Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நீதிச்சேவை ஆணைக்குழு செயலாளர் தாக்குதலின் பின்னணியில் புலி ஆதரவாளர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீதிச்சேவை ஆணைக்குழு செயலாளர் தாக்குதலின் பின்னணியில் புலி ஆதரவாளர்கள்

images40.jpgநீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே செயற்பட்டுள்ளதாக ஆளும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கடும் இனவாதக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டுகின்றார்.

அமைச்சர் மகேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டபோதும், ஜானக பெரேரா கொல்லப்பட்ட போதும் அரசின் மீது பழிபோடப்பட்டதாகவும்இ பின்னர் புலிகளே அவர்களைக் கொலை செய்தது நிரூபிக்கப்பட்டகதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதபோல் நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மீதான தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் யார்? செயற்பட்டார்கள் என்பதும் எதிர்காலத்தில் நிரூபணமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

கட்சியின் தலைமையகத்தில் நேற்று நண்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறான கருத்துக்களைத் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து அமைச்சர் விமல் வீரவன்ச கூறிய கருத்துக்கள் இவ்வாறு அமைந்திருந்தது.

அரசியல் தெரிந்தவர்களுக்கு இந்த விடயம் நன்கு புரியும். தெரியாதவர்களுக்கு ஒன்றும் புரியாது. அதாவது பல்கலைகழக விரிவுரையாளர்களின் பிரச்சினையின் பின்னணியில் அரச சார்பற்ற நிறுவனங்களே செயற்படுகின்றன. அவ்வாறு அரசசார்பற்ற நிறுவனங்கள் தலைமை வகிக்கின்ற போராட்டங்கள் அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே நடைபெறும். அதனைப் புரிந்து கொள்வதற்கு விசேட ஞானம் தேவையில்லை.

20-20 கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டி இலங்கையில் நடைபெறும் போது, சர்வதேச ஊடகங்கள் இலங்கையில் நிலைகொண்டிருக்கின்ற நிலையில் ஆணைக்குழுவின் செயலாளர் மீது தாக்குதல் நடத்தி சர்வதேச ரீதியிலான ஒரு செய்தியை தோற்றுவிக்கும் அவசியம் இந்த அரசாங்கத்திற்கு இருக்கின்றனவா? என யாருக்கும் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

  • கருத்துக்கள உறவுகள்

புலி இல்லாமல் அரசியல் செய்ய சிங்களவனும் கஸ்டப்படுறான்.. ஒட்டுக்குழுக்களும் கஸ்டப்படுகின்றன...! புலிகளே எங்கிருந்தாலும் உடனே வந்து சேருங்கோ...! முன்னர் தாங்கள் செய்வதை எல்லாம் புலி மேல பழியாகப் போட்டுப் பழகிப் போனவர்களுக்கு.. புலி இல்லாதது பெரிய பிரச்சனையாவே இருக்குது..! :lol::D

Edited by nedukkalapoovan

புலிகள் தவறு செய்கிறார்கள், அவர்கள் இல்லை என்றால் தாம் வெட்டிப் புடுங்கிவிடுவோம் என்று கூக்குரலிட்ட ஏனைய அனைத்து இயக்கத்தினரும் கடந்த மூன்று வருடங்களாக ஒருசிறு துரும்பைக் கூட அசைக்க வலுவில்லாமல் உள்ளனர். புலிகள் இல்லாததால் இவர்களும் தமது வெற்று வீரத்தைக்காட்ட முடியாமல் திணறுகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.