Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ராஜீவ் மரணத்துக்கு 15 நிமிடங்களுக்கு முன்...வேலுசாமி உடைக்கும் திகில்

Featured Replies

[size=1][size=4]ஆக்கம்: எம்.பரக்கத் அலி[/size][/size]

[size=4]'ராஜீவ் கொலைக்கு சுப்ரமணியன் சாமியும் சந்திரா சாமியும்தான் காரணம்’ என்று, அதிரவைக்கிறது திருச்சி வேலுசாமி எழுதிய, 'ராஜீவ் கொலை... தூக்குக் கயிற்றில் நிஜம்’ என்ற புத்தகம்.[/size]

[size=4]கடந்த 23-ம் தேதி நடந்த புத்தக வெளியிட்டு விழாவில், ஈழ ஆதரவுத் தலைவர்கள் அனைவரும் மேடையில் இருந்தனர். தலைமை வகித்த புலவர் புலமைப்பித்தன், ''இரண்டு லட்சம் ஈழத் தமிழர்களைக் கொன்ற கசாப்புக் கடைக்காரன்தான் மத்திய அரசு. இந்தக் கசாப்பு தேசத்தில் நான் இந்தியராக இருக்க மாட்டேன். ஒரு ராஜீவ் காந்தி மரணத்துக்கு இரண்டு லட்சம் உயிர்கள் பலியாகி இருக்​கின்றன. சுப்ரமணியன் சாமி, சந்திரா சாமிகளின் சதிக்கு நாம் இரையாகி விட்டோம். வீரத்தால் எழுந்தோம். துரோகத்தால் வீழ்ந்​தோம். இதற்காக நாம் கொடுத்த விலை அதிகம். அதைப் பெற்றே தீர வேண்டும். அதற்கு ஒரேதீர்வு தமிழ் ஈழம்தான்'' என்று தொடங்கி ​வைத்தார்.[/size]

[size=4]அடுத்துப்பேசிய பழ.நெடுமாறன், ''புலன் விசாரணை என்ற பெயரில் சி.பி.ஐ. இயக்குனர் கார்த்திகேயன் நடத்திய மோசடிகளை, விசாரணை அதிகாரி ரகோத்தமன் தோல் உரித்துக் காட்டி இருக்கிறார். காந்தி, இந்திரா கொலை வழக்கு விசாரணைகள் வெளிப்​படையாக நடந்தன. ஆனால், ராஜீவ் கொலை வழக்கை மூடுமந்திரம்​போல் நடத்தினர். நீதிபதி சித்திக்கின் நேர்மையைப் பார்த்துப் பயந்தார் கார்த்திகேயன். [/size]

[size=4]அதனால் சித்திக்குக்குப் பதவி உயர்வு கொடுத்து அனுப்பி விட்டு, அங்கே வேறு ஒரு நீதிபதியை அமர்த்தினர். சி.பி.ஐ.யின் குற்றப்பத்திரிகையே தீர்ப்பாக மாறியது. 26 பேருக்கும் தூக்குத்தண்டனை என்று நீதிமன்றம் அறிவித்தது. ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்ட ரங்கநாத்தும், 'ராஜீவ் கொலைக்கு சுப்ரமணியன் சாமியும் சந்திரா சாமியும்தான் காரணம்’ என்று சொன்னார். இதை வெளியே சொன்னால் உயிருடன் இருக்க முடியாது என்று சி.பி.ஐ. அவரை மிரட்டியது. திருச்சி வேலுசாமி தன் உயிரைப் பணயம் வைத்து, இதை ஆதாரமாகச் சொல்லி இருக்கிறார். 'ராஜீவ் கொலையில் மர்ம முடிச்சுகள் இருக்கின்றன. இதைப் புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும்’ என்று ஜெயின் கமிஷன் சொல்லி, விசாரணைக் குழுவும் அமைத்தது. அது, இன்னமும் முடியாத நிலையில் நான்கு பேரைத் தூக்கில் போட்டு விட்டால், உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? இந்தத் தள்ளாத வயதிலும் தன் மகனைக் காப்பதற்காகப் போராடிக்கொண்டு இருக்கிறார் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள்'' என்றவர் மேற்கொண்டு பேசமுடியாமல் கண்ணீர் சிந்தி முடித்தார்.[/size]

[size=4]நடிகர் ராஜ்கிரண் அடுத்து மைக் பிடித்தார். ''தர்ம நியாயங்களைச் சட்டம் புறம் தள்ளுகிறது. இதை ஜனநாயக நாடு என்று சொல்வது கேவலமாக இருக்கிறது. ஒரு மாபெரும் சக்தி நிச்சயம் உருவாகும். அதற்கு இந்தப் புத்தகம் ஓர் ஆரம்பப் புள்ளி'' என்றார்.[/size]

[size=4]இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், ''மத்திய அரசுக்கு கடிதம் எழுதும் வேலையைத்தான் ஆட்சியாளர்கள் செய்கிறார்கள். கோபாலபுரத்தில் இருந்த போஸ்ட் பாக்ஸ் இப்போது எதிர்ப் புறம் மாறி இருக்கிறது'' என்று பேச, ஏக கைதட்டல்கள்.[/size]

[size=4]ஏற்புரை நிகழ்த்திய வேலுசாமி, ''சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று சொன்னவர் திலகர். அந்த சுதந்திரப் போராட்டத்துக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் காங்கிரஸ். தன் நாட்டு சுதந்திரத்துக்காகப் போராடியவர் பிரபாகரன். அந்த வகையில் காங்கிரஸின் கொள்கையை செயல்படுத்தும் ஒரே ஒருவர் பிரபாகரன் மட்டும்தான். அதனால், அவரை ஆதரிக்கும் நான் மட்டும்தான் காங்கிரஸ்காரன். 'ரகோத்தமன் சொல்வது எல்லாம் பொய்’ என்று கார்த்திகேயன் இப்போது சொல்கிறார். இரண்டு பேரும் சண்டை போட்டு உண்மையை உலகுக்குச் சொல்லி வருகிறார்கள். மானத்தைக் காப்பதற்காக உயிர் நீத்த இயக்கம் தமிழ் இனம் மட்டுமே. ஆனால், பதவிக்காக காலில் விழக்கூடிய நம்மைப் பார்த்து உலகம் சிரிக்கிறது. 'அவர் வருவாரா?’ என்று கேட்கிறார்கள். இந்து மதத்தில் கடவுள் பல அவதாரங்கள் எடுப்பார். [/size]

[size=4]அதுபோலவே குறிக்கோளை அடையும் வரை அந்த அவதாரப் புருஷனுக்கு அழிவே இல்லை. அப்போது ஈழம் மலரும்'' என்றார்.[/size]

[size=4]இறுதியாக சீமான் பேச வந்தார். ''சுப்ரமணியன் சாமியும் சந்திரா சாமியும் வாய் திறக்​காமல் இருப்பதாலேயே, இந்தப் புத்தகத்தில் உள்ளவை சத்தியம் என்பது புரியும். ராஜீவ் மரணத்துக்கு 15 நிமிடங்களுக்கு முன், சுப்ரமணியன் சாமி​யிடம் வேலுசாமி போனில் தொடர்பு​ கொண்ட போது, 'ராஜீவ் செத்துட்டார்.. அதானே சொல்ல வர்றே..’ என்று தானாகவே முன்வந்து சாமி சொல்லி இருக்கிறார். இதுபோன்று ராஜீவ் கொலைக்குப் பின்னால் புதைந்து​ கிடக்​கும் விஷயங்களை எல்லாம் புலனாய்வுப் புத்தகமாக எழுதி இருக்​கும் வேலுசாமி ஒன் மேன் ஆர்மி. ராஜீவ் மரணம் நம் மீது சுமத்தப்பட்ட பழி. அதை நாம் தகர்க்க வேண்டும்'' என்று சீறினார்.[/size]

[size=4]பரபரப்பை விதைத்து விட்டார் வேலுசாமி. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்![/size]

[size=1][size=4]மூலம்: ஜூனியர் விகடன் - மார்கழி 2, 2012

பிரசுரித்த நாள்: Nov 28, 2012 19:23:38 GMT[/size][/size]

Edited by akootha

எனக்கு உடனடியாக இந்த புத்தகம் வேணும்.. எங்கு காசை அனுப்ப வேணும்?

  • தொடங்கியவர்

எனக்கு உடனடியாக இந்த புத்தகம் வேணும்.. எங்கு காசை அனுப்ப வேணும்?

[size=5]https://www.nhm.in/shop/home.php[/size]

  • தொடங்கியவர்

[size=4]

'ராஜீவ் கொலைக்கு சுப்ரமணியன் சாமியும் சந்திரா சாமியும்தான் காரணம்’ என்று சொன்னார். இதை வெளியே சொன்னால் உயிருடன் இருக்க முடியாது என்று சி.பி.ஐ. அவரை மிரட்டியது. திருச்சி வேலுசாமி தன் உயிரைப் பணயம் வைத்து, இதை ஆதாரமாகச் சொல்லி இருக்கிறார். 'ராஜீவ் கொலையில் மர்ம முடிச்சுகள் இருக்கின்றன. இதைப் புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும்’
[/size]

[size=4]இந்த முடிச்சு அவிழ்ந்தால் இந்திய மக்கள் எமது இனவழிப்பையும் அதற்கு எவ்வாறு இந்தியா துணை போனது என்பதையும் புரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும். [/size]

[size=1]

[size=4]அதுவே எமது சுதந்திரத்திற்கு இந்தியாவாலான தடையும் விலக வாய்ப்பை தரும்.[/size][/size]

எனக்கு உடனடியாக இந்த புத்தகம் வேணும்.. எங்கு காசை அனுப்ப வேணும்?

சிங்கள அரச பயங்கரவாதிகளிடம் கேட்டால் உடன் அனுப்பி வைப்பார்கள்!

காசு கொடுக்க வேண்டியதில்லை! காசு தருவார்கள்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு மக்கள் விடுதலை இயக்கமென உலகெங்கும் நிரூபிப்போம்: நடிகர் ராஜ்கிரண்

http://www.periyarthalam.com/2012/11/25/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.