Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழ வரைபடம் தெரியக்கூடாது : தேன்கூடு படத்துக்கு கட் கொடுத்த சென்ஸார்? F

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

’தேன்கூடு’ இது ஒரு ஈழத்தமிழருக்கான திரைப்படம் என்கிற அந்தஸ்துடன் வெளிவர இருக்கும் இந்தப் படத்தை இகோர் டைரக்‌ஷன் செய்திருக்கிறார்.

’கலாபக் காதலன்’ என்ற படத்தை இயக்கிய இவர் அதைத் தொடர்ந்து கமர்ஷியலாக ஒரு படம் பண்ணலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் ஈழத்தின் போர் பற்றிய எண்ணங்கள் மனதில் அழுத்தவே அது சம்பந்தமாகவே ஒரு படம் பண்ண வேண்டும் என்ற எண்ணத்துடன் தேன்கூடு படத்தை டைரக்ட் செய்திருக்கிறார்.

சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் பங்ஷனில் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கலந்து கொண்டு வாழ்த்தினார். இப்போது இந்த ’தேன்கூடு’ படத்தின் டிரைலருக்குத்தான் ஏழு இடத்தில் கட் கொடுத்திருக்கிறார்கள் சென்சார் போர்டு மெம்பர்ஸ்.

குறிப்பாக படத்தில் ஈழத்தின் வரைபடமே இடம் பெறக் கூடாது என்று சொல்லிவிட்டார்களாம். இதுபோல இன்னும் ஆறு இடங்களைச் சுட்டிக் காட்டி அவற்றையெல்லாம் தூக்கச் சொல்லியிருக்கிறார்கள். முக்கியமாக டிரைலரில் ஈழம் தொடர்பான வசனங்களுக்கும் கட் கொடுத்திருந்திருக்கிறார்கள். இப்படியாக ரெண்டு நிமிஷம் ஓடக்கூடிய ட்ரெய்லரில் ஏழு கட் கொடுத்திருக்கிறதாம் சென்சார் போர்டு.

மொத்தத்தில் சென்சார் போர்டு என்ன காரணத்திற்காக உருவாக்கப்பட்டதோ அந்த வேலையை விட்டுவிட்டு அரசு என்ன சொல்கிறதோ அதை மட்டுமே செய்கிறது என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.

http://www.soundcameraaction.com/cinema-news/item/433-eelam-map-should-not-be-shown-cencor-orders-cuts-for-thenkoodu

  • கருத்துக்கள உறவுகள்
:(
  • கருத்துக்கள உறவுகள்

சென்சார் போட்டுக்கு காசி ஆனந்தன் ஐயா கொடுத்த சாட்டையடி..!

  • கருத்துக்கள உறவுகள்

தேன்கூடு.. பற்றி அண்ணன் சீமான்..!

மற்றும் பலரின் பேச்சுக்கள் இணைப்பில்..

http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=1801

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா தமிழச்சி தங்கபாண்டியனின் தேன்கூடு பற்றிய கருத்துப் பகிர்வு..!

[size=2]

563950_291496150954304_1849552829_n.jpg[/size]

[size=3]தமிழீழத்தின் திருகோணமலை தென்னமரவாடி கிராமத்தை இந்திய சிறீலங்காப்படையினரின் ஆக்கிரமிப்பு தொடர்பான முழுநீள திரைப்படமான தேன்கூடு திரைப்படத்தின் அறிமுக படவெளியீட்டு நிகழ்வில் உரையாற்றம் போது அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் திரைப்படத்தினை தமிழீழ விடுதலையினை உருவாக்குவதற்கு ஒரு மிகப்பெரும் கருவியாக பயன்படுத்தியவர்.தலைவர் அவ[/size]

[size=3]ர்கள் உலகில் சிறந்த விடுதலைப் போராட்டங்களையும் போராட்ட வீரர்களின் திரைப்படங்களையும் பாத்தார்.

அல்ஜீரியா விடுதலைப்பேராளியி அலிபற்றிய படத்தினை எனக்கு காட்டினார் அவன் ஒருபெரிய போராளி அந்த படத்தில் அவனது படையின் பெண்போராளி உடலில் வெடிகுண்டினை தாங்கி எதிரியின் முகாமினை தாக்கினார் அந்த படத்தினை பார்த்துத்தான் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் கரும்புலிகள் அணியினை உருவாக்கின்னார்.

கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ மக்கள் தங்களுக்கென்று திரைப்படம் எடுப்பதில்லை தமிழ் நாடு என்ன திரைப்படம் எடுக்கின்றதோ அதனை அவர்கள் பாத்திருக்கின்றார்கள்.இவ்வாறான ஆண்டுகளில் தங்களுடைய பணம் முழுவதையம் தமிழ் திரையுலகத்திற்கே தந்திருக்கின்றார்கள். தமிழ் திரையுலகத்துடன் ஒன்றியே அவர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள்.

அந்த ஈழத்தமிழ் மக்களுக்கு தமிழ்நாட்டு திரையுலகம் மிகப்பெரிய அளவில் கடமைப்பட்டிருக்கின்றார்கள். உரிமைப்பாடு என்று வருகின்றபோது அந்த கடமைப்பாட்டினை எல்லாம் தாண்டி கொந்தளித்து எழுந்து அந்த போராட்டத்துடன் ஒன்றித்து நிற்கின்றதை பார்க்கும் போது தமிழீழம் தமிழ்நாட்டிற்கு கடமைப்பட்டிருக்கின்றது.

இந்த தேன்கூடு படத்தில் தமிழீழத்தின் வடிவத்தினை காட்ட தணிக்க குழு தடைசெய்துள்ளதாக சொன்னார்கள் இவர்களுக்கு ஒன்று தெரியவேண்டும் ஒரே இலங்கைக்குள் தந்தை செல்வாக காலத்தில் போராடிய போது அது இரண்டு நாடுகள் என்று தமிழர்களுக்கு என்று தமிழீழ நாடு என்று ஒன்று உண்டு என்று தமிழீழ வரைபடத்தை முதல் முதல் வரைந்தவர் தமிழகத்தினை சேர்ந்த கி.பா.ஆதித்தனார் வரைந்தார்.

இவ்வாறு தமிழீழம் தமிழர்களுடையது தான் என்று சொன்னதை இந்தியாவின் முதல் ஆளுனராக இருந்த றாஜாயி அவர்கள் தெரிவித்தார் என்றும் உணர்ச்சிக்கவிஞர் காசியானந்தன் அவர்கள் இன்று சென்னை வடபழனியில் நடைபெற்ற தேன்கூடு வெளியீட்டு நிகழ்வில் கருத்துரை ஆற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.[/size]

தமிழீழ முகநூல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.