Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'அதிகாரப்பகிர்வு குறித்து அரசியல் கட்சிகளுடன் இலங்கை அரசு பேச்சு நடத்த வேண்டும்' - மன்மோகன்சிங்

Featured Replies

[size=4]இலங்கைத் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் அந்நாட்டு அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இலங்கையை வலியுறுத்தியதாக இந்திய பிரதமர் மன்மோகன்சிங், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பில் கடந்த செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தி.மு.க.தலைவர் கருணாநிதி கடிதமொன்றை எழுதியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் மன்மோகன் சிங்கினால் எழுதப்பட்ட கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையில் இறுதிகட்ட போர் முடிவுற்றப் பின்னர் இலங்கை தமிழர்களின் நலனில் இந்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. தமிழர்களின் மறுவாழ்வு, குடியுரிமைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் சமத்துவம், சுயமரியாதையுடன் வாழ வலியுறுத்தி வருகிறோம்.

அத்துடன், இலங்கைத் தமிழ் மக்களுக்கான அதிகாரப்பகிர்வு குறித்து இலங்கை அரசு தனது நாட்டு அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதற்கு இந்திய அரசாங்கம் இலங்கையை வலியுறுத்தியுள்ளது' என மன்மோகன் சிங், தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார். (நக்கீரன்)[/size]

[size=4]http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/49741-2012-10-02-10-52-10.html[/size]

கண்கெட்டபின் சூரிய நமகஸ்காரம் செய்கிறார்கள்.

இப்படி ஒரு செய்தி கருணாநிதி பக்கத்திலிருந்து வெளியானதாயின் அவர் வரவிருக்கும் டெசொ கைவிடத்தான் என்பது பொருளாகும். இருந்தாலும் இதை பிரணாப்பின் மீது போடவில்லை. ஏன் இது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தீர்வுக்கு அல்ல; மீள்குடியமர்வுக்கே இந்தியா வழங்குகிறது முன்னுரிமை; மன்மோகன் சிங் தெரிவிப்பு

ஈழத் தமிழர்கள் விடயத்தில், போருக்குப் பின்னர், அவர்களின் மீள்குடியமர்வு மற்றும் மறுவாழ்வுக்கே இந்தியா கூடுதல் முன்னுரிமை கொடுத்து வருகின்றது; அரசியல் தீர்வுக்கல்ல என்ற சாரப்பட திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதிக்குக் கடிதம் எழுதியுள்ளார் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்.

கடந்த மாதம் 20 ஆம் திகதி ஈழத் தமிழர் விவகாரம் குறித்து மன்மோகனுக்கு கருணாநிதி எழுதிய கடிதத்துக்கு அவர் பதிலளித்துள்ளார்.

தனது கடிதத்தில் கருணாநிதி, ஈழத் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு ஒன்று கிடைக்கக்கூடிய வகையில் ஐ.நா. பொதுச் சபையிலும் மனித உரிமைகள் சபையிலும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

பதில் கடிதத்தில் மன்மோகன் சிங் கூறியிருப்பதாவது:

இலங்கையில் முரண்பாடு முடிவுக்கு வந்ததில் இருந்து இலங்கைத் தமிழர்களின் நலவாழ்வு மற்றும் அவர்களுக்கான நன்மைகள் குறித்தே இந்திய அரசு கவனத்தைக் குவித்திருந்தது என்பதை வலியுறுத்த இந்தச் சந்தர்ப்பத்தை மீண்டும் பயன்படுத்திக் கொள்கிறேன்.

தமிழர்களின் மீள்குடியமர்வு மற்றும் மறுவாழ்வுதான் எமது அரசின் உயர் மற்றும் மிக முக்கிய முன்னுரிமை விடயங்களாக இருந்தன. அதேவேளை, தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வது தொடர்பான பேச்சுக்களை தமிழர் பிரதிநிதிகளுடன் முன்னெடுக்குமாறு இலங்கை அரசிடம் தெரிவித்திருந்தோம்.

இந்த அடிப்படையிலேயே, தமிழர்கள் சமத்துவத்துடனும் கௌரவத்துடனும் நீதியுடனும் சுயமதிப்புடனும் வாழத்தக்கதான எதிர்காலத்தை அடையும் இலக்குடன் இலங்கை அரசுடன் தொடர்ந்தும் பேசி வருகின்றோம் என்றுள்ளது. http://onlineuthayan.com/News_More.php?id=277251482203482328

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.