Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதியமைச்சில் வருவாய் இல்லை- கப்பல் துறைமுகங்கள் அமைச்சு வேண்டும்- ஹக்கீம் அடம்பிடிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]rav%20hakkiim.jpg

[size=4]தனக்கு நீதியமைச்சு தேவையில்லை என்றும் கப்பல் துறைமுகங்கள் அமைச்சு தரவேண்டும் என அலரி மாளிகையில் மகிந்த ராசபக்சவை சந்தித்த ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சி தலைவர் ரவூப் ஹக்கீம் கோரியுள்ளார்.[/size]

[size=4]மேலதிகமாக இன்னும் இரண்டு அமைச்சுக்கள் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சிக்கு தரவேண்டும் என்றும் அவற்றில் ஒன்று புனர்வாழ்வு புனரமைப்பு மீள்கட்டுமான அமைச்சு என்றும் மற்றுமொரு வருவாய் தரக் கூடிய அமைச்சையும் தருமாறு ஹக்கீம் கோரியுள்ளார் என அரசதரப்பினர் தெரிவித்துள்ளனர்.

நீதியமைச்சில் வருவாய் மிகக்குறைவு என்றும் இலங்கையில் ஒப்பந்தங்கள் வருவாய்கள் தரக் கூடிய அமைச்சாக இருக்கும் கப்பல் துறைமுகங்கள் அமைச்சு தனக்கு தரவேண்டும் என்றும் ஹக்கீம் கோரியிருப்பதாக அரச தரப்பு கூறுகிறது. கப்பல் துறைமுகங்கள் அமைச்சே இறக்குமதி ஏற்றுமதி அனுமதி உட்பட உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களை கையாளும் அமைச்சாகவும் உள்ளது. இதனால் இந்த அமைச்சராகவும் செயலாளர்களாகவும் இருப்பவர்களுக்கு கோடிக்கணக்கான பணம் கிடைப்பது வழமையாகும்.

இதனால் இந்த அமைச்சை தனக்கு தருமாறு ஹக்கீம் அடம்பிடிப்பதாக அரசதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை திணைக்கள கூட்டுத்தாபனங்களின் தலைவர்களாக முஸ்லீம் காங்கிரஷ் கட்சியை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் தூதுவர்களாக தமது கட்சியை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் ஹக்கீம் கோரியுள்ளார்.[/size][/size]

[size=4]http://www.eeladhesa...chten&Itemid=50[/size]

அதிமேதகு சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்,

துறைமுகங்கள் நெடுஞ்சாலைகள் அமைச்சு.[size=3] [/size]

[size=3]அதிமேதகு சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தற்பொழுது துறைமுகங்கள் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பதவியை வகிக்கின்ற அதேநேரத்தில், அத்துறை தொடர்பாகத் தலைசிறந்த அனுபவமும் திறமையும் அவரிடம் உண்டு. [/size]

[size=3]1994ஆம் ஆண்டு அரசாங்கத்தின் கடற்றொழில் அமைச்சராகவும் பின்னர் துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சராகவும் அவர் செயலாற்றினார். இலங்கையைச் சுற்றியுள்ள சமுத்திரப் பிரதேசத்தில் பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளக்கூடிய வரையறையற்ற வளங்களைப்பற்றி அவருக்கிருக்கும் அறிவு தேசிய பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களிப்புச் செய்கின்ற முற்போக்கு முயற்சிகள் பலவற்றின் ஆரம்பமாக இருந்தது. சமுத்திரவியல் தொடர்பாகப் பல்கலைக்கழகமொன்றை நிறுவியமை, கரையோரப் பாதுகாப்பு அலகொன்றை ஆரம்பித்தமை என்பவை இவற்றில் தனித்துவமானவையாகும். இந்து சமுத்திரத்தில் சர்வதேசக் கடற்பாதை ஊடாக அமைந்துள்ள உபாய முறையில் முக்கியத்துவம் வாய்ந்த இடமான அம்பாந்தோட்டையில் புதிய துறைமுகமொன்றை அமைப்பது அவருடைய கருத்தாகும். [/size]

[size=3]2004 ஏப்ரில் மாதம் அவர் பிரதம அமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டதோடு, அதனோடிணைந்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பதவியையும் வகித்தார்.[/size]

[size=3]2008ஆம் ஆண்டில் அமைச்சர் ஜெயராஜ் பர்னாந்துபுள்ளே மரணமடைந்ததையடுத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பதவியை சனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார்.[/size]

[size=3]சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் சீனா, இந்தியா, ஈரான், சவுதிஅரேபியா, கொரியா போன்ற ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளான பிரான்சு போன்ற நாடுகளிடமிருந்து துறைமுக, நெடுஞ்சாலைகள் துறைக்காகக் கணிசமானளவு வெளிநாட்டு உதவிகளைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. சர்வதேச நன்கொடை வழங்கும் நிறுவனமான உலகவங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனமான ஜப்பான் வங்கி போன்ற நிறுவனங்களும் நிதி உதவிகளை வழங்கின.[/size]

[size=3]தென்னிலங்கையில் தோன்றிய மக்கள் தலைவரான சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஏழு தசாப்தங்களுக்கும் சில சந்ததிகள் வரையும் விரிவடைந்து செல்கின்ற அரசியல் சந்ததியொன்றின் மரபுரிமை உடையவராவார். தமது தந்தையான டீ.ஏ. ராஜபக்ஷ அவர்களின் பின்னர் 1970ஆம் ஆண்டு பெலிஅத்த தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கைப் பாராளுமன்றத்துக்குத் தெரிவானார். [/size]

[size=3]சமூக சேவைகள் அமைப்புகள் பலவற்றுக்குத் தலைமை தாங்குகின்ற ஊக்கமிகு சமூக சேவையாளரான சிரந்தி ராஜபக்ஷவைத் திருமணம் புரிந்துள்ளார். முன்பள்ளிச் சிறார்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான விடயங்களில் அவர் பெரிதும் அக்கறை காட்டுகின்றார். பயங்கரவாதத்தின் காரணமாக வடக்குக் கிழக்கு மாகாணங்களில் உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழ்கின்ற பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் உதவி உபகாரம் செய்வதற்காக அவர் பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். [/size]

[size=3]அவர்களுக்கு மூன்று புதல்வர்கள் இருக்கின்றனர். அவர்களில் மூத்தவரான நாமல், 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஆகக்கூடிய வாக்குகளைப் பெற்றுப் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளார். இரண்டாவது புதல்வாரன யொசித்த, ஐக்கிய இராச்சியத்தில் னுயசவஅழரவா ல் பயிற்சி பெற்றதன் பின்னர் இலங்கைக் கடற்படையில் உப லெப்டினனாகச் சேவையாற்றுகின்றார். மூன்றாவது மகனான ரோஹித்த, வான் பயணவியல் மற்றும் விண்வெளி ஆய்வியல் என்பவை தொடர்பாக ஐக்கிய இராச்உpயத்தில் உயர் கல்வி கற்றுக்கொண்டிருக்கின்றார்.[/size]

[size=3]-[/size][size=3]துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு[/size]

துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு

சிறி லங்கா முன்னேற போகுது!

[size=5]ஆனாலும் இந்தியாவை "பீட்" பண்ண நாளாகும் :D:lol: [/size]

[size=3][size=4]ரவூப் ஹக்கீம் [/size][/size] கூட்டணியுடன் நடந்து கொண்ட விதத்தைப் பார்க்கும்போது நீதி அமைச்சின் நிலை எப்படி இருக்கும் இலங்கையின்; நீதி எபப்டி இருந்திருக்கும் என்பதற்கு இவை உதாரணம். மேலும் நிதி அமைச்சுக்கும் நீதி அமைச்சுக்கும் சின்ன வித்தியாசம் தானே அதை ஏன் இவர் கேட்கவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

மு.காவின் தேர்தல் நாடகம் முடிவுக்கு வந்தது! பஷீரின் பதவிக்காக அலைகிறது கட்சி!

மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் பிரதியமைச்சர் பதவியில் இருந்து விலகி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் மீண்டும் பிரதியமைச்சர் பதவியை பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கத்துடன் பேசச்சுவார்த்தை நடத்தி வருவதாக முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் அரசாங்க பிரதிநிதிகள் இடையில் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு மற்றும் வர்த்தக துறை பிரதியமைச்சராக பதவி வகித்த சேகுதாவூத், மாகாண சபைத் தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபடும் நோக்கில் தனது அமைச்சு பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

http://tamilleader.com/tamilleadernews/6155-2012-09-15-17-59-53.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.