Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பு சிறை உடைப்பு: எட்டு கைதிகள் தப்பியோட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள சிறையிலிருந்து எட்டு கைதிகள் இன்று காலை தப்பியோடியுள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கழமை காலை 7.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தப்பியோடிய கைதிகளின் விவரங்கள் முழுமையாக இதுவரை தெரியவில்லை. அவர்களில் ஏழு பேர் சிறைச்சாலை பாதுகாவலர்களை ஆயுதங்களால் மிரட்டி விட்டே தப்பிச்சென்றுள்ளனர் என்று தெரிவித்துள்ள பாதுகாப்புத்துறை வட்டாரங்கள்இ தப்பியோடியவர்களை தேடி மட்டக்களப்பு சந்துஇ பொந்துகள் எங்கும் வலை விரித்து தேடிவருகின்றன.

இவர்கள் அனைவரும் ஆயுதங்களுடன் கைதானவர்கள் என்றும் அவர்களில் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்ற சந்தேகிக்கத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தவர் என்றும் ஏனையவர்கள் துணை இராணுவக்குழுக்களைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது பாதாள உலகக்குழுக்களைச் சேர்ந்தவர்களாகவோ இருக்கலாம் சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தை அடுத்து சிறைச்சாலையை அண்மித்த கோவிந்தன் வீதிஇ நல்லையா வீதிஇ மத்தியூஸ் வீதி ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள் அனைத்தையும் சுற்றிவளைத்து சல்லடையிட்டு தேடுதல் நடத்தியுள்ளனர். சிறைச்சாலையினுள்ளும் பாரிய தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறைச்சாலை வட்டாரங்கள் உள்ளக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

நன்றி புதினம்

இது அரசாங்கத்தின் திட்டமிட்ட சதி ஓடினவையேல்லாம் துணை ஆயுதக்குழுக்காரராம்மெல்லோ?

  • கருத்துக்கள உறவுகள்

மட்டு. சிறையிலிருந்து

எட்டு கைதிகள் ஓட்டம்!

அதிகாலையில் அதிரடியாக

ஆயுதமுனையில் தப்பினர்!

மட்டக்களப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக் கைதிகளில் எட்டுப்பேர் நேற்று ஆயுதமுனையில் சிறைக் காவலர்களை அச்சுறுத்திவிட்டுத் தப்பி ஓடியிருக்கின்றனர்.

இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள இந்தச் சிறைச்சாலையிலிருந்து, ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்திவிட்டு நேற்று அதிகாலை வேளையில் இந்தக் கைதிகள் எண்மரும் தப்பி ஓடியிருக்கின்றமை பாதுகாப்புத் தரப்பில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைக் கைதிகள் காலைக்கடனைக் கழிப்பதற்காக தினமும் அதிகாலை 5.30 மணிமுதல் 6.30 மணிவரை அனுமதி வழங்கப்படுகிறது.

வழமைபோல் நேற்றைய தினமும் அதற்கெனக் கைதிகள் சிறைக் கூடங்களிலிருந்து திறந்து விடப்பட்டனர். நேற்றைய தினம் சிறைக்காவலர்கள் இருவர் கடமையில் இருந்தபோதும் அவர்கள் துப்பாக்கிகளை வைத்திருக்கவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய சிறைக்கைதிகள் எட்டுப் பேர் தங்களிடமிருந்த கைத்துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகளைக் காட்டி சிறைக்காவலர்களை அச்சுறுத்தி துப்பாக்கி முனையில் தப்பிச் சென்றனர்.

தப்பிச் சென்ற கைதிகள் குறித்து சிறைசசாலை அதிகாரிகள் உடனடியாகப் பொலிஸாருக்கு அறிவித்தனர். இதனையடுத்து சிறைச்சாலையை அண்மித்த கோவிந்தன் வீதி, நல்லையா வீதி, மத்தியூஸ் வீதி ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் பொலிஸாரும், இராணுவத்தினரும் சல்லடைத் தேடுதல்களை நடத்தினர். ஆனால், தப்பியோடியவர்களைக் கைதுசெய்ய முடியாமற்போனது.

ஐந்து சிறைக் கூடங்களில் இருந்த கைதிகளே தப்பிச் சென்றுள்ளனர். கைக்குண்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த இருவரும், வாகனக் கடத்தல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் ஐந்துபேரும், கொலைக் குற்றவாளியொருவருமே இவ்வாறு சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் தனி விசாரணைகளை நடத்தி வருகின்றனர். அதேபோல் மட்டக்களப்பு சிறைச்சாலை நிர்வாகமும் மற்றுமொரு விசாரணையை நடத்தி வருகிறது.

இதேவேளை, இது குறித்து தீவிர விசாரணைகளை நடத்துவதற்காக விசேட குழுவொன்றை அனுப்புவதற்கு சிறைச்சாலைகள் ஆணையாளர் தீர்மானித்துள்ளார்.

நேற்று தப்பிச் சென்ற கைதிகள் எட்டுப்பேரும் வெவ்வேறு சிறைக்கூடங்களில் இருந்த காரணத்தனால் இது ஏற்கனவே திட்டமிட்ட நடவடிக்கையாக இருக்கும் சாத்தியம் இல்லையென்று மட்டக்களப்பு சிறைச்சாலை வட்டாரங்கள் கூறின.

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள் நேற்று சிறைச்சாலைக்கு வந்து நிலைமைகளைப் பார்வையிட்டார்.

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.