Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளைக்காரர்கள் கண்டுபிடிக்கத் தவறியது தமிழர்கள் கண்டுபிடித்தது

Featured Replies

“வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து”


இந்த உலகத்துக்கு எத்தனையோ நல்ல விடயங்களை கண்டுபிடித்து கொடுத்திருக்கின்றார்கள் வெள்ளைக்காரர்கள் அவர்களுக்கு தெரியவில்லை சாதி என்று ஒன்றை கண்டு பிடிக்க ஆனால் உலகத்துக்கு ஆக்கபூர்வமான எதையும் பெரிதாக கண்டுபிடிக்காத ஆசிய ஆபிரிக்கர்களுக்கே சாதி என்று

ஒன்றை கண்டுபிடிக்க தேவை இருந்திருக்கின்றது.
 

வெள்ளையர்களுக்கு தெரியும் சாதியால் எந்தப்பயனுமில்லை மனித குலத்துக்கென்று நம்மவர்களுக்கு மட்டும் அதனால் என்ன பயன் வருகின்றதோ தெரியவில்லைஇநமது மூதாதையர் சொல்லித்தந்து வளர்த்ததால் மனம் சாதிக்கு அடிமைபட்டு பழக்கப்பட்டுவிட்டது என்பதே உண்மை.
 

டென்மார்க்குக்கு முதலில் ஆண்களாக எல்லோரும் வந்திருந்து ஒன்றாக ஒரேவீட்டிலிருந்து சமைத்து சாப்பிட்டு கதைபேசி மகிழ்ந்திருந்தார்கள் நம்மவர்கள்இ என்று பெண்களை திருமணம் செய்து இங்கு கூட்டிவைத்து வாழும் நிலைமை உண்டானதோ அன்றிலிருந்து மீண்டும் சாதி என்னும் விஷம் தொற்றிக்கொண்டது நம்மவர்களிடம்.
 

மற்றவர்களுடன் ஒன்றுசேர்ந்து நட்ப்புறவாக பேதம் பாராது வாழக்கூடியவர்கள் ஆண்கள் ஆனால்
அதிகம் பிறருடன் கூட்டுச்சேர்ந்து பேதம் பாராது வாழும் இயல்பு பெண்களிடமில்லை என்பதே ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சி வெளியீடு அனுபவ அறிவில் உற்றுநோக்கையில் உண்மையாகவே தெரிகின்றது.

 

நாட்டுப்பற்றும் ஒற்றுமையும் ஓங்கி வளரவேண்டுமெனில் சாதி பாராட்டும் இழிகுணத்தை எல்லோரும் கைவிடுதல் வேண்டும்.
 

இங்கு எல்லோருக்கும் படிப்புண்டு பணமுண்டு சகலதுமுண்டு நமது வாயாட்டமே நமது
பண்பாட்டை வெளியுலகுக்கு காட்டிக்கொடுக்கின்றதுஇ நாங்கள் மட்டுமே உலகில் நிமிர்ந்து வாழ வேண்டும் என்று எண்ணும் வக்கிர புத்தி கொண்டவர்கள் இந்த உலகிலிருக்கும் பெரிய அழுக்கு மூட்டைக்கு ஒப்பானவர்கள் என்றால் பொய்யில்லை.

 

முகத்தை சுருக்கி உற்று நோக்கும் சிலரின் பார்வையே பெருங்கோபத்தை வரவழைக்கும் ஏதோ தான் தான் உலகத்தில் பெரியாள் என்பதுபோல் எண்ணம்இ வலியாரை வால்பிடித்து
தங்களின் வாழ்வை சிறப்பிக்க மற்றவரிடம் குனியும் இழி நிலை நேர்மையான உழைப்பாளிகளுக்கு வருவதில்லை.

 

எவனொருவன் துப்புரவையும் பேணி பிறருடன் நாகரிகமாக பண்பாக பணிவாக உரையாடுவானோ அவனே தலைசிறந்த மனிதன் பணத்தை வைத்தோ பகட்டை வைத்தோ எவரையும் உயர்ந்தவர் என்று மதிப்பிடுதல் தவறாகும்.


சிலர் வெளித்தோற்றத்தில் அழகாக இருப்பார்கள் வாயைத் திறந்தால் வார்த்தைகள் அசுத்தமாக வந்து நாறும்இ பண்பிலும் ஒழுக்கத்திலும் சிறப்பானவர்கள் அடக்கமாக பேசுவார்கள் மற்றவர்கள் பேச்சுக்கு மரியாதை கொடுப்பார்கள்.
 

அப்படியானவர்கள் இன்னும் கொஞ்சம் பேசமாட்டார்களா என்று சான்றோர்கள் எதிர்ப்பார்ப்பார்கள் பிறருக்கு உதவும் குணமுடையவர்களே உயர்ந்தவர்கள் யாருக்கும் உதவி செய்யாது தனக்கு மட்டுமே என்று பொருளை சேர்த்து கொண்டு வாழ்பவர்களே இழிவானவர்கள் என்பாள் ஒளவைப்பாட்டி :

 

” சாதி இரண்டொழிய சாற்றுங்கால் மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுணத்தோர்”
 

பூமியில் மக்கள் அனைவரும் ஒன்றே காரியங்களை சாதிக்க கபடம் நிறைந்தவர்கள் உண்டாக்கிய பேதமே சாதி என்னும் பிரிவினை பிறப்பெடுக்கும் முன்னர் எவருக்கும் நான் இன்ன சாதியில் பிறக்க வேண்டும் என்று பதிவு செய்துகொள்ளும் வாய்ப்பில்லை.
 

இதிலிருந்தே தெரிகிறது சாதி என்று ஒன்று இல்லை என்று வைத்திய சாலையில் குழந்தையை மாற்றிவைத்து இதுதான் உங்கள் பிள்ளை என்று தாதி சொன்னால் அதை நம்பி எடுத்து வந்து தங்கள் பிள்ளை என்று வளர்ப்பார்கள் பாசம் கொள்வார்கள் அதுவே தாழ்ந்த குலத்து பிள்ளை என்றால் வைத்த பாசம் மாறிவிடுமா அப்படி மாறிவிட்டால் அவர்களை உயர்ந்த மனிதர்கள் என்று சொல்ல முடியுமா?
சாதியென்னும் பிசாசு ஆளைப்பிடித்தால் அது சமயம் சாதிக்காக கற்ற கல்விக்கு ஒப்ப ஒழுகான் கும்பிடும் தெய்வத்துக்கு பயந்து நடவான் மனிதம் தொலைப்பான் பண்பு விடுவான் ஒழுக்கம் கடைப்பிடியான்.

 

பெருந்தன்மை பேணான் சமத்துவம் காரான் நல்ல செயல்முறைகளை தவிர்த்து இழிசெயல்களை செய்து தானும் புண்ணாகி பிறரையும் புண்ணாக்கி வஞ்சத்தை மட்டுமே வளர்ப்பான் அரக்கனாய் .
காதல் மணம் புரிந்த இரு வேறு சாதி மனங்களுக்கு தடை செய்து தர்மபுரியில் நடந்தேறிய அரக்கத்தனமான கொடுமைகளை நினைத்தால் சாதியால் மனிதன் படும் துன்பங்களுக்கு அளவே இல்லை.

 

இதை ஒரு அறிவுள்ள மனிதனால் சகிக்க முடியாது இந்தச் சாதி வெறியாட்டத்தால் மனிதர்கள் கண்ட நன்மைகள் என்ன வீணாக தீயிட்டு குடிசைகளை எரித்து குத்தி வெட்டி செத்து எங்கும் அனர்த்தமே செத்தால் எந்தச் சாதியனனாலும் அவனுக்கு பிணம் என்ற பட்டமே இறுதியாகும்.
 

பிணத்தில் சாதியுண்டா? இதுக்கு மீறியும் சாதியை கட்டிக்கொண்டு காலம் கடத்தப்போவதாக யாராவது நினைத்துக்கொண்டால் அவர்கள் எங்காவது மனிதர்கள் இல்லாத தீவுக்கு சென்று தனித்து வாழ்வதே அவர்களுக்கு நல்லது முடியமா?
 

வாயால் பேசும் தமிழை நல்லபடி வரவழைத்து ஒழுக்கத்துடன் நடந்துகொண்டு கல்வியறிவையும் கூட்டிக்கொண்டால் அனைவரும் உயர்ந்தவர்களாக வாழலாம் உங்கள் நேரத்தை தொலைக்காட்சியில் செலவிடாது அந்நேரத்தில் தமிழில் இருக்கும் எத்தனையோ அறிவு நூல்களை அரைகுறையாக படித்தாலே கால்வாசி அறிவாளியாகிவிட முடியும்.
 

ஒருவனுக்கு பத்துக்குறள் தெரிந்தாலே நல்ல பக்குவம் அறிவில் உண்டாகும் வாய்ப்பு வந்துவிடும் வீணாக நேரம் போக்க பயனற்ற கதை பேசி மனவழுத்தம் கொண்டு பகைமை தேடி வாழாது கிடைக்கும் ஓய்வை ஏதாவது வாசிக்க பயன்படுத்துவதே நல்ல அறிவாகும்.
 

மக்களை ஏய்த்து முட்டாள்களாக வைத்திருக்கவே தொலைக்காட்சி தொடர்களும் உதாவாக்கரை திரைப்படங்களும் வலம் வருகின்றன படங்களில் நிகழ்ச்சிகளில் நல்ல தமிழ் இல்லை கேட்க்கவே அருவருக்கின்றது.
 

தமிழக தொகுப்பாளர்களின் ஆங்கிலம் கலந்த தமிழ் தவறான உச்சரிப்புக்கள் அவர்கள் திருந்தப்போவதில்லை தமிழர்களை கெடுக்கவென்றே பின்னணியில் வேலைகள் அரக்கத்தனமாக நடக்கின்றது.
 

இல்லையேல் தமிழகத்திலிருந்து வரும் நிகழ்ச்சிகளில் தமிழ் காயம்பட்டு வருமா ? சுத்தமான தமிழ் இல்லாதவற்றுக்கு எங்கள் வரவேற்ப்புக்கள் நிறுத்தப்பட்டால் சிலவேளை மாற்றங்கள் வரலாம்இஏனெனில் எங்களால் ஈட்டும் பெரும் வர்த்தகமே அவர்களை பெரும் பணக்காரர்களாக்குகின்றது.
 

சிந்திக்க வேண்டும்..
 

ஆக்கம்
ம.இரமேசு

http://www.alaikal.com/news/?p=118500

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் சிந்திக்க வேண்டும்..

மக்களை ஏய்த்து முட்டாள்களாக வைத்திருக்கவே தொலைக்காட்சி தொடர்களும் உதாவாக்கரை திரைப்படங்களும் வலம் வருகின்றன படங்களில் நிகழ்ச்சிகளில் நல்ல தமிழ் இல்லை கேட்க்கவே அருவருக்கின்றது.
 

தமிழக தொகுப்பாளர்களின் ஆங்கிலம் கலந்த தமிழ் தவறான உச்சரிப்புக்கள் அவர்கள் திருந்தப்போவதில்லை தமிழர்களை கெடுக்கவென்றே பின்னணியில் வேலைகள் அரக்கத்தனமாக நடக்கின்றது.
 

இல்லையேல் தமிழகத்திலிருந்து வரும் நிகழ்ச்சிகளில் தமிழ் காயம்பட்டு வருமா ? சுத்தமான தமிழ் இல்லாதவற்றுக்கு எங்கள் வரவேற்ப்புக்கள் நிறுத்தப்பட்டால் சிலவேளை மாற்றங்கள் வரலாம். ஏனெனில் எங்களால் ஈட்டும் பெரும் வர்த்தகமே அவர்களை பெரும் பணக்காரர்களாக்குகின்றது.
 

எல்லோரும் சிந்திக்க வேண்டும்....

 

 

இணைப்புக்கு நன்றிகள்

சாதியம் என்பது மிருகங்களை விட கேலமான மனித சமூகத்தைக்கொண்ட ஒரு கூட்டத்தை குறிக்கும் .........இந்த கூட்டம் உலக அழிவு ஒன்று வருமாயின் முதலில் அழிவை சந்திக்கும் ,சந்திக்கவேண்டிய ஒரு குழுமம் ............................

எம் இனத்தில் சாதியம் அழியவேண்டுமென்றால் பொருளாதார சமநிலையுள்ள ஓர் சமூக அமைப்பு தேவை .......அந்த சமூக அமைப்பு தேவை என்றால் எம்மை நாமே ஆழக்கூடிய ஓர் கட்டமைப்பு தேவை ...........அந்தக்கட்டமைப்பு தேவை என்றால் எமக்கு தமிழீழம் என்ற ஒரு மண் தேவை...... அந்த மண் தேவை என்றால் தமிழீழ விடுதலைப்புலிகள் போல் செயற்படக்கூடிய ஓர் உண்மை வடிவம் தேவை ..............இந்த தேவைகள் நிறைவேரும்பட்சத்தில் சாதியம் என்ற பதம் தமிழர்கள் அத்தியாயத்தில் இருந்து விடைபெறும் ....................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.