Jump to content

ஜெனீவா தடையைத் தாண்டுவதற்கு அரசின் தந்திரங்கள் வெற்றிபெறுமா?


Recommended Posts

[size=2]

[size=3]ஐ.நா.வின் தீர்மானத்துக்கு எதிராக கடுமையான எதிர்ப்பலைகளை வெளிப்படுத்திய இலங்கை அரசாங்கம், இப்போது தன்னுடைய நிலைப்பாட்டைப் பெருமளவுக்கு மாற்றிக்கொண்டுவிட்டது. ஐ.நா.வின் அணுகுமுறைகளை ஏற்றுக்கொள்வதாகக் காட்டிக்கொள்வதற்கு அரசாங்கம் முற்பட்டுள்ள ஒரு நிலையை இன்று காணக்கூடியதாக இருக்கின்றது. ஆனால், இது உண்மையா அல்லது எதிர்வரும் நவம்பரில் ஜெனீவாவில் எதிர்கொள்ளப்போகும் அடுத்த கட்டத் தடையை எதிர்கொள்வதற்கான உபாயமா என்பதுதான் இன்று எழும் கேள்வியாகவுள்ளது.[/size][/size]

[size=2]

[size=3]ஐ.நா. விவகாரத்தில் இணங்கிப்போகும் உபாயத்தைக் கையாள்வதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில், சர்வதேச அழுத்தங்களை சமாளிப்பதற்கு அரசாங்கம் வகுத்துள்ள செயற்திட்டம் எந்தளவுக்கு உதவும் என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டம் ஒன்றை அரசாங்கம் தயாரித்திருக்கின்றது. இதற்கு அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைத்திருக்கின்றது. அதேவேளையில், இந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்;பிள்ளையின் ஆலோசனைகளையும், உதவியையும் பயன்படுத்திக்கொள்வதற்கும் அரசாங்கம் இப்போது இணங்கியிருக்கின்றது.

இந்த இரு விடயங்களையும் உள்ளடக்கியதாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை திட்டவட்டமாக நிராகரித்த அரசாங்கம் இப்போது தனது நிலைப்பாட்டை அவசரமாக மாற்றிக்கொண்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நிபுணர்குழு ஒன்று செப்டம்பர் மாதம் கொழும்பு வரவிருக்கின்றது. இந்தக்குழு வடக்;கு கிழக்குப் பகுதிகளுக்கும் நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிடவிருக்கின்றது. அத்துடன் பல தரப்பட்டவர்களையும் இந்தக் குழு சந்திக்கும். இந்தக் குழுவின் விஜயத்தைத் தொடர்ந்து நவநீதம்பிள்ளையும் கொழும்பு வரவிருக்கின்றார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு உள்நாட்டில் சிங்கள மக்கள் மத்தியில் காணப்பட்ட பாரிய ஆதரவை அடிப்படையாக வைத்து ஐ.நா. வின் தீர்மானத்தை நிராகரித்து அதனை நடைமுறைப்படுத்தப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்த அரசாங்கம், இப்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டமைக்கு பல காரணங்கள் உள்ளன. ஐ.நா. மற்றும் ஏனைய மேற்கு நாடுகளுடன் இணங்கிப்போவது தமக்கு நல்லது என்பதை அரசாங்கம் இப்போது உணர்ந்துகொண்டிருக்கலாம்.

சர்வதேச ரீதியாக உருவாகிவரும் அழுத்தங்கள் என்பவற்றுடன் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வுக் கூட்டமும் இதற்குக் காரணமாக இருக்கலாம். இருந்த போதிலும், தம்மால் தயாரிக்கப்பட்டுள்ள செயற்திட்டத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு சர்வதேச அழுத்தங்களை அரசாங்கத்தினால் சமாளித்துவிட முடியுமா என்பது ஆராயப்படவேண்டியதாகவே உள்ளது.

இந்த வகையில், அரசாங்கத்தின் செயற்திட்டம் பற்றிய விபரங்களும், அதனை நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்கம் வகுத்துள்ள திட்டங்களும் பலகேள்விகளை எழுப்புவதாக அமைந்திருக்கின்றது என இராஜதந்திர வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. முதலாவதாக, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசாங்கம் வெளிப்படுத்தும் தன்மைக்கும் யதார்த்த நிலைமைக்கும் இடையில் ஒரு இடைவெளி காணப்படுகின்றது.

அதாவது, இலங்கை நிலைமையைப் பொறுத்தவரையில் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் தனக்குள்ள பற்றுறுதியை அரசாங்கம் வெளிப்படுத்தினாலும், கள யார்த்த நிலைமைகள் எந்தளவுக்கு இதற்குச் சாதகமாகவிருக்கும் என்ற கேள்வி பலமாக எழுப்பப்படுகின்றது. இதனைவிட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் போரால் பாதிக்கப்பட்டவர்களை அரசாங்கம் எந்தளவுக்கு உள்ளடக்கும் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டிருக்கின்றது.

அரசாங்கம் வகுத்துள்ள செயற்திட்டத்தின்படி நல்லிணக்க ஆணைக்குழுவின் 285 பிரதான பரிந்துரைகளும், ஏனைய உப பரிந்துரைகளும் ஐந்து தலைப்புக்களின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன. சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள், மனித உரிமைகள், காணி மீளளிப்பும்- மீள்குடியேற்றமும், நிவாரணம் மற்றும் நல்லிணக்கம் என்ற தலைப்புக்களில் இவை உள்ளடக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தலைமையிலான செயற்திட்டக்குழு ஒன்றும் இதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் சில நடைமுறைப்படுத்தப்படும் நிலையில் உள்ளதாகவும், சில பரிந்துரைகள் இவ்வருட இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், மேலும் சில பரிந்துரைகள் அடுத்த வருடத்திலேயே நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆக, இந்த நடைமுறைப்படுத்தல்களின் பெறுபேறுகளை அறிய அடுத்தவருடமும் காத்திருக்க வேண்டும்.

அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஒரு தேசிய செயற்திட்டமாக நடைமுறைப்படுத்தப்போவதாகக் கூறிக்கொண்டாலும், இதில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகள் உள்ளடக்கப்படாமையை ஒரு குறைபாடாகவே குறிப்பிட வேண்டும். போரினால் பாதிக்கப்பட்டவர்கள் வடக்கு கிழக்கு மக்கள்தான். பரிந்துரைகளின் மூலமாக அந்த மக்களுடைய காயங்களுக்கு மருந்து போடவே அரசாங்கம் முற்படுகின்றது.

இந்த நிலையில் இதற்கான செயற்திட்டத்தை வகுக்கும் போது தமிழ் மக்களின் பிரதான பிரதிநிதிகளாகவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்படன் அரசாங்கம் பேச்சுக்களை நடத்தியிருக்க வேண்டும். கூட்டமைப்பின் பிரதிநிதிகளும் செயற்திட்டத்தின் பங்குதாரர்களாக்கப்பட்டிருக்க வேண்டும். அரசாங்கம் இவ்விடயத்தில் திட்டமிட்டே ஒரு புறக்கணிப்பைச் செய்திருக்கின்றது என்பது உண்மை. வடக்கு கிழக்கு மக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்காமல் அந்த மக்களுக்கான செயற்திட்டம் ஒன்றை அரசாங்கம் எவ்வாறு வகுத்துக்கொள்ள முடியும்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்துவதில்லை என்பதில் அரசாங்கம் பிடிவாதமாக நிற்கின்றது என்பது புதிய செய்தியல்ல. பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே கூட்டமைப்புடன் ஒரு வருட காலமாக நடத்திய பேச்சுக்களை அரசாங்கம் இடைநிறுத்திக்கொண்டது.

இருந்தபோதிலும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளைச் செயற்படுத்துவதற்கான தேசிய செயற்திட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அரசாங்கத்தரப்பில் எந்தவித அக்கறையும் காட்டப்படவில்லை. உள்நாட்டு அரசியலில் பாதகமான விளைவுகளை இது ஏற்படுத்தலாம் என்பதையிட்டு அரசாங்கம் அவதானமாக இருந்துள்ளது. அதாவது, சிங்கள மக்கள் மத்தியில் இதற்கு எதிர்ப்புக்கள் உருவாகக் கூடாது என்பதில் அரசாங்கம் கவனமாக உள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டத்தை அரசாங்கம் வகுத்துக்கொண்டிருந்தாலும், இலங்கை தொடர்பான மீளாய்வு மதிப்பீட்டைச் செய்வதற்கான குழு தொடர்பில் தமது அதிருப்தியையே அரசாங்கம் தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகின்றது. இந்தக் குழுவில் இந்தியா, பிரேசில் மற்றும் ஆபிரிக்க நாடான பெனின் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த மூன்று நாடுகளும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணையை ஆதரித்து வாக்களித்த நாடுகளாகும். அதனால் குறிப்பிட்ட நாடுகளை இந்த மீளாய்வு மதிப்பீட்டு அறிக்கையைத் தயாரிப்பதற்குப் பொறுப்பாக நியமித்திருப்பது இலங்கைக்குச் சீற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இதனை அரசாங்கம் வெளிப்படையாகவே தெரியப்படுத்தியிருக்கின்றது.

இருந்தபோதிலும் அரசாங்கம் வெளியிட்ட செயற்திட்டத்தில் காணப்படும் பிரதான குறைபாடுகள் சர்வதேச கவனத்தைக் கவரலாம் என்பதும் இலங்கை அரசாங்கத்தின் இந்த சீற்றத்துக்கக் காரணமாக இருக்கலாம். வெறுமனே பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டத்தை முன்வைப்பதும், நவநீதம்பிள்ளையின் குழுவினருக்கு அனுமதியளிப்பதும் மட்டும் நிலைமைகளை சமாளிப்பதற்கு உதவப்போவதில்லை.

அரசின் செயற்திட்டத்தை சர்வதேச நாடுகள் பல வரவேற்றாலும் கூட, அதன் உள்ளடக்கம் எந்தளவுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது என்பதையிட்டு பெரும்பாலான நாடுகள் இதுவரையில் மதிப்பீடுகளை மேற்கொள்ளவில்லை என்றே தெரிகின்றது. குறிப்பிட்ட மூன்று நாடுகள் தொடர்பில் அரசாங்கம் அஞ்சுவதற்கு அதுவும் காரணமாக இருக்கலாம்.[/size]

- தமிழ்லீடருக்காக[/size][size=2]

கொழும்பிலிருந்து பார்த்தீபன்.[/size]

http://tamilleader.com/mukiaya/5589-2012-08-19-13-34-38.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாரிய கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம்; சமன் ரத்னப்பிரிய! 27 SEP, 2024 | 05:07 PM (எம்.ஆர்.எம்.வசீம்) வரலாற்றிலேயே  மிகப்பெரிய கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம். ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலும் சாதகமான நிலைக்கு வந்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.   இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,  பாராளுமன்ற தேர்தலுக்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் எதிர்க்கட்சியில் இருக்கும் அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு தேர்தலுக்கு முகம்கொடுப்பதற்கே எதிர்பார்க்கிறோம்.   நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் அவ்வாறு இருப்பதாகவே எமக்கு தோன்றுகிறது. அவ்வாறான பரந்துபட்ட கூட்டணியை அமைக்குமாறே அனைவரும் வற்புறுத்தி வருகின்றனர்.   அதனால் இந்த கூட்டணியை அமைப்பதற்காக தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலை ஆரம்பித்திருக்கிறோம்.    அதேபோன்று மொட்டு கட்சியின் பெரும்பான்மை பிரிவினர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடனும் கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.    ஓரிரு தினங்களில் இந்த கலந்துரையாடல்களை முடிவுக்கு கொண்டுவர முடியுமாகும். அதனால் வரலாற்றில் பெரிய கூட்டணி அமைத்து இந்த பாராளுமன்ற தேர்தலில் பாேட்டியிட முடியுமாகும் என எதிர்பார்க்கிறோம். பல்வேறு தரப்பினர்கள் கட்சிகளுடன் கலந்துரையாடிய விடயங்களை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடனும் நாங்கள் கலந்துரையாடினோம்.    ரணில் விக்ரமசிங்கவின் ஆலாேசனையின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இரண்டு தினங்களுக்கு முன்னர் கலந்துரையாடினோம். நேற்றும் கலந்துரையாடினோம்.    அந்த கலந்துரையாடல் சாதகமாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தி இந்த பேச்சுவார்த்தைக்கு பின்வாங்கியபோதும் தற்போது அவர்கள் கலந்துரையாடல்களுக்கு இணக்கம் தெரிவித்து, ஆராேக்கியமான பல கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள்.    அதனால் தொடர்ந்தும் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி எப்படியாவது பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியாக போட்டியிடவே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.   கூட்டணி அமைத்து போட்டியிடுவதன் மூலமே எமக்கு தேர்தலில் எதிர்பார்ப்பொன்றை ஏற்படுத்திக்கொள்ள முடியும். எமது ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பும் அதுவாகும் என்றார். https://www.virakesari.lk/article/194920
    • நிலாமதியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. கிறுக்க முயற்சிக்கிறேன்.  நாம்தானே ஓடிவந்துவிட்டோம். எங்கோ ஒதுங்கி ஓடிய காலங்களைத் திரும்பிப்பார்க்கும் போது வெறுமையாய் தெரிகிறது.    நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி சுவியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. நீங்களே ஒரு சிறந்த படைப்புகளைப் தருபவர். உங்கள் வரிகள் உற்சாகம் தருவனவாக உள்ளன.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி ஈழப்பிரியனவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. உண்மைதான். ஆனால், சிங்களத்தின் சிந்தனையல்லவா எம்மை ஆக்கிரமித்துள்ளது.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
    • ஸ்துமாரி (Stumari) ஸ்துமாரி (Stumari) என்கிற ஜார்ஜியா மொழி வார்த்தைக்கு விருந்தினர் என்ற பொருள்.  இன்றைக்கு இந்த வார்த்தையை நான் தெரிந்து கொள்ள காரணமாக இருந்தது இன்றைய சிறப்பு தினம்! ஆம் இன்றைக்கு உலக சுற்றுலா தினம் - 27 செப்டம்பர் - ஒவ்வொரு வருடமும் இந்த தினத்தினை உலக சுற்றுலா தினமாக, உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள்.  இந்தப் பழக்கம் ஆரம்பித்தது எப்போது தெரியுமா? 1980-ஆம் ஆண்டு. ஒவ்வொரு வருடமும் இந்த தினத்திற்கான நோக்கம் ஒன்று தான் - அது சுற்றுலா. தவிர ஒவ்வொரு வருடத்திற்கான Theme மட்டும் மாறுபடுகிறது.  இந்த வருடத்திற்கான உலக சுற்றுலா தினத்தின் Theme - Tourism and Peace! இந்த வருடம் உலக சுற்றுலா தினம் கொண்டாட தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் இடம் Georgia! அதனால் தான் எனக்கும் ஜார்ஜியா மொழியில் இருக்கும் ஸ்துமாரி (Stumari) என்கிற வார்த்தை தெரிந்தது.  அவர்கள் விருந்தினரை கடவுளின் அன்பளிப்பாக கருதுகிறார்கள் (Stumari is a gift of God!). ஸ்துமாரி குறித்த ஒரு காணொளியை பாருங்களேன். சுற்றுலா குறித்த எனது ஆர்வம் குறித்து எனது தொடர்பில் இருக்கும் பலரும் அறிந்திருப்பார்கள். நான் சென்ற சுற்றுலாக்கள் பொதுவாக சராசரியை விட அதிகம் என்றாலும் ஒரு சிலருடன் ஒப்பிடும்போது குறைவு தான் 🙂ஹாஹா…  எத்தனை பயணம் செய்தாலும் இன்னும் வேண்டும், இன்னும் இன்னும் பயணிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் குறைவதே இல்லை.  பயணம் மீது ஒரு வெறுப்பு வருவதே இல்லை.  எப்போது பயணிக்க வேண்டும் என்று சொன்னாலும் உடனே மனதில் புத்துணர்வு வந்து விடுகிறது.  சூழல்கள் காரணமாக கடந்த சில மாதங்களாக எந்த வித சுற்றுலாவும் செல்லவில்லை என்றாலும் சுற்றுலா மீதான ஆர்வம் இன்னும் குறையவே இல்லை.  வாழ்க்கையில் இருக்கும் ஒரு ஆசை தொடர்ந்து சுற்றுலா செல்வதும், அந்தப் பயணங்கள் வழி பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதும் தான்.  வேறு பெரிய ஆசைகள் எதுவும் இல்லை. பார்த்தது கையளவு என்றால் பார்க்காதது உலகளவு.  உலகம் முழுதும் பார்க்க வேண்டும் என்று கூட இல்லை, பாரதம் முழுவதும் பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே ஒரு ஆசையாக இருக்கிறது.  இந்த வருடத்தின் உலக சுற்றுலா தினம் குறித்த Concept Note UN தளத்தில் பார்க்கக் கிடைத்தது.  உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதனை இங்கே படிக்கலாம். இந்தக் குறிப்பின் படி, 2024-ஆம் ஆண்டின் உலக சுற்றுலா தினம், சுற்றுலா மற்றும் அமைதியை உருவாக்குவதற்கான தொடர்பினை சந்திப்பை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  பயணம், கலாச்சார பரிமாற்றம் மற்றும் நிலையான சுற்றுலா நடைமுறைகள், அமைதியை உலகம் முழுவதும் நிலைநிறுத்த எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதையும் நாடுகளுக்கு இடையேயான மோதல்களுக்கு தீர்வு, நாடுகளுக்கு இடையே நல்லிணக்கம் மற்றும் உலகளவில் அமைதியை மேம்படுத்துதல் ஆகியவற்றை பிரதான நோக்கமாக கொண்டு கொண்டாடப்படுகிறது.  எங்கு பார்த்தாலும் நாடுகளுக்கு இடையே சண்டைகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் என்று ஒவ்வொரு நாளும் செய்திகளில் படிக்கையில் சுற்றுலா இந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக இருக்க முடியும் என்றே தோன்றுகிறது.   நம் நாட்டில் மட்டுமே எத்தனை எத்தனை சுற்றுலா தலங்கள்? ஒரு பிறப்பில் இவை அனைத்தையும் பார்த்து விட முடியுமா என்ன?  அதனால் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு விட வேண்டும்.  சுற்றுலா/பயணம் மூலம் பல இடங்களை பார்க்க முடியும் என்பதோடு விதம் விதமான மனிதர்களையும் சந்திக்க முடிகிறது.  பல வித அனுபவங்களையும் பயணங்கள் நமக்குத் தருகின்றன.  ஆதலினால் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!  இந்த உலக சுற்றுலா தினத்தில் நமக்கு பயணம் செய்ய கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வோம் என்று தீர்மானம் செய்து கொள்வோம்.  தொடர்ந்து பயணிப்போம்.  பல அனுபவங்களைப் பெறுவோம். பயணம் நல்லது ஆதலினால் பயணம் செய்வீர்! https://venkatnagaraj.blogspot.com/2024/09/World-Tourism-Day-2024.html
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.