Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் பாரிய விளைவுகள் ஏற்படும் - சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் பாரிய விளைவுகள் ஏற்படும் - சம்பந்தன்

ஒன்பது மாகாண அலகுகள் அவசியமற்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மூன்று அல்லது நான்கு மாகாண அலகுகளின் ஊடாக நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் பாரிய விளைவுகள் ஏற்படக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் வரவு செலவுத் திட்ட உரையின் போது ஜனாதிபதி நல்லிணக்கம் தொடர்பில் பேசியதாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி எதனை நல்லிணக்கமாக கருதுகின்றார் என்பதனை புரிந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் மக்களிடம் எவ்வாறு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் பாரிய விளைவுகள் ஏற்படும் - சம்பந்தன்

15-11-2012 14:30

13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் பாரிய விளைவுகள் ஏற்படக் கூடுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் நாட்டில் பழுது பார்க்க முடியாதளவு பாதக நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பல்வகைமையை ஓரளவிற்கேனும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அரசியல் சாசனத்தில் காணப்படும் ஒரே விடயமாக 13ம் திருத்தச் சட்டத்தை நோக்குவதாகத் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என அவா சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகள் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வழிகோலாது என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/85456/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]தமிழ் ஈழத்திற்காக போராடியவர்கள் இன்று 13வது திருத்தத்திற்கு போராடுவதற்கு அணி வகுக்கிறார்கள். சிங்களம் அழகாக அரசியல் செய்கின்றது [/size]

Edited by Vily

[size=5]ஐக்கிய இலங்கைக்குள் நிரந்தர தீர்வுகாண அரசுக்கு ஆதரவு வழங்க தயார்[/size]

[size=3]

[size=4]* தமிழர் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்பட்டால் எந்த நாடும் தலையிடுவதை விரும்பமாட்டோம்[/size][/size][size=3]

[size=4]* 13வது திருத்தத்தை அமுல்படுத்துவது அவசியம்[/size][/size]

[size=1]

[size=4]லோரன்ஸ் செல்வநாயகம், மகேஸ்வரன் பிரசாத்[/size][/size]

[size=3]

[size=4]ஐக்கிய இலங்கைக்குள் நியாயமானதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான தீர்வொன்றைக் காண்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்குப் பூரண ஆதரவை வழங்கத் தயாரென ஆர். சம்பந்தன் எம். பி. நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.[/size][/size]

[size=3]

[size=4]இனப் பிரச்சினைக்குத் தீர்வு தொடர்பான அரசாங்கத்தின் செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக அமைய வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட சம்பந்தன் எம்.பி; தமிழர்கள் எந்த இனத்துக்கோ சமூகத்துக்கோ எவ்விதத்திலும் பங்கம் விளைவிப்பவர்களல்ல என்பதையும் வலியுறுத்திக் கூறினார்.[/size][/size]

[size=3]

[size=4]வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான ஐந்தாவது நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்; வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிவாரணம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.[/size][/size]

[size=3]

[size=4]தமிழ் மக்களின் நம்பிக்கையை வெல்லவதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் கிடைத்த சந்தர்ப்பத்தை அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மத, இன ஒற்றுமை மக்கள் மத்தியில் ஏற்பட்டிருப்பதாக ஜனாதிபதி தனது உரையில் கூறியிருந்தார். இதனை மேலும் பலப்படுத்துதாயின் அரசாங்கம் உறுதியளித்த பல்வேறு விடயங்களை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையானது சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், பறங்கியர் உட்பட அனைவருக்கும் உரித்தான நாடு.[/size][/size]

[size=3]

[size=4]தமிழர்களாகிய நாம் எமது நாட்டுக்கோ அல்லது ஏனைய இன மக்களுக்கோ பங்கம் ஏற்படுத்த மாட்டோம். அனைவரும் எமது சகோதர, சகோதரிகள். அவர்களுடன் நட்புடன் வாழவே விரும்புகின்றோம். தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அவ்வாறு எமது அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட்டால் எமது உள்நாட்டு விவகாரத்தில் வேறு எந்த நாடும் தலையிடுவதை நாம் விரும்பமாட்டோம்.[/size][/size]

[size=3]

[size=4]ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல நாட்டுத் தலைவர்களும், அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசியுள்ளனர். அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 13வது திருத்தச்சட்ட மூலத்தில் மாற்றம் செய்வதற்கோ அல்லது அதனை நீக்குவதற்கோ நடவடிக்கை எடுத்தால் அது 13வது திருத்தச்சட்ட மூலத்தினால் ஏற்படக் கூடிய நன்மையை இல்லாமல் செய்துவிடும். எனவே, 13வது திருத்தச்சட்ட மூலத்தை அமுல்படுத்தி அதனை மேலும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பது அவசியம்.[/size][/size]

http://www.thinakaran.lk/2012/11/16/?fn=n1211163

இந்த அறிக்கை பிச்சை எடுபதைப் போலுள்ளது..

பொறுத்த நேரத்தில் தனது பிச்சைக்காரப் புத்தியைக் காட்டுவது சம்பந்தனின் வாடிக்கையாகி விட்டது. இதை அவரது நெருங்கிய சகாக்களான இந்தியப் பிச்சைக்கார அரசியல்வாதிகளிடமிருந்து கற்றிருப்பார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.