Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலவீனமான துணைப்படையும் சிங்கள அரசின் நிழல் போரும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பலவீனமான துணைப்படையும் சிங்கள அரசின் நிழல் போரும்

கடந்த வாரத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் போர் நிறுத்தத்தை ஒரேயடியாக முடிவுக்குக் கொண்டுவந்து, மீண்டும் ஒரு முழு அளவிலான போரை ஏற்படுத்திவிடுமோ என்ற கருத்தைவிட, சிங்கள அரசின் மறுபக்கத்தை அம்பலப்படுத்தியது என்பதே பொருத்தமாகும்.

சிறிலங்கா இராணுவத்தளபதி மீதான தாக்குதலைத் தொடர்ந்து, அதற்கான பதிலடியாக மக்கள் குடியிருப்புக்கள் மீதான குண்டுவீச்சுக்கள் சிங்கள அரசின் சாமாதான முகமூடியை உலகிற்கு தெளிவாக காட்டியுள்ளது.

அதேபோல கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலநறுவைப் பகுதியின் தீவுச்சேனையில் விடுதலைப் புலிகளின் சிறப்பு அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது சிறிலங்கா இராணுவத்தினாலும் அரசினாலும் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்ட கருணா குழு என்ற துணைப் படையினையும் அதன் பலவீனத்தையும் உலகிற்கு காட்டியுள்ளது.

ஏப்பிரல் 19 அன்று இரவு 8.30 மணிக்கு அவுஸ்திரேலியாவின் விசேட ஒளிபரப்பு சேவையில் (SBS) அதன் நிருபர் ஏரன் லூயிஸ் (Aaron Lewis) அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் கருணா குழுவின் நடவடிக்கைகளையும் அதை மூடிமறைக்கும் கோத்தபாய ராஜபக்சவின் பித்தலாட்டத்தையும் தெளிவாக தொகுத்து வழங்கியிருந்தார்.

அரசின் மூடிமறைப்பையும் SBS சேவையின் உண்மைத்தன்மையையும் வெளிக்கொண்டுவரும் விதமாக புலிகளின் இத்தாக்குதல் அமைந்திருந்தது. சென்ற வருடமும் சண்டே லீடர் பத்திரிகையில் தீவுச்சேனையில் உள்ள கருணா குழு முகாம் தொடர்பாக ஆதாரத்துடன் தகவல் வெளியிடப்பட்ட சில நாட்களுக்குள் விடுதலைப் புலிகளால் முகாம் தாக்கி அழிக்கப்பட்டது.

எனவே ஒவ்வொரு தடவையும் இத் துணைப்படையினர் தொடர்பாக வெளிவரும் தகவல்களை உறுதிப்படுத்தும் தாக்குதல்களை புலிகள் மேற்கொள்கின்றார்கள். நடவடிக்கை எடுக்கவேண்டியது சர்வதேசமும் கண்காணிப்பு குழுவும் தான்.

அதாவது தாக்குதல் நிகழ்ந்த காலப்பகுதி மிக முக்கியமானது. எந்த ஒரு தாக்குதலும் அது நடைபெறும் காலம், இடம், ஏற்படும் சேதம், தாக்குதலின் தேவை என்பவற்றை பொறுத்து உலக அரங்கில் முக்கியத்துவம் பெறுகின்றன.

உதாரணமாக சிறிலங்காவின் கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீதான புலிகளின் சிறப்பு அதிரடிப்படைத் தாக்குதல். இஸ்ரேலின் சிறப்பு அதிரடிப்படையினரால் 1968 இல் மேற்கொள்ளப்பட்ட பேருட் (Beirut) சர்வதேச விமான நிலையத் தாக்குதல் (Operation gift) என்பன இராணுவப் புகழ்வாய்ந்த தாக்குதல்களாகவே இன்றும் போற்றப்படுகின்றன.

அதே போன்றதொரு கடினமான இலக்கையே புலிகளின் சிறப்பு அதிரடிப்படைப் பிரிவு தாக்கியழித்துள்ளது. சிங்களவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு பிரதேசத்தில் சிறிலங்காப் படைகளின் முகாம்களின் நடுவே இத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

ஒன்றுக்கு ஒன்று உதவும் பொருட்டு ஒரு மைல் இடைவெளியில் பலமாக அமைக்கப்பட்டிருந்த கருணா குழுவின் மூன்று முகாம்கள் ஒரே நேரத்தில் சிறுதொகை புலிகளினால் நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்காக காடுகளினூடே மிக நீண்ட தூரம் ஊடுருவிச்சென்ற புலிகள் ஆயுதங்களையும் கைப்பற்றிக் கொண்டு தளம் திரும்பியுள்ளார்கள்.

"பல சமர்கள் சேர்ந்தது தான் ஒரு போர்", சமர்களை நடத்துபவர்கள் தளபதிகள். ஆனால் எல்லா சமர்களும் சேர்ந்த போரை நடத்துபவர் தான் தலைவர். சமர்கள் கூட தலைவரின் வழிகாட்டலிலேயே தளபதிகளால் நடத்தப்படுகின்றன. கருணா தமிழீழம் கண்ட மிகப்பல சமர்களில் சில சமர்களை நடத்திய தளபதி. எனவே தான் சிங்கள இராணுவ பின்பலம் இருந்தும் கருணா 2004 இல் தப்பி ஓடினார். இப்போது அவர் குழு தப்பி ஓடுகின்றது.

அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் கருணா குழு கெரில்லா குழுவாக இராணுவ பாதுகாப்புடன் இயங்குவதால் 2004 இல் கருணா குழுவை தாக்கியது போல இப்போது தாக்கமுடியாது என எழுதிய சிங்கள ஆய்வாளர்களின் கருத்தில் மண் விழுந்துள்ளது.

அரச ஊடகங்களால் ஊதிப்பெரிதுபடுத்தப்பட்ட கருணா குழுவின் பலம் என்ற மாயை தகர்ந்து போயுள்ளது. அதாவது புலிகள் ஒட்டுக்குழுக்களை களைவதற்கு தயாராகிவிட்டார்கள் என்பது இத்தாக்குதல் மூலம் கூறப்பட்டுள்ளது.

உண்மையில் கருணா குழுவின் ஆளணி என்ன? தீவுச்சேனையில் இருந்தவர்கள் தான் அதிகமானவர்கள். அதிலும் பயிற்சிக்கு புதிதாக பலவந்தமாக பிடித்து செல்லப்பட்டவர்கள் தான் பலர். இவர்களைத் தவிர சிறு எண்ணிக்கையானவர்கள் வடக்கு, கிழக்கில் முக்கிய சில படைமுகாம்களில் புலிகளின் ஆதரவாளர்களை காட்டி கொடுப்பதற்காக தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். முன்னாள் ஈ.என்.டி.எல் எஃப்பின் விரல் விட்டு எண்ணக்கூடிய சிறு தொகையினரும் இவர்களுடன் கூட்டுச்சேர்ந்துள்ளார்கள்.

இவை தவிர நிகழ்கின்ற நிழல் போரில் மிக முக்கிய பங்குவகிப்பவர்கள் ஈ.பி.டி.பியினர்தான். வெளியில் அரசியல் துணைக்குழுவாக இயங்கியபடி மறுபுறம் கருணா குழு என்ற போர்வையில் படுகொலைகளில் ஈடுபடுகின்றார்கள். இவர்களுடன் சேர்ந்து படையினர் சிவில் உடையில் தாக்குதல்களை மேற்கொள்கின்றார்கள்.

தீவுச்சேனை என்பது ஒரு பிரச்சார தந்திரோபாயம். வெளியுலகிற்கும் கண்காணிப்புக் குழுவிற்கும் பலம்மிக்க குழுவாக காட்டும் ஒரு மாயை. எனவே தான் அரச ஊடகங்களாலும் அரசாலும் இத் தாக்குதல் மூடி மறைக்கப்பட்டது. கருணா குழு என்ற சொல்லை பயன்படுத்தி அரசு சாதிக்க முயல்வது என்ன?

போர் நிறுத்தத்தில் திருத்தங்களையும், போர் நிறுத்த வரைபிற்கு அப்பாற்பட்ட சில கட்டுப்பாடுகளையும் புலிகள் மீது கொண்டு வருவது, முஸ்லிம்களையும், கருணா குழுவையும் பேச்சுவார்த்தையில் இணைத்து கிழக்கைத் துண்டாடுவது. இதன் மூலம் தமிழரின் அரசியல் பலத்தை சிதைப்பதுடன் தமிழர் தாயகத்தில் நிரந்தர குழப்ப நிலையை ஏற்படுத்திவிடுதல். தமிழர் தாயகப்பகுதியில் புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், வர்த்தகர்கள் தேசப்பற்றாளர்கள் என அழிப்பதன் மூலம் பொருளாதார, அறிவியல் செயற்பாடுகளை மழுங்கடித்தல்.

வட வியட்னாமும், தென் வியட்னாமும் பிரித்து ஆளப்பட்டதனால்தான் அன்று இராணுவ ஆலோசனை என்ற பெயரில் அமெரிக்கா மிக இலகுவாக தென் வியட்னாமில் கால்பதிக்க முடிந்தது. அதாவது இனங்களை பிரித்தாளும் தத்துவம் ஒரு இனத்தை சிதைப்பதற்கு மிகச்சிறந்த வழி.

எனவே தான் மட்டக்களப்பில் கோவிந்தன் வீதியில் சிறிலங்கா காவல்துறையின் பாதுகாப்புடன் கருணா குழுவின் அரசியல் அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது (அலுவலகத்தில் யாரும் இருப்பதில்லை என்பது வேறு கதை). போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இணைக்கப்படாத ஒரு குழு சர்வதேச உடன்பாட்டை சீரழித்து படுகொலைகளை நிகழ்த்தியபடி அதை சிங்கள ஊடகங்கள் மூலம் உரிமை கொண்டடிக்கொண்டு அரசியலில் ஈடுபட முடியும் என்றால் அது இங்குதான். வட அயர்லாந்து, கொசோவோ என எங்கும் நிகழாத புதுமை இங்கு நிகழ்கிறது.

கருணா குழு பலமானவர்கள் என்றும் விடுதலைப் புலிகள் பலவீனமாகியுள்ளார்கள் என்றும் நம்பித்தான் மகிந்தா போர் முரசு கொட்டுகின்றார் எனில் அவை இரண்டையும் கடந்த வாரம் நிகழ்ந்த தாக்குதல்கள் நிர்மூலமாக்கியுள்ளன.

இவை எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற்போல புலிகளின் கடற்பயணம் அமைந்துள்ளது. போர் நிறுத்த உடன்பாட்டின்படி புலிகளின் பாதுகாப்பான பயணத்திற்கு அரசு அனுசரணை வழங்க வேண்டும். ஆனால் அதை முடக்க நினைத்த அரசுக்கு புலிகளின் கடற்பயணமும் கடற்புலிகளின் சவாலும் பெருத்த அவமானத்தையும் நெருக்கடியையும் கொடுத்துள்ளது. "துன்பத்தை தருபவனுக்கே அதை திருப்பி கொடுத்துவிடு" என்ற எங்கள் தேசியத் தலைவரின் சிந்தனைகளில் ஒன்றிற்கே இன்று சிங்களம் விழிபிதுங்கி நிற்கிறது.

கருணா குழு மீதான அதிரடி, புலிகளின் கடற்பயணம் எதையுமே வெளியில் சொல்லமுடியாத அவமானத்தில் மூடிமறைக்கின்றன சிங்கள அரசும், இனவாத ஊடகங்களும்.

அரசினால் மேற்கொள்ளப்பட்ட முப்படைத் தாக்குதல்களுடன் ஒப்பிடும் போது புலிகளின் கடற்பயணம் பெரிய போர்நிறுத்த மீறலாக சர்வதேசத்தில் எடுபடப்போவதில்லை. அதை குறைகூறவும் முடியாது ஏனனில் அதை உருவாக்கியது சிங்கள தேசமே.

அப்பாவி மக்கள் மீது சிங்கள அரசு மேற்கொண்ட குண்டுவீச்சுத் தாக்குதல்கள் வெளிஉலகிலும் இந்தியாவிலும் ஏற்படுத்தியுள்ள உணர்வலைகளால் தடுமாறிப்போயுள்ள அரசிற்கு இந்நிகழ்வுகள் சம்மட்டி அடியாக விழுந்துள்ளன.

இப்போது சர்வதேசத்தின் பார்வையில் மக்களின் தற்காப்பு பயிற்சியும், விடுதலைப் புலிகளின் பலமும் முக்கிய இடங்களை பிடித்துள்ளன. உதாரணமாக இங்கிலாந்தின் BBC தொலைக்காட்சியிலும், அலைவரிசை நான்கு (channel 4) தொலைக்காட்சியிலும் மக்கள் பயிற்சி முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இவை அனைத்தும் எங்கள் போராட்டம் ஒரு மக்கள் போராட்டமாக மாறி வருவதையும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு சர்வதேசம் தள்ளப்படுவதையும் கோடிட்டு காட்டுகின்றது.

எனவே இதில் இருந்து தப்பிப்பிழைக்க அரசு உடனடியாக ஒரு பேச்சுவார்த்தையை நாடலாம். ஆனால் இம்முறை விடுதலைப் புலிகளின் நிலை மிகக்கடுமையானதாகவே இருக்கும்.

-புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.