Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசை கிழக்கில் எதிர்ப்பதாக நாடகமாடி கூட்டமைப்புக்கு வந்திருக்க வேண்டிய வாக்குக்களை கக்கீம் திருடினாரா?

Featured Replies

"செய்தி"யில் கணப்படும் இந்த உதயனின் கருத்தை படித்த பின்னர் தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

தமிழர்களின் மாகாணத்தில் சிங்கள கூட்டமைப்பின் விருப்பத்தின்படி ஆட்சியொன்று அமைகின்றது:

[Wednesday, 2012-09-19 11:16:31]

CanadaUthayan_articles150.jpg

இலங்கையின் கிழக்கு மாகாணம் தமிழ் பேசும் மக்களுடைய மாகாணம் என்றே கணிக்கப்பட்டு வந்துள்ளது. அங்கு தமிழர்களும் முஸ்லிம்களும் கலந்த வாழும் கிராமங்களும் பெருமளவில் உண்டு. சில இடங்களில் தமிழர்களும் முஸ்லிம்களும் "பிட்டும் தேங்காய்ப் பூவும்" போல வாழ்கின்றார்கள் என்றும் இலக்கிய நயம் கொண்ட பார்வையில் நோக்கப்படுகின்றார்கள்.

திருகோணமலை தொடக்கம் அம்பாறை வரை உள்ள வளி மண்டலத்தில் உள்ள காற்றில் தமிழின் அளவே எப்போதும் அலை மோதிக்கொண்டிருக்கும். இவ்வாறு பல தகவல்களை இங்கே நாம் குறிப்பிடலாம். மேலும் கிழக்கு மாகாணத்தில் மீன்பிடித் தொழிலிலோ அன்றி நெல் வேளாண்மை செய்யும் தொழிலிலோ சிங்களவர்களை விட தமிழர்களும் முஸ்லிம்களுமே பெருமளவில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதன் மூலம் நாம் அறியக்கூடியது என்னவென்றால் கிழக்கு மாகாணம் பொருளாதாரத் துறையிலும் உணவு சார்ந்த விடயத்திலும் தன்னிறைவு அடைவதற்கு அங்கு தமிழர்களும் முஸ்லிம்களுமே அதிகளவில் காரணமாக இருக்கின்றார்கள் என்பதே ஆகும்.

இவ்வாறாக தமிழின் சிறப்புக்களை பறைசாற்றும் கிழக்கு மாகாணத்தின் மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்பட்டு பின்னர் அதன் அரசாங்கத்தை யார்? அமைப்பது என்றும் அந்த மாகாணத்தின் முதலமைச்சர் யார்? என்று எதிர்பார்த்து உலகமே காத்திருந்தது. நாம் முன்னர் குறிப்பிட்டது போல தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரசும் சேர்ந்து பெற்ற ஆசனங்கள் மகிந்தா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெற்ற ஆசனங்கள் அதிகமானவை.

இவ்வாறிருக்கையில் அங்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கையின் ஜனாதிபதியுமான மகிந்தா இராஜபக்சாவின் விருப்பத்திற்கு அமைய ஒரு தமிழ் பேசும் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராகியுள்ளார். இந்த முடிவுகளின் படி கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பேசும் மக்களும் குறிப்பான தமிழத் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்த தமிழ் மக்களும் முஸ்லிம் காங்கிரசுக்கு தங்கள் வாக்குகளை அளித்த முஸ்லிம் மக்களும் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.

ஏமாற்றப்பட்டவர்கள் கிழக்கு மாகாணத்தின் தமிழ் முஸ்லிம் மக்களாக இருக்கையில் ஏமாற்றியவர் யார்? என்ற கேள்வி யாருக்கும் எழலாம். அதற்குரிய பதிலை நாம் இந்தப் பக்கத்தில் கூறத்தேவையிலi;ல. மாகாணத்தின் முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளவரின் விடயம் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு இரா. சம்பந்தன் அவர்கள் நேற்று தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் கிழக்கு மாகாண மக்களை ஏமாற்றியவரை நாம் ஊகித்துக்கொள்ள முடியும்.

இங்கே கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் மக்களும் அரசாங்கத்தாலும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீமினாலும் ஏமாற்றப்பட்டுள்ள்hர்கள் என்றே நாம் கருதுகின்றோம். ஆமாம் அன்பர்களே! கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியானதும் அரசாங்கம் தனது வேட்பாளர்கள் பற்றிய அறிவிப்புச் செய்தது. அதேபோல முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் அமைச்சர் றவூப் ஹக்கீமும் தனது வேட்பாளர்களை நியமிக்க போவதாகவும் அறிவித்து தேர்தலுக்கு பின்னர் அரசாங்கத்தோடு சேர்ந்து ஆட்சி அமைக்கப்போவதாக கூறவேயில்லை.

அரசாங்கத்தை பற்றிய கவலை தமக்கு இல்லை என்ற தொனியில்தான் தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் உரையாற்றினார். சுpல கூட்டங்களில் உரையாற்றும் போது அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கண்டித்தும் உரையாற்றினார்கள். இதை அவதானித்த முஸ்லிம் மக்கள் ஆயிரக்கணக்கானவர்கள் தேர்தலுக்குப் பின்னர் ஹக்கீம் தனது உறுப்பினர்களோடு தமிழ்த் தேசிய கூட்டமைப்போடுதான் சேர்ந்து கூட்டு அரசாங்கத்தை அமைப்பார் அரசாங்கத்தோடு எந்தச் சந்தர்ப்பத்திலும் சேரவே மாட்டார் என்று நம்பினார்கள்.

இவ்வாறான நம்பிக்கையை தனது முஸ்லிம் மக்களுக்கு ஊட்டி நின்ற ஹக்கீம் இறுதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை மாத்திரமின்றி�� கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களையும் ஏமாற்றிவிட்டார் என்றே கருதுகின்றோம். ஏனென்றால் தேர்தலுக்குப் பின்னர் ஹக்கீம் அரசாங்கத்தோடு சேர்ந்து ஆதரவை வழங்வார் என்று அந்த முஸ்லிம் மக்கள் பலருக்கு தெரிந்திருந்தால்��அவர்கள் நிச்சயமாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கே வாக்களித்திருப்பார்கள். இதில் உண்மைகள் அடங்கியிருக்கின்றன.

இந்த விடயத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு இரா சம்பந்தன் தெரிவித்த சில விடயங்களை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.அவர் கூறுகின்றார் "முஸ்லிம் மக்களை ஏமாற்றி அவர்களது வாக்குகளை பறித்துக்கொண்ட ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தோடு எதனை அடிப்படையாக வைத்து பேரம் பேசினார் என்று புரியவில்லை.

முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் ஒருவருக்கு முதலமைச்சர் பதவியை நாம் விட்டுக்கொடுக்கத் தயாராக உள்ளோம் என்று நாம் அறிவித்தும் கூட அதை அக்கறை கொண்டு கவனமெடுக்காமல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்துள்ளார் ஹக்கீம். இதன் காரணமாக கட்சியை நம்பி தங்கள் வாக்குகளை அளித்த முஸ்லிம் மக்களை தனது சுயநலத்திற்காக ஏமாற்றிவிட்டார். எனினும் தனது தவறான முடிவின் விளைவ அவர் வெகு விரைவில் அனுபவிப்பார்" என்று| திரு இரா சம்பந்தன் கூறியுள்ளார்.

இவ்வாறு பார்க்கும் போது அரசாங்கக் கட்சியை சேர்ந்த ஒருவருக்கு முதலமைச்சர் பதவியை ஹக்கீம் விட்டுக்கொடுத்ததன் மூலம் அவர் சிங்களக் கூட்டமைப்பின் விருப்பதை பூர்த்தி செய்திருப்பது மாத்திரமன்றி தனது மத்திய அரசு மந்திரிப் பதவியையும் காப்பாற்றியுள்ளார் என்றே கூறவேண்டும்.

- கனடா உதயன் கதிரோட்டம் 21-09-2012 வெள்ளிக்கிழமை

http://www.seithy.co...&language=tamil

Edited by மல்லையூரான்

கனடா உதயன் செய்தியை மேற்கோள் காட்டும் அளவிற்கு எங்கட அரசியல் வந்திட்டுது .

  • கருத்துக்கள உறவுகள்

கனடா உதயன் சொல்ல முதல் நான் சொல்லுடன் :D

[size=4]கூட்டமைப்பு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும், புதிதாக முஸ்லீம் சமூக ஆர்வலர்களை கட்சியில் இணைக்க வேண்டும். தாங்களும் அவர்களும் இணைந்து முஸ்லீம் மக்கள் மக்கள் மத்தியில் வீடு வீடாக பிரச்சாரங்களை முன்னெடுத்து உண்மைகளை புரிய வைக்க வேண்டும்.[/size]

[size=4]அரசை கிழக்கில் எதிர்ப்பதாக நாடகமாடி கூட்டமைப்புக்கு வந்திருக்க வேண்டிய வாக்குக்களை கக்கீம் திருடினாரா?[/size]

அரசியல் என்ற பெயரில் காலம் காலமாக இவர்கள் இந்த வியாபாரத்தைத்தானே செய்து வருகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அத தான் நாங்களும் செய்யணுன்னு சொல்லுறன்.....

  • தொடங்கியவர்

கிழக்கு மாகாண முஸ்லீம்களுக்கு ஐக்கிய இலங்கையில் தீர்வு இல்லை. இதை கண்டியில் இருந்துவரும் களைக்கூத்தாடி கக்கீம் உணர்ந்து கட்சியை முன்னெடுத்து செல்லமாட்டார். கூட்டமைப்பு கட்சியில் வென்ற மு.கா அங்கத்தவர்களை கம்மீமை விட்டுவிட்டு தமக்கென்ன மாகாணத் தலைமை ஒன்றை அமைத்துகொண்டு வந்து தமக்காக காத்திருக்கும் முதல் அமைச்சர் பதவியை ஏற்று கிழக்குக்கான கிழக்கு மாகாண ஆட்சியை அமைக்க சொல்ல வேண்டும். மத்தியின் மந்திரி கக்கீம் மத்திய சிங்கள அரசை தமிழ் முஸ்லீம்-இந்து கிழக்கு மாகணத்திற்கு வெட்டி ஒட்டுகிறார்.

கிழக்கின் முஸ்லீம்கள் துணிச்சலுடன் ஒரு புதிய தலைமையை அமைத்து கிழக்கு மாகாண முதல் அமைச்சர் பதவியை தங்கள் கைக்குள் எடுக்க வேண்டும். கக்கீமின் தலைமைக்கு விசுவாசம் காட்டினார்களானால் அது உண்மையில் சிங்கள அரசுக்கு விசுவாசம் காட்டுவதாகவே முடிகிறது. இந்த ஏழுபேரும் துணிச்சலுடன் நடந்துகொள்ள வேண்டிய நேரம் இது. 15 கிழக்கின் முஸ்லீம் பிரதிநிதிகளுக்கும், 12 தமிழ் பிரநிதிகளும் கிழக்கை காப்பாற்ற முடியாத போது இந்த 7 பேரும் தமக்கெகொரு தலைமையை அமைத்தால் இது நடக்க முடியும்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

கனடா உதயன் செய்தியை மேற்கோள் காட்டும் அளவிற்கு எங்கட அரசியல் வந்திட்டுது .

கவலைப்படாதீர்கள். நாம் வேறு சிலரின் அரசியலையும் தொடர்ந்து கேட்கிறோம் தானே. :lol::icon_idea:

அவற்றில் ஒன்றாக கனடா உதயனும் இருந்துவிட்டு போகிறது..... அதில் என்ன? :)

Edited by மல்லையூரான்

அத தான் நாங்களும் செய்யணுன்னு சொல்லுறன்.....

விரக்தி வேன்டாம் சுன்டல் உங்களைப் போன்றுதான் எங்களது உணர்வுகளும் என்ன செய்வது. எல்லாம் நல்லதாவே நடக்கும் என எமது இலட்சியத்தில் நம்பிக்கை வைத்து தெடர்ந்து எமது விடுதலைக்காய் உளைப்போம். பெருத்தவன் பூமி ஆள்வான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.