Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அம்பாறையில் மஹிந்த பேசவிருந்த மேடை உடைந்து வீழந்ததால் பெரும் பரபரப்பு.

Featured Replies

மஹிந்த ராஜபக்ச உரையாற்றுவதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடை இன்று முற்றாக உடைந்து வீழ்ந்துள்ளது. அம்பாறையில் இடம்பெற்ற இச் சம்பவத்தினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலையொட்டி அம்பாறையில் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் மஹிந்தர ராஜபக்ச உரையாற்றவிருந்தார்.

அதற்காக அலங்காரங்களுடன் மேடை ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த மேடையே இன்று காலையில் திடீரென உடைந்து விழுந்துள்ளது.

இதனையடுத்து குறித்த மேடையிலிருந்து சுமார் 300 மீற்றர் சுற்று வட்டத்துக்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் தற்போது சுற்றி வளைத்துள்ளனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, இலங்கையின் மறைந்த முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க கலந்து கொள்வதற்காக அம்பாறை பொது விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடை ஒன்றும் இவ்வாறு உடைந்து வீழ்ந்ததும், அதன் பின்னரான தேர்தலில் அவரது கட்சி படுதோல்வியைத் தழுவியதுடன் அரசியலில் அவரின் செல்வாக்கு முற்றாக மழுங்கடிக்கப்பட்டதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இச்சம்பவத்தை நினைவு கூர்ந்த அம்பாறை வாழ் மக்கள் மஹிந்த ராஜபக்சவுக்கும் இவ்வாறான நிலை ஏற்படப் போவதாக பேசி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

http://thaaitamil.com/?p=30153

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ன பரபரப்பு ?

மேடைதானே உடைந்து விழுந்தது ராஜபக்சவில்லைத்தானே :D

  • கருத்துக்கள உறவுகள்

மேடை கொன்ட்ராக்டரை வெள்ளை வான் தூக்கப்போகுது.. :D

[size=4]இதனையடுத்து குறித்த மேடையிலிருந்து சுமார் 300 மீற்றர் சுற்று வட்டத்துக்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் தற்போது சுற்றி வளைத்துள்ளனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
[/size]

[size=4]ஏன் 300 மீற்றர் சுற்றுவட்டம் தெரியப்பட்டது? காரணமான கூட்டம் 310 மீற்றர் தூரத்தில் இருந்திருந்தால் பிடிபடமாட்[/size][size=4]டா[/size][size=4]னே? :D[/size]

[size=1][size=4]அப்படித்தான் அவனை பிடித்தாலும் என்ன மகிந்தர் மன்னித்துத்தானே விடுவார் :wub:[/size][/size]

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

இதேவேளை, இலங்கையின் மறைந்த முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க கலந்து கொள்வதற்காக அம்பாறை பொது விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடை ஒன்றும் இவ்வாறு உடைந்து வீழ்ந்ததும், அதன் பின்னரான தேர்தலில் அவரது கட்சி படுதோல்வியைத் தழுவியதுடன் அரசியலில் அவரின் செல்வாக்கு முற்றாக மழுங்கடிக்கப்பட்டதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இதே நிலை மகிந்த வுக்கும் ஏற்பட்டால் மகிழ்ச்சி

மகிந்தவை சர்வதேச நாடுகள் காப்பறியவர்கள். அவரால் அவர்கள் நன்கு பட்டு போகுற்ற விசாரணையை கொண்டுவரவேண்டும். இல்லையேல் நாட்களை கடத்தி இலங்கையை 100% சீனாவுக்கு இழக்க வேண்டும். இடைநடுவில் குழம்புவது நமக்கு வேதனை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.