Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Breaking News

Featured Replies

  • தொடங்கியவர்

புலிகள் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்பதை தமது அரசு உணர்வதாக கதிர்காமர் தெரிவிப்பு

ஜ ஐ.பி.சி தமிழ் ஸ ஜ சனிக்கிழமை, 01 மே 2004, 6:32 ஈழம் ஸ

தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்பதை தமது அரசு உணந்து வருவதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து லக்ஷ்மன் கதிர்காமர் மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்பதை தமது அரசு உணர்ந்து வருவதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்;த்தைகள் எதிர்வரும் ஐ_ன் மாத முற்பகுதியில் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்;.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போது அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளுமே பேச்சுவார்;த்தை மேசையில் முக்கிய இரு தரப்பினராக பங்கேற்றிருந்ததாகவும், இனிவரும் பேச்சுவார்தைகளின் போதும், பேச்சுவார்த்;தை மேசையின் முக்கிய இரு தரப்பினராக விடுதலைப் புலிகளும், அரசாங்க தரப்புமே விளங்கவுள்ளதாகவும் அவர் இந்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் விரைவில் இடம்பெறவுள்ள பேச்சுவாhத்தைகளின் போது வடக்கு, கிழக்கின் புனர்வாழ்வு, புனரமைப்பு நடவடிக்கைளை உடனடியாக செயற்படுவது தொடர்பாகவே முதலில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்;ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புதினம்

  • Replies 2.2k
  • Views 133.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கதிர்காமாரின் கூற்றுக்கு சிஹல உறுமய கண்டனம்

ஜ ஐ.பி.சி தமிழ் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 02 மே 2004, 8:07 ஈழம் ஸ

தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என லக்ஷ்மன் கதிர்காமர் ஏற்றுக் கொண்டமை வெட்கம் கெட்ட செயல் என ஐhதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு காணும் விடயத்தில் சகல கட்சிகளுடனும் பேசியே தீர்வு காணப்படுமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூறியிருந்ததாக ஐhதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் திலக் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் என தற்போது லக்ஷ்மன் கதிர்காமர் கூறியுள்ளமை வெட்கம் கெட்ட செயல் என திலக் கருணாரட்ன குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை குறித்த யோசனைகளை நிராகரித்து வந்த லக்ஷ்மன் கதிர்காமர், திடிரென தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளென கூறியுள்ளமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து அரசுக்கான ஆதரவினைத் திரட்டுவதற்கான ஒரு தந்திரமெனவும் திலக் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான முன்;னைய நிலைப்பாட்டிலிருந்து Nஐ.வி.பி.யும் மாறிவிட்டதோ எனத் தாம் சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ள திலக் கருணாரட்ன, விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்ற லக்ஷ்மன் கதிர்காமரின் இந்த கருத்து தொடர்பாக Nஐ.வி.பி தனது நிலைப்பாட்டினை மிகவிரைவில் வெளியி;ட வேண்டுமெனவும் தெரிவித்;துள்ளார்.

புதினம்

  • தொடங்கியவர்

புலிகளை ஏகப்பிரதிநிதிகளாக ஏற்று புதிய அரசு அவர்களோடு பேசும்!

கொழும்புப் பத்திரிகைக்கு புதுடில்லியில் அளித்த விசேட செவ்வியில் அமைச்சர் கதிர்காமர் தகவல்

இலங்கையின் புதிய அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளை ஈழத்தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக அங்கீகரித்து, அவர்களுடன் பேச்சுக்களில் ஈடு படும். இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்திருந்தவேளை, கொழும்பில் இருந்து வெளிவரும் த ஐலண்ட்| நாளிதழுக்கு வழங்கிய செவ்வியில் வெளி விவகார அமைச்சர் லஷ்மன் கதிர்காமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்திய விஜயத்தின்போது அமைச்சர் கதிர்காமர், தமது விசேட செய்தியாளர் எஸ்.வெங்கட்நாராயணனுக்கு புதுடில்லியில் வைத்து வழங்கிய செவ்வியில் மேற்கண்ட தகவலை வெளியிட்டார் என்று த ஐலண்ட்| தனது செய்தியில் குறிப்பிட்டிருக்கிறது. முந்திய அரசு சமாதானப் பேச்சைத் தொடங்கியபோது, பேச்சு மேசையில் இரண்டு பிரதான தரப்புகளாக அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளுமே பங்குபற்றினர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட பேச்சை எமது அரசு தொடர்ந்து நடத்தவுள்ளது. நாங்கள் பேச்சை மீளத் தொடங்கும்போதும், பேச்சில் அரசு - தமிழீழ விடுதலைப்புலிகள் ஆகிய இரு தரப்புகளுமே பிரதான பங்காளிகளாக இருப்பர். அதாவது, எங்களுடைய அரசும் ஈழத் தமிழர்களின் ஏகப்பிரநிநிதிகளாக விடுதலைப் புலிகளை அங்கீகரிக்கிறது என்பதே இதன் அர்த்தமாகும் - என்று செய்தியாளரின் கேள்வி ஒன்றுக்கு வெளிவிவகார அமைச்சர் லஷ்மன் கதிர்காமர் பதிலளித்ததாக அந்தச் செய்தியில் விவரிக்கப்பட்டிருக்கிறது. ரணில் விக்கிரமசிங்க அரசிடம் கடந்த ஒக்ரோபர் மாதத்தில் விடுதலைப்புலிகள் சமர்ப்பித்த இடைக்கால தன்னாட்சி அதிகாரசபையை நிறுவுவது குறித்ததிட்டம் குறித்த செய்தியாளர் கேட்டதற்கு, அமைச்சர் கதிர்காமர் பின்வருமாறு பதிலளித்தார் என்று அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது:- அந்தத் திட்டம் பேச்சில் நிச்சயமாக இடம்பெறும். அதனை அரசு முழுக்க முழுக்க ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சிலர் கூறுகின்றார்கள் ஆனால் இதுவிடயத்தில் விடுதலைப்புலிகள் நடைமுறைச் சாத்தியமானதும், யதார்த்தாPதியானதுமான அணுகு முறையை அதிகளவில் கையாள்வார்கள் என்றே நான் பெரிதும் நம்புகிறேன்.

செய்தியாளர்: விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வனை அண்மையில் கிளிநொச்சியில் சந்தித்தவேளை, இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபைத் திட்டத்தை முழு அளவில் ஏற்றுக்கொண்டால் மட்டுமே பேச்சை மீளத் தொடங்கலாம் என்று விடாப்பிடியாக நிற்கமாட்டோம் - என என்னிடம் கூறினார்.

அமைச்சர் கதிர்காமர்: என்னுடைய நம்பிக்கையும் அதுவே ஆகும். பேச்சைத் தொடங்கும் வேளையிலே இவை குறித்து நாம் ஆராய வேண்டும் - என்றார்.

நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் விடார் ஹெல்கிசஸனும், எரிக் ஹொல் ஹெய்மும் மே மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்வார்கள். அவ்வேளை, பேச்சுக் குறித்த விவரங்கள் இறுதியாக்கப்படும். அதன் பின்னர் விடுதலைப் புலிகளுடன் பேச்சு விரைவில் ஆரம்பிக்கப்படும் - என்று செய்தியாளரிடம் அமைச்சர் கதிர்காமர் தெரிவித்தார்.

வடக்கு - கிழக்கின் புனர்வாழ்வு, புனர்நிர்மாணப் பணிகளை எவ்வாறு தொடர்ந்து முன்னெடுப்பது என்பது குறித்து பேச்சில் பிரதானகவனம் செலுத்தப்படும் - என்றும் அமைச்சர் ஏப்ரல் 29ஆம் திகதி வழங்கிய அந்தச் செவ்வியில் தெரிவித்தார் - என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்

கதிர்காமரின் கூற்று மேலோட்டமானதே தெளிவான நிலைப்பாடு தெரியவேண்டும்

புலிகள் தலைமையுடன் தொடர்புடைய வட்டாரங்கள் தகவல்

சமாதானப் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் லஷ்மன் கதிர்காமர் கடைசியாக ஊடகங்களுக்கு வெளியிட்டிருக்கும் கருத்துக்கள் உற்சாகமளிக்கின்றன. என்றாலும், கதிர்காமர் இந்தக் கருத்துக்களை மேலோட்டமாக வெளியிட்டிருப்பதாகவே புலிகளின் தலைமை கருதுகின்றது. தெளிவானவகையில் - முறைப்படி - தங்கள் நிலைப்பாட்டை வெளியிட்டால் புதிய அரசுடன் பேச்சுக்களைத் தொடங்குவது பற்றிப் புலிகள் சாதகமாகப் பரிசீலிப்பர். விடுதலைப் புலிகளின் தலைமையுடன் தொடர்புடைய வட்டாரங்கள் நேற்றிரவு இத்தகவலை வெளியிட்டன.

ஈழத்தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகளை ஏற்று, அவர்களோடு அரசு பேச்சு நடத்தும் என்று வெளிவிவகார அமைச்சர் லஷ்மன் கதிர்காமர் இந்தியாவில் இருந்தபோது வெளியிட்டிருக்கும் கருத்துக்கள் தொடர்பாகக் கேட்ட போதே அந்த வட்டாரங்கள் இவ்வாறு தெரிவித்தன. புதிய அரசுடன் சமாதான முயற்சிகளை மீள ஆரம்பிக்க முன்னர் சில முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆழமாக ஆராய்ந்து அவற்றைத் தெளிவுபடுத்திக்கொள்ள விடுதலைப்புலிகள் விரும்புகின்றனர். அந்த விடயங்களை அவர்கள் ஏற்கனவே தெரியப்படுத்தியும் உள்ளனர். முன்னைய அரசுடன் சமாதான முயற்சிகளில் ஈடுபட்ட சமயம் ஈழத்தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் புலிகளே என்பதை அந்த அரசு ஏற்ற நிலையிலேயே சமாதான முயற்சிகள் இடம்பெற்றன. அந்த நிலைப் பாட்டை இந்த அரசும் ஏற்றுக்கொள் கிறதா? கடந்த அரசு போன்று சமாதானப் பேச்சுக்களில் அரசுடன் விடுதலைப் புலிகளை சமபங்காளிகளாக அங்கீகரித்து, கௌரவத்துடனும், மதிப்புடனும் பேச்சுக்களை நடத்துவதற்கு இந்தஅரசும் தயாரா? கடைசியாகப் பேச்சுக்களில் புலிகள் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை யோசனையை முன்வைத்திருந்தனர். அதற்கு தேர்தலில் தமிழ் மக்களின் ஆணையும் கிடைத்திருக்கின்றது. இலங்கை அரசு அதற்கு இணங்கவேண்டும் என்ற மக்களின் ஆணையை ஏற்றுச் செயற்பட இந்த அரசு தயாரா? இந்த மூன்று பிரதான விடயங்களிலும் புதிய அரசிடமிருந்து தெளிவான விளக்கங்களைப் பெற்று, அவற்றை நன்கு அலசி ஆராய்ந்த பின்னரே புலிகளின் தலைமை அடுத்தகட்டநகர்வுக்குச் செல்லும் என்றும் தற்போது கதிர்காமர் இந்த விடயங்கள்பற்றி மேலோட்டமாகக் கருத்து வெளியிட்டிருப் பதாகவே புலிகள் கருதுகின்றனர் என்றும் -அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.

விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை ஆரம்பிப்பது தொடர்பாக அமைச்சர் கதிர்காமர் கடைசியாகத் தெரிவித்திருக்கும் கருத்துக்கள், தெற்கில் கடும்போக்கு சிங்களப் பேரினவாதிகளிடமிருந்து அவருக்கு எதிராகக் கடும் எதிர்ப்பலைகளை உருவாக்கக்கூடும் என்றும் புலிகள் கருதுகின்றனர். சந்திரிகாவின் அரசு சமாதான முயற்சி தொடர்பாக எடுக்கும் இது போன்ற நிலைப்பாடுகளை அவரது பங்காளிக் கட்சிகள் ஏற்றுக்கொள் ளுமா என்பதும், அவற்றின் ஆதர வில் ஊசலாடும் நாடாளுமன்ற பலத்தைக்கொண்டுள்ள அரசினால் அதன் நிலைப்பாடுகளைச் சரிவர அனுசரிக்க இயலுமா என்பதும் ஐயத்துக்குரியது என்ற கருத்தும் புலிகள் வட்டாரங்களில் உள்ளது. இதேவேளை, இந்தத் தடவை சமாதானப் பேச்சுக்கள் தொடர்பான சகல விடயங்களையும் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனே நேரடியாகக்கை யாள்வார் என்றும் புலிகளின் தலைமையுடன் தொடர்புடைய வட்டாரங்கள் சுட்டிக் காட்டின.

உதயன்

  • தொடங்கியவர்

கதிர்காமரின் கூற்றைக் காரசாரமாக விமர்சிக்கின்றது த ஐலன்ட் நாளிதழ்

தமிழீழ விடுதலைப் புலிகளை ஈழத் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளாகத் தமது அரசும் அங்கீகரித்து சமாதானப் பேச்சை மீளத்தொடங்கும் என்று அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கூறியதைக் கண்டித்து த ஐலண்ட் நாளிதழ் காரசாரமான ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இதுவரை தெரிவித்து வந்த கொள்கைக்கு, கருத்துக்கு, அமைச்சர் கதிர்காமரின் கூற்று முற்றிலும் முரணானது என்றும் -

இதுகுறித்து இலங்கையர்கள் விரிவான விளக்கத்தைக் கோருகிறார்கள் என்றும் அந்தத் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மை அரசாக விளங்கும் ஐக்கிய சுதந்திர முன்னணி அரசுக்குத் தேவைப்படும் 21 எம்.பிக்களைக் கொண்ட, விடுதலைப் புலிகளின் ஏஜெண்டுகளாக விளங்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ஆதரவைப் பெறுவதற்காகவா இத்தகைய திடீர் மாற்றம் எனவும் அந்தத் தலையங்கத்தில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நெடுநாளைய கூட்டணியாக ஈ.பி.டி.பி. கட்சி விளங்குகிறது. அந்தக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, பொதுமக்கள் ஐக்கியமுன்னணி அரசின் சோதனையான காலங்களில் எல்லாம் தோள்கொடுத்து உதவியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி, விடுதலைப் புலிகளுடன் உறவாடுவதால், டக்ளஸ் தேவானந்தா எப்போதும் அந்தஅரசிலிருந்து விலகியே தூரத்திலேயே - நின்றுள்ளார். அமைச்சர் கதிர்காமரின் தற்போதைய கூற்று அரசின் முந்திய நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரணானதாகும். இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற சபாநாயகர் தெரிவிலும், அரச வேட்பாளர் டியு குணசேகர தோல்வியுற்றமைக்கு, ஹெல உறுமய பௌத்தபிக்கு எம்.பிக்கள், தமிழர் கூட்டமைப்பு எம்.பிக்களுடன் சேர்ந்து வாக்களித்தது தேசத்துரோகமானது என்று அரச தரப்பினர் குற்றஞ்சாட்டினர். இப்போது எங்கே நிற்கிறது?

ஐக்கிய தேசிய முன்னணியின் இரண்டு வருடகால ஆட்சியின்போது சுதந்திரக் கட்சியும், ஜே.வி.பியும் கைக்கொண்ட நிலைப்பாடு என்ன? ரணில் விக்கிரமசிங்க நாட்டை விடுதலைப் புலிகளுக்கு அடகுவைத்து விட்டார் என்று கூறி, ஜனாதிபதி சந்திரிகா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மறுத்தது எதற்காக? இப்போது திடீரென அந்த நிலைப்பாடு மாறிவிட்டதா? விடுதலைப் புலிகளைச் சர்வதேசப் பயங்கரவாத இயக்கம் என்று சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொண்டு அதனைத்தடை செய்வதற்கான பிரசாரத்தை வெற்றிகரமாக முன்வைத்த அமைச்சர் கதிர்காமரே இப்போது பல்டி அடிப்பது எதற்காக? என்றவாறு பல கேள்விகளை முன்வைத்து வரையப்பட்ட தென்னிலங்கையின் பேரினவாதிகளின் குரலாக - ஆசிரியர் தலையங்கம் அரசைவன்மையாகச் கண்டிக்கிறது.

உதயன்

கதிர்காமர்-கொலின் பவல் சந்திப்பு?

ஜ ஐ.பி.சி தமிழ் ஸ ஜ திங்கட்கிழமை, 03 மே 2004, 7:04 ஈழம் ஸ

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் அமெரிக்க இராஐhங்க அமைச்சர் கொலின் பவலைச் சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இம்மாதம் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இச்சந்திப்பின் போது இருதரப்பு விடயங்கள் மற்றும் இலங்கையின் சமாதான முயற்சிகள் குறித்து அமெரிக்க இராஐhங்க அமைச்சருடன் லக்ஷ்மன் கதிர்காமர் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை, ஐனாதிபதியால் முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்கான ஒழுக்கக் கோவையில் வருடம் ஒன்றுக்;கு அமைச்சர் ஒருவர் நான்கு வெளிநாட்டு விஜயங்களையே மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மேற்கொள்ளவுள்ள இரண்டாவது வெளிநாட்டு விஐயமாக இது அமையவுள்ளது.

அத்துடன், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கான விஜயம் ஒன்றை முடித்துக் கொண்டு கடந்த வியாழக்கிழமை வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் சிறிலங்காவுக்குத் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இடைக்கால தன்னாட்சி அதிகார சபையின் அடிப்படையிலேயே பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும்: சு.ப.தமிழ்ச்செல்வன்

[ திருநந்தன், சங்கீத் ] [திங்கட்கிழமை, 03 மே 2004, 19:55 ஈழம் ]

கடந்த காலங்களில் பேச்சுவார்த்தைகள் எந்த ஒழுங்குகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதோ அந்த அடிப்படையில்தான் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையின் நிலைப்பாடு என தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இன்று, நோர்வே சிறப்புத் து}துவர் எரிக் சொல்ஹெய்முடனான சந்திப்பின் பின் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு சு.ப.தமிழ்ச்செல்வனை நோர்வே து}துக்குழுவினர் புலிகளின் சமாதான செயலகத்தில் இன்று காலை 10.45 மணிக்கு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இரு மணித்தியாலங்களுக்கு மேல் நீடித்த இச்சந்திப்பில் இலங்கைக்கான நோர்வே து}துவர் திரு ஹான்ஸ் பிறஸ்கர், விசேட து}துவர் திரு எரிக் சொல்ஹெய்ம், நோர்வே வெளிவிவகார அமைச்சின் ஆலோசகர் லிசா கோல்டன் ஆகியோர் இடம்பெற்றனர்.

சமாதான நடவடிக்கைகளை மீண்டும் முன்னெடுப்பது குறித்து, நோர்வே பிரதிநிதிகள், தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருடன் இன்று சந்தித்து இரண்டு மணிநேர கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.

நேற்று நோர்வே பிரதிநிதிகள் சிறிலங்கா ஐனாதிபதியுடன் கலந்துரையாடி, சமாதானப் பேச்சுகள் தொடர்பான அவர்களுடைய கருத்துக்கள், நிலைப்பாடுகளைப் பெற்றுக்கொண்டு இன்று வன்னிக்கு வந்து விடுதலைப் புலிகளுடன் கலந்துரையாடினர்.

display.pl?if=20040504MON003.jpg

இன்றைய சந்திப்பு பற்றி தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் தெரிவித்த கருத்துக்கள் பின் வருமாறு,

- புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக ஆராயப்பட்டது.

- அரசு பேச்சுக்களை மிக விரைவில் மீண்டும் ஆரம்பிப்பது

தொடர்பாக கூடிய கரிசனையைக் காட்டிவருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

- எதிர்காலத்தில் பேச்சுக்களை முன்னெடுப்பது தொடர்பாக ஆராயப்பட்டது.

- பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரல்களை ஒழுங்குபடுத்திக் கொள்வது தொடர்பாகவும் பேசப்பட்டது.

- இடைக்கால நிர்வாக சபை அலகைக் கையளித்து அது தொடர்பாக பேசுகின்ற பொழுதுதான் அரசாங்கம் கலைக்கப்பட்டு புதிய அரசியல் சூழ்நிலை உருவாகியதால், அடுத்த கட்டப் பேச்சுக்கள் அங்கிருந்தே ஆரம்பிக்கப்படுவதன் அவசியம் குறித்தும் அலசப்பட்டது.

ஆகவே விடுதலைப் புலிகள் அமைப்பை பொறுத்த வரையில் கடந்த கால ஒழுங்கில் பேச்சுக்களை முன்னெடுப்பதே எமது தலைமைப்பீடத்தின் உறுதியாக இருக்கின்றது.

அதுமட்டுமல்ல, அண்மைக்காலத்தில் ஒரு புதிய அரசியல் சூழ்நிலை ஒன்று உருவாகியுள்ளது. தேர்தல் நடைபெற்றிருக்கின்றது. தமிழர் தாயகப் பகுதிகளில் முழு மக்களும் ஒட்டுமொத்தமாக ஆதரவினை வழங்கி தமது அபிலாஷைகளை வெளிப்படுத்தியிருக்கின்றார

  • தொடங்கியவர்

We dont want Norway, JVP informs President

Alladin Hussein in Colombo, May 3, 2004, 10.00 p.m.. The Janatha Vimukthi Peramuna (JVP), which is the second largest constituent of the ruling United Peoples Freedom Alliance Government has informed President Chandrika Kumaratunga that India should be given the role as mediators in the peace process, and Norway should be sidelined.

The Daily Mirror reported today Ms. Kumaratunga, is facing a dilemma, following the JVP stand that the Norwegians should be sidelined, and instead the role should be given to Neighbouring India. Ms. Kumaratunga is finding difficulty in making such a drastic turnaround.

The President however is yet to response to the JVP request. Citing reasons for their demand, the JVP Propaganda Secretary Wimal Weerawansa is reported to have said that the people are not very satisfied with the Norwegians, as they have failed to play an impartial role in the process. And at many instances have sided with the LTTE, even when the LTTE was wrong.

  • தொடங்கியவர்

We want you, LTTE tells Norway

Alladin Hussein in Colombo, May 3, 2004, 10.29 p.m. . Amidst a hardline stand by the Janatha Vimukthi Peramuna (JVP) that Norway should be sidelined in the peace process, the LTTE has made it very clear that the Norwegians should play a major role in the process. Norway's role is vital and it should continue, LTTE political Wing Leader S.P. Thamilselvam told Norway's special peace envoy Erik Solheim and Ambassador Hans Bratskar when they met at the LTTE peace Secretariat in Killinochci today.

Political sources told the Lanka Academic that in the event President Kumaratunga do decide to sideline the Norwegians, due to pressure from the JVP, it could even lead to serious repercussions. There is immense possibility that the LTTE will not agree to resume peace talks with the new Government, if the Norwegians dont play a vital role in the peace process. They may even go back to war sources warned.

  • தொடங்கியவர்

What role can we play, India asks Sri Lanka

Chennai, May 3 (IANS) :

India is interested in lasting peace in Sri Lanka and had asked the island nation's new government what role New Delhi could play in the country's Norwegian-brokered peace process.

External Affairs Minister Yashwant Sinha said: "During my meeting with Sri Lanka's new foreign minister Lakshman Kadirgamar in New Delhi (last week), he wanted India to play a direct role in the peace process.

"I asked him what sort of role he wants India to play and he promised to get back to me after consultations with his government," Sinha told a news conference here.

"We are interested in the peace process... so that Sri Lankan refugees here can go back to their country."

Sinha said a solution to the ethnic strife in Sri Lanka must come "from within the framework of an unified Sri Lanka and such a solution should come from forces" within that nation.

"No solution can be forced on them," he said.

A decision on a land bridge between Dhanushkodi in India and Thalaimannar in Sri Lanka and a ferry service between Tuticorin and Colombo would be taken only after peace returns to the island, Sinha said.

Asked if India had sought the extradition of Liberation Tigers of Tamil Eelam chief Velupillai Prabhakaran, he said New Delhi had made such a request to Sri Lanka several times.

Prabhakaran is wanted in India for the 1991 assassination of former Indian prime minister Rajiv Gandhi.

பிரபல அரசியல் விமர்சகரின் கொழும்பு இல்லம் பொலிசாரால் சோதனை

இலங்கையின் பிரபல அரசியல் விமர்சகர் தர்மரத்தினம் சிவராம் (தராக்கி) அவர்களின் கொழும்பு இல்லத்துக்குள் நேற்றிரவு கொகுவெள-கல்கிசை பொலிசார் பெருமளவில் திடிரென புகுந்து தீவிர தேடுதலை நடாத்தியுள்ளனர்.

இவரது வீட்டில் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகம் கொண்டே தாம் இந்த தேடுதலை நடாத்தியதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

தேடுதல் நடாத்தப்பட்ட சமயம் சிவராம் அவர்கள் மட்டக்களப்பில் சுதந்திர ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு சுதந்திர ஊடகவியலாளர் தினத்தில் இந்த தேடுதல் நடாத்தப்பட்டது ஊடகத்துறையினருக்கு விடுக்கப்பட்ட ஒரு பாரிய அச்சுறுத்தலாகவே கணிக்கப்படுகிறது.

இதற்கு முன்னரும், பல தடவைகள் கொலைப் பயமுறுத்தல்கள் திரு. சிவராம் அவர்களுக்கு விடுக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பொலிசாரின் இந்த தேடுதல் நடவடிக்கையை இலங்கை தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் ஆர்.துரைரட்ணம் அவர்கள் வன்மையாக கண்டித்துள்ளார்.

நன்றி : புதினம்

  • தொடங்கியவர்

Police rummage Tamil journalists home for weapons

Associated Press, Tue May 4, 2004 02:49 EDT . DILIP GANGULY - Associated Press Writer - COLOMBO, Sri Lanka - (AP) Police searched the home of a prominent Sri Lankan journalist in the capital Colombo while he was out of town taking part in World Press Freedom Day celebrations, the journalist said Tuesday. ``That the police should have chosen World Press Freedom Day to raid a well-known Tamil journalist's home speaks volumes for the state of media freedom in Sri Lanka - ,'' said R. Thurairatnam, president of the Sri Lanka - Tamil Media Alliance, a watchdog group. Sivaram was attending World Press Freedom Day events in the eastern city of Batticoloa when the search took place.

``The raid on the Tamil journalist's home is an act of crude intimidation aimed at stepping up pressure on Mr. Sivaram's family and thereby prevent him from writing critically on sensitive issues affecting the Tamil people,'' Thurairatnam said in a statement.

Sivaram was threatened with death in 2000 and 2001 by unidentified armed groups believed to be working clandestinely with the Sri Lankan state and by an ethnic Sinhala extremist group, according to reports in Tamil newspapers then.

Sivaram's Web site has gained widespread notoriety for its reporting on Tamil affairs, with special emphasis on human rights violations by government security forces.

In 2001, Sivaram said he feared for his life after Sri Lankan newspapers linked him with Tamil Tiger separatists.

Sri Lanka - 's civil war was born of an ancient conflict between two ethnic groups with their own distinct languages, cultures and history. The majority Sinhalese who are 14 million of Sri Lanka - 's 19 million people are mainly Buddhist. Most of the 3.2 million Tamils are Hindus, like Sivaram.

Mylvaganam Nimalarajan, a British Broadcasting Corp. journalist based in the northern city of Jaffna, was shot to death in his home in October 2000 after being accused of working for the rebels.

  • தொடங்கியவர்

தமிழீழப் பாதுகாப்பிற்கான தமிழர்களின் விழிப்புணர்ச்சி

"புத்திஜீவிகள் தொடக்கம் சாதாரண பாமரமக்கள் வரை அனைவரும் தமிழரின் புலாய்வுப்போரியல் பங்கெடுக்க வேண்டும்."

சிங்களப் பேரினவாதம் தொடர்ந்து இழைந்துவந்த தமிழின விரோத நடவடிக்கைகளால் தமிழர்கள் அடிமை நிலைக்குள் தள்ளப்படும் ஆபத்தான காலகட்டத்தில் வாழ்ந்தார்கள். இவ்வரலாற்று நெருக்கடியான காலப்பகுதிகளில் தமிழர்கள், தமது தலைவிதியை நொந்து சும்மா இருந்து விடவில்லை.

மாறாகப் பெருமைப்படும் விதத்தில் சவால்களை எதிர்கொண்டு தேசியத் தலைவரின்கீழ் விடுதலைப் போருக்கு உரமேற்றிப் பங்கெடுத்தார்கள். ஏறத்தாழ இருபத்தைந்தாண்டுகள் விடுதலைக்கு இரத்தத்தால் உரமூட்டிய மாவீரர்கள், மக்களின் வீரம், விளைநிலமாக தமிழர் தாயகம் பலம் பெற்றது.

இப்பலம் பொருத்திய தாயகத்தை சின்னாபின்னப்படுத்திச் சிதைப்பதற்கும், தமிழர்கள் வாழ்வதற்கு கஷ்டமான ஒரு பூமியாகத் தாயகத்தை மாற்றுவதற்கும், பல்வேறு சூழ்ச்சிகரமான தந்திரோபாயங்களை சிங்களம் கையாண்டு வருகின்றது.

இத் தந்திரோபாயங்களை, அரசியல், போரியல், உளவியல், ஒற்றாடல் (புலனாய்வு) போன்ற அனைத்திலும் புகுத்தியே வந்துள்ளது. வருகின்றது. இது ஒட்டுமொத்தமாக தமிழ்ச்சமுதாய அமைப்பின் அடித்தளத்தைத் தகர்த்துவிடும் நோக்கத்தினைக் கொண்டதாகும்.

இதில் எதிரியால் முன்னெடுக்கும் புலனாய்வுப்போர் பற்றியும், அப்போரை எதிர்கொள்ள தமிழர்கள் புலனாய்வு விழிப்புணர்வுச் சமூகமாக மாறவேண்டிய அவசியம் பற்றியும் இங்கு நோக்குவோம்.

'ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன் கொற்றம் கொளக்கிடந்தது இல்"

இக்குறள் தரும் விளக்கம் ஒற்றர்கள் இல்லையென்றால் உள் நாட்டிலும், அயல்நாட்டிலும், தகவல்கள் எதனையும் அரசன் அறிந்து கொள்ளமுடியாது. தெரிந்து கொள்ளவில்லையென்றால் பாதுகாப்பாக எதுவும் செய்து கொள்ளமுடியாது. அதனால் அரசு அழியும் ஆபத்து ஏற்படும். இது ஒன்றை எமக்கு உணர்த்துகிறது அதாவது தமிழீழம் முழுவதும் சாமர்த்தியமாக பின்னப்படவேண்டிய உளவு வலைப்பின்னலின் முக்கியத்துவம் பற்றியதாகும்.

தமிழீழ விடுதலை வீரர்கள் போர்க்களத்தில் உயிர்த்தியாகம் செய்து வருகையில், தாய் மண்ணில் சிங்களதேசத்திற்கு சார்பாக தமிழ் ஒற்றர்கள் திறைமறைவில் இயங்கிக் கொண்டிருப்பார்கள்.

இம்மறைமுக சூழ்க்கிகரமான புலனாய்வுப் பரிமாணங்களைப் பின்வருபவைகள் உள்ள.

01. தமிழீழப் பிரதேசங்களுக்குள் இயக்க நிர்வாகக் கட்டமைப்புக்குள் ஊடுருவி உளவு பார்த்தல்.

02. தமிழீழ மக்களது உளவரனை பலவீனப்படுத்தும் வகையில் நாசவேலைகள், மறைமுகத் தாக்குதல்களை மேற்கொள்ளுதல்.

03. தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான எதிரணிகளை உருவாக்கிக் கையாளுதல்.

04 தமிழரின் உரிமைப் போராட்டத்தின் மீதான பற்றுறுதியை திசைதிருப்பும் பொய்யான தகவல்களை பரப்புதல்.

05. தமிழர்களின் தேசியப் பலத்தை சிதைப்பதற்கு 'பிரித்தாளும்' சூழ்ச்சியைக் கையாளுதல்.

இவ்வகையான நாசகாரப் புலனாய்வுப் பிரமாணங்களுக்காக சிங்களம் தமிழ் ஒற்றர்களடங்கிய படையையே எப்போதும் அதிகமாக ஈடுபடுத்தி வருகின்றது.

அவையாவன.

01. அகத்து ஒற்றர் (ஊடுரு வலாளர்)

02. இரட்டை வேடம் போடும் ஒற்றர்.

03. மனம் மாற்றப்பட்ட ஒற்றர்.

04. உள்ளுர் ஒற்றர்.

05. காப்பான ஒற்றர்.

இவ்வொற்றர்களது பணி சார்ந்து சிறுவிளக்கத்தைப் பெறுவோம்.

முதலாவது அகத்து ஒற்றர் இயக்க நிர்வாகக் கட்டமைப்புக்களுக்குள் ஆழமாக ஊடுருவி நிலைபெற்று இருப்பார். இவர் விடுதலைப்போரை பலவீனப்படுத்தும் வகையில் விளை பயன்மிக்க தாக்குதலுக்கான தகவல்களை எதிரிக்கு வழங்குவார். அத்துடன் தாக்குதல்களை மேற்கொள்ளுதல் அல்லது அத்தாக்குதலுக்கான பின்புலப் பணிகளை ஒழுங்குபடுத்திக் கொடுப்பார்.

இரண்டாவது இரட்டை வேடும் போடும் ஒற்றர். எதிரிக்கே விசுவாசமாகச் செயல்படும் இவர் விடுதலைப்போராட்டத்திற்கு சார்பானவராகத் தன்னை இனங்காட்டிக் கொள்வார். இந்த இரட்டை வேடத்துடன் நடமாடிய படி தகவல் சேகரிப்புகளில் ஈடுபாடுவார்கள். தேவைப்படும் பட்சத்தல் தாக்குதல் சார்ந்த பணிகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொள்வார்கள்.

மூன்றாவது மனம்மாற்றப் பட்ட ஒற்றர். தமிழ்த்தேசிய உணர்வாளர்களுக்குள் பயன்மிக்கவர்களை எதிரி தமது வலைக்குள் வீழ்த்துவதாகும். இவர்கள் காசுக்காக எதையும் செய்யும் துரோகிகளாக மாறி விடுவார்கள். இம்மோசமான சுயநலக்காரர்கள் தமிழீழ விடுதலைக்கு மோசமான பாதிப்புக்களை உண்டுபண்ணுவார்கள்.

நான்காவது உள்ளுர் ஒற்றர் தமிழர்தாயகப் பகுதிகளிலே நிரந்தரமாக வாழ்ந்துகொண்டு எதிரிக்குத் தகவல்களை வழங்குபவர். மக்களுக்குள் கசியும் தகவல்களையும் இயக்க நடமாட்டங்கள், செயற்பாடுகள் பற்றிய அவதானிப்பு தகவல்களையும் சேகரிப்பவர்.

ஜந்தாவது காப்பான ஒற்றர் சிறிலங்காப் பகுதிகளில் நிரந்தரமாக வாழும் இவர்கள் பொருத்தமான மறைப்புப் கதைகளுடன் தமிழீழப் பகுதிக்குள் உள்நுழைந்து புலனாய்வு வேலைகளை மேற்கொள்வார்கள். வேவு பார்த்தல், தகவல்களை உறுதி செய்தல், தொடர்புகைப் பேணுதல் என இவர்களது பணிகள் இருக்கும், கிடைக்கும் அனைத்து அறிக்கைகளையும் பாதுகாப்பாக எதிரியிடம் சேர்ப்பிப்பார்கள்.

இவ்வகையான ஒற்றரடங்கிய படை தமிழீழப் போர்களத்திற்கு அப்பால் இராணுவ சீருடை அணியாத சிறிலங்கா புலனாய்வு அதிகாரிகளால்

வழிநடத்தப்படுகின்றது.

தமிழீழ போர்க்களத்தில் காணப்படும் சிங்களப் படையினரின் பலவீனத்தை ஈடுசெய்வதற்காகவும், தமிழரின் படைப்பலத்தைப் பலவீனப்படுத்துவதாகவும், இது சிறிலங்காப் புலனாய்வு அமைப்பினால் பின்னப்பட்டடிருக்கும் உளவு வலைப்பின்னலாகும்.

இத்தகைய எதிரிப் புலனாய்வு அமைப்பிற்கு நவீன நிபுணத்துவ ஆலோசனைகளை இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டிஷ், பாகிஸ்தான் ஆகியநாடுகள் வழங்கி வருகின்றன.

அத்தோடு நவீனத்துவப் புலனாய்வுப் பயிற்சிகள், நவீன தொழில்நுட்ப உதவிகள், நிதி உதவிகள் பயன்மிக்க தகவல் உதவிகள் என அந்நாடுகள் வழங்கி பக்கத் துணையாக இருக்கின்றன.

இவ்வளங்கள் ஒரு புறம் இருக்க தமிழ்த்தேசிய விரோத சக்திகளின் ஆளணி வளமும் எதிரிக்கு பக்கபலமாக இருந்து வருகின்றது.

இவ்வளம்மிக்க, பலமுள்ள சிறிலங்காப் புலனாய்வு அமைப்பானது சிங்கள இனவாத பௌத்தமத அடிப்படைக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டதாகும்.

அவ்வமைப்பிலுள்ள புலனாய்வுகளின் உணர்ச்சி முழுவதும் தமிழரின் தேசிய வாழ்வை சிதைப்பதற்கான எண்ணங்களால் நிரம்பிக்கிடக்கிறது.

இம்மூல எண்ணக்கருவின் இலக்கை எட்டுவதற்காக தமிழரின் மனிதவளத்தையே அதிகம் சிங்களம் பயன்படுத்தி வருவதே சோகமான உண்மையாகும்.

அதாவது தாயப்பகுதியில் உள்ள சந்துபொந்தெல்லாம் சிங்களப் புலனாய்வு அதிகாரிகளுக்குத் தெரியும் என்பார்கள். அது ஓரளவு நிஜம் தான் சந்துபொந்தெல்லாம் மாத்திரமல்ல தாயகப்பகுதிகளில் நடைபெறும் செயல்பாடுகளும் தெரியும்.

காரணம் தமிழ் ஒற்றர்களையே உபபோகிக்கின்றார்கள் என்பதுதான்.

சிங்களப் போர்விமானத்தின் விமானிக்கோ, அதனை வழிநடாத்தும் அதிகாரிக்கோ ஒரு இலக்குக்குரிய தகவலும் தெரியாது. ஆனால் விமானத்தினால் விடுதலைப் போருக்கு, தாயகப் பகுதிக்கு ஏற்படும் பாதிப்பு ஆழமானது. அவ் இலக்குகளுக்குரிய தகவல்களை வழங்குபவர்கள் தமிழ் ஒற்றர்களே.

இவ்வொற்றர்களால் வழங்கப்படும் தகவல் வளங்களினை ஆரம்பப்புள்ளியாக வைத்தே ஆளில்லாத உளவு விமானம் (U.A.V) தாயக வான்பரப்பில் உளவு வேலைகளை மேற்கொள்கின்றது. இதனால் தாக்குதலுக்கான இலக்குகளை துல்லியமானகப் படம் எடுக்கிறது.

இத்தகைய தொழில்நுட்பப்புலனாய்வுச் செயற்பாட்டிற்கு உயிர்நாடியாக மனிதவளப்புலனாய்வு உள்ளது. இந்த தவிர்க்கப்படவியலாத யதார்த்தத்தை ஒத்த உதாரணம் ஒன்றைப் பார்ப்போம்.

பலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தலைவர் யாசீன் கொல்லப்படுவதற்கு முன்பு இன்னொரு ஹாமாஸ் இயக்கத்தலைவர் கொல்லப்பட்டார். இத்தாக்குதலுக்கு நவீன தொழில்நுட்ப உலங்குவானூர்திகள் ஈடுபடுத்தப்பட்டது. இதிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் இலக்கை அழிப்பதற்கு காரணமாக அமைந்தது.

கண்ணுக்குத் தெரியாத மைகாரின் மேற்பரப்பில் பூசப்பட்டதனாலாகும். அதாவது செய்மதிகளின் உணரிகள் குவியம் கொள்ளக்கூடிய இம் மையை பூசியவர் இஸ்ரேலினால் விலைக்கு வாங்கப்பட்ட ஒற்றராகும்.

இதுபோன்றே மனிதவளப் புலனாய்வு ஆழமாகவும், விசாலமாகவும், உறுதியாகவும் பின்னிப்பிணைந்துள்ளதாக இருக்கும்.

எதிரிப்புலனாய்வாளர்கள் தமது கழுகுப்பார்வையைச் செலுத்தாத எந்த ஒரு துறையும் தாயகப் பகுதிகளில் இல்லை. அதற்கான மூலவளம் தமிழ் ஒற்றர்கள்.

சிறிலங்கா புலனாய்வாளர்கள் மனித மனங்கள் பற்றி நன்கறிந்தவர்கள், அதுவும் தொடர்ச்சியான மன நெருக்கீடுகளுக்குள் உள்ள தமிழர்களுக்கு உளப்பரிகாரம் தேவைப்படும் என்பதனை அறிந்தவர்கள்.

அதாவது எத்தனைய அணுகு மறைகளைக் கையாண்டால் தமிழர்களை உள்வாங்கலாம் என்பதும், எத்தகைய சலுகைகளை வழங்கினால் தமிழர்களது மனங்களை தம்பக்கம் ஈர்த்தெடுக்க முடியுமென்பதில் அனுபவமுள்ளவர்கள்.

இப்படி மனோவியல் ரீதியாக தமிழர்களை சிங்களம் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் தம் புலனாய்வுவேலைகளை முன்னெடுக்கின்றது. இச் சூழ்ச்சிகரமான வேலைகளுக்காக தமிழரின் மன அரங்கை ஒரு களமாக மாற்றி, தமிழரின் இருப்புக்கே ஆணிவேராகக் கருதப்படும் பாதுபாப்புபலத்தை சிதைக்கும் இலக்கைக் கொண்டதாகும்.

இவ்விலக்கை எதிரி எட்ட முடியாதவாறு பார்த்துக்கொள்ளக் கூடிய மனப்பலம் ஒவ்வொரு தமிழரிடமும் உண்டு. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் தாயகத்தைப் பாதுகாக்கும் எண்ணம் மேலோங்க வேண்டும். இவ்விழிப்புணர்ச்சி தமிழர்களிடம் இருக்கும்வரை சிங்களத்தால் எதனையும் சாதிக்கவே முடியாது போகும்.

இங்கு அபிசீனியா (தென்னாபிரிக்கா) நாட்டு மக்களது விழிப்புணர்ச்சியை வெளிப்படுத்திய உண்மைக்கதையொன்றை அறிவோம்.

இரு வெளிநாட்டு ஒற்றர்கள் அபிசீனியாவில் உள்ள பொருளாதார வளங்கள் பற்றிய தகவல்களை சேகரிப்பதற்காக அந்நாட்டினுள் நுழைந்தார்கள்.

அங்குள்ள மக்களைச் சந்தித்து தகவல்களைப் பெற முயற்சி செய்த போதும் எந்தவொரு தகவல்களையும் பெறமுடியவில்லை. மாறாக மக்கள் தம் வாயைக் கையால் பொத்திக் கொண்டார்கள். அத்தோடுநின்று விடாது அவ்வொன்றர்கள் தொடர்பான தகவலை தமது மன்னருக்குக் கிடைக்கச் செய்தார்கள். பின்னர் ஒற்றர்கள் இருவரும் மன்னரால் நாடுகடத்தப்பட்டார்கள்.

இத்தகைய உணர்வுமிக்க நிகழ்வுகளும் தமிழர் தாயகத்திலும் வரலாற்றுப் பகுதிகளாக இருக்கின்றன.

எந்தவொரு சலுகைகளுக்கும் மயங்கிவிடாது தம் அடிப்படை வாழ்வை இழந்த தன்மானமுள்ளவர்கள் இவர்கள். எதிரியின் சூழ்ச்சிகரமாக வலைக்குள் வீழ்ந்துவிடாது கொடூரமான சித்திரவதைகளுக்குள்ளாகிய மனப்பலமுள்ளவர்கள் எனத் தமிழர்களின் வரலாறு நீண்டது.

இத்தகைய தனித்துவமான தமிழர்களிடத்திலும் எட்டப்பர்களின் ஆளுமை இருப்பதே சாபக்கேடாகும்.

அதுவும் எதிரி தமிழரின் மனித வளத்தையே பயன்படுத்தி தமிழரின் தேசியப் பலத்தைப் பலவீனப்படுத்த முயல்வதே இன்னும்சோகமானது.

இதுவரை காலமும் சிங்கள இனவாதம் பலியெடுத்த தமிழர்களது, மனித இழப்பு, விடுதலைப் போரில் களமாடிய இளம் வீரர்களது மனிதவள இழப்பு என தமிழ் இனத்தின் இழப்பு ஓர் இலட்சத்தைத் தாண்டியுள்ளது.

இப்பெருந்தொகையான மனிதவள இழப்பீட்டை நிவர்த்தி செய்வதாயின் இன்னும் 25 ஆண்டுகள் தேவைப்படும் என்பது மனிதவள ஆய்வாளர்களது கணிப்பீடு.

இச்சோகமான நிலையில் இனிமேலும் எதிரியின் சூழ்ச்சி வலைக்குள் வீழ்ந்து உரிமைப்போரை காட்டிக் கொடுக்க முனையும்போது தாமதங்கள் ஏற்படவே செய்யும். அது நெருக்கடிக்குள்ளாகவும் நேரிடும். அதனால் தமிழர்களின் மனிதவளம் இன்னும் பாதிப்பிற்குள்ளாகவே செய்யும்.

தேசத்துரோகம் இழைத்த தமிழ் ஒற்றர்களைத் தமிழீழதேசம் ஒரு போதும் மன்னித்ததும் இல்லை. அத்துரோகிகளும் தம்முயிரை இழக்கவே நேரிடுகிறது. ஒட்டுமொத்தமாக தமிழரின் மனவளம் அழிவின் விளிம்பிற்கு இட்டுச் செல்வதே சிங்களப்புலனாய்வாளர்களின் நோக்கம்.

இத்தளத்தில் நின்று கொண்டே சிறிலங்காப் புலனாய்வு, பிராந்தியப் புலனாய்வு, சர்வதேசப் புலனாய்வு நிறுவனங்கள் செயலாற்றி வருகின்றன. இவைகள் தமிழ்ச் சமுதாயத்தின் சகலதுறைகளிற்குள்ளும் தகவல் வழங்குணர்களின் வலையமைப்புப் பணிகளை விரிவாக்கஞ் செய்து கொள்கின்றன.

இவ்வலையமைப்பில் தமிழரின் அறிவுப்பலமுள்ள தகவல் வழங்குனர்களை இணைத்துக் கொள்கின்றனர்.

தமிழரின் அறிவுப்பலம் மிகவும் சக்தி வாய்ந்தது. அச்சக்தியை, அப்பலத்தை தமிழ் அன்னையை கேவலப்படுத்தவும், அடிமையாக்கவும் கொன்றொழிக்கவும் முனையும் எதிரிப் புலனாய்வு சக்திகளுக்கு விலை போக இடங்கொடுக்கலாகாது.

தமிழரின் மனிதவளத்தையும் புலமைத் தளத்தையும் தமிழரின் அழிவுக்குப் பயன்படுத்தும் சோகமான வரலாற்றை மாற்றியமைக்க வேண்டும்.

எத்தகையவளம், பலமிக்க புலனாய்வு நிறுவனங்களது சவால்களை எதிர்கொள்ளத்தக்க பேரெழுச்சிமிக்க தமிழ்தேசியப்பலம் தாயகத்திடம் உள்ளது.

புத்திஜீவிகள் தொடக்கம் சாதாரண பாமரமக்கள் வரை அனைவரும் தமிழரின் புலாய்வுப்போரியல் பங்கெடுக்க வேண்டும்.

எதிரியின் வஞ்சகக் குரல்களுக்கு வசப்பட்டுப்போகாமலும் எதிரியின் நயவஞ்சக விஷம் பொருந்திய கரங்கள் தாயகத்தின் மீது படாதவாறும் பார்த்துக்கொள்ள வேண்டும். தமிழீழ பாதுகாப்பிற்கு நாம் என்ன மாதிரி தொண்டாற்றலாம் என்பதை தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் மனத்திலே எண்ணுதல் வேண்டும். சுயநலத்தை முதன்மையாக்கி வாழும் சிந்தனைத் தளத்திலிருந்து சற்று விலகி நின்று தமிழர்களின் விடுதலைப்போருக்கு வலுச்சேர்க்கத்தக்க வகையில் பாடுபட வேண்டும். அத்துடன் நாம் புலனாய்வு விழிப்புணர்வு பெற்ற சமூகமாகமாறி தாயகத்தின் பாதுகாப்பிற்கான சக்தியாக இயங்குதல் வேண்டும்.

நீலன் ஈழநாதம்.

  • தொடங்கியவர்

கிழக்கு நெருக்கடிý நிலைமையை அடுத்து 400 பேர் வெளிநாடுகளுக்கு பயணம்

கிழக்கில் விடுதலைப்புலிகளுக்கிடையே ஏற்பட்ட நெருக்கடிýயை தொடர்ந்து புலிகள் அமைப்பைச் சேர்ந்த நானூறுக்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புலிகளுக்கு எதிராக கருணா கிளர்ச்சியில் ஈடுபட்டது முதல் இதுவரை இவர்கள் கட்டுநாயக்கா விமான நிலையமூýடாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடவுச்சீட்டு திணைக்களம், குடிýவரவு குடிýயகல்வு திணைக்களம் மற்றும் கட்டுநாயக்கா விமான நிலைய வட்டாரங்களை ஆதாரம் காட்டிý குற்றப்புலனாய்வுப் பிரிவினர் (சி.ஐ.டிý.) இத்தகவலைத் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளுக்குச் சென்றவர்களில் பெரும்பாலானோர் கருணா குழுவினரே எனவும், இவர்களில் மிக அதிகமானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கே சென்றதாகவும் சி.ஐ.டிý.யினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மேலும் பலர் கடவுச்சீட்டுகளை பெற்றுள்ளதாகவும், இவர்களில் 99 சதவீதமானோர் ஒரே நாளில் பெறும் கடவுச்சீட்டுகளையே பெற்றதாகவும் சி.ஜ.டிý.யினர் தெரிவித்தனர்.

கொழும்பில் பல்வேறு பகுதிகளிலும் தங்கியுள்ளதாகக் கருதப்படும் கருணா குழுவினர் குறித்தும் கொழும்பு வரும் இவர்கள் குறித்தும் பொலிஸார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தினக்குரல்

  • தொடங்கியவர்

ரி-56 ரக துப்பாக்கிகள் கருணா குழுவால் மாளிகாவத்தைப் பகுதியில் விற்பனை

கொழும்பு மாளிகாவத்தைப் பகுதியில் கருணா குழுவினரால் 15 இற்கும் மேற்பட்ட ரி-56 ரக துப்பாக்கிகள் பாதாள உலகக் குழுவினருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மட்டக்களப்பிலிருந்து தப்பிச் சென்றதையடுத்து கருணா குழுவைச் சேர்ந்தவர்கள் கொழும்புக்குள் ஆயுதங்களுடன் வந்து சேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கும் பொலிஸார், அவற்றை பாதாள உலகக் குழுவினருக்கு விற்பனை செய்யத் தொடங்கி விட்டார்களாம்.

இவர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் 200 க்கும் மேற்பட்ட பொலிஸார் கடந்த புதன்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை 15 க்கும் மேற்பட்ட ரி-56 ரகத் துப்பாக்கிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாகவும் எனினும், இந்த ஆயுதங்களில் எதுவும் தங்களால் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு வகை ஆயுதமும் ஒவ்வொரு விலைகளில் விற்பனை செய்யப்பட்டாலும் இயந்திர பிஸ்ரல் 2000 ரூ பாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு நகரில் பாதாள உலகக் குழுக்களின் நடவடிக்கைகளால் பெரும் நெருக்கடி கள் ஏற்பட்டு வரும் நிலையில் கருணா குழுவினரின் ஆயுத விற்பனை மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தினக்குரல்

  • தொடங்கியவர்

விடுதலைப்புலிகளின் முகாம் மீதான தாக்குதல்களின் உள் நோக்கம் என்ன?

புலிகளின் பகுதியில் ஸ்திரமற்ற நிலையை உருவாக்க கருணா குழுவினர் திட்டம்

கொழும்புக்கு தப்பி வந்த கருணா குழு ஆயுதங்களை விற்க முயற்சி

விடுதலைப்புலிகளுக்கு எதிராக, அவர்களது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் நீண்ட தூரம் ஊடுருவித் தாக்குதல் நடத்தும் நடவடிக்கை ஆரம்பமாகி விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் கடந்த ஆட்சிக் காலத்தைப் போன்று, தற்போதும் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் புலிகளுக்கு எதிராக அவர்களது கட்டுப்பாட்டுப் பகுதிகளினுள் நுழைந்து தாக்குதல்கள் நடத்தும் நடவடி க்கைகள் ஆரம்பமாகி விட்டதா என்ற ஐயத்தை வவுணதீவு-ஆயித்தியமலை வீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இடம்பெற்ற சம்பவங்கள் எழுப்பியுள்ளன.

வெள்ளை வானொன்றில் புலிகளின் பிரதேசத்திற்குள் நுழைந்த கோர்;டியொன்றே இந்தத் தாக்குதலை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளது. கருணா குழுவே இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் படையினரின் ஆதரவுடனேயே இந்தத் தாக்குதல் நடைபெற்றதாகவும் புலிகள் தரப்பில் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஆனாலும், இந்தத் தாக்குதலுக்கு தாங்கள் ஆதரவு வழங்கியதாகக் கூ றப்படுவதை படையினர் மறுத்தாலும்; தாக்குதல் நடத்த வாகனத்தில் வந்தவர்கள் இரானுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து நள்ளிரவு நேரம் இரானுவ சோதனைச் சாவடிய10டாக வந்தமை, இவ்விடயத்தில் படையினரின் மறுப்புகள் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை என்பதை தெளிவுபடுத்துகின்றன.

கிழக்கில் கருணாவுக்கு எதிரான புலிகளின் நடவடிக்கைகளையடுத்து அங்கு இரு தரப்பும் மிகுந்த உர்hர் நிலையிலுள்ளன. கருணாவின் நடவடி க்கைகளுக்கும் அதன் பின்னர் அவர் தப்பிச் சென்றதற்கும் படையினரே உதவி வழங்கியதாகக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வந்த நிலையில், வவுணதீவு-ஆயித்தியமலைச் சம்பவங்கள் இந்தச் சந்தேகங்களை உறுதிப்படுத்தியுள்ளன.

புலிகளுக்கு எதிரான புரட்சியில் கருணா ஈடுபட்ட போது படையினரின் முழு ஆசீர்வாதமும் இருந்தது.புரட்சி தோல்வியடைந்து அவர் தப்பிச்சென்ற போதும் படையினரின் உதவி கிடைத்தது. அவருடன் கொழும்புக்கு தப்பி வந்து, பின்னர் அவரால் கைவிடப்பட்ட நிலையில் புலிகளிடம் திரும்பிய கருணாவின், சகாக்கள் இது பற்றி பல தகவல்களைத் தெரிவித்திருந்தனர்.

இந்தச் சூழ்நிலையில் தான் வவுணதீவு-ஆயித்தியமலை வீதியில் புலிகளின் பகுதிக்குள் ஊடுருவிய ஆயுத பாணிகள் புலிகளின் முகாமொன்றின் மீதும் முன்னரங்க காவல் நிலைகள் மீதும் தாக்குதலை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளன.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவி புலிகளின் முக்கியஸ்தர்களைத் தாக்குவது இந்தக் கோர்;டியின் நோக்கமல்ல. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வாகனமொன்றில் வெற்றிகரமாக ஊடுருவிச் சென்று அவர்களது முகாம்களில் எவரையாவது சுட்டுக் கொல்வதும் அவர்களது சொத்துக்களை அழிப்பதுமே இந்தக் கோர்;டியின் நோக்கமாகும்.

கருணா மட்டக்களப்பிலிருந்து துரத்தப்பட்டாலும் அவருக்குரியவர்கள் அந்தப் பிரதேசத்தின் எங்காவது ஒரு மூலையிலிருந்து கொண்டு புலிகளுக்கு நெருக்கடி களைக் கொடுப்பார்கள் எனக் காட்ட முயல்வதே இந்தத் தாக்குதலின் நோக்கமாகும்.

கிழக்கில் கருணா கிளப்பிய பிரதேசவாதத்திற்கு இதன் மூலம் சிறுகச் சிறுக உயிரூட்டுவதும் கிழக்கில் புலிகளை நிம்மதியாக இருக்க விடமாட்டோமெனக் காட்டுவதும் இந்தக் கோர்;டியின் பின்னணியிலிருப்பவர்களது எண்ணமாயிருக்கலாம்.

கருணாவின் புரட்சி புலிகளை பெரும் உலுக்கு உலுக்கி, கிழக்கை வடக்கிலிருந்து பிரித்து விட சிங்கள சக்திகள் திட்டமிட்டிருந்த போதும், புலிகளின் திட்டமிட்ட அதிரடி நடவடி க்கை எல்லாவற்றையுமே புஸ்வாணமாக்கி விட்டது. இதனை பலரால் ஜீரணிக்க முடியவில்லை. கருணா விவகாரத்துடன் விடுதலைப்புலிகள் அமைப்பே உடைந்து விடுமென மனப்பால் குடி த்தவர்களெல்லோரும் வாயடைத்துப் போகும் விதத்தில் புலிகளின் நடவடிக்கை அமைந்தது.

புலிகள் கூ றியது போன்று கருணா தனி மனிதனாகவே தப்பிச் சென்றார். அவர் மீது புலிகள் சுமத்திய குற்றச்சாட்டுக்களையெல்லாம் நிரூபிப்பது போன்று அவரது செயற்பாடுகளும் அமைந்தன. ஆனாலும், வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வது ஆபத்தை ஏற்படுத்தலாமென்பதால் தற்போதும் தென் பகுதியிலேயே கருணா மறைந்து வாழ்கிறார்.

ஆனாலும், தன்னிடம் எஞ்சியவர்களைப் பயன்படுத்தி கிழக்கில் ஆங்காங்கே இவ்வாறான தாக்குதல்களை நடத்தி, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஸ்திரமற்றதொரு நிலையை உருவாக்க கருணா முயலக் கூடுமெனவும் கருதப்படுகிறது.

தன்னுடன் தப்பி வந்த முக்கிய பொறுப்பாளர்களையெல்லாம் கைவிட்ட பின்னர் கருணா இனிமேல் இவ்வாறான நடவடிக்கைகளில் இறங்க மாட்டாரென்றே பலரும் கருதினர். எல்லாமே முடி ந்த பின்னர் இந்தப் பொறுப்பாளர்களை தன்னுடன் வைத்திருப்பது தனக்கு பெரும் ஆபத்துக்களை ஏற்படுத்தலாமெனக் கருதியே கருணா இவர்களைக் கைவிட்டிருந்தார்.

தன்னுடன் புரட்சியில் ஈடுபட்டு பின்னர் தன்னால் கைவிடப்பட்ட இந்தப் பொறுப்பாளர்கள் இனியொரு போதும் புலிகளுடன் இணையும் சாத்தியமில்லை என்றும், ஒன்றில் அவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல வேண்டும், அல்லது இரானுவத்துடன் இணைய வேண்டும் என்றே கருணா கருதியிருந்தார்.

ஆனாலும், அவர்கள் அனைவரையும் புலிகள் தங்களுடன் இணைத்துக் கொண்டனர். இது கிழக்கு மக்களுக்குப் பெரும் ஆச்சரியத்தையும், விசனத்தையும் ஏற்படுத்திய போதிலும் இவ்விடயத்தில் புலிகள் மிகுந்த இராஜதந்திரத்துடன் நடந்து கொண்டார்கள்.

எதிரிகளின் எண்ணிக்கையை கூட்டி, நெருக்கடிகள் ஏற்படுவதை புலிகள் விரும்பவில்லை என்பது இவர்களை இணைத்துக் கொண்டதன் மூலம் தெரிய வந்தது. ஆனாலும், இதனை ஜீரணிக்க முடியாத சக்திகள், தற்போது கருணாவுடன் எஞ்சி படை முகாம்களில் சரணடைந்தவர்களைப் பயன்படுத்தி கிழக்கில் இவ்வாறான சிறுசிறு அசம்பாவிதங்களை ஏற்படுத்தி அதனைப் பெரிதுபடுத்துவதன் மூ லம் பிரசார ரீதியிலாவது புலிகளுக்கு நெருக்குதல்களை ஏற்படுத்தலாமென எண்ணிக் கொண்டிருக்கின்றன.

இதனால், தற்போது கருணாவிற்கு புகலிடமளிப்பவர்கள் கருணாவையும் அவருடனிருப்பவர்களையும் அல்லது அவருடனிருந்து தற்போது புலிகளிடமிருந்து விலகிச் சென்றவர்களையும் பயன்படுத்தி கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் குழப்ப நிலைமைகளைத் தோற்றுவிக்க முயல்வதாகவே ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கருணா குழுவினர் தப்பிச் செல்லும் போது அவர்கள் புலிகளுக்கு பல்வேறு நெருக்கடி களையும் ஏற்படுத்தியிருந்தனர். கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஸ்திர நிலைமையை தளம்பச் செய்ததுடன் புலிகளின் உட்கட்டமைப்பை பெரிதும் சீர்குலைத்திருந்தனர். கனரக ஆயுதங்கள், ஆயுதக் களஞ்சியங்கள், வெடி பொருட் களஞ்சியங்கள் எனப் போர்த் தளபாடங்கள் பெருமளவை அழித்ததுடன் படையணிகளையும் கலைத்து போராளிகளை கருணா வீடுகளுக்கு திருப்பியனுப்பினார்.

இதனால் கிழக்கில் சகல வளங்களையும் புதிதாக உருவாக்க வேண்டி ய கட்டாய சூழ்நிலை புலிகளுக்கு ஏற்பட்டுள்ளது. போதிய ஆளணிகளை (போராளிகளை) திரட்டுவது, அவர்களுக்குத் துரித பயிற்சியளிப்பது, அதுவரை ஏனைய மாவட்டப் போராளிகளை மட்டக்களப்பில் நிறுத்துவது, மீண்டும் கனரக ஆயுதங்கள் உட்பட அனைத்து வகை ஆயுதங்களையும் கிழக்கிற்கு நகர்த்துவது, முன்னரங்க காவல் நிலைகளை மீளப் புனரமைத்து கண்காணிப்பையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது, கருணாவின் நடவடி க்கையால் பெரிதும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மக்களை உற்சாகப்படுத்தி, மீண்டும் போராட்டத்திற்கு அவர்களது முழு அளவிலான பங்களிப்பை பெறுவதென, குறைந்தது அடுத்த ஆறு மாத காலங்களுக்கு புலிகள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

இந்த நிலையில் தான் அங்கு ஸ்திர நிலையொன்று உருவாகுவதற்கு முன் குழப்பங்களை ஏற்படுத்த பல்வேறு தரப்பும் முயன்று வருகின்றன. இதன் ஒரு கட்டமாகவே வவுணதீவு-ஆயித்தியமலை வீதியில் இரு பகுதிகளில் 'வாகனங்களில்" திடPரென ஊடுருவி அதிரடி த் தாக்குதல்களை நடத்தி புலிகளுக்கும் மக்களுக்கும் உளவியல் ரீதியில் நெருக்கடிகளை ஏற்படுத்தும் திட்டங்களை சில சக்திகள் கருணா குழுவுடன் இணைந்து மேற்கொண்டு வருவதாகப் புலிகள் நம்புகின்றனர்.

ஜனாதிபதி சந்திரிகாவின் கடந்த ஆட்சிக் காலத்தில் 'நீண்ட தூரம் ஊடுருவும் படையணிகள்" வன்னிக்குள்ளும் மட்டக்களப்பிற்குள்ளும் ஊடுருவி புலிகளின் முக்கிய தலைவர்களையும் தளபதிகளையும் இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தி வந்தன. ஜனாதிபதியின் தற்போதைய ஆட்சியில் இந்தத் தாக்குதல் வடிவம் மாறியுள்ளது.

வாகனத்தில் அதிரடி யாக நுழைந்து எழுந்தமானமாகத் தாக்குதலை நடத்தி விட்டுத் தப்பிச் செல்வதன் மூலம் வாகனங்களில் பல கிலோ மீற்றர் தூரம் நுழைந்து தாக்குதலை நடத்தி விட்டுத் தப்பிச் செல்பவர்களைக் கூடத் தடுத்து நிறுத்தவோ அல்லதும் பதிலடி கொடுக்கவோ அல்லது தப்பிச் செல்லும் போது கூடத் தடுக்கவோ முடியாத நிலையில் புலிகள் அங்கு பலவீனமாக இருப்பதாய் ஒரு தோற்றப்பாட்டை உருவாக்க இந்தச் சக்திகள் முயல்கின்றன.

இதை விட கருணா குழுவைச் சேர்ந்தவர்கள் ஆயுதங்களுடன் தப்பி வந்து பெருமளவில் ஆயுத விற்பனைகளில் ஈடுபடுவதாகவும் இதனைத் தடுத்து நிறுத்த தாங்கள் கொழும்பு மாநகரில் பாரிய தேடுதல்களை ஆரம்பிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை தோன்றியிருப்பதாகவும் காட்டுவதன் மூ லம், தொடர்ந்தும் கருணா விவகாரத்தைப் பெரிதுபடுத்தி புலிகளின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.

தற்போது கருணா கொழும்பில் அல்லது தென் பகுதியில் படையினரின் பாதுகாப்புடனிருப்பது தெரிய வந்துள்ளது. இவரைப் பாதுகாப்பாக வைத்துக்கொண்டும் வவுணதீவு-ஆயித்தியமலைச் சம்பவங்கள் போன்ற தாக்குதல்களை மேற்கொண்டவாறு இந்த அரசு புலிகளுடன் மீண்டும் சமாதானப் பேச்சுகளை ஆரம்பிப்பதென்பது சாத்தியமற்றதொன்றாகும்.

இந்த ஆட்சி எத்தனை நாட்களுக்குத் தொடருமென்ற கேள்விகள் தினமும் எழுப்பப்பட்டு வருகையில், வடக்கு-கிழக்கில் இவ்வாறான அசம்பாவிதங்கள் நடைபெறுவது எதிர்காலப் பேச்சுகளைக் கூடத் திட்டமிட்டுக் குழப்பும் செயலாகவே கருதப்படுகிறது.

வவுணதீவு-ஆயித்தியமலை தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து படையினரின் சோதனை நிலையமூ டாக, அதுவும் எவ்வித போக்குவரத்தும் நடைபெறாத நள்ளிரவு நேரம் சென்று திரும்பியுள்ளனர்.

இவ்வாறு, வவுணதீவு-ஆயித்தியமலைத் தாக்குதல் சம்பவங்கள் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ள அதேநேரம், இவ்வாறான தாக்குதல்களை முறியடிக்கவும் தாக்குதல் கோர்;டி களின் பின்னணிகளை அம்பலப்படுத்துவதிலும் புலிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் இந்தச் சக்திகளைத் தேடுவதில் தீவிரம் காட்டியுள்ளது. பின்னணியில் இருப்பவர்கள் கண்டறியப்படாவிடி ல் இது போன்ற அசம்பாவிதங்கள் தொடருமென்பதில் ஐயமில்லை.

தினக்குரல்

  • தொடங்கியவர்

Police raid Tamil writer's home

By Frances Harrison

BBC correspondent in Colombo

Police in Sri Lanka have raided the house of a prominent Tamil journalist, Dhamaratnam Sivaram, who edits the pro-rebel website TamilNet.

A statement from the human rights group, Reporters Without Borders, said it now feared for his safety.

Mr Sivaram said at least 15 policemen searched his house on Monday night while he was not at home.

The raid came as Norwegian peace envoys are in Colombo trying to restart peace talks with the Tamil Tiger rebels.

This action against a well-known Tamil journalist does not send a positive signal as the Norwegian diplomats, led by Erik Solheim, try to get the government and the rebels back to the negotiating table.

The raid... is an act of crude intimidation aimed at stepping up pressure on Mr Sivaram's family

R Thurairatnam

Sri Lanka Tamil Media Alliance

Mr Sivaram said the police told his family that they were looking for weapons, possession of which would be an unbailable offence.

But Mr Sivaram, who was in eastern Sri Lanka at the time, said the police failed to find any weapons in his house.

Intimidated

A statement from Reporters Without Borders said the family was only shown an identification card by a police officer and they felt intimidated by the raid.

However, the police chief in Sri Lanka told the BBC that his men were acting on information and did have a warrant from a magistrate to conduct the search.

The Sri Lankan Tamil Media Alliance criticised the action against Mr Sivaram, calling it an act of crude intimidation, adding that the timing of the incident - on World Press Freedom Day - spoke volumes about the state of media freedom in Sri Lanka.

Reporters Without Borders called on the Sri Lankan government to provide a public explanation for the treatment of Mr Sivaram as well as "genuine guarantees" for his safety.

In recent weeks, the government has been increasingly concerned about the influx of illegal weapons into the capital from supporters of the breakaway rebel commander Colonel Karuna, in the east of the island.

  • தொடங்கியவர்

Chandrika faces major split in new alliance

By Sinha Ratnatunga

Correspondent

Colombo: President Chandrika Kumaratunga yesterday faced the tough choice of ceding to rebel Tamil Tiger (LTTE) demands to resume peace talks and thus face a major split in her newly formed Freedom Alliance (UPFA).

What was easily her biggest political challenge, since her coalition won the April 2 parliamentary elections, was when Norwegian peace brokers returned after talks with rebel leaders in the Wanni jungles north east of Sri Lanka to deliver her their major demands to return for talks.

Norwegian special envoy Eric Solheim conveyed to Foreign Minister Lakshman Kadirgamar the latest rebel demands to re-start negotiations with the Colombo government.

Main among them is the proposal for an interim self-governing authority (ISGA) in the island's north and east under their control being the sole basis for any future negotiations. The rebels have rejected a Sri Lanka government request to hold talks within the country and insisted that Norway should continue to play the role of peace facilitator.

However, an official Presidential Secretariat statement issued this afternoon gave a completely different picture when it said that the rebels had attached no pre-conditions for peace talks to resume and that the LTTE is "fully prepared to talk to the government at a time convenient to the government".

The statement also said that the Norwegian brokers "remained optimistic " that talks could re-commence early, though a formal statement issued by the Royal Norwegian embassy in Colombo the day before cautioned of any early resumption of negotiations.

The contradictions have taken diplomats and political observers by surprise here. The rebel demands, among others, are at variance with the position taken up by the Peoples Liberation Front (JVP), the constituent partner of the President Kumaratunga led Freedom Alliance. The JVP has held the ISGA proposal as a stepping-stone towards a separate state.

  • தொடங்கியவர்

முரணிகளின் கூட்டிலிருந்து சமாதானம் எப்படி வரும்...?

தேர்தல் முடிந்து ரணிலை சந்திரிகா வீழ்த்தி விட்டதால், இனி சந்திரிகாவின் பிரதான ஆடுகளத்தில் குறுக்கே நிற்பது சமாதானம்.சந்திரிகா ரணிலை வீழ்த்துவதற்கு பயன்படுத்திய ஆடுகள தந்திரங்களை சமாதானத்தின் மீது பிரயோகிக்கமுடியாது என்றொரு நிலையே இப்போது காணப்படுகின்றது.இந்த நிலையில் சந்திரிகா சமாதானத்தை அடியோடு வீழ்ந்த வேண்டும் அல்லது சமாதானத்தின் ஆட்டத்தைத் தொடர வேண்டும்.

சந்திரிகாவின் முன் இந்த இரண்டு தெரிவுகள்தான் உண்டு.

ஆனால் சந்திரிகாவால் சமாதான ஆட்டத்தை அடியோடு வீழ்ந்தமுடியாது என்ற நிலையே காணப்படுவதால் அவரால் சமாதானத்தின் ஆட்டத்தை தொடர வேண்டிய நிலையே காணப்படுகின்றது.

இப்போது இலங்கையின் பொருளாதாரயதார்த்தத்தில் சந்திரிகாவின் நிறைவேற்று அதிகாரமோ, நாடாளுமன்ற பலமோ சந்திரிகா நினைப்பதை நிறை வேற்றப்போதுமானதாக இல்லை.

இதனால் சந்திரிகா நினைப்பதையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்போகும் மசோதாக்களையும் செயற்பட வைக்கும். செயன்திறன் என்பது இலங்கைக்கு வெளியில் தான் இருக்கிறது.

இது ஜம்பது வருடங்களுக்கு மேல் அரச இயந்திரத்தை இயங்கி வந்தவர்கள் என்ற வகையில் ஜக்கிய தேசிய கட்சிக்கும் தெரியும். சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் தெரியும். ஆனால் அரச இயந்திரத்தை நேரடியாக இயக்கிய அனுபவமற்றவர்கள் என்ற வகையில் சந்திரிகாவோடு கூட்டுச்சேர்ந்திருக்கும்

ஜே.வி.பி இதனை குறைத்து மதிப்பிட முயலலாம்.

இந்த பின்னணியில் அரசை இயக்கும் செயற்திறன் என்பது இலங்கைக்கு வெளியிலிருந்து இலங்கைக்குள் உதவி வழங்குவோர்களால் பாச்சப்படும் நிதியில்தான் தங்கியிருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டே சந்திரிகாவாக இருந்தாலும் சரிதான், ஜே.வி.பியாக இருந்தாலும் சரிதான் தீர்மானிக்க வேண்டிய கட்டாய நிர்ப்பந்தம் உண்டு.

இந்த வகையில் சந்திரிகாவுக்கு சமாதான ஆட்டத்தை தொடரவேண்டிய கட்டாய நிர்ப்பந்தமும் உண்டு.

இந்த வகையில் சந்திரிகாவுக்கு முன் இரண்டு கட்டாய நிர்ப்பந்தங்கள் உண்டு. இந்த இரண்டு நிர்ப்பந்தங்களும் ஒன்றுக்கொன்று இணைந்த தொடர்பைக் கொண்ட செயற்பாடுகளாகவே காணப்படுகிறது.

அதாவது சமாதான ஆட்டம் தொடரப்பட்டால் மாத்திரமே இலங்கைக்குள் நிதிபாச்சலுக்கான வாய்ப்பு உண்டு. மாறாக சமாதானம் வீழ்த்தப்படுமானால் நிதிப்பாய்ச்சல் வற்றிவிடும்.

இப்படி ஒரு நிலையை சந்திரிகா ஏற்படுத்துவாரானால் அவரால் ஒரு கட்டத்துக்குமேல் அசையமுடியாது. ஜே.வி.பி.யாலும் அசையமுடியாது.

ஆனால் இந்த யதார்த்தத்தை இதுவரை ஜே.வி.பி.யின் சார்பில் வெளியாகும் தகவல்களின் அடிப்படையில் புரிந்து கொண்டதாக தெரியவில்லை.இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியத சந்திரிகாவின் அரச இயந்திரம் அசைய வேண்டுமானால் இலங்கைக்குள் நிதிபாச்சப்படவேண்டும். நிதிபாச்சப்பட வேண்டுமானால் சமாதானம் தொடரப்படவேண்டும். சமாதானம் தொடரப்படவேண்டுமானால் புலிகளோடு மட்டுமே பேசியாக வேண்டும். புலிகளோடு

பேசவேண்டுமானால் புலிகள் முன்வைத்திருக்கும் இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கான திட்டவரைபிலிருந்தே பேசவேண்டும்.ஆனால் சந்திரிகா ஏற்படுத்தியிருக்கும் கூட்டுக்காரர்கள் முற்றிலும் இதற்கு முரணான முரணிகளாகவே உள்ளனர்.

அவ்வாறாயின் சமாதானத்தின் கதி என்னவாவது?

இதிலும் மேற்குறிப்பிட்டது போல ஒரு தொடர் சங்கிலியாக இருக்கும் இலங்கையின் எதிர்கால அசைவியக்கத்தின் காரணிகளில் புலிகளோடு மட்டுமே பேச வேண்டும் என்பதையும், புலிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கான திட்டவரைபின் அடிப்படையிலேயே பேசவேண்டும் என்பதை சந்திரிகாவோ,

சந்திரிகாவின் பின்புலத்தில் இருக்கக்கூடிய எந்த சக்திகளினாலும் புரந்தள்ள முடியாத ஒரு நிலைமையை புலிகள் இயக்கம் ஏற்படுத்தி வைத்திருக்கின்றது.அதாவது முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் ஜக்கியதேசிய முன்னணி அரசோடு புலிகள் இயக்கம் சமாதான பேச்சுக்களை தொடர்ந்தபோது இருந்ததுபோன்று இப்போது புலிகள் இயக்கம் இல்லை இப்போது இராணுவ ரீதியாகவும் அதேநேரம் சனநாயக ரீதியாகவும் முன்னிலும் பார்க்க அதிகமாகவே தன்னை நிரூபித்து நிற்கிறது.

அந்த வகையில் புலிகள் இயக்கம் பேச்சு மேசையிலும் சரி, சமாதான முன்நகரவு முயற்சியிலாயினும் சரி அதிக வலுவுடன் கூடிய சக்தியாகவே களத்தில் நிற்கிறது.

ஒட்டு மொத்தத்தில் புலிகள் இயக்கம் முன்னரிலும் பார்க்க பன்மடங்கு வீரியம் மிக்க மக்களின் இயங்கு சக்தியாக தன்தை நிரூபித்து அடுத்த கட்ட நகர்வை சந்திக்க தன்னை தயார் படுத்தவிட்டது.

இதன் ஒரு அங்கமே மட்டக்களப்பிலும், திருகோணமலையிலும் வயது குறைந்த போராளிகளை யுனிசெப் ஊடாக பெற்றோர்களிடம் ஒப்படைத்தமையும்,

கிளிநொச்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, மற்றும் சந்திரசேகரன், மனோகணேசன் ஆகியோரை தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் சந்தித்து பேசியுள்ளமையும் ஆகும்.

அந்த வகையில் அடுத்துவரும் எந்த நகர்வையும் சந்திப்பதற்கு ஏதுவாக புலிகள் இயக்கம் தனது நடவடிக்கைகளை செயல்களில் காட்டத் தொடங்கிவிட்டது.

இதேபோன்று இலங்கையின் வரலாற்றில் 1977இல் நடைபெற்ற தேர்தலையடுத்து அதிக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்தது போன்று தற்போது தெளிவான ஒரு ஆணையோடு அதிக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை புலிகள் இயக்கம் நாடாளுமன்றம் அனுப்பி வைத்திருக்கிறது. இந்த வகையில் புலிகளின் சமாதானத்தின் மீதான பற்றைவெளிப்படுத்தி சிங்கள தேசத்திற்கு தமிழ் தலைமை வழங்கும் ஒரு வரலாற்று

சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது.

ஆனால் இதனை சிங்களதேசம் புரிந்து கொண்டு சமாதானத்தின் பாதையில் தங்களை இணைக்கப்போகின்றார்களா என்பதில் தான் இலங்கையில் வாழும் மக்களின் எதிர்காலத்திற்கு நல்ல சகுனங்களை ஏற்படுத்த முடியும்.

ஆனால் சிங்;கள தேசத்தில் சிங்கள மக்கள் தமது பொருளாதார நலன்கள்கூட சமாதானத்தின் அசைவிலேயே தங்கியுள்ளது என்பதை சரியாக எடைபோட தவறியதன், அல்லது நிராகரித்ததன் பலனை அனுபவிக்கக கூடிய வகையிலேயே தென்னிலங்கை சந்திரிகா ஜே.வி.பி கூட்டும், நாடாளுமன்ற குழப்பமும் காட்சி தருகின்றது.

இதனால் சந்திரிகா தன்னையும் தனது கட்சியையும் ஜே.வி.பியிடம் இருந்து பாதுகாக்க போராடுவாரா? சிங்கள மக்களின் பொருளாதாரi நலனிற்காக போராடுவாரா? அமைதியான இலங்கைத்தீவை உருவாக்க போராடுவாரா?

இதில் சந்திரிகா தன்னையும், தனது கட்சியையும் பாதுகாக்கவே அதிகம் போராடுவர் என்ற நிலையே அதிகம காணப்படுகின்றது.

சிறி.இந்திரக்குமார் ஈழநாதம்.

  • தொடங்கியவர்

பாராளுமன்றம் வந்ததால் பஸ்ஸில் கூýட ஆசனமில்லை

பௌத்த பிக்குமார் தேர்தலில் போட்டிýயிட்டதை சில பௌத்த பீடங்கள் கண்டனம் செய்திருந்தன என்ற போதிலும் அவர்களைத் தேர்தல் களத்தில் இருந்து வெளியேற்ற எதையும் செய்ய முடிýயவில்லை. சிங்கள பொதுமக்கள் பிக்குமாரின் தேர்தல் களப் பிரவேசத்தை எதிர்க்கவில்லை. வாக்களித்து 9 பேரை பாராளுமன்றத்திற்குள்ளும் கொண்டு வந்திருக்கிறார்கள்.

பாராளுமன்றம் கடந்த ஏப்ரல் 22 இல் கூýடிý சபாநாயகரைத் தெரிவு செய்த போது, லொக்கு பண்டாரவுக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியுடனும் தமிழ்த் தேசியக் கூýட்டமைப்புடனும் சேர்ந்து ஜாதிக ஹெல உறுமயவின் இரு பிக்கு எம்.பி.மார் வாக்களித்ததையடுத்து, புலிகளின் பதிலுரிமையாளர்களாக சபைக்குள் வந்திருப்பவர்களுடன் சேர்ந்து விட்டதாக இந்தப் பிக்குமாருக்கு எதிராக ஜே.வி.பி.யினரும் அரசாங்க ஊடகங்களும் தாறுமாறான பிரசாரம்.

கடந்த மே தினத்தன்று கொழும்பில் ஜே.வி.பி.யினர் நடத்திய ஊர்வலத்தில் ஒரு ஊர்தியில் விழுந்து கிடக்கும் யானை மீது புலி ஏறியிருந்து கொண்டு சங்கு ஊதுகிறது. விளங்குகிறது தானே உங்களுக்கு விசயம்.

போதாதகுறைக்கு பிக்கு எம்.பி.மாரின் விகாரைகள் மீதும் இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியிருந்தார்கள். இப்படிýயெல்லாம் அவமானப்படுத்தப்படுவோமென்று பிக்கு எம்.பி.மார் உண்மையில் நினைத்திருக்கமாட்டார்கள்.

நேற்று எனக்கு திக்குவெல்லையில் இருந்து நண்பர் எம்.ஏ.சி.முஹம்மத் ஹாஜியார் ஒரு கடிýதம் எழுதியிருந்தார். பஸ்களில் மதகுருமாருக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள முன்வரிசை ஆசனங்களில் இப்போது தென்பகுதியில் பாமரமக்கள் துணிச்சலுடன் அமருகிறார்களாம். பிக்குமார் வந்து பஸ்ஸில் ஏறினாலும் அந்த ஆசனங்களை விட்டு எழுந்து இடம் கொடுக்கிறார்கள் இல்லையாம். முன்னரெல்லாம் பௌத்த பிக்குமாருக்கு அந்த ஆசனங்களைக் கொடுக்காமல் அமர்ந்திருக்கும் ஆட்களை ஒரு முறைப்பாகப் பார்த்து ஏசி எழுப்பி விடுவது தான் சிங்களப் பயணிகளின் வழமை. இப்போது அவர்களே ஆசனங்களைக் கொடுக்கிறார்கள் இல்லையாம்.

கடந்த வாரத்தில் இருந்து தான் இந்தக் காட்சிகளைக் காணக்கூýடிýயதாக இருக்கிறதாம். கடந்த மாதம் 26 ஆம் திகதி அம்பலாங்கொடையில் இருந்து அம்பாறை சென்ற தனியார் கடுகதி பஸ்ஸொன்று மாத்தறை தபாலகத்துக்கு முன்பாக வந்து நின்றது. கூýட்டத்துடன் கூýட்டமாக சனங்களுடன் இடிýபட்டுக் கொண்டு ஒரு பௌத்த பிக்குவும் ஏறினார் அந்த பஸ்ஸில்.

முன் ஆசனத்தில் இரு பெண்களும் ஒரு பையனும் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு அருகே அந்தப் பௌத்த பிக்கு போய் நின்று கொண்டார். பெண்களும் பையனும் எழும்பி அவருக்கு இடம் கொடுப்பதாக இல்லை. பஸ் நடத்துனர் வந்து பிக்குவுக்கு ஆசனத்தைக் கொடுக்குமாறு கேட்டார். அந்த மூýவரும் முடிýயாது என்று கூýறியதுடன் புலிகளைக் கட்டிýயணைப்போருக்கு ஆசனங்களைக் கொடுப்பதா என்று கேள்வியும் கேட்டனர் அந்தப் பெண்கள்.

பஸ் தொடர்ந்து ஓடிýயது. திக்குவல்லையில் ஒரு பெண்மணி இறங்கிக் கொண்டதும் 'அணே தெய்யனே" என்று கூýறிக் கொண்டு முன் ஆசனத்தில் அமர்ந்தார் அந்தப் பிக்கு. அதுவரைக்கும் அவர் பாமரப் பயணிகளுடன் நின்று கொண்டுதான் பயணம் செய்தாராம். இதை எல்லாம் எழுதியதால் கடிýதத்தில் முஹம்மத் ஹாஜியார் என்னிடம் சுகத்தைக் கூýட விசாரித்து ஒருவரில்லை.

எப்படிý இருக்கிறது நிலைமை பார்த்தீர்களா?

பாராளுமன்ற ஆசனத்தில் கண்வைத்து கடைசியில் பஸ்ஸில் இருந்த ஆசனத்தையும் பறிகொடுக்கும் நிலை வந்துவிட்டதோவென்று நினைக்கத் தோன்றுகிறது.

பட்டுவேட்டிýக்கு ஆசைப்பட்டு கட்டிýயிருந்த கோவணத்தையும் களவு கொடுத்த கதைதானோ?

தினக்குரல்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

Norwegian peace negotiator makes unexpected visit to meet Sri Lanka 's Tamil Tiger rebels

Associated Press, Thu May 13, 2004 01:48 EDT . SHIMALI SENANAYAKE - Associated Press Writer - COLOMBO, Sri Lanka - (AP) A senior Norwegian peace negotiator flew Thursday to northern Sri Lanka - for unscheduled talks with leaders of the Tamil Tiger rebels in the latest attempt to salvage the country's fragile peace process, officials said. Norway has played a pivotal role in Sri Lanka - 's peace efforts and brokered a cease-fire between the government and the Tigers two years ago that halted their 19-year civil war. But the Tigers walked out of subsequent peace talks, demanding greater autonomy in the country's north and east. Nearly 65,000 people were killed before the truce.

Meanwhile, senior Japanese envoy Yasushi Akashi is scheduled to arrive in Sri Lanka - on Saturday for five days of talks with government and rebel officials on the peace process, the Japanese Embassy said.

  • தொடங்கியவர்

Tamil rebels say they have reached agreement with government to restart stalled peace talks

Associated Press, Thu May 13, 2004 06:08 EDT . SHIMALI SENANAYAKE - Associated Press Writer - COLOMBO, Sri Lanka - (AP) Tamil rebels said Thursday they have reached an agreement with the government to restart peace talks that have been stalled for a year. ``The LTT (Tamil Tigers) and the government of Sri Lanka - would reach a decision in a day or two on the time and place for restarting the peace talks,'' top rebel negotiator Anton Balasingham was quoted as saying by the pro-rebel TamilNet Web site.

``Norway would make an announcement about the consensus reached by the two parties in one or two days,'' he added.

A top rebel official contacted by The Associated Press, speaking on condition of anonymity, confirmed Balasingham's comments.

Senior government officials declined to confirm whether a deal had been struck. They said President Chandrika Kumaratunga would issue a statement Friday.

On Wednesday, government leaders said they expect to begin preliminary talks with the rebels by August. Government media minister Reginold Cooray said the talks would be aimed at making arrangement for peace negotiations, rather than discussions on the peace process.

Balasingham said Kumaratunga was showing keen interest to resume negotiations.

``The preliminary efforts and arrangements to restart the negotiations are very satisfactory,'' Balasingham was quoted as saying.

He added that talks would not take place this month.

  • தொடங்கியவர்

Secretary of State Powell was in Sri Lanka as a young Army Officer

Bandula Jayasekara in Colombo, WT 1.05 P.M Thursday 13 May. By Bandula Jayasekara Washington DC - United States Secretary of State, General Collin Powell who will met with Sri Lankan Foreign Minister, Lakshman Kadragamar yesterday is no stranger to Sri Lanka. He visited the island in 1983, not as a General or a diplomat but as a young Lt. Colonel. Powell visited Sri Lanka along with US Secretary of Defence, Casper Weinberger in 1983 when. Weinberger called on President J.R.Jayawardane at the Presidents House in Colombo. Since then General Powell had not forgotten about the island of Sri Lanka and the large banyan tree at the Presidential garden. On several occasions the General had mentioned about the majestic banyan tree first to Foreign Minister Lakshman Kadiragamar when they met in 2001, May at the State Department. Subsequently the minister had gifted Powell with a photograph of the Banyan Tree. It also said that Secretary Powells deputy, Richard Armitage too had visited Sri Lanka with Weinberger.

Foreign Minister Kadiragamar who has an excellent rapport with the US Secretary of State described the US Secretary of State as a warm hearted and an understanding human being. They met at the State Department yesterday and had a warm and cordial discussion on US/Sri Lanka relations.

  • தொடங்கியவர்

'Breakthrough' in Sri Lanka talks

Sri Lanka's Tamil Tiger rebels say they have reached an agreement to revive stalled talks with the government.

The negotiations would be the first since the rebels walked out of talks a year ago, demanding more autonomy in the north and east.

The announcement came after the Norwegian deputy foreign minister travelled to the rebel-held town of Kilinochchi on Thursday.

The government said earlier that talks would start before the end of July.

The BBC's Frances Harrison in Colombo says that the negotiations will be extremely difficult and a settlement to the island's conflict is still a long way off.

'Big gulf'

Our correspondent says that it looks as if the new government has had to make concessions to the rebels that it bitterly criticised when in opposition.

She says the fact that the Tigers say they have agreed on most of the main issues relating to the resumption of talks is something of an achievement, because it looked as if there was a big gulf between the two sides.

The government said it wanted to hold the negotiations in Sri Lanka, as well as discuss an interim power-sharing arrangement and a final peace settlement.

The Tigers want any meeting to be held abroad, and have rejected the government's agenda.

Tigers spokesman Anton Balasingham says a precise date has not yet been set.

"There are practical problems to be sorted out when and where to hold the talks," said Anton Balasingham, chief negotiator for the rebels.

"The Norwegian government will make an official announcement regarding the basic agreements we have reached regarding the resumption of talks."

The agreement came after the Norwegian Deputy Foreign Minister, Vidar Helgesen, travelled to Kilinochchi for talks with the Tigers after meeting government ministers on Wednesday.

Government spokesman Reginold Cooray said negotiations with the Tigers would initially be "talks about talks".

"The president is keen to solve the matter through dialogue," he said.

Earlier this week the Sri Lankan Prime Minister, Mahinda Rajapakse, told the BBC that peace talks will resume before the end of July.

Mr Rajapakse told the BBC Sinhala service that the opposition United National Party had agreed to support the negotiations.

Norway successfully brokered a ceasefire between the rebels and government forces in February 2002 which is still in place.

Diplomats say the foreign minister's visit underscores Norway's commitment to the peace process, and its continuing efforts to bring an end to fighting that has claimed 60,000 lives.

http://news.bbc.co.uk

  • தொடங்கியவர்

ஜனாதிபதிக்கும் தமிழீழ தேசியத் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு தற்போது அவசியமில்லை -புலிகள்

சிறிலங்கா ஜனாதிபதிக்கும், தமிழீழ தேசியத் தலைவருக்கும் இடையிலான சந்திப்பொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியான செய்திகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக மறுத்துள்ளனர்.

நோர்வே தரப்பின் ஊடாக தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்காவை லண்டனில் சந்திக்கவுள்ளதாக "டெய்லி மிரர்" ஆங்கில நாளேடு உட்பட கொழும்பின் செய்தி ஸ்தாபனங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.

இச்செய்தி குறித்து எமது அமைப்பும் உறுப்பினர்களும் ஆச்சரியம் அடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்;டர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சந்திப்பொன்றில் அவசியம் இருப்பதாக விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் கருதவில்லை எனத் தெரிவித்த அவர் சமாதானப் பேச்சுவார்த்தை குறித்து எமது நிலைப்பாட்டை ஏற்கனவே அரசுக்கு அறிவித்துவிட்டோம். அந்த நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என அவர் கருத்துரைத்துள்ளார்.

தற்போதைய சமாதான முயற்சிகளுக்கு சாதகமான பதில் கிடைக்காமல் உலகம் சுற்றி எவரையும் சந்திப்பதில் தமிழீழு விடுதலைப் புலிகள் ஆர்வம் கொள்ளவில்லை எனவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்டர் விளக்கியுள்ளார்.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.