Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்துச் சித்தர்கள் பகுதி 08 ( தவத்திரு வடிவேற் சுவாமிகள் )

Featured Replies

vadivel-swami-160x250.jpg

vadivel-swami-160x250.jpg

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தே ஞானவாழ்விற்குரிய இலச்சனை பதித்த பல சாதுக்களையும், தபோவனங்களையும் தன்னகத்தே கொண்ட தபதியாக ஒளிர்ந்தது இணுவில். அத்தகு திருப்பதியில் கந்தப்பர் சின்னக்குட்டி தம்பதியருக்கு ஐந்து பெண் மகவுகளின் பின்னர் ஆறவதாக 1906.05.24 பராபவ வைகாசி 11 வியாழன் ரோகிணியில் பிறந்தவர் வடிவேல்.

உரிய வயதிலே வித்தியாரம்பம் செய்விக்கப்பெற்ற குழந்தை அவ்வூர்ப் பாடசாலை ஒன்றிலே ஆரம்பக்கல்வியை கற்று வந்தது. வைத்திலிங்க உபாத்தியாயரிடமும், மாணிக்கச் சட்டம்பியார் என்பட்ட மாணிக்கத்தியாகராசா விடமும் தனிப்பட்ட முறையிலும் கல்வி பயின்று வந்தார். மாலை வேளைகளில் சேதூர் சட்டம்பியரிடம் நிகண்டு நன்னூல், இலக்கண நூல்கள் ஆத்திசூடி முதலான நீதி நூல்களையும் கற்றார்.

குழந்தையின் நடைமுறைகளைப் பார்த்து, இது ஒரு ஞானக்குழந்தை, இதை இங்கு வைத்து விளையாடக் கூடாது. யோகர் சுவாமிகளிடம் அழைத்துச் சென்று அவர் சொற்படி செய்வது நல்லது என்று கந்தப்பருக்கு யாரோ சொல்லியுள்ளார்கள். அதன்படி யோகர் சுவாமிகளிடம் குழந்தையுடன் சென்று வணங்கி வரலாற்றைச் சொல்லியுள்ளார்.

சுவாமிகளின் பணிப்பின் படி கந்தர்மடம் வேதாந்த மடத்திற்கு அழைத்துச் சென்று அந்த வேளை அங்கு குருமூர்த்தியாய் இருந்த மகாதேவ சுவாமிகள் முன் நின்றார். பையன் சுவாமிகளை மிகுந்த அன்போடும் பணிவோடும் வணங்கினான். மகாதேவ சுவாமிகளுடனேயே பையன் தங்கி வேதாந்த சாஸ்திரங்கள், தர்க்கம், ஞானநூற் பொருட்கள் முதலியவற்றை ஐயந்திரபறக் கற்றான். தன் தெளிவிற்குட்பட்டவற்றை தன்னுடன் கற்பவர்களுக்கு விளக்கி மகிழ்வான். அதனை அவதானித்த குருநாதன் தன் சீடன் மீது அளவிலா பற்றுக்கொண்டார்.

தான் கற்றவோடமையாது அவற்றை விளங்கிக்கொண்டவர்களை அணுகி மேலும் மேலும் விளக்கம் கேட்பதனால் தெளிந்து பேராற்றல் உடையவர் ஆனார் வடிவேல். திருமுறைப் பாடல்களை பண்ணுடன் பாடக்கூடிய திறமை வாயந்தவர். கடின விடயங்களையும் இனிமையாய் பேசியே புகுத்திவிடுவார்.

யோகர் சுவாமிகள் வடிவேலருக்கு நிர்வாண தீட்சையளித்தார். வடிவேலரின் வேட்டியை களைந்து அவரை நிர்வாணமாய் தெருவில் நடக்க விட்டார். மகிழ்ச்சியுடன் வடிவேலர் ஏற்றுக்கொண்டார். அவர் பக்குவ நிலையை யோகர் சுவாமிகள் வெளிப்படுத்தி விட்டார். வடிவேலர் வடிவேற் சுவாமியாயினார். அவரது குடிசை பன்னசாலையாயிற்று. அங்கு வரும் சனக்கூட்டமும் பெருகிற்று. இடம்போதாமையால் மஞ்சத்தடிக்கு இடத்தை மாற்றிக்கொண்டார். சொற்பொழிவு, கதாப்பிரசங்கம், பண்ணிசை, புராணபடனம் என்பவற்றை நடாத்தினார். சுவாமியின் பக்தி வலையிற் சிக்கினோர் பலர். அவர்களுள் நயினாதீவுச் சுவாமி எனப்படும் முத்துச் சாமியும் ஒருவர். நயினாதீவுச் சுவாமியும், வடிவேற் சுவாமியும் சேர்ந்து பூட்டப்பட்டிருந்து காரைக்கால் கோயிலைத் திறக்கச் செய்து பூசை செய்துள்ளனர். கோயில் மறுசீரமைக்கப்பட்டது. பூசை வழிபாடுகள் பெருகின, மக்கள் உள்ளங்களிலும் பக்தி பெருகியது.

வடிவேற் சுவாமிகள் கிளிநொச்சி மகாதேவ ஆச்சிரமத்தையும் புனிதப்படுத்தி முழுமைபெறச் செய்தார். தெளிந்த சிந்தனையுடன் அவர் செய்வன காலத்தால் அழிந்து போகாதன.

வடிவேற் சுவாமிகள் பெரும் புலவரும் கூட. அவர் பெருந்தொகையான பாடல்களை செய்துள்ளார். உருத்திரபுரீஸ்வரர் தோத்திரப் பாடல்கள், நல்லோர் பயில் ருத்திராபதி, உருத்திரபுரீஸ்வரர் திருக்குறுந்தொகை, கோயில் கொண்ட கோலமே, செந்நெல்கள் காயத்திடும் ருத்திர நாற்பதியே, உருத்திரபுரீஸ்வரர் அபயப்பத்து, அருளையளித்த ருத்திரபுர அம்பிகையே, இரணைமடு அருள்மிகு கனகாம்பிகை அம்பாள் திருப்பதிகம், ஞானசற்குரு மகாதேவர்க்குப் பல்லாண்டு என்று பல. எமது கைக்கெட்டாதது எவ்வளவு பொயிருக்குமோ என்பது அறியோம்.

வடிவேற் சுவாமிகள் 1990-06-26 செவ்வாய்க்கிழமை ஆயிலிய நட்சத்திரத்தில் பரிபூரணமெய்தினார்கள்.

இவர் செய்த பாடல்கள் சில கீழே

இணுவை நொச்சிமுருகன் தோத்திரத்திலிருந்து ஒரு பாடல்

சேவற் கொடியன் சிவன்மகன் செய்ய சிவக்கொழுந்து

காவற் புனத்திற் களவொடு வள்ளியை கைப்பிடித்து

காவிற் கலந்து கழலடி காட்டிய காரணனைச்

சேவித்து நற்றவர் சேர்ந்தாத் இணுவையஞ் சீர்ப்பதிக்கே

நல்லோர் பயில் ருத்ரபதி எனும் பிரபந்தத்திலிருந்து ஒரு பாடல்

கல்லாலின் கீழிருந்து காட்டினாய் கையதனால்

சொல்லாமல் விளக்கரிய சோதியரு ணாஞ்சிவனே

எல்லாருங் காண விசைந்தருளும் கோலமதை

நல்லார் பயில்ருத்ர புரத்து நல்கினையே

உருத்திரபுரீஸ்வரர் திருக்குறுந்தொகையிலிருந்து ஒரு பாடல்

கொண்டு நன்மலர் தூவி வழிபடும்

அண்ணடர் யாரும் அறிதற் கரியவன்

தொண்டர் தம்மகத் தாய்மையை நன்றெனக்

கண்டு காட்டிய நற்பதிகாணவே

http://www.thejaffna.com/jaffna/eminence/%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95

  • கருத்துக்கள உறவுகள்

யோகர் சுவாமிகள் வடிவேலருக்கு நிர்வாண தீட்சையளித்தார். வடிவேலரின் வேட்டியை களைந்து அவரை நிர்வாணமாய் தெருவில் நடக்க விட்டார். மகிழ்ச்சியுடன் வடிவேலர் ஏற்றுக்கொண்டார்

யோகர் சுவாமிகள் நோட்டி சாமியார்....இந்த காலத்தில் இப்படி செய்தால் அவரை வேற மாதிரி சொல்லிப்போடுவாங்கள்.....

இந்த ஆச்சிரம் இப்பவும் கிளிநோச்சியில் இயங்குகிறது என நினைக்கிறன்

  • தொடங்கியவர்

யோகர் சுவாமிகள் நோட்டி சாமியார்....இந்த காலத்தில் இப்படி செய்தால் அவரை வேற மாதிரி சொல்லிப்போடுவாங்கள்.....

இந்த ஆச்சிரம் இப்பவும் கிளிநோச்சியில் இயங்குகிறது என நினைக்கிறன்

ஆம் ஜெயந்தி நகரில் உள்ளது . முன்பிருந்தே ஒரு சிறுவர்கள் காப்பகத்தையும் வடிவேல் சாமி நடத்திவந்தார் . வடிவேல் சாமி தான் எனக்கு ஏடு தொடக்கினார் . ஆச்சிரமத்தில் ஆருத்துரா தரிசனம் பூசை நாங்களே செய்வோம் . போர்க்காலத்தில் ஆச்சிரமம் பலத்த சேதத்திற்கு உள்ளானது . இப்போது அவரது வளர்ப்பு மகன் ஆச்சிரமத்தை நடத்துகின்றார் . வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றிகள் புத்தா .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.