Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

3000 ஆண்டுகளுக்கு முந்திய எகிப்திய மாமன்னரின் படுகொலை இரகசியம் வெளிச்சத்துக்கு வந்தது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
mummy-191212-150.jpg

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த எகிப்திய மாமன்னர் ஒருவரின் படுகொலை தொடர்பான மர்மத்துக்கு விடைகண்டு விட்டதாக தடயவியல் நிபுணர்கள் நம்புகின்றனர். பண்டைய எகிப்தியப் பேரரசின் கடைசி மாமன்னரான மூன்றாம் ராமிசெஸ்ஸின் பாதுகாப்பட்ட சடலத்தை முதல் தடவையாக ஸ்கேனிங் செய்த விஞ்ஞானிகள் அவர் எவ்வகையில் எதற்காக கொல்லப்பட்டார் என்ற கேள்விக்கு பதில் கண்டதாகக் கூறுகின்றனர்.

 

பண்டைய எகிப்தில் பாரோ என்றழைக்கப்படும் மன்னர்களின் இறந்த உடல்களை நெடுங்காலம் அழியாமல் பாதுகாப்பதற்கு கையாளப்பட்ட மம்மியாக்கி பதனிடும்முறையில் பாதுகாக்கப்பட்டுள்ள பேரரசர் மூன்றாம் ராமிசெஸ்ஸின் எச்சங்களை முதல் தடவையாக சிடி ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரது கழுத்துப் பகுதியில் ஏழு செண்டி மீட்டர் நீளத்துக்கு ஆழமான வெட்டு ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கூர்மையான கத்தி ஒன்றினால் இந்த வெட்டு ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

 

அந்த வெட்டுக் காயத்திலே அவர் உடனடியாக இறந்திருக்கக் கூடும் என ஆய்வை நடத்தியவர்களில் ஒருவரான டாக்டர் ஆல்பர்ட் ஸிங்க் கூறுகிறார். உடலை பதப்படுத்தும்போது மன்னரின் கழுத்துப் பகுதியில் தாயத்து ஒன்று வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பண்டைய எகிப்தியர்கள் பாதுகாப்பு சின்னமாக கருதிய சின்னத்தின் வடிவில் இந்த தாயத்து இருக்கிறது.

இறப்புக்கு பின்னரான வாழ்க்கையில் பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்த தாயத்து வைக்கப்பட்டுள்ளது என்று நம்புவதாக டாக்டர் ஆல்பர்ட் ஸிங் தெரிவித்தார். ராமிசெஸ்ஸ் மம்மியின் கழுத்துப் பகுதியில் அதிக அளவில் கட்டு போடப்பட்டிருந்ததால் இந்த ரகசியம் பல நூற்றாண்டுகளாக வெளியில் வராமலேயே இருந்துவிட்டுள்ளது. மூன்றாம் ராமிஸெஸ்ஸின் மரணம் தொடர்பில் வலம் வந்துகொண்டிருந்த பல சர்ச்சைக்குரிய கட்டுக்கதைகளில் ஒன்றையாவது முடிவுக்கு கொண்டுவர இந்த புதிய கண்டுபிடிப்பு உதவும் என்று சொல்லலாம்.

 

அரண்மனைக்குள்ளேயே நடந்த ஒரு சதி வேலையின் விளைவாய் அந்தப்புரத்தில் இருந்தவர்கள்தான் அரசர் ராமிசெஸ்ஸைக் கொல்ல முயற்சித்தார்கள் என்று பண்டைய ஆவணங்கள் கூறுகின்றன. ராமிசெஸ்ஸின் மனைவியரில் ஒருவரான டியியும் அவரது மகன் இளவரசன் பெண்டாவரும்தான் இந்த சதியைத் தீட்டியவர்கள் என்றும் அந்த ஆவணம் கூறுகிறது. இந்த சதி முயற்சி பலன் அளித்ததா என்பதும், சதி முயற்சிக்குப் பின்னர் இளவரசன் பெண்டாவருக்கு என்ன ஆனது என்பதும் தெளிவில்லாமல் இருந்தது.

 

பெண்டாவர் மீது நடந்த அரச மன்ற விசாரணையில் அவர் குற்றம்காணப்பட்டார் என்றும் அதன் பின்னர் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்றும் வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. ஆனால் இத்தாலியில் உள்ள மம்மீக்கள் கழகத்தில் நிபுணர்கள் நடத்திய தடயவியல் ஆய்வுகளைக் கொண்டு பார்க்கையில் பெண்டாவர் கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அவரது மன்னருக்கெதிராக அவர் செய்த சதியின் காரணமாய் எவ்வித மரியாதையும் இல்லாமல் அவரது உடல் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=72279&category=WorldNews&language=tamil

கொலைகாரர்களை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்து தகுந்த தண்டனை கொடுக்குமாறு வேண்டிக் கொள்கின்றேன். :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.