Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனே நிராகரித்த 13 ஐ கூட்டமைப்பு ஏன் கேட்கிறது?; இந்தியாவில் கோத்தபாய உதயனுக்கு கருத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனே நிராகரித்த 13 ஐ கூட்டமைப்பு ஏன் கேட்கிறது?; இந்தியாவில் கோத்தபாய உதயனுக்கு கருத்து

13ஆவது திருத்தத்தை பிரபாகரனே நிராகரித்திருந்தார், ஆனால் தமிழ்க் கூட்டமைப்பு இதனை தூக்கிப் பிடித்துக்கொண்டு ஏன் ஆடுகிறது என்பது மட்டும் தனக்குத் தெரியவில்லை என்று பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ கடும் சீற்றத்துடன் தெரிவித்தார்.

உத்தியோக பூர்வமாக இந்தியாவுக்குச் சென்றுள்ள பாதுகாப்புச் செயலர் அங்கிருந்து "உதயனு'க்கு குறுகிய செவ்வியொன்றை வழங்கியுள்ளார்.

அந்தச் செவ்வியின் விவரம் வருமாறு:

கேள்வி: இந்தியாவுக்கான உங்கள் பயணத்தின் போது 13 ஆவது அரசமைப்புத் திருத்தம் பற்றி ஏதாவது பேசப்பட்டதா?

கோத்தபாய: இல்லை. அப்படி எதுவுமே பேசப்படவில்லை.

கேள்வி: 13 ஆவது திருத்தம் பற்றி இந்தியா உங்களிடம் கருத்துகளை கேட்டறியவுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்தனவே?

கோத்தபாய: நான் ஓர் அரச அதிகாரி. அவர்கள் என்னிடம் எப்படி அரசியல் பேசுவார்கள்? பரஸ்பர பாதுகாப்பு விடயங்கள் பற்றி நாங்கள் வழமையாகச் சந்தித்துப் பேசுவோம். அதுபோலதான் இம்முறைச் சந்திப்பும் நடந்தது.

கேள்வி: 13 ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பில் நீங்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்ததால், உங்களிடம் அவர்கள் இது பற்றி பேசுவார்கள் என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது. நீங்கள் உங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றீர்களா?

கோத்தபாய: நிச்சயமாக. 13ஆவது திருத்தம் தொடர்பிலான எனது கருத்து நான் உறுதியாகத்தான் இருக்கின்றேன். 13 ஆவது திருத்தமானது பிரபாகரனின் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத்தானே கொண்டுவரப்பட்டது. ஆனால், பிரபாகரனே அதனை நிராகரித்திருந்தார். அன்று பிரபாகரன் இருந்தபோது பேச வக்கில்லாமல், துணிச்சலில்லாமல் இருந்த தமிழ்க் கூட்டமைப்பு இப்போது 13ஆவது திருத்தத்துக்கு குரல் கொடுப்பதும், கூக்குரலிடுவதும் தான் வேடிக்கையாக இருக்கிறது.

கேள்வி: அப்படியானால், 13ஆவது திருத்தம் பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது என்கிறீர்களா?

பதில்: நிச்சயமாக. நிர்வாக ரீதியாக சில பிரச்சினைகளுக்கு இது சரியாக இருக்கலாம். ஆனால், யதார்த்தமான, நடைமுறைக்குச் சாத்தியமான தீர்வை இந்தத் திருத்தம் ஒருபோதும் வழங்கப்போவதில்லை.

கேள்வி: வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். அங்கு இராணுவ முகாம்கள் அகற்றப்பட்ட வேண்டும் என்று தமிழ்க் கூட்டமைப்பு, இந்தியாவிடம் சுட்டிக்காட்டியிருந்நது. உங்களது இந்தப் பயணத்தின் போது இதுதொடர்பில் இந்தியா ஏதாவது அழுத்தங்கள் இருந்ததா?

கோத்தபாய: அப்படியான எந்த அழுத்தங்களையும் இந்தியா வழங்கவில்லை. அப்படி வழங்கவேண்டிய தேவையும் இந்தியாவுக்குக் கிடையாது. தமிழ்க் கூட்டமைப்பு பிரச்சினைகளை உருவாக்குகிறது. நாட்டின் வடக்கிலானாலும், தெற்கிலானாலும் பாதுகாப்புக்காக படைமுகாம்கள் இருக்க வேண்டும். பாதுகாப்பு என்று வந்துவிட்டால் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்று பார்க்க முடியாது.

இந்தியாவின் முக்கிய படைத்தளங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றனவே. எவராவது, தமிழ்நாட்டிலிருந்து அவை அகற்றப்படவேண்டும் என்கிறார்களா? தமிழ்க் கூட்டமைப்பு புலிகளைவிட மோசமாகச் செயற்படுகின்றது. எவரின் அழுத்தங்களுக்கும் பணிந்து நாம் நாட்டின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கமாட்டோம்.

இப்போது 13ஆவது திருத்தம் பற்றி கூட்டமைப்பு கூக்குரலிடுகிறது. வடக்கு, கிழக்கில் படைமுகாம்கள் அகற்றப்பட வேண்டும் என்று 13ஆவது திருத்தத்தில் கூறப்பட்டுள்ளதா? தமிழ்க் கூட்டமைப்பு தனது வேடத்தைக் கலைத்து நேர்மையாகச் செயற்பட முன்வர வேண்டும் என்றார்.

ஸ்கரெ ஒன் எமைல் ஸ்கரெ ஒன் ப்ரின்ட்

28 அக்டோபர் 2012, ஞாயிறு 8:15 மு.ப

http://www.onlineuthayan.com/News_More.php?id=853341556828566502

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் சொன்னார் இந்திய - இலங்கை ஒப்பந்தம் எழுதப்பட்ட போதே சொன்னார்.. அது ஒரு சாபக்கேடு அது தீர்வல்ல என்று. கடைசியில.. வார்த்தையளவில் என்றாலும் இணைந்திருந்த வடக்குக் கிழக்கு துண்டாடப்பட்டது. அதனை சாதித்தது இந்திய - இலங்கை ஒப்பந்தம். பிரபாகரன் சொன்னது நடந்து முடிஞ்சுது.

13ம் சரத்துக்குள் எதுவுமே உருப்படியாக இல்லை. அதன் மூலம் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை என்றார். அதுபோலவே அது கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலால் எதனையும் தமிழ் மக்களுக்கு வழங்கல்ல..! இனியும் வழங்கப் போறதில்லை. சரத்தாக் கூட அதன் தேவையே இப்ப சிங்களவனுக்கு இல்லை.

ஆக பிரபாகரன் சொன்னது எல்லாமே யதார்த்தத்தில் நிகழ்ந்துவிட்டுள்ளது.

அப்ப ஏன் பிரபாகரனை எல்லாரும் தூற்றினம்.. தீவிரவாதின்னு சொல்லினம்.. பயங்கரவாதின்னு சொல்லினம்.. உலக அறிவற்றவர் என்றினம்.. வரலாற்று தவறுவிட்ட ஒரு முட்டாள் என்றீனம். அவரோட..போர் செய்யினம்.. அவரைக் கொன்று விட்டம் என்று மக்களைக் கொன்று.. வெடி கொழுத்தினம்..ஏன் இதெல்லாம்.. அவர் சரியாத்தானே சொல்லி இருக்கிறார்.. செயற்பட்டிருக்கிறார்...????!

13வது திருத்தச் சட்டமூலம் அல்ல சிங்களவன் எதையுமே எனி எமக்குத் தர வேண்டிய கட்டாயத்தில் இல்லை. அந்தக் கட்டாயத்தை நாமே காட்டிக் கொடுப்புக்களாலும் சேர்த்து நிர்மூலமாக்கி விட்டோம்..!

நேற்று ஒருவர் அறிக்கை விட்டார்... பிரபாகரன் அழிக்கப்பட்டதால்.. கிழக்கில் இளைஞர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று. அதற்காக கடவுளைக் கும்பிடுறதை விட மகிந்தவை கும்பிடலாம் என்று. இன்று அவர் சொல்கிறார்.. 13வது போனால் மீண்டும் குண்டு வெடிக்குமாம்.. அதுவும் மகிந்தவின் ஆலோசகர் ஸ்தானத்தில் இருந்து கொண்டு. கோத்தா அந்தக் கோடரிக்காம்புகளுக்கும் ஒரு வழி பண்ணினால் என்ன..???! பிரபாகரனைக் காட்டிக் கொடுத்திட்டு தப்பின மாதிரி சிங்களவனைக் காட்டிக் கொடுத்திட்டு அவ்வளவு இலகுவா தப்ப ஏலாது..பிள்ளையான்..!!! :lol::)

Edited by nedukkalapoovan

பிள்ளையான் மட்டுமல்ல சில சிங்கள பா.உ.களும் எதிர்க்கிறார்கள். நாடகம் போடும் இயக்குனர் கதாநாகனையும், வில்லனையும் வைத்துத்தான் போடுவார். இருவருமே இயக்குனர் சொலவதைத்தான் செய்கிறார்கள்.

இதை ஏன் என்று கேட்டால் இதற்கு பல இடங்களில் நல்ல உபயோகம் இருக்கிறது.

உ+ம். கூட்டமைப்பு தெரிவுக்குழுவிற்கு போகத்தக்க சந்தர்பங்கள் குறைவாக இருக்கலாம். இதை கூட்டமைப்பு செய்து முடித்துதாயின் அதை செய்ய உதவியவர்கள் வெளிநாட்டாரே. இவர்களுக்கோ அல்லது கூட்டமைபிற்கோ இதற்கு ஒரு பாடம் புகட்டவேண்டிய தேவை இலங்கைக்கு வரலாம்.

வெளிநாட்டார் மெனிக் பாமில் தடுத்து வைக்கப்படிருந்த அகதிகளிடம் குறைகளை கேட்டறிந்து, இலங்கையை தமது சொற்படி அவர்களை மீளக்குடேற்றும் படி வற்புறுத்தினார்கள். அரசு இதில் சம்பந்தப்பட்டவர்கள் இருவருக்கும் பாடம் படிபிக்க, எப்படி ஒரு காலில் மாங்காய்கள் அடிப்பது என்பதை கண்டு பிடித்து நடைமுறைபடுத்தியது.

அது போலவே 13ம் திருத்தத்தை, தெரிவுக்குழுவினூடாக, ஆதரவும், எதிர்ப்பும் கலந்த ஒரு நாடகத்தை ஆடி நீக்கிவிட்டு, இது கூட்டமைப்பு அங்கே இல்லாததால் அது வந்தது என்று மகிந்த அறிக்கைவிடுவார். 13ம் திருத்தம் திருதுவது பற்றிய அரசின் உண்மையான முகம், மார்ச் ஐ.நா கூட்டத்தின் பின் தான் தெரியும். அதன் பின் கட்டாயமாக அது நீக்கப்படும். அல்லது அது தமிழருக்கு மிக தீங்கிழைக்கப்பட கூடிய வகையில் மாகாணங்கள் பிரிக்கப்படும். இல்லையேல் இரண்டும் கலந்தும் செய்யப்படும்.

அதாவது அரசு எந்த பக்கம் போகும் என்பதை எதிர்வு கூற எந்த பாண்டியத்தியமும் தேவை இல்லை. அதே நேரம் குறிப்பாக இதைத்தான் செய்யும் என்று சொல்வதில் ஒரு கருத்தும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் முக்கிய படைத்தளங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றனவே. எவராவது, தமிழ்நாட்டிலிருந்து அவை அகற்றப்படவேண்டும் என்கிறார்களா? தமிழ்க் கூட்டமைப்பு புலிகளைவிட மோசமாகச் செயற்படுகின்றது. எவரின் அழுத்தங்களுக்கும் பணிந்து நாம் நாட்டின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கமாட்டோம்.

தமிழ் நாட்டு மக்களை அங்கிருக்கும் இராணுவம் வதைக்காத வரை அம்மக்கள் வெளியேறு என்று சொல்ல மாட்டார்கள்.தியத்தலாவையில் உள்ள இராணுவம் சிங்கள மக்களை ஒன்றும் செய்யாதவரை சிங்கள மக்கள் தியத்தலாவை இராணுவ முகாம் அகற்றப்பட வேண்டியதில்லை.ஆனால் பலாலி இராணுவ முகாம் தமிழ் மக்களின் நிலத்தை பறித்து பாதுகாப்பு வலயமாக்கி மக்களை விரட்டி அடித்து பல வருடங்கள் ஆகிறது. புலிகளுடனான போர் முடிந்தே 3 வருடங்களுக்கு மேலாகிறது. இன்னும் ஏன் அம்மக்களை மீள் குடியேற்றவில்லை என்பதை 4ம் வகுப்பு மாணவனுக்கே விளங்கும் போது கோத்தபாய நடிப்பது விளங்குகிறது.உதயனும் ஆமா போட்டு விட்டு வரவேண்டியது தான்.

13 ஆவது திருத்தமானது பிரபாகரனின் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத்தானே கொண்டுவரப்பட்டது. ஆனால், பிரபாகரனே அதனை நிராகரித்திருந்தார். அன்று பிரபாகரன் இருந்தபோது பேச வக்கில்லாமல், துணிச்சலில்லாமல் இருந்த தமிழ்க் கூட்டமைப்பு இப்போது 13ஆவது திருத்தத்துக்கு குரல் கொடுப்பதும், கூக்குரலிடுவதும் தான் வேடிக்கையாக இருக்கிறது.

பிரபாகரன் நிராகரித்தது உப்பு சப்பில்லாத 13 ஆவது திருத்த சட்டம் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வையும் தராது என்பதையும் "தமிழ் ஈழம்" தான் ஒரே தீர்வு என்பதிலும் உறுதியாக இருந்தார்.இந்தியாவும் இப்படியான தீர்வு தமிழரை திருப்திப்படுத்த ஒரு பம்மாத்துக்கு உருவாக்கியது தான் இந்த 13 ஆவது திருத்தச்சட்டம்.ஒரு மாநிலத்தில் உள்ள நீரை மற்றைய மாநிலத்துக்கு கொடுக்க முடியாத சட்டங்களை கொண்ட மிகவும் நகைச்சுவையான உலகம் சிரிக்கும் சட்டங்களை கொண்ட நாடு எப்படியான சட்டங்களை எமக்கு தரும் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.

பாராளுமன்றத்துக்கு வர வேண்டுமெனில் தமிழீழ கொள்கையை விட வேண்டும் என்ற இனவாத சிங்கள அரசின் வற்புறுத்தலை ஏற்ற சம்பந்தர் இன்று 13 ஆவது திருத்த சட்டத்தை வைத்து கரகமாடுவதை தவிர வேறு தெரிவு அவருக்கு இல்லை.அத்தோடு தானும் ஏதோ தமிழ் மக்களுக்காக போராடுகிறார் என காட்டினால் தானே வரும் தேர்த்தல்களில் மக்கள் வாக்களிப்பார்கள்.

  • 4 weeks later...

kehrll600.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.