Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நந்திக்கடல், வெள்ளமுள்ளி வாய்க்கால் ஊடாக 33 கி.வோ.அதிவேக மின்கம்பிகள்

Featured Replies

  • [size=2][size=4]கிளிநொச்சிவரை சக்திவாய்ந்த மின்பரிவர்த்தனை நிலையம்;[/size][/size]
  • [size=2][size=4]25ஆம் திகதி ஜனாதிபதியால் திறந்து வைப்பு[/size][/size]
  • [size=2][size=4]வடமாகாண மின்விநியோக நஷ்டத்தை தவிர்க்க நடவடிக்கை[/size][/size]
  • [size=2][size=4]மின்சாரத்தை சீர்குலைத்தோருக்கும் பாகுபாடின்றி மின்சாரம்[/size][/size]

[size=3][size=4]அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதத்திற்குள் வடக்கிற்கு தேசிய மின் கட்டமைப்பினூடாக முழுமையான மின்சார வசதி அளிக்கப்படும். இதனூடாக யாழ். குடா அடங்கலாக வடக்கு பிரதேசத்தில் காணப்படும் மின்சார சிக்கல்கள் அனைத்திற்கும் தீர்வு ஏற்படும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.[/size][/size]

[size=3][size=4]வவுனியாவில் இருந்து கிளிநொச்சி வரை அதி சக்தி வாய்ந்த மின் பரிவர்த்தனை தொகுதியும் மின் உபநிலையமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு இதனை எதிர்வரும் 25 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைக்க உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். வட பகுதிக்கு மின்சார வசதி அளிப்பது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவிய லாளர் மாநாடு நேற்று மின்சார அமைச்சில் நடைபெற்றது.[/size][/size]

[size=3][size=4]யாழ். குடாவிற்கு மின்சாரம் வழங்குவதற் காக மின்சார சபைக்கு வருடாந்தம் 2800 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டு வருவ தாகவும் புதிய மின்பரிவர்த் தனை தொகுதி பூர்த்தியாவதோடு இந்த நஷ்டம் பெருமளவு குறைவ டையும் என்றும் அமைச்சர் கூறினார். வட மாகாணத்தில் உள்ள சகல பிரதான நகரங்களுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர் பிரபாகரனின் வீட்டுக்கு மட்டுமன்றி வட பகுதி மின்கட்டமைப்பை அழித்தவர்களுக்கும் மின்சார இணைப்பு வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.[/size][/size]

[size=3][size=4]1987 ஒக்டோபர் மாதம் புலிகளுக்கெதிரான ராணுவ நடவடிக்கையை இந்திய இராணுவம் ஆரம்பித்தபோது வவுனியா- கிளிநொச்சி மற்றும் வவுனியா- மன்னார் மின் இணைப்பு கட்டமைப்புகளை புலிகள் இயக்கம் அழித்தது. வவுனியா- மன்னார் மின் இணைப்பு தொகுதி நிர்மாணிக்கப்பட்டு 9 நாட்களிலே அதனை புலிகள் அழித்தனர். இதற்காக பெற்ற கடன் இன்றும் செலுத்தப்படுகிறது. இதனை முழுமையாக இன்னும் மீளமைக்க முடியவில்லை.[/size][/size]

[size=3][size=4]இந்த நிலையிலே மூன்று தனியார் மின் நிலையங்களின் உதவியுடன் யாழ். குடாவுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. இங்குள்ள ஒரு இலட்சத்து 22 ஆயிரம் பாவனையாளர்களுக்கு மின்சார சபை நஷ்டத்திலே மின்சாரம் வழங்கி வருகிறது.[/size][/size]

[size=3][size=4]யாழ். குடாவுக்கு மின்சாரம் வழங்குவதற்காக மின்சார சபைக்கு வருடாந்தம் 2800 மில்லியன் ரூபா நஷ்டத்தை தாங்குகிறது. ஒவ்வொரு குடும்பத்திற்காகவும் வருடாந்தம் 22 ஆயிரம் ரூபா நஷ்டத்தை தாங்குகிறோம். தமிழ் மக்களுக்கு அநீதி இழைப்பதாக கூறுபவர்களுக்கு இந்த உண்மை தெரியாது. முழு வட மாகாணத்திற்கும் முழுமையாக மின்சார வசதி அளிப்பதற்காக 33 கிலோ வோர்ட் அதிவேக மின் கம்பி தொகுதி அமைக்கப்பட்டு வருகிறது. நந்திகடல் வெள்ள முள்ளிவாய்க்காலினூடாகவும் இந்த மின் கம்பிகள் நிர்மாணிக்கப்படுகின் றன. புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு பகுதிகளுக்கும் மின்சார வசதி அளிக்கப்பட்டுள்ளது. பிரதான நகரங்கள் அனைத்திற்கும் மின்சார வசதி வழங்கியுள்ளோம்.[/size][/size]

[size=3][size=4]பிரபாகரன் கடைசியாக இருந்த விஷ்வமடு, புதுக் குடியிருப்பு பிரதேசங்களுக்கு மட்டுமன்றி பிரபாகரனின் வீட்டிற்கும் கூட மின்சாரம் வழங்க முடிந்துள்ளது. யுத்த காலத்தில் புலிகள் தமக்கும் தமது குடும்ப உறுப்பினர்களுக்கும் மட்டுமே மின்சாரம் வழங்கினர்.[/size][/size]

[size=3][size=4]ஆனால் எமது அரசாங்கம் வட பகுதிக்கான மின் கட்டமைப்பை நாசப்படுத்தியவர்கள் உட்பட சகல வட பகுதி மக்களுக்கும் மின்சார வசதி வழங்கி வருகிறது. மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு ஒரு வருடம் வரை இலவசமாகவே மின்சார வசதி வழங்கப்படுகிறது.[/size][/size]

[size=3][size=4]வவுனியாவில் இருந்து கிளிநொச்சி யூடாக சுண்ணாகம் வரை அமைக்கப் படும் மின்சார பரிவர்த்தனை கட்டமைப் பின் முதற் கட்டம் நிறைவடைந் துள்ளது. ஜப்பான் அரசாங்கத்தின் 3200 மில்லியன் ரூபா நிதி உதவியுடன் வவுனியா- கிளிநொச்சி இடையிலான மின்சார பரிவர்த்தனை கட்டமைப்பும் உப மின் நிலையமும் நிர்மாணிக்கப் பட்டுள்ளது. இதனை எதிர்வரும் 25 ஆம் திகதி ஜனாதிபதி திறந்து வைப்பார். இரண்டாம் கட்டமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு இப்பணிகள் அடுத்த வருட நடுப்பகுதிக்குள் நிறை வடையும்.[/size][/size]

[size=3][size=4]கிளிநொச்சி - யாழ்ப்பாணத்திற்கிடையில் மேலதிக துரித மின்பரிவர்த்தனை தொகுதியொன்று அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர சுண்ணாகத்திலும் உப மின்நிலையமொன்றை அமைக்க உள்ளோம். வட மாகாணத்திற்கு தேசிய மின் கட்டமைப்பினூடாக முழுமையாக மின்சாரம் வழங்கும் வகையில் [/size][/size]

[size=3][size=4]யாழ்ப்பாணத்தில் மின் உற்பத்தி நிலையமொன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதோடு எதிர்வரும் டிசம்பரில் இந்த பணிகள் நிறைவடையும். இதற்காக 3.5 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.[/size][/size]

[size=3][size=4]தனியார் துறையினூடாக ஒரு அலகு 38 ரூபாவுக்கே கொள்வனவு செய்து வடக்கிற்கு வழங்கி வருகிறோம். கிளிநொச்சி மின் உப நிலையம் நிர்மாணிக்கப்பட்ட பின்னர் நாம் அடைந்து வரும் நஷ்டம் 1500 மில்லியன் ரூபாவினால் குறைவடையும்.[/size][/size]

[size=3][size=4]வட பகுதிக்கான மின்சார திட்டங்கள் யாவும் அடுத்த வருட இறுதிக்குள் பூர்த்தி செய்யப்படும். அதன் பின்னர் பிரதான மின் கட்டமைப்பினூடாக வடக்கிற்கு மின்சாரம் வழங்கப்படும். இதனூடாக யாழ். உட்பட வட பகுதியில் இடைக்கிடை ஏற்படும் மின்சார துண்டிப்புகள் பாதிப்புகள் யாவும் தீரும்.[/size][/size]

[size=3][size=4]மன்னாரில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் அதி சக்தி வாய்ந்த மின் பரிவர்த்தனை நிலையம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இங்கும் சிறிய உப மின் நிலையமொன்றை அமைக்கப்படும். தற்பொழுது யாழ். மாவட்டத்திற்கு 95 வீதமும் வவுனியாவுக்கு 70 வீதமும் மன்னாருக்கு 60 வீதமும் வன்னி பிரதேசத்துக்கு 35 வீதமும் மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த வருட இறுதிப் பகுதிக்குள் முழு வடக்கிற்கும் முழுமையான மின்சாரம் வழங்க உள்ளோம். இதற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.[/size][/size]

http://www.thinakaran.lk/2012/09/22/?fn=n1209222

இல்லாத பிள்ளைக்கு நான் என்ன சொல்லி தாலாட்ட. எரிந்த குடிசைகளுக்கும், உடைந்த வீடுகளுக்கும் அதை எரித்தும் உடைத்தும் அழித்தவ்ர்கள் இப்போது மின்சாரம் வழங்குகிறார்கள். இன்று இந்த நட்டத்தை உணர்பவர்கள் அன்று கொத்து குண்டுகளின் விலைக்கு கொமிசனும் லாபமாக பெற்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அவசரப் படாதயுங்கோ!

இந்தப் பாதையில, எங்கையோ ஒரு இடத்தில, புத்தர் 'உச்சா' போயிருப்பார்!

அங்க, ஒரு விகாரை ஒண்டு, எழும்பப் போகுது! :wub:

அவசரப் படாதயுங்கோ!

இந்தப் பாதையில, எங்கையோ ஒரு இடத்தில, புத்தர் 'உச்சா' போயிருப்பார்!

அங்க, ஒரு விகாரை ஒண்டு, எழும்பப் போகுது! :wub:

:lol: :lol: :lol: :lol: :lol:

[size=6] மின்சாரம் வழங்கப்படாததால் மாணவரின் கல்வி பாதிப்பு; துணுக்காய் கிராமங்களில் அவல நிலை [/size]

[size=4]துணுக்காய் பிரதேச செயலர் பிரிவிலுள்ள பல கிராமங்களுக்கு இதுவரை மின்சாரம் வழங்கப்படாமையால் இங்குள்ள மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படுகிறது என்று பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.

போரினால் மக்கள் இடம் பெயர்ந்த வன்னிப் பிரதேசத்திலே முதன் முதலில் மீள்குடியமர்வு இடம் பெற்றது துணுக்காயில் தான். ஆனால் மீள்குடியமர்ந்த மக்களுக்கான சகல வசதிகளும் ஏற்படுத்தப்படாத நிலையே காணப்படுகின்றது.

குறிப்பாக மின்சார வசதி ஏற்படுத்தித் தராமை மிகப்பெரிய குறையாகக் காணப்படுகின்றது. இங்குள்ள குஞ்சுக்குளம், அனிஞ்சியன்குளம் இரண்டாம் பகுதி, ஐயன்கன்குளம், பட்டுப்பூச்சி, பழைய முறிகண்டி, கோட்டை கட்டியகுளம், அம்பலப் பெருமாள்குளம், தென்னியன்குளம், மல்லாவி சிவன் ஆலய முன்பகுதிகள், பண்ட் வீதி ஆகிய பிரதேசங்கள் இன்னமும் மின்சாரத்தைக் காணாத நிலையில் இருளில் மூழ்கியுள்ளன.

துணுக்காய்ப் பிரதேச செயலகத்தில் இடம்பெறும் கூட்டங்களில் தமக்கு மின்சாரத்தை வழங்குமாறு மக்கள் தொடர்ச்சியான வேண்டுகோள் விடுத்த போதிலும் இதுவரை பயனெதுவும் கிடைக்கவில்லை.

துணுக்காய்ப் பிரதேச செயலர் பிரிவிலுள்ள அனிஞ்சியன் குளத்தில் அதிகமான மக்கள் வாழ்கின்ற போதிலும் முழுமையான மின்சாரவசதி இதுவரை ஏற்படுத்தப்படவில்லை.

இதனால் இங்கு கல்வி கற்கும் பெரும்பாலான மாணவர்கள் இரவு வேளைகளில் தமது கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட முடியாத அவல நிலையிலுள்ளனர்.

இதனால் இவர்களின் கல்வித்தரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகப் பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர். [/size]

[size=2]http://onlineuthayan...011450623174710[/size]

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இனவாதி சம்பிக்கவை தமிழ் மக்கள் விரைவில் அறிவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.