Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வந்தால் இந்தியா மீண்டும் ஆதரிக்கும்

Featured Replies

[size=2]

[size=5]இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வந்தால் இந்தியா மீண்டும் ஆதரிக்கும்: நாராயணசாமி[/size][/size]

[size=2]

[size=4]இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வந்தால் இந்தியா அதனை மீண்டும் ஆதரிக்கும் என சென்னை விமான நிலையத்தில் இன்று (16.11.2012) செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.[/size][/size]

[size=2]

[size=4]http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=86209[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

நிலையற்ற கொள்கைகள்.. இந்தக் காங்கிரஸ் அரசு பாரத மாதாவின் மானத்தை முழுமையாக கப்பலில் ஏற்றி முடித்துவிடுவார்கள்..!

Edited by இசைக்கலைஞன்

  • தொடங்கியவர்

[size=4] இந்தியாவின் அணுகுமுறையில் ஒரு நிலையான மாற்றம் தேவை. [/size]

[size=4]பல்டிகள் அடிப்பதை தமிழர்களை ஏமாற்றுவதை நிறுத்த [/size]அனைத்து தமிழக கட்சிகளும் ஒற்றுமையாக மத்திய அரசிற்கு அழுத்தம் தர வேண்டும்.

[size=4]இந்தியாவின் அணுகுமுறையில் ஒரு நிலையான மாற்றம் தேவை. [/size]

[size=4]பல்டிகள் அடிப்பதை தமிழர்களை ஏமாற்றுவதை நிறுத்த [/size]அனைத்து தமிழக கட்சிகளும் ஒற்றுமையாக மத்திய அரசிற்கு அழுத்தம் தர வேண்டும்.

பல்டி அடிப்பதே அவர்களின் கொள்கையோ தெரியாது..

யாருக்காவது வாட இந்தியர்கள் அல்லது எங்கள் இஸ்லாமிய ஆருயிர் உறவுகளுடன் பயகியவர்கட்குத் தெரியும்............

Edited by Sooravali

  • தொடங்கியவர்

[size=3][size=5]இலங்கையில் உள்ள அமெரிக்கக் குழு அதிகாரி தமிழர் தலைவரை சந்தித்தார்[/size][/size]

[size=3]1-1.jpg[/size]

[size=3][size=4]தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களை இன்று (16.11.2012) காலை 10.30 மணிக்கு, பெரியார் திடலில், ஸ்ரீலங்கா, மாலத்தீவு ஆகியவைகளின் அமெரிக்க அரசு குழுவின் ஆலோசகர் மைக்கேல் ஹோனிங்ஸ்டெயின் அவர்கள் சந்தித்து, இலங்கைத் தமிழர் பிரச்சினைபற்றி சுமார் 45 நிமிடங்கள் விவாதித்து, தமிழ்நாட்டின் நிலைப்பாடு முதலியவைகளைப் பற்றி விரிவாகக் கேட்டதோடு கலந்துரையாடிச் சென்றார்.[/size][/size]

[size=3][size=4]அவருடன் சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரக அரசியல் பொருளாதாரத் துறை அதிகாரி மேத்யூ பே, அலுவலக அரசியல் வல்லுநர் பிஃனிஜேக்கப் ஆகியோர் வந்து கலந்து கொண்டு விடை பெற்றுச் சென்றனர்.[/size][/size]

http://www.viduthalai.in/e-paper/48651.html

Edited by akootha

22ம் திகதி காங்கிரஸ் தனது சரித்திரத்தில் பல ஆண்டுகளாக காணத அமளிதுமளிகளை பாராளுமன்றத்தில் காணலாம். இந்த சரிவு காங்கிரசின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கூறுபவர்களுக்கு சவலாக அமையலாம். தி.மு.க நிலைமை எற்கனவே சந்தேகத்திற்கிடமாகிய தொன்று. கருணாநிதி தி.மு.காவின் கடைசி வெடியை டெசொ என்ற பெயரில் கொழுத்தி பார்க்கிறார்.

இதனால் தமிழ் நாட்டில் கங்கிரசின் திருவிளையாட்கள் அதன், நிச்சயமற்ற நம்பத்தகாத தன்மையை வெளிக்காடுகிறது .

1. மன்மோகன்சிங் தண்ட, பேத, சாம முயற்சிகள் தோற்றபின் ஜெயலலிதாவை அணைக்க கருநாடகத்திலிருந்து அம்மையாருக்கு தண்ணீர்த் தானம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

2.தமிழ்நாட்டார் வெறுக்கும் காங்கிரசை கை கழுவி, ஸ்ரலினுக்கு முதல் அமைச்சர் பதவியை கொடுக்க கருணாநிதி கனிமொழி மீது இறும் சுருக்கு கயிற்றை இழக்கமுயலாமல் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கு. ஸ்ரலினுக்கு முதல் அமைச்சரா? கனிமொழிக்கு விடுதலையா. "It is your pick" என்கிறது காங்கிரஸ்.

3. தமிழ் நாட்டு மக்களுக்கு டெசொ மட்டும் இனி மேலைய காலங்களில் போதுமா? அவர்கள் ஒற்றை புத்தியில் ஈழத்தமிழரை விடுவிக்க என்று முட்டி மோதுகிறார்களா? அலது தங்களை தாங்கள் உணரத்தலைபட்டிருப்பத்தால் தங்கள் கடமை என்ன என்பதை ஆராயத்தலைப் பட்டிருக்கிறார்களா? நாராணசாமி கொடுக்கும் இந்த கரட்டை நம்பி கருணாநிதி தமிழ் நாட்டில் தொடர்ந்து டெசொ அரசியல் நடததான் போகிறாரா?

கருணாநிதி தமிழக அரசியலை 1950- 1960 கலில் இருந்த சினிமா கொட்டகை அரசியல் என்றுதான் இன்னமும் கணக்கு போடுகிறார். வைகோ போன்ற தமிழுக்கும், நாட்டுக்கும் உபயோகமானவர்கள் மேலே வர முடியுமோ இல்லையோ, இன்று தமிழ் நாட்டு அரசியல் அண்ணகாலம் மாதிரி ஒரு திசையில் பயணிப்பது அல்ல. கருணாநிதி சினிமா துறையை கையுக்குள் அடக்கியும் மக்கள் எழுச்சியை கடந்த தேரதலில் அடக்க முடியவில்லை.

வறுமை கோட்டுக்கு கீழே எவ்வளவு தாழ் நிலயில் இருந்தாலும், காந்தியம் என்ற குளிர் அருவிக் கங்கையில், அந்த வெற்றும் பச்சை தண்ணீருக்காக குளித்தவர்கள்தான் அன்றய தமிழ் நாட்டார். இன்று அங்கே தேனும் பாலும் ஓடவில்லை. ஆனால் படிப்பறிவு மேலுக்கு வந்துவிட்டது. மக்கள் கொதி நிலையில் இருக்கிறார்கள். இது கிந்தியர்களிடம் கடன் வாங்கிகொண்டுவரும் கங்கை, காவிரி நீர்களால் இன்மேல் குளிர்விக்க முடியாது. அண்ணா காந்திய கிந்தியா என்று ஒருதிசையில் இருந்த மானிலத்திற்கு தமிழ் திராவிட நாடு என்று இன்னொரு திசையும் போட்டு எழுச்சி ஏற்படுத்தினார்.

ஆனால் இன்று அவர் வந்தாலும் மானிலத்தின் கொதியை தணிக்க ஒரு தனி முறையை கண்டு பிடிப்பது கஸ்டம். அதற்கு பல திசைகள் கொடுக்கப்பட்டுவிட்டன. தமிழ் ஆர்வம், சினிமா(கலை) ஆர்வம், பொருளாதார ஆர்வம், ஜனநாயக சுதந்திர ஆர்வம், அறிவுக்கு ஆர்வம், முன்னேறும் மற்றைய மானிலங்களைப்பார்த்து போட்டி பொருளாதாரதிற்கு ஆர்வம், உலகத்தமிழர் தலைமைத்துவத்துக்கு ஆர்வம்.......... அண்ணாத்துரை காந்தியத்தில் ஊறிக்கிடந்த மாநிலத்தை சினிமாவை வைத்து இலகுவாக சுண்டி வெளியே எடுத்த கதை இனி நடக்காது. (இது பெரியாருக்கு முடியவில்லை.)

எந்த அடிப்படையும் இல்லாத ஜெயலலிதா எதையும் செய்யாமல் இந்த முறை பதவிக்கு வந்தார் என்பது விளங்கினால், தன் மீதுள்ள வெறுப்புதான் தான் தோற்க காரணம் என்பது கருணாநிதியிற்கு விளங்கும். (அங்கு நடக்கும் தமிழ்-திராவிட போட்டியையே கருணாநிதியிற்கு விளங்க முடியல்லை.) தமிழ்நாடு மக்களின் அபிலாசைகள் மேற்கு நாட்டு வாழ்கைகளுக்கு அடித்தளமான பல அச்சு பரிமாணங்களுக்கு போக தலைப்பட்டிருக்கிறது என்பதை விளங்கினாரானால் மக்களின் கருத்துகளை அறிந்து தி.மு.கவை காப்பாற்றலாம். இல்லையேல் கனிமொழியை சிறைக்குள் தள்ளி, ஸ்ரலினை முதல் அமைச்சராக்குவது, நிலைக்கப்போவதில்லாத ஒன்றுக்கு போய் அரசனையும் விட்டு புருசனையும் விட்ட கதையாகப் போகிறது.

கிந்திய தேசம் இன்று வரையில், குடும்ப ஆட்சியில்தான் ஆழ்ந்து போய்க்கிடக்கிறது. இந்த நிலைக்கு தமிழ் நாடு அரசியல் கிட்டவும் போகவில்லை. தமிழ் நாட்டையும் இந்த கிந்திய அரசியல் முறைக்குள் ஆழ்தலாமா என்ற விசப்பரீட்சையில் கருணாநிதி இறங்கியிருக்கிறார். இதற்கு மத்திய அரசி சோனியாவின் முதன் மந்திரியாகிய மன்மோகன் சிங், அரசியின் ஆணைப்படி, "உதவமுடியும்" என்று தூது அனுப்புகிறார் கருணாநிதியிற்கு.

கருணாநிதி இந்த டொசொ என்ற ஏமாற்றுக்கு காங்கிரசிடம் இருந்து நாராயணசாமியூடக வரும் உதவியை சட்டை செய்யாமல் தமிழ் மக்களின் பன்முகத்தேவைகளை அறிந்து அரசியலை கொண்டு சென்றாரானால், அடுத்த தேர்தலில் கங்கிரஸ் தோற்கும் போது, அவர் ஈழத்தமிழர்களுக்கும் உதவி தமிழ் நாட்டு தமிழர்களுக்கும் ஒரு நல்ல மானில அரசை கொண்டுவர முடியும். இல்லாமல், மூக்குக்கு மேலே வெள்ளம் போனபின் சூரிய நமஸ்காரம் செய்யும் காங்கிரசின் மாயையில் எடுபட்டால் இவர் எல்லோரையும் நடுத்தண்ணீரில் மூழ்கவிட்டு தன்னையும் முடித்து கொள்வார். அதை உணர்ந்து பிள்ளைகளுக்காக தி.மு.வை சிதைக்காமல் இனி அதை கட்டி எழுப்பட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.