Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்கள் கருத்தென்ன..?

Featured Replies

யாழில் உள்ள ஒருசில உண்மையான தேடல் உள்ளவர்களோடு விவாதிக்கும் விருப்பதிலேயே நான் யாழ் வருகிறேன்.அத்தகைய உரையாடல்கள் அவற்றின் முரண்பாடுகள் விவாதங்களோடு நமது விடிவுக்கு வழிகாட்டும்.

நான் போர்க்காலத்திலும் வன்னியில் கேட்டுக்கொண்டதற்கிணங்க 1996 - 2006 காலக்கட்டத்தில் வருடா வருடம் பாதி நாட்க்கள் ஈழத்தில் - அனைத்து வடகிழக்கிலும் -  ஆய்வுகளிலும் விவாதங்கலிலும் கழித்திருக்கிறேன். ஜெயசுக்குறு தரணத்தில் என் உழைப்பு பாராட்டப்படது. 2006 கொலை ஆபத்து நிச்சயமான சூழலில் அதுவும் வன்னியும் முஸ்லிம்தோழர்களும் வலியுறுதிதிய நிலையில்தான் எனது வருடாந்த  ஈழ ஆய்வுப் பயணத்தைக் கைவிட்டேன். சும்மா இருந்துவிட்டு நான் பேசவில்லை. 

இன்னமும் இலங்கை செல்ல முடியவில்லை.

 

இந்த விவாதத்துக்கு “அரசியல் என்பது வழக்கறிஞ்ஞர்களின் தொழில் அல்ல, ஆனால் அது என்மாதிரி சென்னையில் படம் காட்டுபவர்களின் தொழில் மட்டும் தான் என்பதா கருத்து?” என்கிற கோணல் மனசின் வக்கிரம்  எந்த வகையில் பங்களிப்புச் செய்கிறது.? 

கோணல் இல்லாமல், தங்களை துணிச்சல் மிக்கவர்களாக காட்டி, கூச்ச நாச்சமில்லாமல், 1.நயீப் மயீத்துக்கு சம்பந்தர் அடிபணியவேண்டும், 2. கூட்டமைப்பு கிழக்கு தேர்தலில் பங்கு கொள்ளக்கூடாது, 3. கூட்டமைப்பு ஜெனீவாவில் அரசுக்கெதிராக பிரசாரம் செய்யக்கூடாது 4. பருதியின் கொலை பற்றி  பிரான்சு அரசு வெளிவிடும் தகவல்களை மறுக்க தேடல் நடத்தியமை போன்ற தமிழ்மக்களின் நன்மைகளுக்கு எதிராக  செயல்ப்படுவோரிடம் இருந்து அவர்கள் இப்படி செய்வதற்கு சின்னனாக தன்னும் ஒரு விளக்கம்  தரமுடியுமா என்று ஒரு அப்பாவித்தனமான கேள்வியை கேட்டு, அவர்களிடம் பதில் இல்லை என்பதை உணரவைத்து, அவர்களை தமது வழமையான "உயிராபத்து புராணத்தை" கூறவைப்பது தான் நான் அளிக்கும் பங்கு.

 

விதாண்டாவாதங்களுக்கு எனக்கு நேரமில்லை என்பதை யாழ் அன்பர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

அதுவே நமது நிலையும். நல்ல ஒரு காரணம் இருந்தால் அந்த கருத்தை வைக்கவும். புலிகளின் "வன்னி tape" கதை எழுத்தி "Lies Agreed Upon" படத்துக்கு வலுச்சேர்க்காமல், ஐ.நா வின் உள்விசாரணை, சிராணியின் தெரிவுக்கு குழு விசாரணை, UNHRCன் காலாவர்தணை விசாரணை போன்ற திரிகளில் கருத்து எழுத இன்னமும்  காலம் போகவில்லை என்பதால் அவற்றிலும் ஏதாவது எழுதி தங்களின் அரசியல் பாண்டியத்துவத்தை, உள்நோக்க நேர்மையை நிரூபிக்கவும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுவார்த்தைக்குப் போவதென்பது சும்மா போய்க் கைலாகு கொடுத்துப் பேசிவிட்டு வருவதற்கா?

 

முதலில் கூட்டமைப்பு தமது அரசியல் கொள்கைகளில் தெளிவை ஏற்படுத்தவேண்டும்.  வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்படி 1977 தேர்தலில் தமிழ்மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று பல பாராளுமன்றக் கதிரைகளைக் கைப்பற்றிய கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் (அந்தக் காலத்துக் கூட்டணியினர்) தற்போதும் தமிழீழக் கொள்கையை வைத்துள்ளனரா? இல்லை, தமிழர்களின் உள்ளக சுயநிர்ணய உரிமைகளை அடையும் வழிமுறைகளான சமஸ்டி, ஒருநாடு - இருதேசம் போன்றவற்றை ஆதரிக்கின்றனரா? அல்லது அதனிலும் கீழே வந்து 13+ மாகாண சபைகள் போதுமா? அல்லது பொலிஸ், காணி அதிகாரம் அற்ற வட-கிழக்கு இணைந்த மாகாணசபை போதுமா?

 

எதையும் தெளிவுபடுத்தாமல் நழுவல் போக்குகளையே தொடர்ந்து பேணுவது பானைக்குள் சோறு இல்லை என்றுதான் சொல்லுகின்றது. ஆனால் அவர்களை நம்பி வயிராற சோறு உண்ணலாம் என்ற கனவுகளில் இப்போதும் தமிழர்கள் உள்ளார்கள் என்பதும் உண்மையே!

 

சர்வதேச நாடுகள் தனிநாட்டுக் கொள்கையை ஆதரிக்கும் அமைப்புக்களை ஒதுக்கி, இலங்கை என்ற நாட்டுக்குள் தீர்வை எட்டச் சம்மதிக்கும் வகையில்தான் கூட்டமைப்புக்கு அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றது. ஆனால் கூட்டமைப்பு அதனை வெளியில் உடனடியாகச் சொல்லமுடியாமல் தமிழர்களை தனிநாடு சாத்தியமில்லை என்ற ரீதியில் மனம்மாற்றும் நடவடிக்கைகளை சர்வதேச நாடுகளினது, குறிப்பாக இந்தியாவினது, அனுசரணையுடன் மெதுவாக முன்னெடுக்கின்றது என்பது எனது அபிப்பிராயம்.

  • கருத்துக்கள உறவுகள்

கோணல் இல்லாமல், தங்களை துணிச்சல் மிக்கவர்களாக காட்டி, கூச்ச நாச்சமில்லாமல், 1.நயீப் மயீத்துக்கு சம்பந்தர் அடிபணியவேண்டும், 2. கூட்டமைப்பு கிழக்கு தேர்தலில் பங்கு கொள்ளக்கூடாது, 3. கூட்டமைப்பு ஜெனீவாவில் அரசுக்கெதிராக பிரசாரம் செய்யக்கூடாது 4. பருதியின் கொலை பற்றி  பிரான்சு அரசு வெளிவிடும் தகவல்களை மறுக்க தேடல் நடத்தியமை போன்ற தமிழ்மக்களின் நன்மைகளுக்கு எதிராக  செயல்ப்படுவோரிடம் இருந்து அவர்கள் இப்படி செய்வதற்கு சின்னனாக தன்னும் ஒரு விளக்கம்  தரமுடியுமா என்று ஒரு அப்பாவித்தனமான கேள்வியை கேட்டு, அவர்களிடம் பதில் இல்லை என்பதை உணரவைத்து, அவர்களை தமது வழமையான "உயிராபத்து புராணத்தை" கூறவைப்பது தான் நான் அளிக்கும் பங்கு. - மல்லையூரான்

 

மல்லையூரான் என்கருத்துக்கலைத் திரித்து கொஞ்சமும் தயக்கமில்லாமல் பொய்கூறுகிறார். யாழ் இணையத்தில் பின்னோக்கிச் சென்று எனது கருத்துக்களை வாசிப்பவர்கள் மல்லையூரான் பொய்யர் என்பதை உணர்ந்து கொள்வார்கள்.

 

அரசு சார்பு  தமிழர்களை எதிர்க்கும் அதேசமயம் அரசில் பங்குபற்ரிய தொண்டைமான், எசிஎஸ் ஹமீத் போன்ற முஸ்லிம் மலையக தலமைகளை அனுசரித்துப்போகும் தமிழர் தலமையின் அரசியல் பண்புபற்றி வ்ளக்கமாக எழுதியிருக்கிறேன். அதன்பின்னும் முஸ்லிம்விரோத தாக்குதல் தொடர்வது எதனால்?

 

கப்பல்வருமென்று பிழையாக வழிநடத்தி கடற்கரை வெளியை நோக்கி பின்வாங்க செய்து நமது போராட்டத்தை அழித்த அணியினருக்கும் எனக்குமிடையில் வன்னியில்  இடம்பெற்ற மோதல்கள் ஒன்றும் இரகசியமில்லை. என்னை அழித்துவிடும்படி சிலர் வெளியில் இருந்து அனுப்பிய சிடி இன்று அரசின் கையில் இருக்கிரதாகத் தெரிகிறது. அவர்கள்மீது எனக்கு கோபமில்லை.ஆனால் அவர்கள் இன்னமும் மனசு மாறவில்லைப்போலும்.

 

 

 

மல்லையூரான் போன்றவர்களை நான் வாழ்நாள் முழுவதும் எதிர்கொண்டிருக்கிறேன். மல்லையூரானின் கூற்றின்  நம்பகத்தன்மை பற்றி எனது முன்னைய எழுத்துக்களை யாழ் இணையம் மற்றும் யாழ் உறுப்பினர்கள் ஆராய்ந்து பார்க்கவேண்டும். இதுபற்றி யாழ் இணையமும் உறுப்பினர்கலும் பதில் சொல்லவேண்டும். அதுவரை என் குரலை வீணடிக்காமல் மவுனமாகக் காத்திருக்கவே விரும்புகிறேன். .

 

யாழ் இணையத்தின் மவுனம் சம்மதத்துக்கு அடையாளமா?

மல்லையூரானின் அவதூறுகள் குறித்த யாழ் உறுப்பினர்களின் மவுனம் மல்லையூரானின் கருத்துக்களுக்கான ஆதரவாகவே வாசகர்களால் கருதப் படுகிறது. யாழ் உறுப்பினர்கள் மட்டுமல்ல இத்திரியை ஆரம்பித்த சுபேஸ்கூட மவுனமாக இருக்கிறார். இத்தகைய சூழலில் யாழ் இணையத்தில் ஆரோக்கியமான விவாதங்களைத்  தொடர வாய்ப்பில்லை.

 

 

 

Edited by poet

கோணல் இல்லாமல், தங்களை துணிச்சல் மிக்கவர்களாக காட்டி, கூச்ச நாச்சமில்லாமல், 1.நயீப் மயீத்துக்கு சம்பந்தர் அடிபணியவேண்டும், 2. கூட்டமைப்பு கிழக்கு தேர்தலில் பங்கு கொள்ளக்கூடாது, 3. கூட்டமைப்பு ஜெனீவாவில் அரசுக்கெதிராக பிரசாரம் செய்யக்கூடாது 4. பருதியின் கொலை பற்றி  பிரான்சு அரசு வெளிவிடும் தகவல்களை மறுக்க தேடல் நடத்தியமை போன்ற தமிழ்மக்களின் நன்மைகளுக்கு எதிராக  செயல்ப்படுவோரிடம் இருந்து அவர்கள் இப்படி செய்வதற்கு சின்னனாக தன்னும் ஒரு விளக்கம்  தரமுடியுமா என்று ஒரு அப்பாவித்தனமான கேள்வியை கேட்டு, அவர்களிடம் பதில் இல்லை என்பதை உணரவைத்து, அவர்களை தமது வழமையான "உயிராபத்து புராணத்தை" கூறவைப்பது தான் நான் அளிக்கும் பங்கு. - மல்லையூரான்

 

மல்லையூரான் என்கருத்துக்கலைத் திரித்து கொஞ்சமும் தயக்கமில்லாமல் பொய்கூறுகிறார். யாழ் இணையத்தில் பின்னோக்கிச் சென்று எனது கருத்துக்களை வாசிப்பவர்கள் மல்லையூரான் பொய்யர் என்பதை உணர்ந்து கொள்வார்கள்.

 

அரசு சார்பு  தமிழர்களை எதிர்க்கும் அதேசமயம் அரசில் பங்குபற்ரிய தொண்டைமான், எசிஎஸ் ஹமீத் போன்ற முஸ்லிம் மலையக தலமைகளை அனுசரித்துப்போகும் தமிழர் தலமையின் அரசியல் பண்புபற்றி வ்ளக்கமாக எழுதியிருக்கிறேன். அதன்பின்னும் முஸ்லிம்விரோத தாக்குதல் தொடர்வது எதனால்?

 

கப்பல்வருமென்று பிழையாக வழிநடத்தி கடற்கரை வெளியை நோக்கி பின்வாங்க செய்து நமது போராட்டத்தை அழித்த அணியினருக்கும் எனக்குமிடையில் வன்னியில்  இடம்பெற்ற மோதல்கள் ஒன்றும் இரகசியமில்லை. என்னை அழித்துவிடும்படி சிலர் வெளியில் இருந்து அனுப்பிய சிடி இன்று அரசின் கையில் இருக்கிரதாகத் தெரிகிறது. அவர்கள்மீது எனக்கு கோபமில்லை.ஆனால் அவர்கள் இன்னமும் மனசு மாறவில்லைப்போலும்.

 

மல்லையூரான் போன்றவர்களை நான் வாழ்நாள் முழுவதும் எதிர்கொண்டிருக்கிறேன். மல்லையூரானின் கூற்றின்  நம்பகத்தன்மை பற்றி எனது முன்னைய எழுத்துக்களை யாழ் இணையம் மற்றும் யாழ் உறுப்பினர்கள் ஆராய்ந்து பார்க்கவேண்டும். இதுபற்றி யாழ் இணையமும் உறுப்பினர்கலும் பதில் சொல்லவேண்டும். அதுவரை என் குரலை வீணடிக்காமல் மவுனமாகக் காத்திருக்கவே விரும்புகிறேன். .

 

யாழ் இணையத்தின் மவுனம் சம்மதத்துக்கு அடையாளமா?

மல்லையூரானின் அவதூறுகள் குறித்த யாழ் உறுப்பினர்களின் மவுனம் மல்லையூரானின் கருத்துக்களுக்கான ஆதரவாகவே வாசகர்களால் கருதப் படுகிறது. யாழ் உறுப்பினர்கள் மட்டுமல்ல இத்திரியை ஆரம்பித்த சுபேஸ்கூட மவுனமாக இருக்கிறார். இத்தகைய சூழலில்

யாழ் இணையத்தில் ஆரோக்கியமான விவாதங்களைத்  தொடர வாய்ப்பில்லை.

 

 

 

தங்களின் மனத்தில் ஆரோக்கியம் என்ற சொல் வியாபாரம் என்ற கருத்தில் திணிக்கப்பட்டிருக்கிறது.  இவ்வளவு நாளும் தன்னுடன் சேர்ந்த  வியாபார கூட்டம் கை கொடுக்கும் என்று பார்த்தார் பொய்யட். ஆனால் அவர் சொல்லும் பொய்களுக்கு மற்றவர்கள் ஒருவருக்கும் கிட்டவுமில்லை. அதனால் ஒருவரும் ஒன்றும் எழுதவில்லை.

 

 தங்களிடம் நான் கேட்ட நான்கு கேள்விகளுக்கும் இது வரையில் பதில் வைக்கவில்லை. தொடர்ந்து கொலை மிரட்டல் கதை தான் வருகிறது. 

 

தொண்டைமான் என்ற குப்பையை பற்றி நான் இங்கே எதுவும் எழுத வேண்டியதில்லை. ஆனால் கக்கீம் அடுத்த தேர்தலில் நிற்க அவரிடம் ஒரு கட்சியும் இல்லை. எனவே அவர் இனி தேர்தலுக்கு வருவாரா தெரியாது. அவர் இனி அஸ்வர் மாதிரி மட்டும்தான். ஆனால் நான் கேட்ட கேள்வி அவர்கள் இருவரையும் பற்றியதல்ல. என்ன காரணத்திற்காக சம்பந்தர் நயீப் பிடம் அடிபணிய வேண்டும்? நயீப் மயித்துக்கு ஆதரவு தரவேண்டும் என்று கேட்போர் "எப்படி தாங்கள் அரசை ஆதரிக்கும் தமிழரை மட்டும்தான் எதிர்ப்போம்" என்று கூற முடியும்? கருணா, அங்கயன் போன்ற தமிழருக்கும் ஏன் சம்பந்தர் ஆதரவு தரகூடாது? இது மட்டுமே இவர்களின் தமிழ் எதிர்ப்பு குணங்களை காட்டவில்லையா?

 

யாரையும் துணைக்கு அழைக்க வேண்டாம். இது நான் வேறு யாரிடமும் கேட்கும் கேள்வியல்ல. கக்கீம், தொண்டாமனைப்பற்றி வேண்டாம். புலிகளை பற்றி வேண்டாம். என்னப்பற்றி வேண்டாம். தங்களின் மீதான கொலை முயற்சி பற்றி வேண்டாம். தங்களின் சுய தம்பட்டம் வேண்டாம்.  நேர்மையான பதிலை சொல்ல முடியுமா? சிங்களவர்களே எதிர்க்காத 13ம் திருத்ததை ஏன்  நயீப் மயீத் எதிர்த்தார்? ஏன் இவர் மு.காவை மிரட்டி திவி கும்ப சட்டத்திற்கு ஆதரவு வாங்கினார் என மு.கா தலைமைகள் குற்றம் சாட்டின? ஏன் இவர் இரண்டு வருடங்களின் பின் பதவி விலகி மு.கா வுக்கு முதல் அமைச்சர்  பதவி கொடுக்க மாட்டார் என பேசினார். இதிலெல்லாம் சுயநமில்லையா?
 

 

அரசின் வன்னி டேப்பில்(அல்லது கணனியில்) பொய்யட் என்ன பார்த்தார் என்றதை ஏன் யாழில் இது வரையில் சொல்லவில்லை? ஏன் எனில் அதில் உள்ளடக்கம் ஒன்றும் இல்லை.  இது அரசுக்கு ஆதரவாகாக செய்யும் பிரச்சாரம். இது கொழும்பில் அரசு எடுத்த "Lies Agreed Upon"  அல்ல. புதிது புதிதாக சென்னையில் பொய்யட் எடுத்த "Lies Agreed Upon".

 

 

 

பருதியின் மரணம் சம்பந்தமாகத்தான் ஆய்வு நடத்தினீர்களே. அதில் என்ன கண்டுபிடித்தீர்கள் என்றதை தன்னும் ஏன் யாழில் வெளிப்படையாக விவாதிக்கவில்லை? அதை பிரான்சின் பொலிசுக்கும் கொடுத்தால் அவர்களுக்கும் உதவுமே? ஏன் கொடுக்கவில்லை? ஏன் எனில் இவர்கள் சொல்வதெல்லாம் பொய். ஏன் தாயன் ஜெயதிலகா பதவி துறக்கிறார் என்பதை தன்னும் வெளிப்படையாக கூறமுடியுமா? பரிசுப் பொலிசு, பருதியின் விசாரணையின் போது, தன்னையும் கைது செய்யலாம் என்று பயப்படுகிறாரா? தயான் ஜெயதிலகா பற்றித்தன்னும் உண்மையை சொல்லவும். சொல்லதெல்லாம் சுத்தப் பொய்யாக இருக்கக் கூடாது.

 

 

நியானி: தணிக்கை

 

Edited by நியானி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.