இலங்கை கடல் பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் – ஈரான் உறுதி!
இலங்கைக்கு அருகே இந்தியப் பெருங்கடலில் 100க்கும் மேற்பட்ட ஈரானிய மாலுமிகளைக் கொன்ற கொடூரமான கடற்படைத் தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானிய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ஷாராம் இரானி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு தீர்க்கமான மற்றும் எதிர்பாராத பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.
ஈரானிய செய்திச் சேவையான Press TV தகவலின்படி, தனது வீரர்களின் மரணங்களுக்குப் பதிலடி கொடுக்காமல் விடமாட்டோம் என்று அந்த மூத்த அதிகாரி அறிவித்ததோடு, அந்த தாக்குதல் சற்றும் எதிர்பாராத இடத்திலிருந்து வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
இந்த அறிக்கை, ஈரானின் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் அமீர் ஹதாமியின் முந்தைய கருத்துக்களைத் தொடர்ந்து வந்துள்ளது.
அனர் முன்னதாக ஐரிஸ் தேனா போர்க்கப்பலின் மாலுமிகளின் மரணங்களுக்கு ஈரான் பதிலளிக்காமல் போகாது என்று எச்சரித்திருந்தார்.
அந்தக் கப்பல் ஒரு அமைதியான பணியை முடித்துவிட்டு, போரில் ஈடுபடாத நிலையிலும் ஈரானுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது தாக்கப்பட்டதாக ஹதாமி விளக்கினார்.
மாலுமிகளின் தியாகத்தை ஈரானின் கடற்படை வரலாற்றில் தைரியத்தின் நீடித்த சின்னமாக அவர் விவரித்தார்.
மார்ச் 4 அன்று, இலங்கையின் காலி கடற்கரையிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில், ஈரானிய கடற்படையின் ‘தேனா’ என்ற போர்க்கப்பல், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட MK-48 ரக நீர்மூழ்கி ஏவுகணையால் தாக்கப்பட்டது.
இந்தியாவில் நடைபெற்ற பன்னாட்டு கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுத் திரும்பிக்கொண்டிருந்தபோது, சர்வதேச கடல் பகுதியில் இந்தக் கப்பல் குறிவைக்கப்பட்டது.
இந்தத் தாக்குதலில் 104 மாலுமிகள் கொல்லப்பட்டதாகவும், 87 உடல்கள் மீட்கப்பட்டதாகவும், 32 மாலுமிகள் மீட்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இந்திய கடற்படையின் அழைப்பின் பேரில் ஐரிஸ் தேனா கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றதால், இந்தத் தாக்குதல் குறிப்பாக சர்ச்சைக்குரியதாகியுள்ளது.
அமெரிக்கப் போர்ச் செயலர் பீட் ஹெக்ஸெத் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பரவலான சீற்றத்தையும் கண்டனத்தையும் தூண்டியுள்ளது.
https://athavannews.com/2026/1468790
By
தமிழ் சிறி ·
Archived
This topic is now archived and is closed to further replies.