Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்ளதைச் சொல்லுவோம்-புலம் பெயர் நாடுகளில் முதியவர்களின் நிலை

Featured Replies

உள்ளதைச் சொல்லுவோம் - புலம் பெயர் நாடுகளில் முதியவர்களின் நிலை

வணக்கம் சகோதரர்களே!

நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு புது முயற்சியில் இறங்குவோமா? அனைவரது ஒத்துழைப்புடனும் இந்த அரட்டைக் களத்தை ஆரோக்கியமானஇ காத்திரமான கருத்துக் களமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அப்படி என்னதான் செய்யப் போகிறோம்?

நமது சமூகம் எதிர்நோக்குகின்ற ஏதாவது சவாலை அல்லது பிரச்சினையை பிரச்சினையைத் தெரிந்தெடுத்து ஒவ்வொருவரும் அது தொடர்பான கருத்துக்களை முன் வைப்போம். இது ஒரு பட்டிமன்றம் இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு ஒரு பக்கம் சாராமல் குறித்த விடயம் சம்பந்தமான எம்முடைய எண்ணங்களை வெளிப்படுத்துவோம்.

நிச்சயமாக பல்வேறு கோணங்களில் ஒன்றோடொன்று முரண்படக் கூடிய கருத்துக்கள் வரத்தான் செய்யும். அப்படி வரத்தான் வேண்டும். அப்பொழுதுதானே அரட்டை முழுமையடையும்.

கடைசியில் குறிப்பிட்ட தலைப்பைப் பிரேரிப்பவர் நடுநிலமையில் நின்று சகல கருத்துக்களையும் உள்வாங்கி ஒரு தொகுப்பை வெளியிடுவார். அத்துடன் கருத்துச் சொன்னவர்களில் ஒருவரை அடுத்த தொகுப்பாளராக பிரேரிப்பார். இவ்வாறே சுழற்சி முறையில் தொகுப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டு விடயங்கள் அலசப்படும்.

சரி முதலாவது விடயமாக 'புலம் பெயர் நாடுகளில் முதியவர்களின் நிலை' என்ற தலைப்பை நான் பிரேரிக்கிறேன்.

இன்றைக்குத் தாயகத்திலிருந்து பல்வேறு காரணங்களால் புலம் பெயரும் எங்கள் முதியவர்கள் இந்தத் தேசங்களில் எப்படி வாழ்கிறார்கள்? அவர்கள் சந்தோசமாக இருக்கிறார்களா? அவர்களுக்கு இருக்கின்ற குறைகள் எவை? அவற்றை நிவர்த்தி செய்வதற்கு குடும்பம் என்ற முறையிலே ஒரு சமூகம் என்ற முறையிலே நாங்கள் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இது போன்ற விடயங்களை உள்ளடக்கி உங்கள் கருத்துக்களோடு வாருங்கள். இது விடயத்தில் தாயகத்தில் உள்ளவர்களின் நிலைப்பாடும் கருத்துக்களும் வித்தியாசமான கோணத்தில் இருக்கும் என்று நினைக்கிறேன்.அந்த வகையில் நீங்களும் வாருங்கள்.

எல்லோருடைய கூட்டு முயற்சியிலும் இதை ஒரு வளமான அரங்காக மாற்றுவோம். சரிதானே.

அன்புடன்

மணிவாசகன்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி.

'புலம் பெயர் நாடுகளில் முதியவர்களின் நிலை' என்ன என்று சொல்ல லண்டனில் பெற்றோரை கூப்பிட்டுவிட்டு அவர்களுக்கு கொடுக்கும் வீட்டை விட்டு வெளியேற்றி தங்களுக்குள்ள BOX அறையில் விட்டு விட்டு, அந்த வீட்டை வாடகைக்கு விடும் சமாத்தியத்தை சொல்லவா???

(சாத்திரியின் ஐரோப்பாவின் அவலத்தில் புலம்பலாய் இதை சொல்லுவார் என்று பார்த்தால் எழுத்தாளர் பக்கம் தான் அவர் கவனம் இப்போ விழுந்திருக்கு)

இன்றைக்குத் தாயகத்திலிருந்து பல்வேறு காரணங்களால் புலம் பெயரும் எங்கள்

முதியவர்கள் இந்தத் தேசங்களில் ஒரு அடிமை மாதிரி வாழ்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

புலத்தில் உள்ள முதியோர்களில் பெரும்பாலோனோர் அவர்களது உறவுகளால்

சரியாக கவனிக்கப்படுகிறார்கள் இல்லை உதாசீனப்படுத்துகிறார்கள் என்றே கூற வேண்டும்.

இதைவிட முக்கியமான பிரச்சினை அவர்களுக்கு தனிமை. தனிமை என்பது எவ்வளவு கொடுமையானது.

தாயகத்தில் பல உறவுகள் நட்புகளுடன் தாங்கள் பிறந்து வளர்ந்த இடத்தில் இருந்துவிட்டு

புலத்திற்கு வருபவர்கள் இங்கு கட்டிட காட்டின் தனிமையில் இருந்து மனதளவில் ஒடிந்து போகிறார்கள்.

புலத்தில் பிள்ளைகள் மருமக்கள் வேலைக்கு போன பின்பு வீட்டின் தனிமையில் இருக்கும்

இவர்களுக்கு நேரத்தை எப்படி கழிப்பது என்பதே முக்கிய பிரச்சனை.

தெரியாத மனிதர்கள், சூழல், புரியாத மொழி, பழக்க வழக்கங்கள் என்று பல விதமான காரணிகளால்

அவர்களுக்கு தனிமை உருவாக்கப்படுகிறது. அத்துடன் கூடுதலான முதியவர்கள்

தங்கள் பிள்ளைகளின் குழந்தைகளை பராமரிக்கும்

பொறுப்பிலே அவர்கள் பிள்ளைகளின் வீட்டிலேயே அமர்த்தப்பட்டு இருப்பார்கள்.

கவலையான விடயம் என்ன என்றால் முதுமைப் பருவமும் குழந்தைப் பருவமும்

உள்ளத்தில் ஒன்று என்று சொல்லுவார்கள் ஆனால் அவர்களிடமே திரும்பவும்

குழந்தை பராமரிக்கும் பொறுப்பு கொடுக்கப்படுவதுதான் ஜீரணிக்க முடியவில்லை.

இத்தனை வருடமும் தங்கள் பிள்ளைகளைப் பராமரித்தவர்கள் ஓய்வு பெறவேண்டிய

காலத்தில் மீண்டும் அப் பாரத்தை சுமக்க வைக்கப்படுகிறார்கள் என்பது மிகவும்

மனவேதனைக்குரிய விடயமாகும். இங்கு பெரியவர்களுக்கு மதிப்புக் கொடுத்து

அவர்கள் ஏக்கங்களையும் ஆசைகளையும் நிறைவேற்றி வைப்பவார்கள் மிக

குறைவு என்றே சொல்ல வேண்டும். எப்போ இங்குள்ளவர்கள் முதியோர்களை மதித்து

அவர்களது ஆசைகளை நிறைவேற்றி அவர்களது தனிமையை போக்குகிறார்களோ.

அப்போதான் அவர்களுக்கு விமோசனம் கிடைக்கும்.

முதலில் சமூக நிலை சார்ந்து ஒரு நல்ல தலைப்பிலே கருத்துக்களைப் பகிர்வதற்கு சந்தர்ப்பம் அமைத்துத் தந்த யாழ்களத்திற்கும் மணிவாசகனுக்கும் மற்றும் கருத்துக்களை முன்வைத்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவிக்கிறேன்

புலம்பெயர் தேசத்தில் முதியவர்களின் நிலை தொடர்பான எதிர்மறையான கருத்துக்களே இதுவரையில் முன்வைக்கப்பட்டிருப்பதாலும

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

வணக்கம் சகோதரர்களே!

பெரும் எதிர்பார்ப்போடு ஆரம்பித்த இந்தப் பகுதியில் கள உறவுகள் ஏனோ ஆர்வம் காட்டவில்லை.

எனவே இன்னும் ஒரு வாரங்கள் பார்த்துவிட்டு இந்தப் பகுதியை மூடி விடலாம் என்று யோசிக்கிறேன். இந்தப் பகுதிக்கு உயிரூட்ட விரும்புபவாகள் இருந்தால் ஒரு வாரத்திற்குள் உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள். இதில் கலந்து கொள்ளாததற்கு ஏதாவது விசேட காரணங்கள் இருந்தால் தனிமடல் மூலமாகத் தொடர்பு கொள்ளுங்கள். திருத்தங்கள் செய்வதற்கு ஆயத்தமாயுள்ளேன்.

அன்புடன்

மணிவாசகன்

நானும் இப்பக்கம் எழுத வேண்டும், எனவே கொஞ்ச நாள் விட்டுத் தர முடியுமா? வேலைப்பளு காரணமாக எழுதுவதற்கு நேரம் இல்லாமல் உள்ளது.

மேற்கோள்:

வணக்கம் சகோதரர்களே!

பெரும் எதிர்பார்ப்போடு ஆரம்பித்த இந்தப் பகுதியில் கள உறவுகள் ஏனோ ஆர்வம் காட்டவில்லை.

அப்பிடிலாம் இல்ல - மணிவாசகன் ஐயா .......

சிக்கலான விடயம் உங்க தலைப்பு.........

பக்கம் பக்கமாய் எழுத வேண்டி இருக்குமே - இது பற்றி........

பொறுமை இல்ல என்பதை விட - நிறைய எல்லாரும் தங்கள - தாங்களே -கேள்வி கேட்கவேண்டி வருமோ - அதுதான்! 8)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.