Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்று பச்சிளம் குழந்தைகள் தாயால் கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று இளவயதுக் குழந்தைகளை அவர்களது தாயே நீரில் அமுக்கிக் கொலை செய்த சம்பவம் கியூபெக் மாகணத்தில் உள்ள டமன்ட்வில் நகரத்தில் இடம்பெற்றுள்ளது.

கணவரே பிள்ளைகளைப் பராமரிப்பதற்கான முழு உரிமையையும் கொண்டிருப்பதால் பிள்ளைகள் கணவருடன் வசித்து வருகின்றன. பிரிந்து வாழும் இந் தம்பதியில் மனைவி வார இறுதியில் பிள்ளைகளைப் பார்ப்பது வழக்கம்.

கடந்த வருடம் இப்பிள்ளைகளில் மூன்று வயதான பிள்ளை காலை ஏழு மணிக்கு வெறும் காற்சட்டையுடன் வீதியில் சென்றதைக் கண்ணுற்ற அயலவர்கள் வழங்கிய தகவலையடுத்து பிள்ளைகளின் பாதுகாப்பில் விசேட கவணம் செலுத்தப்பட்டது.

Quebec-2.jpg

கடந்த வருடம் நத்தார் பண்டிகை காலத்தில் அப்போது 14 மாதங்களேயான தனது கடைசிக்குழந்தையை பலாத்காரமாக கணவரிடமிருந்து எடுத்துச் சென்றதால் கைது செய்யப்பட்டு பின்னர் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

கணவனை விட்டுப் பிரிந்து வாழும் இந்தப் பெண் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஞாயிற்றுக்கிழமைகளில் தனது பிள்ளைகளை பார்ப்பதற்கு உரிமையளிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு குழந்தைகள் இவருடன் இருக்கும் போது இந்தப் பெண்ணின் தாயார் மேற்பார்வை செய்ய வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டே குழந்தைகள் விடப்படுவது வழமை.

இவ்வாறு இந்தமுறையும் குழந்தைகள் விடப்பட்ட போது தனது தாயார் வெளியே சென்றிருந்த சமயம் அவர் இந்தக் கொலைகளைச் செய்துள்ளதாகக் கருதப்படுகிறது. இது குறித்து இவரது முன்னைநாள் கணவர் தெரிவிக்கையில் தனது ஆயுட்காலம் முழுவதும் தனது குழந்தைகளின் நினைவு தன்னை வாட்டியெடுக்கும் எனத் தெரிவித்தார்.

Quebec-1.jpg

 

இக் கொலைகளின் பின்னர் மேற்படி பெண் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்றே கருதப்படுகிறது. ஆனால் இதுகுறித்து விபரங்கள் தெரியவரவில்லை. ஆனால் தள்ளுவண்டியில் இப்பிள்ளைகளின் தாயார் வைத்தியசாலைக்கு கூட்டிச் செல்லப்படுவதை அருகில் வசிப்போர் கண்ணுற்றுள்ளனர்.

http://www.canadamirror.com/canada/2623.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அழகான 3 பிள்ளைகளையும் கொல்ல எப்படித் தான் அந்தப் பெண்ணுக்கு மனசு வந்ததோ :o

கொலைக்கு ஒரு காரணம்மேற்குலக நாட்டு கலாச்சாரம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
கடவுளை யாரும் கண்ணால் கண்டதில்லை பலரும் தாயையே கடவுளாக பார்க்கின்றார்கள் ..... அப்படியான தாயினால் எப்படி இதனை செய்யமுடிந்தது ? 
 
இப்படியான முடிவுகளிற்கு போதைப்பொருள் பழக்கம் மன அழுத்தம் காரணமாக இருக்கலாம் ...... எது எப்படியோ மூன்று பிஞ்சுகளின் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளது 
 
இதற்க்கு காரணமான தாயாருக்க்கு கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும் கொடுக்கப்படும் தண்டனை மற்றவர்களுக்கும் பாடமாக அமையவேண்டும்.

இப்படிக்கொலைகள் முன்னரும் நடந்த,கடுமையான தண்டைனைகளும் விதிக்கப்பட்டன. 

 

ஆனால், தொடரவே செய்யும்.

 


காரணம், பிள்ளைகளை மேற்குலக பாடசாலை வளர்ப்பு தோல்விகளை எதிர்கொள்ள கற்பிப்பது இல்லை. பெற்றோர்களுக்கும் நேரம் இருப்பதில்லை.

விளைவு சில இடங்களில் இப்படித்தான் அமையும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படிக்கொலைகள் முன்னரும் நடந்த,கடுமையான தண்டைனைகளும் விதிக்கப்பட்டன. 

 

ஆனால், தொடரவே செய்யும்.

 

 

காரணம், பிள்ளைகளை மேற்குலக பாடசாலை வளர்ப்பு தோல்விகளை எதிர்கொள்ள கற்பிப்பது இல்லை. பெற்றோர்களுக்கும் நேரம் இருப்பதில்லை.

விளைவு சில இடங்களில் இப்படித்தான் அமையும்.

 

நீங்கள் கூறியதுடன் நேரம் இன்மை அவர்களிக்கிடையிலான அன்பு பரிமாற்றம் இல்லாமை பிறச்சூழலும் காரணமாக அமைகின்றது 

மேற்குலக கலாச்சாரத்தில் இரண்டு பெற்றோரும் வேலை செய்ய வேண்டிய தேவை.
கீழத்தேய கலாச்சாரத்தில் அனேகமாக ஒருவர் மட்டும் வேலை.

 

 

இதனால்,


மேற்குலக கலாச்சாரத்தில் மன உளைச்சல் மனத்தாக்கம் அதிகம்
கீழத்தேய கலாச்சாரத்தில் பிள்ளைகள் அதிகம் பாசம் வைக்கப்படுகின்றனர். 

 

அது,
 

மேற்குலக கலாச்சாரத்தில் கொலைகள் வரை செல்கின்றது.


கீழத்தேய கலாச்சாரத்தில் மேற்குகலக கலாச்சாரம் நுழைய ஆரம்பிக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

தாய் என்ற  சொல்  இவருக்கு பொருந்தாது.

          Quebec-1.jpg                                                                  குழந்தைகளை கடவுள் என்றும் ஆசிர்வதிப்பார்



brass4.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.