Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனைவரும் போராடவேண்டும்; அரசின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பொது எதிரணி அறைகூவல்

Featured Replies

நாட்டில் மீண்டும் அமைதியற்ற நிலையைத் தோற்றுவிக்க அரசு மேற்கொள்ளும் ஏகாதிபத்திய நடவடிக்கைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என்று பொது எதிர்க்கட்சிகளின் கூட்டணி அறைகூவல் விடுத்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி, நவசம சமாஜக்கட்சி, புதிய சிஹலஉறுமய, ருஹுணு மக்கள் கட்சி, மௌபிம மக்கள் கட்சி, ஐக்கிய மக்கள் முன்னணி, ஐக்கிய சோஷலிஸக் கட்சி ஆகிய கட்சிகள் அடங்கிய பொது எதிர்க்கட்சிகளின் கூட்டணி நேற்று ஓர் அறிக்கை விடுத்தது.

பயங்கரவாதத் தடைச்
சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரை வெலிகந்த புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்புவதன் ஊடாக, சட்டவிரோதமாகத் தான் மேற்கொண்ட கைதுநடவடிக்கையை சாதாரணமானது எனக் காட்ட அரசு முயற்சிக்கின்றது என்று பொது எதிரணி அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளது.

அநத அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

போரில் இறந்த தமது உறவுகளை நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நடவடிக்கைகளில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நவம்பர் 27ஆம் திகதி ஈடுபட்டிருந்தனர். படையினர் புகுந்து அவற்றைக் குழப்பினர்.

இதனைக் கண்டித்து அடுத்த நாள் மாணவர்கள் மேற்கொண்ட அமைதிப் போராட்டத்தையும் அரச படையினர் தாக்குதல்கள் மூலம் அடக்கினர். பின்னர் மாணவர்களையும் கைதுசெய்தனர்.

இவ்வாறு மிலேச்சத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டு கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் சிலருக்குப் புனர்வாழ்வளிக்க வேண்டுமெனக் கூறி அவர்களை புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்புவதன் ஊடாக, சட்டவிரோதமான முறையில் மேற்கொண்ட கைது நடவடிக்கை சாதாரணமானது எனக் காட்ட அரசு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

நாட்டில் தீவிரவாதம் இல்லை என கடந்த மூன்று வருடங்களாகக் கூறிவந்த அரசு, தமது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக மேற்படி நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
போரில் இறந்த தமது உறவுகளை நினைவுகூரும் முகமாக தமிழர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தீவிரவாத நடவடிக்கைகள் எனக் கூறி முடக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டது.

தமிழ் மக்கள் தமது இறந்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தும் உரிமையைப் பறிக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை. கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலைசெய்யக் கோரி ஏனைய பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

http://thaaitamil.com/?p=40760

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.