Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்சவினால் சுதந்திரத்தைப் பறிகொடுத்த கிராமவாசிகள் – ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா‘

Featured Replies

மகிந்த ராஜபக்சவின் சாஞ்சி பயணத்தினால், மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் தொடக்கம், சாஞ்சி வரையிலான கிராம மக்கள் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டார்கள் என்பது குறித்த தகவல்களை ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா‘ வெளியிட்டுள்ளது.

போபாலுக்கும் சாஞ்சிக்கும் இடைப்பட்ட 45 கி.மீ நீளமான பிரதேசத்தில் உள்ள ஒரு டசினுக்கும் அதிகமான கிராமங்களில் நேற்று அறிவிக்கப்படாத ஊரடங்குச்சட்டம் நடைமுறையில் இருந்தது.

சாஞ்சியிலும், போபால் தொடக்கம் சாஞ்சி வரையிலான நிலையங்களிலும் வழக்கமாக நின்று செல்லும் எந்தத் தொடருந்துகளும் நிறுத்தப்படவில்லை.

பேருந்துகளையும், கார்களையும் வீதிகளில் காணமுடியவில்லை.

கடைகள், விடுதிகள், உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சாஞ்சியில் பௌத்த பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்ட வந்ததால் தான், இந்தளவுக்கு உச்சக்கட்ட பாதுகாப்புக் கெடுபிடி.

வைகோவின் ஆதரவாளர்கள் போபால் மற்றும் அதைச் சார்ந்த பிரதேசங்களில் நுழைந்துள்ளதாக கிடைத்த தகவலால், போபால் தொடக்கம் சாஞ்சி வரையான பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

சாஞ்சியில் இருந்து, கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டு காவல்துறையினர் தடுப்புகளை அமைத்திருந்தனர்.

போபாலின் புறநகர் கிராமமான சுகிசெவனியா தொடக்கம் சாஞ்சி வரையான கிராமங்களில் இருந்த கிராமவாசிகள் வெளியே வரத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

அவர்கள் வீதிக்கு வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்தார்கள்.

கிராமவாசிகளுக்கு அது மிகக்கடுமையான நேரமாக இருந்தது.

“நாம் எமது வீடுகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்தோம்” என்கிறார்கள் அவர்கள் வருத்தத்துடன்.

“நான் வெள்ளிக்கிழமை போபாலுக்குச் செல்ல வேண்டியிருந்தது.

ஆனால் பேருந்துகள், தனியார் வாகனங்கள் உள்ளிட்ட எல்லா வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்ததால், வீடு திரும்புவதை விட எனக்கு வேறுவழி இருக்கவில்லை.

காவல்துறையினர் எம்மை வீட்டுக்கு வெளியே வரவே அனுமதிக்கவில்லை“ என்றார் ராம்பாபு என்ற கிராமவாசி.

நிகழ்வுக்கு அனுமதி பெற்றவர்கள் மட்டுமே, வீதியில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டார்கள்.

போபாலுக்கும், சாஞ்சிக்கும் இடைப்பட்ட சுகிசெவனியா, சலமத்பூர், டீவங்கன்ஜ், பீர்கேடி, சோப்டாகலன், ரட்டலாய் உள்ளிட பல கிராமங்களில் காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

போபால் சாஞ்சி இடையே, பொதுப்போக்குவரத்து ஒரு நாள் முன்னதாகவே நிறுத்தப்பட்டு விட்டது.

வெள்ளிக்கிழமை அதிகாலையில் இருந்தே, தனியார் வாகனங்களையும் காவல்துறையினர் வீதிகளில் அனுமதிக்கவில்லை என்று ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா‘ குறிப்பிட்டுள்ளது.

http://thaaitamil.com/?p=33028

பல எம் எல் ஏ மற்றும் எம்பி சீட்டுகளை பெரும் பலம் வாய்ந்த கையாலாகாத தமிழக கட்சிகள் செய்ய முடியாததை ஒரு சீட்டு கூட தனியா நின்னு ஜெயிக்க முடியாத மதிமுக செய்து காண்பித்து இருக்கிறது.

அதுவும் ஒட்டு மொத்த மத்திய பிரதேசம் பந்த் நடந்து இருந்தால் எவ்வளவு போலீசுகள் வேலையில் இருப்பார்களோ அதில் பாதியை ராஜபக்ஷே பாதுகாப்புக்கு நிறுத்தி இருந்தனர் .

மேலும் அந்த வைகோ உக்கார்ந்து இருந்த கிராமத்தில் சிடி மற்றும் நோட்டிசு விநியோகம் ஆன பின் பெரும்பாலான மக்கள் பரிதாபத்தோடு இலங்கை பிரச்சினை பற்றி பேசிக்கொண்டு இருந்தது கண்ணால் காண முடிந்த ஒன்று .

வட இந்திய பத்திரிக்கைகள் அனைத்தும் எதோ ஒரு பக்கத்தில் விடாமல் இந்த செய்தியை எழுதி இருந்தனர்

மபி அரசு கொஞ்சம் நடுக்கத்தோடு தான் இருந்தது . தமிழேண்டா.

ஆனா தமிழ் பத்திரிக்கையில் எதுவும் கானோம்ங்கோ.

யாழ் களத்தில கூட அந்த அளவு முக்கியம் கொடுக்கலீங்கன்னா

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கு நன்றிகள் தமிழ்ப்பைத்தியம்.. நீங்களும் போயிருந்தீர்கள்??

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ்ப்பைத்தியம்

தமிழேண்டா.... :icon_idea:

ஆம் நானும் போய் போராட்டத்தில் கலந்து கொண்டேன் என எழுதி புளுகி ஈழ உறவுகளின் பாராட்டு எல்லாம் வாங்க நான் ஒன்றும் வேடம் போடும் அரசியல் வாதியோ அல்லது எழுத்தாளனோ அல்ல . அந்த போராட்டத்தை ஒரு பார்வையாளனாக பார்த்தேனே ஒழிய கலந்து கொள்ளவெல்லாம் இல்லை . அதுவும் நாக்பூருக்கு வேலை விஷயமாக சென்ற போது நேரம் கிடைத்ததால் போயி வந்தேன் . ஒரு சுற்றுலா போல . பேசாம வைகோ வோட நின்னு ஒரு போட்டோ எடுத்து இங்க இணைத்து விட்டால் நம்ம காட்டுல பாராட்டு மழை தான். ஆனா நம்ம தொழில் அரசியலோ அல்லது எழுத்தோ இல்லையே ..........................

  • கருத்துக்கள உறவுகள்

Kudos to your honesty..! :D

Kudos to your honesty..! :D

TNQ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.