Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மீண்டுமொரு வரலாற்றுத்தவறை செய்திருக்கும் முஸ்லீம் காங்கிரஸ்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

slmc-150seithy.jpg

[size=4]வடகிழக்கு தமிழ் பேசும் சிறுபான்மை மக்கள் கடந்த அறுபது(60) ஆண்டுகால போராட்ட வரலாற்றின் முக்கிய காலகட்டத்தில் காலடிவைத்திருக்கும் இத்தருனத்தில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமை தமிழ் பேசும் மக்களை பொறுத்தமட்டில் மீண்டுமொரு வரலாற்றுத் தவறை முஸ்லீம் காங்கிரஸ் ஏற்படுத்தியிருக்கின்றது.[/size]

[size=4]தமிழ் பேசும் மக்களை பொறுத்தமட்டில் முஸ்லீம் காங்கிரஸின் இந்தமுடிவினை முஸ்லீம் மக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் விமர்சித்துள்ளதுடன் அரசியல் தீர்வு விடயத்தில் முஸ்லீம் காங்கிரஸ் அக்கரையின்றி செயற்பட்டு தமிழர்களுக்கு மீண்டும் ஒரு துரோகத்தை செய்யப்போகின்றதா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.[/size]

[size=4]விடுதலைப்புலிகளின் அழிவுக்குப் பின்னர் தமிழர்களின் துக்கவீட்டில்(இறந்த வீட்டில்) கலந்துகொள்வதை விட மகிந்தராஜபக்சவின் கல்யாண வீட்டில் கலந்துகொண்டு விருந்துண்டு மகிழ்வதிலேயே முஸ்லீம் காங்கிரஸ் அக்கரைகொண்டு செயற்படுவதை அவதானிக்கமுடிகின்றது.[/size]

[size=4]அவலப்பட்ட துண்பப்பட்ட தமிழர்களும் முஸ்லீம்களும் ஒரே நிலத்தில் ஒரே பெறும்பான்மையினத்தின் அடக்குமுறைகளில் இருந்து விடுபடுவதற்காக இன்றுவரை போராடிக்கொண்டிருக்கும் இரு சிறுபான்மை தேசிய இனங்களில் ஒரு இனத்தின் அவலங்களையும் துன்பங்களையும் பெறுட்படுத்தாது அடக்குமுறையாளர்களின் காலடியில் வீழ்ந்து போராடிக்கொண்டிருக்கும் தமிழினத்தை பலவீனப்படுத்துவதையும் போராட்டத்தை காட்டிக்கொடுப்பதையும் எந்த மானமுள்ள தன்த்துவமுள்ள இனமும் ஏற்றுக்கொள்ளாது.[/size]

[size=4]வடகிழக்கு தமிழ் பேசும் சிறுபான்மை மக்கள் கடந்த அறுபது(60) ஆண்டுகால போராட்ட வரலாற்றின் முக்கிய காலகட்டத்தில் காலடிவைத்திருக்கும் இத்தருனத்தில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமை தமிழ் பேசும் மக்களை பொறுத்தமட்டில் மீண்டுமொரு வரலாற்றுத் தவறை முஸ்லீம் காங்கிரஸ் ஏற்படுத்தியிருக்கின்றது.[/size]

[size=4]பள்ளிவாசல்களையும் காணிகளையும் அபகரிக்கும் அரசாங்கத்துடன் இன்று உறவாடிப் பெறக்கூடிய ஒன்று பணம் மட்டும்தான் என்பதே உண்மை எனவே எத்தனையோ ஆண்டுகள் பொறுத்திருந்த முஸ்லீம் காங்கிரஸிக்கு இன்னும் கொஞ்சநாட்களுக்கு காத்திருக்கமுடியாமல் போனது வேதனையான விடயமே தமிழர்களை பொறுத்தமட்டில் முஸ்லீம்கள் தங்களது இனத்தின் அபிவிருத்திற்காக அரசாங்கத்துடன் இணைந்திருப்பதில் எந்தத்தவறும் இல்லை ஆனால் சிறுபான்மையின மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்�� முஸ்லீம் கட்சிகளின் கூட்டும் அதன்பின்னரான செயற்பாடுகளும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்து செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.[/size]

[size=4]விடுதலைப்புலிகளின் காலத்தில் சமாதானப் பேச்சுவார்த்தையில் முஸ்லீம்களையும் சமதரப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்ட முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் அவர்கள் கையெழுத்திட்டிருந்தார். ஆனால் முஸ்லீம் தரப்பை புலிகள் ஏற்றுக்கொண்டாலும் அந்த காலம்வரை தமிழர்களின் போராட்டத்திற்கு முஸ்லீம் மக்கள் உதவினார்களா? என்றால் இல்லையென்றே கூறலாம். சரி உதவாவிட்டாலும் ஒதுங்கியிருந்தார்களா? என்றால் அதுவும் இல்லை அவர்கள் தமிழர்களின் போராட்டத்திற்கு எதிராக என்னசெய்தார்கள் என்பதை உலகமக்கள் அனைவரும் அறிவார்கள்.[/size]

[size=4]சரி அப்போதுதான் விடுதலைப்புலிகள் தவறுவிட்டார்கள் என்ற முஸ்லீம்களின் விமர்சனங்களை ஏற்றுக்கொண்டாலும் இன்று யார் தவறு விடுகிறார்கள்? அன்று விடுதலைப்புலிகள் தவறுவிட்டார்கள் அதனால் தமிழர்களின் போராட்டத்திற்கு அதரவு வழங்கவில்லை தமிழர்களுடன் ஒன்றிணைந்து போராடமுடியவில்லை என்று கூறும் முஸ்லீம் தலைமைகள் இன்று அதே தவரை மீண்டும் செய்வதற்கு என்ன காரணத்தை முன்வைக்கப்போகின்றார்கள்.[/size]

[size=4]இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிறுபான்மையின தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வுவிடயத்தில் முஸ்லீம் காங்கிரசை இணைந்து செயற்படுமாறு பல தடவைகள் அழைப்பு விடுத்தும் அதனைப் புறக்கணித்து செயற்படும் முஸ்லீம் காங்கிரஸ் அமைச்சுப்பதவிகளை தக்கவைப்பதிலேயே குறியாகவுள்ளனர். குறிப்பாக தமிழ் முஸ்லீம் மக்களின் கோட்டையாக கருதப்படும் கிழக்குமாகாணத்தை நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் ஊடாக தென்னிலங்கை அரசாங்க கட்சிகளுக்கு தாரைவார்த்து கொடுப்பதற்கு முனைப்புக்காட்டி செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.[/size]

[size=4]நிரந்தரமில்லாத அரசியல் பதிவிகளுக்காக பல ஆண்டுகளாக அவலங்களைச் சுமந்து போராடிக்கொண்டிருக்கும் ஒரு இனத்தின் நிரந்தரமான அரசியல் தீர்வுக்கு எதிராக முஸ்லீம் காங்கிரஸ் செயற்படுவதை எப்படி தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்கள?; கடைசிவரை தமிழர்களின் போராட்டத்திற்கு எதிராக செயற்பட்டு கொண்டிருக்கும் முஸ்லீம் காங்கிரஸ் நாளை சர்வதேசத்தின் ஆதரவுடன் ஏதோ ஒரு தீர்வை வடகிழக்கு தமிழ் மக்களுக்கு வழங்க அரசாங்கம் முன்வரும்போது மட்டும் அதில் எங்களையும் சமதரப்பாக ஏற்றுக்கொள்ளுங்கள் தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்ற கோரிக்கையினை முன்வைப்பது எந்தவகையில் நியாயமானது? அந்த கோரிக்கைகள் நியாயமானது என்றாலும் அதனை முஸ்லீம் காங்கிரஸ் எந்தவித சூடுசோரணையற்று எவ்வாறு கேட்கும்? எனவே காலத்தின் தேவையறிந்து இனத்தின் அவலமறிந்து சிறுபான்மையினக் கட்சிகள் செயற்படவேண்டும் என்பதே இன்றைய கட்டாயத் தேவையாகவுள்ளது.[/size]

[size=4]சிறுபான்மையின மக்களை பொறுத்தமட்டில் வடகிழக்கு அரசியல் தீர்வு விடயத்தில் ஒருங்கிணைந்த ஒரு நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக பயணித்தால் மட்டுமே நிரந்தர அரசியல் தீர்வைப்பெற்றுக்கொள்ளலாம் அதை விடுத்து முஸ்லீம் தலமைகளும்�� முஸ்லீம் சமூகமும் இந்த விடயத்தில் தவறுவிடுமாகவிருந்தால் நாளை தமிழ் மக்களுக்கு கிடைக்கப்போகும் தனியான அங்கிகாரம்பெற்ற அரசியல் அதிகாரத்தில் முஸ்லீம்கள் இரண்டாம் தரப்பாக மாற்றப்படுவதற்கான சகல நியாயப்பாடுகளையும் உருவாக்குவதாக அமைந்துவிடும்.[/size]

[size=4]எனவே முஸ்லீம் காங்கிரஸ் உட்பட அனைத்து முஸ்லீம் அரசியல் தலைமைகளும் முஸ்லீம் மத தலைவர்களும் முஸ்லீம் சமூகத் தலைவர்களும் தமிழர்களின் போராட்ட நிகழ்ச்சி நிரலுடன் ஒன்றிணைந்து செயற்படுவதே இன்றைய வடகிழக்கு தமிழ் பேசும் சிறுபான்மையின மக்களின் நிரந்தர அரசியல் தீர்வுக்கான பாதையை உருவாக்கும்.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

அரசுடன் இணைந்து தமிழர்களை காட்டிக்கொடுத்துவிட்டது மு.கா. சரவணபவன் எம்.பி. சாடல்

தமிழ் பேசும் மக்களின் காணி, நிலம் காப்பாற்றப்பட வேண்டுமானால் முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களுடன் இருக்கவேண்டும். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியோ அரசுடன் சேர்ந்து தமிழ் மக்களையும் காட்டிக் கொடுத்து, முஸ்லிம்களின் காணி, நிலம் உள்ளிட்ட பல்வேறு உரிமைகளையும் பறிகொடுக்கப் போகின்றது.

இதனை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் ரவூப் ஹக்கீமும் என்றோ ஒரு நாள் உணரத் தான் போகிறார்கள். இவ்வாறு அல்வாய் திக்கம் மத்திய சனசமூக நிலைய முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப் போட்டியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கூறினார்.

சனசமூக நிலையத் தலைவர் க.நிதர்சன் தலைமையில் நேற்று பிற்பகல் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மேலும் பேசுகையில் கூறியதாவது இன்று அரசியலில் சமகாலப் பிரச்சினை குறித்து சில விடயங்களை இச் சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

சிறுபான்மை இனங்களாக தமிழர், முஸ்லிம்களுக்கிடையே பிளவினை ஏற்படுத்த அரசு முயன்று கொண்டிருக்கிறது. முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப்பின் நிலையை உணராமல் செயல்படுகின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக்கோட்டையில் தீர்மானம் எடுத்தவேளை அப்போது தமிழரசுக் கட்சிக்கு ஆதரவாக இருந்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவர் அஷ்ரப் அங்கிருந்து ஆதரவு தெரிவித்திருந்தார். இதனை ரவூப் ஹக்கீம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

தமிழ் பேசும் மக்களுக்காகச் செயலாற்றியவர் அமரர் அஷ்ரப் அன்னாரின் வழியைப் பின்பற்றாமல் பதவிக்காகவே ஹக்கீம் அரசுக்குத் துணைபோகின்றார். ஐ.தே.க.வில் இணைந்து போட்டியிட்டு விட்டு, மற்றையவர்கள் அரசுடன் இணைந்து விட்டார்கள் என்று கூறியே அவரும் அரசுடன் இணைந்துகொண்டார்.

தம்புள்ள பள்ளிவாசல் தொடர்பாக அரசு தீர்க்கமான பதிலைக் கொடுத்ததா? புனித பிரதேச மாக்கப்பட மாட்டாது என அரசு சொன்னதா, இல்லவே இல்லை. அனுராதபுரத்தில் பள்ளிவாசல்கள் இடிக்கப்பட்டன. அதுவும் அரசினால் பூசி மெழுகப்பட்டு விட்டது. கிழக்கு மாகாணத் தேர்தல் முடிவுற்றதும் தம்புள்ளையில் பள்ளிவாசல் இருக்காது.

கிழக்கு மாகாண முஸ்லிம்களின் காணிகளும் பறிக்கப்படும். இதனைப் பற்றி இணக்க அரசியல் பேசியும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. கிழக்கு முஸ்லிம்கள் ஏமாற்றப்படுகின்றனர்.

தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் சிறுபான்மை இனமாக இருந்து உரிமைகள் இல்லாத நேரத்தில் ரவூப் ஹக்கீம் அரசுக்குக் கைகொடுக்கின்றார். முடிந்தால் இதற்கு அவர் பதில்கொடுக்கட்டும். காணி, பொலிஸ் அதிகாரம் வேண்டும் என்று அரசிடம் முஸ்லிம் காங்கிரஸ்கட்சி கேட்டது.

இதனை அரசாங்கம் கொடுக்குமா. கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர்தான் தெரியும். சிறுபான்மையினருடன் சேர்ந்து தனி அலகு வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் கேட்டது. அவர்கள் கேட்காமலேயே அரசியல் தீர்வு வரும் வேளை முஸ்லிம்களுக்கென தனி அலகு தருவோம் என நாம் உறுதி அளித்திருந்தோம்.

தனி அலகைப் பெற்றுக்கொள்ளாமல் அரசுடன் சேர்ந்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு அரசு எதனையும் கொடுக்காது என்றார். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் பரிசில்களை வழங்கினார்.

http://onlineuthayan...561225715436443

கூட்டமைப்பு தாம் வரலாறுத் தவறுகளை செய்யாமல் இருந்தால் சரி!

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் காலத்தில் நிகழ்ந்த பல்வேறு பேச்சுவார்த்தைச் சுற்றுக்களில் முஸ்லிம்களும் கலந்துகொள்ளவேண்டும் என்று அடம்பிடித்து தமிழன் சிந்திய இரத்தத்தில் தனக்கும் பங்குண்டு என்று நாடுநாடாக அலையவைத்து பேச்சுவார்த்தையை சிங்கள அரசு சொதப்புவதற்கு துணைபோனவர்கள் தான் இந்த முஸ்லிம் தலைவர்கள். சிங்கள ஆட்சியாளர்களிடம் இப்படியான அரசியல் உடன்பாடு முஸ்லிம்களுக்கு இருந்திருக்குமானால் இவர்கள் தமிழரின் பேச்சுவார்த்தைகளில் பங்கெடுக்கவேண்டிய அவசியமே இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.