Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த உண்ணாவிரத போராட்டம் நிறைவுபெற்றது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  jaffna-tna-hunger-pro-seithy-1-20121221-

கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று யாழில் நடைபெற்ற அடையாள உண்ணாவிரதப் போராட்டம் மாலை 4.30 மணியளவில் அருட்தந்தை ஜெபநேசன் அவர்களினால் நீராகாரம் கொடுத்து முடித்து வைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலையோடு சிறைகளில் வாடிக்கொண்டு இருக்கின்ற எங்கள் இளைஞர்கள் யுவதிகள் இன்றும் அரசியல் கைதிகள் எனும் பெயரில் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளார்கள் அவர்களின் விடுதலை என்பது கேள்விக்குறியான நிலையிலேயே நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் அவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கி அவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் நாம் இன்று ஜனநாயக ரீதியான போராட்டத்தையே முன்னெடுத்துள்ளோம்.

  

அதைக்கூட இங்கு சிலர் குழப்ப பார்க்கின்றார்கள் நாம் இன்று காலையிலே இங்கு வந்து பார்த்த போது இங்கு போடப்பட்டிருந்த பந்தல்களை காணவில்லை. அவை அருகில் உள்ள கால்வாய்க்குள் போடப்பட்டு இருக்கின்றது. இந்தளவு தூரம் இந்த நாட்டிலே ஜனநாயகம் காணப்படுகின்றது. இதன் மூலம் அவர்கள் எமது அறவழி போராட்டத்தை பார்த்து பயப்படுகின்றார்களா இல்லை எங்களை பயப்படுத்துகின்றார்களா என்று தெரியவில்லை. பின்னர் நாம் வேறு ஒரு பந்தலை நாடி அப்பந்தல் இந்த வாசலில் வரும் போது பொலிசார் மறித்து இருக்கின்றார்கள். உள்ளுக்கு இந்த பந்தலை நீங்கள் போட முடியாது என்று, இதை பார்க்கும் போது எமக்கு சந்தேகம் வருகின்றது. முதல் இருந்த பந்தலை பொலிசார்தான் பிடுங்கி எரிந்துள்ளார்கள் என்று, பின்னர் நாம் பொலிஸ் உயர் அதிகாரியுடன் கதைத்த பின்னரே உள்ளே பந்தல் போட அனுமதிக்கப்பட்டுள்ளது. என உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்

 

உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசன் உரையாற்றுகையில்,

 

கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களை நிபந்தனைகள் இன்றி இந்த அரசு விடுதலை செய்ய வேண்டும் அத்துடன் யாழில் நடைபெறும் கைது நடவடிக்கைகளை நிறுத்துவதுடன் மாணவர்களை விடுதலை செய்து மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் அறிக்கையில் யுத்தத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த அவர்களின் உறவினர்கள் நண்பர்கள் உரிமை உண்டு என கூறப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். இவ் உண்ணவிரதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசன், ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பாஸ்கர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தமிழரசுக் கட்சியின் துணைச் செயலாளர் சீ.வீ.கே. சிவஞானம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேசசபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=OowLaEJchHc[/xml]

 

 

 

 

 

jaffna-tna-hunger-pro-seithy-1-20121221-

 

 

jaffna-tna-hunger-pro-seithy-2-20121221-

 

 

jaffna-tna-hunger-pro-seithy-3-20121221-

 

 

jaffna-tna-hunger-pro-seithy-4-20121221-

 

 

jaffna-tna-hunger-pro-seithy-5-20121221-

 

 

jaffna-tna-hunger-pro-seithy-6-20121221-

 

jaffna-tna-hunger-pro-seithy-7-20121221-

http://www.seithy.com/breifNews.php?newsID=72427&category=TamilNews&language=tamil

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உண்ணாவிரதம் மக்களைத் தூண்டிவிடுது.. :(

 

இவர்கள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு கொழும்பில் பாதுகாப்பாக இருப்பார்கள். பங்குகொண்ட மக்களின் கதி? :huh:

 

மக்கள் தாங்களாக யாருமே சொல்லாமல் வந்து கூடி ஆர்ப்பாட்டம் / உண்ணாவிரதம் இருந்தால் ஒத்துக்கொள்லலாம். அரசியல் தலைவர்கள் அவர்களைத் தூண்டி விடக்கூடாது.. :D

Edited by இசைக்கலைஞன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இந்த உண்ணாவிரதம் மக்களைத் தூண்டிவிடுது.. :(

 

இவர்கள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு கொழும்பில் பாதுகாப்பாக இருப்பார்கள். பங்குகொண்ட மக்களின் கதி? :huh:

 

மக்கள் தாங்களாக யாருமே சொல்லாமல் வந்து கூடி ஆர்ப்பாட்டம் / உண்ணாவிரதம் இருந்தால் ஒத்துக்கொள்லலாம். அரசியல் தலைவர்கள் அவர்களைத் தூண்டி விடக்கூடாது.. :D

 

உங்கள் கருத்தே எனது கருத்தும். 

போராட்டம் வெற்றி பெற்றதா என்பது தான்  கேள்வி ஆனால் இங்கை முடிவுபெற்றது.

 

ஆனால்  மாணவர்கள் போராட்டத்தை யாழில்முன்னெடுக்க வேண்டும் அதற்க்கு இந்த போராட்டம் வழிமைக்கட்டும்/.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.