Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களை முட்டாளாக எண்ணுகிறதா சர்வதேச சமூகம்?

Featured Replies

175 தமிழர்கள் படுகொலை- தமிழர்களை முட்டாளாக எண்ணுகிறதா சர்வதேச சமூகம்?: விடுதலைப் புலிகள் கேள்வி

ஜெனீவா பேச்சுக்களுக்குப் பின்னர் மே 15 ஆம் நாள்வரை 175 தமிழர்கள் நீதிக்குப் புறம்பான வகையில் படுகொலை செய்யப்பட்ட போதும் சர்வதேச சமூகம் மௌனம் காப்பதன் மூலம் தமிழர்களை முட்டாளாகக் கருதுகிறார்களா என்று தமிழீழ விடுதலைப் புலிகள் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜெனீவா பெச்சுக்குப் பின்னர் ஏப்ரல் 8ஆம் நாள் வரையிலான படுகொலைகள் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பில் முன்னர் விவர அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

ஏப்ரல் 8ஆம் நாளுக்குப் பின் மே15ஆம் நாள் வரையிலான படுகொலைகள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

ஜெனீவா பேச்சுக்கள் நிறைவடைந்த நாள் முதல் தமிழ் மக்கள் மீதான படுகொலைத் தாக்குதல்கள் தொடங்கின.

பெப்ரவரி 27ஆம் நாளன்று ஒரு பொதுமகன் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து மார்ச் 5,6,9,20,22,24,25 மற்றும் 28 ஆகிய நாட்களிலும் படுகொலைகள் தொடர்ந்தன.

ஏப்ரல் 7ஆம் நாள் திருமலை தமிழ் மக்களின் பிரதிநிதி விக்னேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டார்.

அல்லைப்பிட்டியில் ஏப்ரல் 30ஆம் நாளன்று 70 வயது முதியவர் ஒருவர் சிறிலங்கா கடற்படையினரால் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

தன்னை படுகொலை செய்ய வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டபோதும் அவரை சுட்டுக் கொன்றுள்ளனர். அவரது மகள் நீதிமன்றில் இது குறித்து சாட்சியமளித்துள்ளார்.

மே 13ஆம் நாளும் அல்லைப்பிட்டியில் 13 பொதுமக்களை சிறிலங்கா கடற்படையினர் படுகொலை செய்துள்ளனர்.

படுகொலை செய்த நபர்கள் தங்கள் பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த இரு குழந்தைகளையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. துப்பாக்கிச் சூட்டுக்குள்ளானோரை மருத்துவமனைக்குக் கொண்டு அப்பகுதி தேவாலயத்தைச் சேர்ந்த அமலதாஸ் அடிகளார் முயன்றபோது அவரையும் கடற்படையினர் தடுத்துள்ளனர்.

இதையடுத்து அம்மக்கள் பிலிப்நேரி தேவாலயத்தில் அகதிகளாக அடைக்கலம் புகுந்துள்ளனர். விசாரணை நடத்த சென்ற கண்காணிப்புக் குழுவினரிடம் தங்களைக் காப்பாற்றுமாறு அம்மக்கள் கெஞ்சியுள்ளனர்.

இதே பிலிப்நேரி தேவாலயப் பகுதியில் 1990ஆம் ஆண்டுகளில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பலரும் காணாமல் போயினர். கைது செய்யப்ப்ட்டு காணாமல் போன 300க்கும் மேற்பட்ட இளைஞர்களது சடலங்கள் அல்லைப்பிட்டி இராணுவ வலய கிணறுகளுக்குள் கிடந்தது என்று வடக்கு கிழக்கு மனித உரிமைச் செயலகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

மே 2ஆம் நாளன்று சர்வதேச ஊடகநாளில் உதயன் நாளிதழில் யாழ். அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இரு பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். நாளிதழின் ஆசிரியர்களைத் தேடிச் சென்ற கொலைக் கும்பல் கண்ணில் பட்ட பொருள்களையெல்லாம் கண்ணில்பட்டோரையெல்லாம் சுட்டுள்ளது. ஆனால் இந்தத் தாக்குதலுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளை குற்றம்சுமத்த சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முயற்சித்திருக்கிறார். அதை உதயன் ஆசிரியர் மறுத்துள்ளார்.

மே 7ஆம் நாள் மந்துவில் ஆலயம் ஒன்றில் உறங்கிக் கொண்டிருந்த 7 இளைஞர்களது சடலங்கள் எங்கே போனது? புதர் பகுதியில் சடலங்களை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர். சடலங்களைப் பார்வையிட கண்காணிப்புக் குழுவினர் வர வேண்டும் என்று அம்மக்கள் வலியுறுத்தியும் கண்காணிப்புக் குழுவினர் உதவவில்லை. மக்களே அப்பகுதிக்குச் சென்ற போது சடலங்களைக் காணவில்லை.

ஜோசப் பரராஜசிங்கத்தின் இடத்துக்குப் பதிலாக நாடாளுமன்ற உறுப்பினராக திருகோணமலை விக்னேஸ்வரன் அறிவிக்கப்பட இருந்தார். அவரைப் படுகொலை செய்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி சபை வேட்பாளர் வில்வராசாவையும் ஏப்ரல் 20ஆம் நாளன்று படுகொலை செய்தனர்.

ஏப்ரல் 27ஆம் நாளன்று வவுனியா உள்ளுராட்சி சபை வேட்பாளர் செந்தில்நாதனை துணை இராணுவக் குழுவினர் படுகொலை செய்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிக்குள் 8 கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 7 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

மே 15ஆம் நாளன்று வவுனியா சேமமடுவில் நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் படுகாயமடைந்தனர். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு காட்டுப்பகுதிக்குள் வேட்டைக்கும் மரங்களை வெட்டவும் செல்லுகின்ற அப்பாவி பொதுமக்களையும் படைத்தரப்பினர் படுகொலை செய்துள்ளனர். காட்டுப்பகுதியில் இருவேறு சம்பவங்களில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜெனீவா பேச்சுக்களுக்குப் பின்ன்னர் 174 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சிறிலங்கா அரச படைகளினால் நிகழ்த்தப்பட்டு வரும் இந்த நீதிக்குப் புறம்பான படுகொலைகளை சர்வதேச சமூகமும் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவும் தடுக்கவில்லை.

இப்படுகொலைகளை சர்வதேச சமூகம் ஏன் தடுக்காமல் அமைதி காக்கிறது. அப்படியானால் தமிழர்கள் என்ன முட்டாள்களா? என்ற கேள்வியுடன் ஜெனீவா பேச்சுக்களுக்குப் பின்னர் தொடக்கம் மே 15 ஆம் நாள் வரை படுகொலை செய்யப்ப்பட்டோரின் விவர அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.

நன்றி: புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் கைக்கட்டி வாய்பொத்தி மௌனியாக நின்றால் எம்மை முட்டாள் என்று நினைக்காமல் வேறு எப்படி நினைப்பார்கள்? உலகத்தை நாமனைவரும் வலுவாக உலுக்க வேண்டும். ஒரு சிறிய அநியாயம் நிகழ்ந்தாலும் அதை உலகெல்லாம் உடனுக்குடன் கொண்டுசேர்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு படுகொலைகள் நடந்தும் சர்வதேச சமூகத்திற்கு எமது தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்தோ கண்டனங்கள் செய்தோ வெளிப்படுத்தினார்களா இல்லையே?

எதற்கும் தார்மீக ஆதரவை வழங்கும் ஐரோப்பா வாழ் தமிழர்கள் கூட மெளனமாக இருப்பது ஏன்?

புலம்பெயர் தமிழர்களாகிய நாம் உண்மையில் என்னதான் செய்கிறோம்?

சிவத்தம்பி ஐயா அவர்களின் கேள்விகள் நியாயமானதாகவே தற்போது தென்படுகின்றது

பிரச்சனை வேறு- ஊக்குவிக்கும் -

விசை சிறிது முடக்கம் -!

எது என்னவோ- விம்பத்தை பெறும் அளவில் - வேண்டிய - வீச்சுக்கள்

இன்னும் - சீரான - நிலையில் இல்லையோ-

சீராக நினைக்கலையோ ........

என்னமோ-! :? 8)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.