Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"ஈழத்தமிழருக்கு நீதி கிடைக்கும் வரை சிறிலங்கா புறக்கணிப்பு தமிழ்நாட்டில் தொடர வேண்டும்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Meena%20Kandasamy.jpg

[size=4]தமிழ்நாட்டு மக்களாலும், இந்த மக்களால் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அரசாங்கத்தாலும் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் இந்திய மத்திய அரசாங்கமானது தவறிழைத்துள்ளது. இந்தியாவானது இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் தனது நாட்டில் பிரிவினை என்கின்ற விதையை தானாகவே விதைத்து வருகின்றது.

இவ்வாறு எழுத்தாளரும் கவிஞருமான மீனா கந்தசாமி Tehelka ஊடகத்திற்கு எழுதிய கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர்

நித்தியபாரதி.

அதன் முழுவிபரமாவது:

இந்தியாவுக்கு வருகை தந்திருந்த சிறிலங்காவின் உதைபந்தாட்ட அணியானது 'சிறிலங்காவில் எல்லாம் நன்றாக உள்ளது' என்ற மேலெந்தவாரியான செய்தியை தெரிவித்திருந்தனர்.

ஆனால் அதேநேரத்தில் கடந்த இரு மாதங்களாக சம்பள உயர்வு கோரியும் கல்வித் துறைக்கு அதிக ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதைக் கோரியும் சிறிலங்காப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது தொடர்பாகவோ அல்லது கடந்த வாரம் சிறிலங்கா அரசாங்கமானது அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் மூடுமாறு அறிவித்தது தொடர்பாகவோ சிறிலங்கா உதைபந்தாட்டக் குழுவானது தெரிவிக்கவில்லை.

2009ல் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை மற்றும் தொடர்ச்சியாக சிறுபான்மைத் தமிழ் மக்கள் ஓரங்கட்டப்படுதல் போன்றவற்றையும் உதைபந்தாட்டக் குழு நினைக்கத் தவறிவிட்டது. தமிழ்நாட்டில் விளையாடுவதற்கு சிறிலங்கா உதைபந்தாட்டக் குழுவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதை சில ஊடகங்கள் முதன்மைப்படுத்தத் தவறிவிட்டன.

இந்திய மத்திய அரசாங்கமானது உதைபந்தாட்ட அணியினர் தமிழ்நாட்டுக்குச் சென்று விளையாடுவதற்கான அனுமதியை வழங்கிய போதிலும், தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா தனது மாநில மக்களுக்கு ஆதரவு வழங்கி சிறிலங்கா உதைபந்தாட்ட அணியை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றியிருந்தார். உதைபந்தாட்ட அணியை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றியதன் மூலம், தொடர்ச்சியாக சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களின் அவாக்களையும், அவர்களது உணர்வுகளையும் எதிர்த்து நிற்கின்ற இந்திய மத்திய அரசாங்கத்தை மாநில அரசாங்கம் ஒன்று எவ்வாறு எதிர்த்து நிற்கமுடியும் என்பதை முதலமைச்சர் ஜெயலிலதா காண்பித்துள்ளார்.

சிறிலங்காவின் வன்னிப் பெருநிலப் பரப்பில் வாழ்ந்த தமிழ் மக்கள் பெரும் எண்ணிக்கையில் அழிக்கப்பட்டு, அங்கே இனப்படுகொலை ஒன்று அரங்கேற்றப்பட்டதை எண்ணி தமிழ்நாட்டு வாழ் மக்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது கோபங் கொண்டிருந்த வேளையில், 2010ல் இடம்பெற்ற பொதுநலவாய விளையாட்டு நிகழ்வுக்கான பிரதம அதிதியாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை இந்திய மத்திய அரசாங்கமானது அழைத்திருந்தமை தமிழ்நாட்டு மக்களை மேலும் ஆத்திரப்பட வைத்தது.

தமிழ்நாட்டு மாநில அவையானது கடந்த ஆண்டில் சிறிலங்காவுக்கு எதிராக பொருளாதாரத் தடையை விதித்ததுடன், யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. இதன் பின்னர், சிறிலங்கா இராணுவத்தினருக்கு பயிற்சி வழங்க இந்திய மத்திய அரசாங்கம் உடன்பட்டமையை தமிழ்நாட்டு முதல்வர் ஜெயலலிதா எதிர்த்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, தாம்பரம் விமானப் படை நிலையத்தில் சிறிலங்கா பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒன்பது பேர் பயிற்சி எடுத்த போது அதனை ஜெயலலிதா கடுமையாக எதிர்த்திருந்தார். இவரது எதிர்ப்பின் விளைவாக, மத்திய அரசாங்கமானது சிறிலங்கா படை அதிகாரிகளை உடனடியாக பெங்களுருக்கு அருகில் உள்ள ஜெயலகங்க என்ற இடத்தில் அமைந்துள்ள பயிற்சி நிலையத்திற்கு மாற்றியது. இதன் பின்னர் 11 மாதகாலப் பயிற்சி வழங்குவதற்காக சிறிலங்கா பாதுகாப்பு படையைச் சேர்ந்த இரு வீரர்கள் ஊட்டிக்கு அருகிலுள்ள வெலிங்ரன் பாதுகாப்பு சேவைகள் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர்.

சிறிலங்காவுக்கு திரும்பிய உதைபந்தாட்ட அணியினர் தொடர்பாகவும், தமிழ்நாட்டுக்கு சென்றிருந்த பாதயாத்திரைகள் மீதான தாக்குதல்கள் தொடர்பாகவும் தமது விசனத்தை வெளிப்படுத்துபவர்கள், கடந்த பல பத்தாண்டுகளாக சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதல்களில் நிராயுதபாணிகளாக படுகொலை செய்யப்பட்ட நூறு வரையான தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்பாக பேசுவதில் அமைதி காத்துவருகின்றனர்.

இந்த அடிப்படையில், சிறிலங்கா துடுப்பாட்ட அணியானது இந்திய துடுப்பாட்ட அணியிடம் தோல்வியடைகின்ற போதெல்லாம், வன்முறைகளை அதிகம் சந்திக்கின்ற தமிழ் மீனவ சமூகத்தினர் சிறிலங்காவுடனான இந்தியாவின் துடுப்பாட்ட உறவை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

காஷ்மீர், வடகிழக்கு, சற்றிஸ்கா, ஜார்க்கண்ட் [Kashmir, the Northeast, Chhattisgarh and Jharkhand] ஆகிய மாநிலங்களின் விடயத்தில் நடந்துகொள்வதைப் போலவே இந்திய மத்திய அரசானது தமிழ்நாட்டு மக்களும் தனது நாட்டின் குடிமக்கள் என்பதை எப்போதும் நினைக்கத் தவறுகின்றது.

கடந்த பல பத்தாண்டுகளாக தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசாங்கமானது கட்டவிழ்த்து விட்டுள்ள திட்டமிட்ட நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசாங்கம் கண்டிக்க தவறிவிட்டது. அத்துடன் தமிழ்நாட்டு மக்களாலும், இந்த மக்களால் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அரசாங்கத்தாலும் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதிலும் இந்திய மத்திய அரசாங்கமானது தவறிழைத்துள்ளது. இந்தியாவானது இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் தனது நாட்டில் பிரிவினை என்கின்ற விதையை தானாகவே விதைத்து வருகின்றது.

தாம் இந்திய மத்திய அரசாங்கத்தால் அவமதிக்கப்படுவதாக தமிழ்நாட்டு மக்கள் கருதத் தொடங்கினால், இந்தியாவானது தனது நாட்டு மக்களை சிறைவைக்கின்ற சிறையாக மாறக் கூடிய சூழல் உருவாகும். தமிழ்நாட்டு அரசாங்கத்தை தனது எதிரியாகவும், அதேவேளையில் சிறிலங்கா அரசாங்கத்தை தனது நட்பு நாடாகவும் கொண்டு சிறிலங்கா கடற்படை அதிகாரிகளுக்கு இராணுவப் பயிற்சியை வழங்குவது தொடர்பில் தமிழ்நாடானது தனது தீவிர எதிர்ப்பைக் காட்டினால் இதன் விளைவு ஆபத்தானதாக இருக்கும். தமிழ்நாட்டு மக்கள் தாம் தமது சொந்த நாட்டிலே இரண்டாந்தரக் குடிமக்களாக நடாத்தப்படுவதை உணர்ந்து, இந்திய மத்திய அரசாங்கத்தை எதிர்க்கின்ற நிலைக்குத் தள்ளப்படுவர்.

இதன் பெறுபேறாக, தமிழ்நாட்டு மக்கள் தமக்கான சுயநிர்ணயம் மற்றும் தேசிய இனப்பிரச்சினை போன்ற எண்ணக்கருக்களை உருவாக்கிக் கொள்வதற்கு புதுடில்லியால் மிதமான பாதுகாப்பு வழங்கப்படுகின்ற 21ம் நூற்றாண்டின் ஹிட்லரான ராஜபக்ச மற்றும் அவரது ஆயுதப் படைகள் என்பன காலாக அமைந்துவிடும்.

தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் இவ்வாறான எண்ணக்கரு உருவாகும் போது அது தமிழீழ விடுதலைப் புலிகளை விட அல்லது தமிழீழத்திற்கான அதன் போராட்டத்தை விட வலுமிக்கதாக அமைந்துவிடும்.

இந்திய மத்திய அரசாங்கமானது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டிருந்தால், இது ஜெயலலிதாவால் தலைமை தாங்கப்படும் அரசாங்கத்தையும், 60 மில்லியன் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சட்டசபை உறுப்பினர்கள் மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும். தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்திய மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் தமது மக்களின் கோரிக்கைகளை ஒருமித்து ஆதரிக்கின்றனர். சிறிலங்காவின் வன்னி நிலப்பரப்பில் தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு துணைபோயிருந்த இந்தியாவானது, ஈழத் தமிழர்களின் விடயத்தில் மேலும் தீங்கிழைக்காது அதிலிருந்து தன்னை மீட்டு அவர்களுக்கு நன்மை பயக்கின்ற செயல்களை மேற்கொள்ள வேண்டும்.

சிறிலங்காவை விமர்சிக்கின்றவர்களை எதிர்த்து விமர்சனம் செய்கின்ற 'இந்து' ஊடகமானது தனது ஆசிரியர் உரையில், 'ஜெயலலிதாவின் செயலானது குறுகிய நோக்கைக் கொண்டது' எனவும் 'சிறிலங்காவுடன் விளையாட்டு மற்றும் கலாசார உறவுகளை தடைசெய்வதில் தமிழ்நாட்டு முதலமைச்சர்' ஈடுபடுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தது.

இந்நிலையில், தமிழ்நாட்டை பார்வையிடச் சென்ற சிறிலங்கர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட எதிர்த்தாக்குதல்கள் தற்போது சிறிலங்கா அரசாங்கத்தால் தொடர்ச்சியாக அடக்கி ஆளப்படும் தமிழ் மக்களின் நலன்சார்ந்ததாகும். ஒரு ஆண்டில் சிறிலங்காவைப் பார்வையிடுவதற்காக இரண்டு லட்சம் இந்திய சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2017ல் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கையானது 10பில்லியன் அமெரிக்க டொலராக இருக்கும் என எதிர்வு கூறப்படுகிறது. இந்நிலையில் சிறிலங்காத் தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் மேற்கொள்ளப்படும் இராணுவ சார் பயிற்சிகள் தடை செய்யப்பட்டு, கலாசார, கல்விசார் தொடர்புகளை எதிர்த்து புறக்கணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு பொருளாதாரத் தடை விதிக்கப்படும் போது இது சிறிலங்காத் தீவுக்கு பெரும் சரிவை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட இனப்படுகொலையை அனைத்துலக அழுத்தம் மூலம் மட்டும் நிறுத்த முடியும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை. புறக்கணிப்புக்கள், தடைகள் போன்றன தென்னாபிரிக்காவின் இனவெறி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதில் செல்வாக்குச் செலுத்தியிருந்தது. இதேபோன்று, இஸ்ரேலிய நாட்டின் அதிகாரத்தை எதிர்த்து பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் அறிவு சார் புறக்கணிப்பு போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர். இவற்றையொத்த எதிர்ப்பு போராட்டத்தையே தமிழ்மக்களை இரண்டாந்தர குடிமக்களாகக் கருதும் சிறிலங்கா விடயத்திலும் பிரயோகிக்க வேண்டும்.

சிறிலங்கா அரசாங்கத்தின் யுத்த மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறவேண்டும் என அழுத்தம் கொடுப்பதில் தமிழ்நாட்டு முன்னின்று செயற்பட வேண்டும். தமிழ்மக்களைக் கொன்றொழித்த சிறிலங்கா தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் தமிழ்நாடு முழுவதும் ஒருமித்து அழுத்தம் கொடுக்கும் அதேவேளை, வெளிநாட்டு அரசாங்கங்கள், அனைத்துலக அமைப்புக்கள் மற்றும் கலாசார செயற்பாட்டாளர்கள், கல்விமான்கள, பல்கலைக்கழகங்கள், தொண்டர் அமைப்புக்கள், புரட்சிகர அமைப்புக்கள், சாதாரண மக்கள் போன்றவர்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடுவதற்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழ்மக்களுக்கு நீதி வழங்கப்படும் வரை தொடர்ந்தும் சாத்தியமான வழிகளில் எல்லாம் சிறிலங்கா அரசாங்கத்தை எதிர்த்து புறக்கணிப்பு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.[/size]

[size=4]http://www.puthinapp...?20120908106945[/size]

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பதிவுக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.