Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"துக்ளக் " தர்பார் - இவனை என்ன செய்யலாம்?

Featured Replies

“துக்ளக்” பத்திரிக்கையில் “இலங்கை பிரச்சனை” என்ற தலைப்பில் வந்த கட்டுரையில் சில பகுதி::

3########################################

1. விடுதலைப்புலிகளின் தூண்டுதலினால் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தனர். இந்திய அமைதிப்படையினர் மீது அபாண்டமான பழிகள

ை சுமர்த்தி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக நின்று, வடக்கு மற்றும் கிழக்கு பிரதேச தமிழ் மக்கள் அமைதி முயற்சியை முறியடித்தனர்.

2. இந்திராகாந்தியால் ஆயுத உதவியும் ராணுவ பயிற்சியும் பெற்ற புலிகள் இலங்கை தமிழர்களுக்கு நல்ல தீர்வை தடுத்தது மட்டும் இன்றி இந்திராவின் மகனை கொன்றனர்.

3. இந்திய உதவி இல்லாமல் வளந்தே இருக்க முடியாத ஒரு கூட்டம் இந்தியாவை அயல் நாட்டினராக அறிவித்து சிங்களர்களை சகோதரர்களாக கொண்டாடி இந்திய அமைதிப்படையை வெளியேற சொல்லியது. அந்த கூட்டம் இலங்கையில் இருந்த தமிழ் தலைவர்களை எல்லாம் கொன்றது. அப்பாவி தமிழர்களை எல்லாம் கொன்றது. இறுதியில் தானும் அழிந்தது. அழிந்த அந்த கூட்டத்துக்கு மீண்டும் உயிரூட்ட முயற்சிகள் நடக்கின்றன.

4.பல வருடங்களாக நடந்து வந்த புலி- அரசு மோதல்கள் போது வெளியேறி அயல்நாடுகளில் குடியேறி விட்ட இலங்கை தமிழர்கள் பலர் இலங்கையில் தமிழர் பிரச்சனை தீர்வதை விரும்பவில்லை.

5.நம் நாட்டில் பங்களாதேஷ் விடுதலை பெற்ற பின் அங்கிருந்து இங்கு வந்த அகதிகள் திரும்பி செல்ல வேண்டும் என்று கோருவது போல சில நாடுகளில் குரல்கள் எழலாம். உங்கள் நாட்டில் நீங்கள் பட்ட அவதியின் காரணமாக இங்கு வந்தீர்கள். இப்போது உங்கள் நாட்டில் தான் அமைதி திரும்பி விட்டதே. ஆகையால் நீங்கள் திரும்பி செல்லுங்கள் என்று சில நாடுகளில் சில அமைப்புகள் கூற தொடங்கலாம்.

6.இதை விட முக்கியமாக இப்போது ஈழம் பெற வேண்டிய போர்.. அதற்கான ஆயுதம் செய்ய நிதி தேவை என்று இலங்கையில் தமிழர்கள் மிக மோசமான நிலையில் இருப்பதால் அவர்களுக்கு நிதி தேவை என்று, அல்லது இது மாதிரி வேறு காரணங்கள் கூறி அயல் நாடுகள் சிலவற்றில் இலங்கை தமிழ் முக்கியஸ்தர்கள் பண வேட்டை நடத்துகின்றனர். இது மிரட்டல் மூலமாகவும் நடக்கின்றது. பணத்துக்கு பணம். ஆதிக்கத்துக்கு ஆதிக்கம்.இது தொடர வேண்டும் எனில் இலங்கையில் அமைதி திரும்பி விட்டதாக யாரும் ஒப்புக்கொள்ள கூடாது. ஆகையினால் இலங்கையில் இன்றும் தமிழர்கள் வேட்டையாடப்படுகின்றார்கள் என்று அயல் நாட்டு அமைப்புகள் முன் காட்ட அயல்நாடுகளுக்கு சென்று ஆதிக்கம் புரிந்து வசதியாக வாழகின்ற இலங்கை தமிழர்கள் முயல்கிறார்கள்.

7. இந்த ஈழ பிசினஸ் தொடங்குவதற்காக அவர்கள் வசூல் செய்யும் நிதியில் ஒரு பங்கு இதற்கான பிரச்சாரத்துக்காக செலவிடப்படுகின்றது. அந்த நிதி எங்கெங்கோ செலவிடப்படுகின்றது. யார் யாருக்கோ பிரச்சார சம்பளம் தரப்படுகின்றது என்பது எல்லாம் இலங்கை அரசு ஆராய வேண்டிய விஷயங்கள். இப்படி நடக்கிற பிரச்சாரத்தின் காரணமாக இன்றும் இலங்கையில் தமிழர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்பதை நாம் நம்பி விடக்கூடாது.

8. உலகத்திலேயே சப்மரைன் முதல் விமானம் வரை சேர்த்து வைத்து இருந்த, தன் மக்களையே கேடையமாக வைத்து இருந்த, சிறுவர்களை முன்னிருத்தி பலிகடா ஆக்கிய , தமிழ் தலைவர்களை கொன்று போட்ட ஒரு கொலைகார கூட்டத்தை எதிர்கொள்ள வேண்டியதாகிவிட்டது இலங்கை அரசுக்கு.அதை எதிர்கொண்டு அந்த கும்பலை அரசு ஒடுக்கியது என்பது பாராட்டத்தக்க ஒரு சாதனையாகும்.

அந்த மாதிரி ஒரு வெறிச்செயலை இலங்கை அரசு எதிர்கொண்ட போது பல சிவிலியன்கள் உயிர் இழக்க நேரிட்டது மிகவும் வருத்தமான ஒரு விஷயம் தான் எனினும் சிவிலியன்களை கேடயமாக புலிகள் பயன் படுத்திய போது, ஆஸ்பத்திரிகளில் புலிகள் பதுங்கி தங்கள் தாக்குதலை நடத்திய போது ராணுவத்தின் எதிர் தாக்குதலில் சிவிலியன்கள் உயிரிழப்பு என்பது சகஜம் தானே! இதற்கு எல்லாம் புலிகள் தானே காரணம்!

9. தமிழர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான அல்ல.. பல்லாயிரக்கணக்கான அளவு கன்னி வெடிகள் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை நீக்கி விட்டு தான் குடியேற்றம் நடத்த வேண்டும். இதனால் ஏற்படும் தாமதத்துக்கு இலங்கை அரசா பொறுப்பு???

10. ஐ நா சபையில் இலங்கைக்கு எதிராக வந்த ஒரு தீர்மானத்தை ஆதரித்து இந்திய அரசு வாக்களித்தது ஒரு மாபெரும் தவறு. அந்த தீர்மானத்தை இந்தியா எதிர்த்து இருந்தால் இரு நாடுகளின் உறவு வலுப்பெற அது உதவி இருக்கும்.

541105_347931675301912_49261121_n.jpg

http://www.facebook.com/aanthaiiRipportter

  • கருத்துக்கள உறவுகள்

இதை வாங்குவதற்கு சனம் இருக்கும் மட்டும் இத்தகைய வாந்திகள் வெளிவருவதைத் தடுக்க முடியாது..

  • கருத்துக்கள உறவுகள்

1989 வாக்கிலும் கூட இவர் இப்படித்தான் எழுதிக் கொண்டிருந்தார். துக்ளக்கை இலவசமாக.. ஒட்டுக்குழுக்களைக் கொண்டு இந்திய இராணுவம் சுற்றி நிற்க யாழ் நகர பாடசாலை வகுப்பறைகளுக்குள் திணித்தார்கள். அப்போ வகுப்பு மாணவ தலைவர்கள் எல்லாரும் முடிவு செய்து இவற்றை மாணவர்களிடம் இருந்து சேகரித்து வீதியில் விட்டெறிந்தும் கொழுத்தியும் இருந்தோம். அதற்கு பதிலடியாக பாடசாலை விட்டதும்.. ஒட்டுக்குழுக்களும்.. இந்தியப்படைகளும் வீதியால் சென்ற வந்த மாணவர்களை துரத்தி துரத்தித் தாக்கின. ஒட்டுக்குழுக்கள் இரும்புக் கம்பிகளால் கூட தாக்கினர். இன்றும் அவர்கள் அதனையே செய்கின்றனர். திருந்தவே இல்லை. இப்போதும்.. அந்த நினைவுகள் அப்படியே நிழலாடுகின்றன.

அந்தளவுக்கு துக்ளக் இந்திய இறையாண்மையை போற்றும் பத்திரிகை. அதற்கு எவர் செத்தாலும் பறுவாயில்லை.. இந்திய இறையாண்மையும்.. நேரு குடும்பமும் வாழனும். பிராமணியம்.. உயர்ந்த இடத்தில் இருக்கனும். இது தான் கொள்கை..! இதெல்லாம் ஒரு பத்திரிகை. அதற்கு பத்திரிகை சுதந்திரம்.. கருத்துச் சுதந்திரம் ஒரு கேடு..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சில கிழடுகள் லேசில போகாமல் அடம்பிடிக்கிறதுதான் தமிழினத்தின் சாபக்கேடு.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சில கிழடுகள் லேசில போகாமல் அடம்பிடிக்கிறதுதான் தமிழினத்தின் சாபக்கேடு.. :rolleyes:

உண்மை தான். நல்லவர்கள் போய் சேர்ந்திட்டார்கள். கொடுவினைகள்.. வாழ்ந்து உலகை அழித்துக் கொண்டே இருக்கின்றன..!

ஈழத்தில்.. துக்ளக் என்றுமே மக்களால் வெறுக்கப்படும் ஒரு பத்திரிகை. சிறுவர் முதல் பெரியவர் வரை வெறுத்து ஒதுக்கின பத்திரிகையும் கூட..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கேட்பவர்கள், கேணையர்களாக இருக்கும் மட்டும், சோவும், ராமும், சாமியும் ஏரோப்பிளேன் ஓட்டுவதைத் தவிர்க்க முடியாது!!! :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.