியமே. அடுத்த தேர்தலில்... சிதம்பரத்துக்கு மட்டுமல்ல, காங்கிரஸ் கூடாரமே... தமிழகத்தில் இல்லாது போகும். :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலைமையை உருவாக்கிய சீமானுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் நன்றிகள்! :)

கருணாநிதியும்- காங்கிரசும் ஆண்டபோது தமிழகத் தமிழர்கள் செய்வது அறியாது தற்கொலைதான் செய்தார்கள். அதாவது அவர்களின் தன் நம்பிக்கை தரை மட்டத்தின் கீழே போயிருந்தது. முதுக்குமாரை சரியாக ஒரு அடக்கம் செய்யக்கூட இந்த கூட்டு விடவில்லை. செங்கொடி வரைக்கும் அழிந்து தொலைந்தது இந்தியாவின் மிகப்பெரிய கொள்ளை குடும்பங்கள் இரண்டு, ஒன்று சேர்ந்து தமிழ் மக்களை நசுக்கியதால் ஆகும். இப்போது அவர்கள் ஈழத்தவருக்கு முறையான ஆதரவு தெரிவிக்க கூடியதாக இருக்கிறது. அவர்களின் முயற்சியால் இந்தியா பிரேரணையை ஆதரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்தியா தமிழருக்கு சார்பாக நடந்தால் உடனே இலங்கை சீனாவுடன் சேர்ந்து இந்தியாவை தரை மட்டம் ஆக்கிவிடும் என்ற லஞ்ச ஊழல் மலயாளிகளின் கூக்குரல் நடிப்பு இந்தியா வாக்களித்ததின்பின் இலங்கையால் இந்தியாவை ஒன்றும் செய்ய முடியாமலிருப்பதிலிருந்து பொய் என்பது வெளியாகிவிட்டது. இலங்கையால் கறுவிக்கொண்டிருக்கமட்டும்தான் முடிகிறது. அதேநேரம் இந்தியா இலங்கையின் காலில் விழுவதால் இலங்கை தனது சீனா உறவை மாற்றும் என்பதும் காங்கிரஸ் - கருணாநிதியின் கூட்டத்தின் நடடிப்பே. இந்தியா இதுவரையில் எத்தனை தடவை காலில் விழுந்தும் இலங்கை தனது நிலைபாட்டிலிருந்து விலகவுமில்லை. இலங்கை எப்படி தனது கொள்கைகளில் நடந்து கொள்ளும் என்பது இதற்காக புலனாய்வு வைத்திருக்காத நாடுகளுக்கே விளங்க வேண்டும். எனவே காங்கிரஸ் நிதானமாக தெரிந்து கொண்டுதான் தனது தற்கால இலங்கை-காங்கிரஸ் உறவை தொடர்கிறது. இந்த கூட்டின் ஒரே நோக்கம் பொய்களைச் சொல்லி கொள்ளை அடிப்பதே. சிதம்பரம் நிறையத்தான் தொலைபேசிக்கமபனிகளில் முதலிட்டிருக்கிறார். இந்த கூட்டு தோற்றால்தான் எல்லாம் வெளியில் வரும்.

இப்போது இலங்கை-காங்கிரஸ் உறவைப்பற்றி ஜெயலலிதா பிரஸ்த்தாபிக்க ஆரம்பித்திருக்கிறா. அவரது அனுமாங்களில் இந்த பிரஸ்தாபங்கள் தேர்தலுக்கு எடுபடத்தக்கதாக கண்டாவானால், இது மத்தியில் தேர்தலுக்கு ஒரு பிரச்சார பொருளாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. ரஜிவ்காந்திக்கு ஜே.ஆர். நேவிக்கரனை வைத்து அடித்து மிரட்டியதால் இன்றுவரை மிரண்டுபோயிருக்கும் இந்தியாவின் மிரண்ட அரசியல் கொளகைகளை முதன் முதல் ஜெயலலிதா தாக்கி பேசியிருக்கிறா. இந்த பேச்சு இந்தியாவில் விலை போகும் என்று எதிர்பார்ப்போமாக.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

[size=4]சிதம்பரம் ஒரு நல்ல பொருளாதார அறிவாளி. அரசியலை விட்டு அந்த துறையில் தமிழகத்திற்கு உதவினால் .... மக்கள் மனங்களில் நிறைவார். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]சிதம்பரம் ஒரு நல்ல பொருளாதார அறிவாளி. அரசியலை விட்டு அந்த துறையில் தமிழகத்திற்கு உதவினால் .... மக்கள் மனங்களில் நிறைவார். [/size]

அதனை மறுப்பதற்கில்லை. பேரப்பிள்ளையும் கண்ட வயதில், அவர் இந்திய ஜனாதிபதிக்கு பருந்துரை செய்கின்றேன்.

தனது இளமை அரசியல் காலத்தில், தமிழ்நாட்டு மக்களுக்கும், ஈழத்து மக்களுக்கும் அவரது அரசியல் தொடர்பை பயன்படுத்தி... மறைந்த எம்.ஜீ.ஆருடனும். இந்திரா காந்தியுடனுடனும்..... ஏன்? ராஜீவுடனும், சோனியாவுடன் கூட செல்வாக்கை பிரயோகிக்கும் தகுதி பெற்ற சுத்த தமிழர். அவருக்கு, அந்த மனம் இல்லாதது தமிழ்மக்கள் செய்த பாவங்களில்... இவரும் தமிழனாகப் பிறந்தது தான்.

மறைந்த அன்ரன் பாலசிங்கம் கூட... தான் எழுதிய புத்தகத்தில் இவரை ஒரு, சகுனியாகவே... குறிப்பிட்டிருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியும்- காங்கிரசும் ஆண்டபோது தமிழகத் தமிழர்கள் செய்வது அறியாது தற்கொலைதான் செய்தார்கள். அதாவது அவர்களின் தன் நம்பிக்கை தரை மட்டத்தின் கீழே போயிருந்தது. முதுக்குமாரை சரியாக ஒரு அடக்கம் செய்யக்கூட இந்த கூட்டு விடவில்லை. செங்கொடி வரைக்கும் அழிந்து தொலைந்தது இந்தியாவின் மிகப்பெரிய கொள்ளை குடும்பங்கள் இரண்டு, ஒன்று சேர்ந்து தமிழ் மக்களை நசுக்கியதால் ஆகும். இப்போது அவர்கள் ஈழத்தவருக்கு முறையான ஆதரவு தெரிவிக்க கூடியதாக இருக்கிறது. அவர்களின் முயற்சியால் இந்தியா பிரேரணையை ஆதரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

---------

கருணாநிதி காங்கிரஸ் கூட்டு என்பது...

வடித்தெடுத்த விபச்சாரத்துக்கு ஒப்பானது.

அங்கு, எங்கும்.... கொள்ளையடிக்கும் சுயநலமே வீசியது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.