Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த அழைத்தால் தேசிய அரசாங்கம் தொடர்பில் பேசத் தயார் - இரா. சம்பந்தன் (காணொளி)

Featured Replies

[size=1]

[size=4]கூட்டமைப்பு பலமில்லாத ஒரு இனத்தின் சிக்கல் நிறைந்த அரசியலை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ளது. கூட்டமைப்பின் அரசியல் நகர்வுகள் எல்லாமே எமது மக்களுக்கு பயன் தந்தவை என்று கூற முடியாது. உண்மையில் அரசியல் என்பது நேர்கோட்டில் என்றுமே பயணிப்பதும் அல்ல. [/size][/size]

[size=1]

[size=4]தலைவர் என்ற ரீதியில் சமபந்தர் அவர்களே முழுப்பொறுப்பையும் பொறுக்கவேண்டும். அதேவேளை சமூகம் என்ற ரீதியில் நாமும் எம்மால் முடிந்த உதவிகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்து அவர்களின் சுமையில் பங்கும் கொள்ளவேண்டும். [/size][/size]

[size=5]சம்பந்தனின் ‘தேசிய அரசு’ கருத்தில் எந்த முரண்பாடுமில்லை: மனோ கணேசன்[/size]

[size=4]கிழக்கு மாகாண தேர்தலையடுத்து ஏற்பட்டுள்ள முறுகல் நிலை தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில், அக்கட்சியின் தலைவர் சம்பந்தன் எம்பி தெரிவித்த ‘தேசிய அரசு’ என்ற கருத்தை அரசியல்ரீதீயாக புரிந்துகொள்ளவேண்டும் என நான் நினைக்கின்றேன். சம்பந்தன் சிங்கள மொழியில் தெரிவித்த கருத்தை நான் தொலைகாட்சியில் பார்த்து, கேட்டேன். அதில் எந்த முரண்பாட்டையும் நான் காணவில்லை. [/size]

[size=4]உண்மையில் இந்த அரசாங்கத்துடன் இணைந்து ஒரு கூட்டாட்சியை, மாகாணத்திலோ அல்லது மத்தியிலோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைக்கும் என்று, கூட்டமைப்பின் அரசியல் எதிரிகளும்கூட நம்ப மாட்டார்கள்.

உண்மையில் அங்கே சொல்லப்பட்ட கருத்து, அத்தகைய ஒரு ‘தேசிய அரசு’ யோசனை அரசின் உயர் தலைவரினால் நேரடியாக கூட்டமைப்பு தலைவருக்கு முன் வைக்கப்படுமானால், அது தொடர்பில் தமது நிலைப்பாட்டை அரச தலைவருக்கு தாம் தெரிவிப்போம் என்றே கூட்டமைப்பு தலைவர் சொன்னார் என நான் நினைக்கிறேன்.

அத்தகைய ஒரு சந்தர்ப்பம் ஏற்படுமானால், அரசு அதிபரிடம் தான் என்ன சொல்ல போகிறேன் என்பதையும் சுருக்கமாக ஊடகவியலாளரிடம் சம்பந்தன் தெரிவித்தார் என நான் நினைக்கிறேன். தாங்கள் முதலமைச்சர் பதவியையோ, அமைச்சர் பதவியையோ எதிர்பார்த்து அரசியல் செய்யவில்லை என்றும், அவை பற்றி அரசு தலைவரிடம் பேசும் எண்ணம் தமக்கு இல்லை என்பதையும் சம்பந்தன் சிங்கள மொழியில் சொன்னதை நான் கேட்டேன்.

தமிழர்களின் அபிலாஷைகளையும், இந்த கிழக்கு தேர்தலில் அரசுக்கு எதிராகவே தமிழ் பேசும் மக்கள் வாக்களித்துள்ளார்கள் என்பதையும், அப்படியான சந்தர்ப்பத்தில் சம்பந்தன் - அரசு தலைவருக்கு நேரடியாக சொல்ல நினைத்திருக்கலாம்.

[size=5]எனவே இதை, ஏதோ அரசுடன் இணைந்து கூட்டாட்சி அமைக்க கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்ததாக மிகைப்படுத்தி அபிப்பிராயம் தெரிவிப்பது முறையில்லை. மேலும் இந்த அரசாங்கத்துடன் எப்போதும் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வுகாண தயாராக இருக்கின்றோம் என்று, நாட்டிற்கும் உலகத்திற்கும் தமிழ் தரப்பு தொடர்ந்து சமிக்ஞை காட்டி வர வேண்டும் என்பது எனது நிலைப்பாடு ஆகும்.[/size]

அங்கேபோய் அடிப்படை நிலைப்பாடுகளை விட்டுக்கொடுக்காமல் என்ன பேசுகிறார்கள் என்பதைத்தான் நாம் கவனிக்க வேண்டுமே தவிர, அறிவிப்புகளை வைத்துகொண்டு தீர்ப்பு வழங்க கூடாது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் - ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.[/size]

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/48729-2012-09-16-14-53-31.html

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் காலத்தில் மகிந்த அரசு பல போக்கிரித்தனமான வேலைகளை செய்துள்ளது. இன்றும் கிழக்கில் பெரும்பான்மை அரசை ஏற்படுத்த கூட்டமைப்பில் சில உடைப்புக்களை மேற்கொள்ள பெரும்முயற்சி செய்கிறது.

முஸ்லிம் கட்சிகள் அரசுடன் கூட்டமைக்க பல நிபந்தனைகளை விதிக்கிறார்கள்.தாம் ஒரு சிறுபான்மை கட்சி என்பதை கூட மறந்து கூட்டமைப்பை கேவலமாக அவமதிக்கிறார்கள்.

இவ்வேளையில் கூட்டமைப்பும் சில காய்களை நகர்த்த வேண்டியவர்களாக உள்ளார்கள். ஆனால் ஒன்று மட்டும் சொல்லாம கூட்டமைப்பு அரசியலில் நேர்மையாக நடக்க நினைத்தால் ஏமாற்று பேர்வழிகளான சிங்கள,முஸ்லிம் கட்சிகளால் மேலும் ஏமாற்றப்படுவார்கள்.

[size=4]

மகிந்த அழைத்தால் தேசிய அரசாங்கம் தொடர்பில் பேசத் தயார் - இரா. சம்பந்தன் (காணொளி)
[/size]

சம்பந்தன் கிடைத்த சொற்ப ஆசனங்களை வைத்துக்கொண்டு மற்றவர்கள் பின்னால் அலைந்து திரியாமல் அரசியல் செய்தால் நல்லது! அடுத்தமுறை அதிக ஆசனங்களை பெறும் வழிவகைகளை இப்பவே ஆரம்பிக்கலாம்! சர்வதேச மட்டத்தில் தமிழரின் நிரந்தர அரசியல் தீர்வு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்குவது புத்திசாலித்தனம்!

சம்பந்தரின் அவசரத்தால் சிங்கள பயங்கரவாத ஐக்கிய தேசிய கட்சி "பிரிவினைக்கு ஆதரவளிக்கக் கூடாது" என்று கூட்டமைப்புக்கு நிபந்தனை விதிக்கிறது! பதிலுக்கு "வடக்கு கிழக்கு பிரிவினைக்கு", "நூலகங்களை எரிக்கும் கலாச்சாரங்களை", .......... சிங்கள பயங்கரவாத ஐ.தே..க. ஆதரவளிக்கக் கூடாது என்று சொல்லும் விவேகம், ராஜதந்திரம் சம்பந்தரிடமோ ஏனைய களத்திலுள்ள அரசியல்வாதிகளிடமோ இல்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.