Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

”மகிந்தவின் ஆட்சியை வீழ்த்தப் போகும் பெண்” – கொழும்பு ஆங்கில ஆய்வாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

MR-upset.jpg

[size=4]சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பலமுனைகளில் சக்திவாய்ந்த பெண்கள் பலரின் சவால்களை எதிர்கொண்டுள்ளதாகவும், இதனால் அவர் கடினமானதொரு நேரத்தை எதிர்கொள்ளவுள்ளதாகவும், கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றின் அரசியல் ஆய்வாளரான உபுல் ஜோசப் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக ஒபாமா மீண்டும் தெரிவாகியுள்ளது குறித்து அவர் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில், சிறிலங்காவுக்கு இது ஏமாற்றமளிக்கும் முடிவு என்று குறிப்பிட்டுள்ளார்.

“அதிபர் தேர்தலில் ஒபாமா தோல்வியடைவார் என்றும், அவரது நிர்வாகத்தில் சிறிலங்கா தொடர்பான அமெரிக்க கொள்கையை வகுப்பதில் முக்கிய பங்கு வகித்தவரான, ஒபாமாவின் சிறப்பு உதவியாளரும், தேசிய பாதுகாப்பு சபையின் பல்தேசிய விவகாரங்களுக்கான மூத்த பணிப்பாளருமான சமந்தா பவர் அடுத்த நிர்வாகத்தில் தூக்கியெறியப்படுவார் என்று சிறிலங்கா அரசாங்கம் பெரிதும் நம்பியிருந்தது.

ஆனால் அது நடக்கவில்லை.

இப்போது ஒபாமா நிர்வாகத்துக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து சிறிலங்கா அரசுக்கு கிடைப்பவை கெட்ட செய்திகளாகவே உள்ளன.

தற்போது ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவராக உள்ள சுசன் ரைஸ், அமெரிக்க இராஜாங்கச் செயலராகவும், சமந்தா பவர் ஐ.நாவுக்கான தூதுவராகவும் நியமிக்கப்பட பெரிதும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இது நடைமுறைக்கு வந்தால், அடுத்து வரும் ஆண்டுகளில் சிறிலங்கா உண்மையிலேயே மிகவும் கடுமையான நேரத்தை எதிர்கொள்ளும்.

சிறிலங்கா தொடர்பான அமெரிக்க கொள்கையை தற்போது கையாளும் இவர்கள் இருவரும் இன்னும் அதிக அதிகாரம் கொண்ட பதவிகளுக்கு வருவது திருப்பத்தை ஏற்படுத்தும்.

அது சிறிலங்காவுக்கு நல்லதல்ல.

அமெரிக்காவின் இந்த இரண்டு பலம்வாய்ந்த பெண்களுடன் மூன்றாவதாக ஐ.நாவில் உள்ள நவநீதம்பிள்ளையின் சவாலையும் சிறிலங்கா எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இவர்கள் மூவரும் சிறிலங்கா மீது கடும்போக்கை வெளிப்படுத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

அண்மையில் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ஒருவரிடம், அவருக்கு நெருக்கமான சோதிடர் ஒருவர், மகிந்த ராஜபக்சவின் ஆட்சி பெண் ஒருவரால் தான் வீழ்ச்சி காணும் என்று கூறியுள்ளார்.

சிறிலங்கா அதிபரின் ஜனநாயகத்துக்கு முரணான செயற்பாடுகளால் சுசன், ரைஸ், சமந்தா பவர், நவநீதம்பிள்ளை, சோனியா, இப்போது சிராணி பண்டாரநாயக்க என்று பெண்களின் பகையை சம்பாதித்துள்ளார்.

சோதிடம் அறிவியல்பூர்வமான உண்மையாக ஏற்றுக் கொள்ளப்படாது போனாலும், மகிந்த ராஜபக்ச சக்திவாய்ந்த பெண்களின் சவால்களை பலமுனைகளில் எதிர்கொண்டுள்ளதால் அவர் இறுக்கமான நேரத்தை எதிர்கொள்ளவுள்ளார்” என்று உபுல் ஜோசப் பெர்னான்டோ குறிப்பிட்டுள்ளார்.[/size]

[size=4]http://www.puthinapp...?20121120107313[/size]

http://www.tamilsagainstgenocide.org/

இந்த அமைப்பிற்கு இன்னும் உதவவேண்டும்.

இவையளுக்கு காசு கொடுக்கலாம். ஆனால் பத்து டாலர் குடுத்துபோட்டு ஐயோ மூண்டு வேலை செய்த காசு என்று ஒப்பாரி வைக்கும் திட்டம் இருந்தால் குடுக்கவேண்டாம்.

காசை வாங்கி அந்த அமைப்பிற்கு உதவினால் தருகின்றோம் ,அதை உங்கட தோட்டத்திற்குள் போட்டால் கேள்வி கேட்போம் .

[size=4]சமந்தா பொக்ஸ் + சூசன் ரைஸ் - இவர்கள் மகிந்தாவிற்கு சாவாலாக இருக்ககூடும். முதலில் மகிந்த சிராணி பண்டாரநாயக்கவை சமாளிக்கவேண்டும் :D[/size]

  • கருத்துக்கள உறவுகள்

காசை வாங்கி அந்த அமைப்பிற்கு உதவினால் தருகின்றோம் ,அதை உங்கட தோட்டத்திற்குள் போட்டால் கேள்வி கேட்போம் .

இந்த மாதிரி அமைப்புகளுக்கு நேரடியாக அவர்களது இணையத்தளத்திற்குச் சென்று பணம் செலுத்தலாம். இதற்குள் விவசாயியின் வேலையை இழுத்துவிட்டதற்கு எனது கண்டனங்கள்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காசை வாங்கி அந்த அமைப்பிற்கு உதவினால் தருகின்றோம் ,அதை உங்கட தோட்டத்திற்குள் போட்டால் கேள்வி கேட்போம் .

நாலுபேர் பணம் கொடுத்து பார்க்கும் நிகழ்ச்சியினைக் கூட களவாய் போய் பார்க்கும், அதை கௌரவமாய் வேறு பீற்றும் இந்த வகையா கொடையாளனாம்?

கொடுப்பதைக் கூட கண்டு பொறுக்காத உள்ளங்கள் மண்ணின் பாரங்கள்!

காதை தாங்கோ நாடு பிடிச்சு தாறோம் என்ற கனவில் இருந்து இன்னும் மக்கள் விடுதலை ஆகவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதை தாங்கோ நாடு பிடிச்சு தாறோம் என்ற கனவில் இருந்து இன்னும் மக்கள் விடுதலை ஆகவில்லை.

துரோக மான்களுக்கு பின்னால் போன நிலையை விடவா?

நாலுபேர் பணம் கொடுத்து பார்க்கும் நிகழ்ச்சியினைக் கூட களவாய் போய் பார்க்கும், அதை கௌரவமாய் வேறு பீற்றும் இந்த வகையா கொடையாளனாம்?

கொடுப்பதைக் கூட கண்டு பொறுக்காத உள்ளங்கள் மண்ணின் பாரங்கள்!

முக்காடு போட்டு இணையத்தில் வந்து ஈகம் செய்யும் உங்கட ரகமில்லை நான் .

கொள்ளைகாரர்களிடம் பணத்தை பறிகொடுத்து ஏமாறும் பெக்கோவுமில்லை உங்களைப்போல.

காசை வாங்கி அந்த அமைப்பிற்கு உதவினால் தருகின்றோம் ,அதை உங்கட தோட்டத்திற்குள் போட்டால் கேள்வி கேட்போம் .

நீங்களே கொடுக்க வேண்டும். நீங்களே தட்டிக்கேட்க வேண்டும். இதை யார் எதிர்க்க முடியும்? தயவு செய்து தமிழ் மக்கள் தமது முழுப்பலத்தையும் இப்போது எதிரிக்கு மேல் பாவிக்கவிட்டு கொடுங்கள்.

மக்களின் பணங்களை பதுக்கியவர்கள் துரோகிகள். பதுக்கியவர்கள் மீது எடுக்க வேண்டியது சட்ட நடவடிக்கை. தமிழீழபோராட்த்திற்கு எதிரான பிரச்சாரம் அல்ல. உங்களுக்கு நடவடிக்கை எடுக்க முடியவில்லையானால் அதற்காக போராட்ட பாதையை மறைக்காதீர்கள். மக்கள் சில மில்லியன் தொலைந்ததை பற்றி இப்போ கவலைப்பட முடியாது. இலங்கையால் அழிக்கப்பட்டது பல பில்லியங்கள். தொடர்ந்து ஆக்கிரமிக்கபட்டுக்கொண்டிருக்கும் சொத்து பல பில்லியங்கள். அதை விட்டு விட்டு "புலிகளின் காசை சுருட்டிவர்களை நம்மால் சட்டப்படி ஒன்றும் செய்ய முடியவில்லை ஆகவே போராட்டத்தில் இறங்குவோர் எல்லோரும் திருடர்" என்ற அபிப்பிரயம் எழத்தக்காதாக பிரச்சரம் செய்யாதீர்கள். இதில் ஆர்வமுடன் பங்கு பற்றி முன்செல்வோர் பலரும் தம் பணத்தை இழந்திருக்கிறார்கள். அவர்கள் முட்டாள்கள் அல்ல. ஒரு குறிக்கோளுக்காகத்தான் அத பற்றி பேசாமல் போராட்டத்தை தொடர்கிறார்கள்.

இன்று கிட்டத்தட்டா எல்லா தமிழ் அமைப்புக்களும் போர் குற்ற விசாரணைக்கு குரல் கொடுக்கின்றன. ஆனால் ஐ.நா புலிகளும் போர் குற்றம் செய்தார்கள் என்கிறது. அதைக்கேட்டு யாரும் பின் செல்லவில்லை. இங்கே "புலிகள் குற்றம் செய்வில்லை, ஆகவே விசாரணைக்கு நாம் தயாரில்லை" என்று யாரும் சொல்லவில்லை. போர்க்குற்ற விசாரணை வந்தால் மட்டும் தான் நடந்தவற்றை தெளியவைக்க முடியும் என்பதுதான் இந்த நிலைப்பாடு.

இந்த நிலைப்பாட்டைத்தான் பணம் கொடுத்தோர் இப்போது எடுக்க வேண்டும். இப்படி ஒரு நிலமையில் தான் பணம் திருடியொரின் குற்றமும் இருக்கிறது. அவர்களை முழுமையாக விசாரிக்க புலம் பெயர் நாடுகளால் முடியாது. இது சுதந்திர தமிழ் ஈழத்தில், சாட்சிகள் சுயமாக முன் வந்து செய்து முடிக்கப் படவேண்டிய விசாரணை. இந்த விசாரணை வரவேண்டுமானால் தமிழ் ஈழத்தில் ஜனநாயகம் வரவேண்டும். இப்போது கூச்சல் போட்டு எதுவும் நடக்காது. சுதந்திரம் முதல் வேண்டும். அன்று பணம் கொடுத்தோரின் கோபத்தை திருடியோரால் அடக்க முடியாது. பணம் கொடுத்தோர் போர்குற்ற விசாரணை கேட்போரின் போன்றதொரு மனத்தெளிவை காட்ட முன் வரவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.