Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1. நம்பிக்கை இழக்காத நெஞ்சுரம் வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கை இழக்காத நெஞ்சுரம் வேண்டும்

 

நீங்கள் ஒரு செயலைச் செய்வதாக இருந்தால் உடனே செய்ய வேண்டும். சோம்பல் காரணமாகப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நீங்கள் எந்தச் செயலையும் தள்ளிப்போடக்கூடாது. “நான் ஒரு காரியத்தைச் செய்யலாம் என்று இருந்தேன். சந்தர்ப்பம், சூழ்நிலை என்னைக் கெடுத்துவிட்டது” என்றெல்லாம் நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. இப்படி இருந்தால் நீங்கள் எப்படி முன்னேறுவது? நீங்கள் எந்தச் செயலைச் செய்வதாக இருந்தாலும் திட்டமிட்டுத் தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் உழைத்தும் பயன் இல்லாமல் போய்விடும்.


ஆர்வத்துடன் உங்கள் செயலைத் தொடங்குங்கள்


உங்களுக்கு எந்தத் துறையில் ஆர்வமோ, அந்தத் துறையைத் தேர்ந்தெடுங்கள். நீங்கள் மருத்துவத்துறையைத் தேர்ந்தெடுக்கின்றீர்கள். “நான் சிறந்த மருத்துவராகத் திகழ்வேன்” என்ற லட்சியத்தோடு உங்களுடைய செயலைத் தொடங்குங்கள். லட்சியம் இல்லாத செயல் வெற்றி பெற்றதாக வரலாறே கிடையாது. நீங்கள் எதில் ஆர்வத்துடன் இருக்கின்றீர்களோ, அந்தத் துறையை நீங்கள் தேர்ந்தெடுக்கும்போது உங்களுக்குச் சரியான இலக்கு கிடைத்துவிடுகிறது. அந்தத் துறையில் ஆர்வத்துடன் ஈடுபட்டுக் கடுமையாக உழைக்கும்போது உங்களுக்கு வெற்றி கிடைக்காமல் போகுமா?


முதன்மையானவற்றிற்கே முன்னுரிமை கொடுங்கள்


உங்களுக்குப் பல்வேறு கடமைகளும் பொறுப்புகளும் இருந்தாலும், நீங்கள் முதலில் எதைச்செய்ய வேண்டுமோ, அச்செயலை நீங்கள் முடித்திட முன் வர வேண்டும். தேவையற்ற செயல்களில் உங்கள் திறமையைப் பாழடித்துக் கொண்டிருக்கக்கூடாது. மருத்துவத்துறையை நீங்கள் தேர்ந்தெடுத்த பின், அது சம்பந்தப்பட்ட நூல்களில் ஆர்வத்தைச் செலுத்திப் படிக்க வேண்டும். அதற்குமுன், மருத்துவத்துறையிலே எந்தப் பிரிவில் உங்களுக்கு நாட்டம் அதிகமோ, அந்தத் துறையில் மிகச்சிறந்து விளங்கும் நிபுணர்களைச் சந்தித்து, அவர்களுடைய ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் கேட்க வேண்டும். அது உங்களுடைய முதல் கடமையாகும்.


வெற்றி ஒன்றை மட்டுமே நினையுங்கள்.


ஒரு செயலில் ஈடுபட்டு நீங்கள் உழைக்கும்போது, “எப்படியும் நான் இச்செயலில் வெற்றி பெற்றே தீருவேன்” என்று நினையுங்கள். வேறு எதையும் நீங்கள் நினைக்கக்கூடாது. வெற்றி ஒன்றையே எண்ணினால் மட்டும் போதுமா? வெற்றி பெறுவதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும். கடுமையான முயற்சிகள் இல்லாவிட்டால் எந்தக்காரியமும் வெற்றி பெறாது.


தன்னம்பிக்கை இல்லாமல் வெற்றி இல்லை


நீங்கள் வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணமாக அமைவது தன்னம்பிக்கைதான். தன்னம்பிக்கை என்ற மாபெரும் சொத்தை நீங்கள் இழந்த பின்பு, ‘வெற்றி வெற்றி’ என்று வெறுமனே முழக்கமிட்டு என்ன பயன்? அது வெற்றுரையாகத்தான் இருக்குமே ஒழிய வெற்றி உரையாக இருக்காது. தன்னை நம்பிச் செயல்படுகின்றவனுக்கு எல்லா பலமும் உண்டாகும். நீங்கள் எந்தப் பலமும் இல்லாமல் வெற்றிக் கனியைப் பறிப்பது எப்படி?
எனவே, நீங்கள் உங்கள் மேல் மலையளவு நம்பிக்கை கொள்ளுங்கள். அதன் பிறகு பாருங்கள். நீங்கள் எந்த முழக்கமும் இடாமல், வெற்றி என்ற திருமகள் உங்களைத் தேடிவருவாள்.

 

நம்பிக்கை இழக்காத நெஞ்சுரம் வேண்டும்


எந்த நிலையிலும் நீங்கள், உங்கள் மேல் கொண்டிருக்கும் நம்பிக்கையை இழக்காதீர்கள். யானைக்குத் தும்பிக்கை, மனிதனுக்கு நம்பிக்கை. நம்பிக்கை இழக்காத நெஞ்சுரம் கொண்டிருந்தால், நீங்கள் வரலாற்று ஏடுகளில் எழுதப்படுவீர்கள். உலகத்தையே தன் கொற்றக்குடை நிழலின் கீழ்க்கொண்டு வரமுடியும் என்று நம்பினான்,

 

கிரேக்க மாவீரன் அலெக்சாண்டர். அவன் கொண்ட நம்பிக்கை கடலைவிடப் பெரியது. அதனால் சரித்திரத்தில் இன்றைக்கும் அழியாத புகழோடு விளங்குகின்றான். தன்னுடைய வீரத்தின் மீது அவனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. தன் படை பலத்தின் மீது அவனுக்கு நம்பிக்கை இருந்தது. அந்த மாவடீரனை எதிர்த்து நின்று தோற்றான், புருஷோத்தமன் என்ற அரசன். “என்னை நீ அரசனைப்போல நடத்த வேண்டும். நான் உனக்கு அடிமை அல்ல…” என்று கம்பீரமாக மிடுக்குடன் சொன்னான். நாட்டை இழந்த பின்னும் அவனுடைய நம்பிக்கை இழக்காத நெஞ்சுரத்தைக் கண்டு மிகவும் வியந்துபோனான், அலெக்சாண்டர். “நீ என்னிடம் இழந்த நாட்டை நீயே ஆண்டு வருவாயாக” என்று சொல்லிவிட்டு, அந்த நாட்டைவிட்டு அகன்றான், அலெக்சாண்டர்.

 

நம்பிக்கை என்றைக்கும் தோற்றதில்லை


நீங்கள் உங்கள் மேல் கொள்ளும் நம்பிக்கையை எவராலும் தகர்க்க முடியாது. தன்னம்பிக்கைக்கு இலக்கணமாக விளங்கும் மாவீரன் நெப்போலியன், வாட்டர்லூ போரில் நெல்சனிடம் தோற்றுப் போனான். நெல்சனின் வீறு கொண்ட நம்பிக்கை, செயிண்ட் எலினாத் தீவில் நெப்போலியனைச் சிறையில் வைக்கச் செய்தது. நம்பிக்கை இழக்காத நெஞ்சுரம் கொண்ட நெப்போலியனை வென்று சிறையில் வைத்தான் என்றால், நெல்சனின் நெஞ்சுரம், இரும்பு நெஞ்சுரமாகத்தான் இருக்க வேண்டும்.


கெலம்பள்ளின் நெஞ்சுரம் மட்டும் பஞ்சுபோன்றதா? இல்லை. “எந்தக் கடலையும் கடந்து நான் சாதனை படைப்பேன். புதிய நாடுகளைக் கண்டுபிடிப்பேன்” என்று கொலம்பஸ் தன்மேல் கொண்ட நம்பிக்கை அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும். இறைவனாலும் இவனுடைய நம்பிக்கையை அசைக்க முடியாது. இவனுடன் வந்தவர்கள் இவனை மிகவும் வருந்தி வாட்டமடையச் செய்தனர். நம்பிக்கை இழக்காத வைர நெஞ்சுரம் கொண்டவன், கொலம்பஸ். “நான் தனியாகச் சென்றாவது நான் எண்ணியதை நிறைவேற்றுவேன்” என்று சூளுரைத்தான். நினைத்ததை முடித்தான். அமெரிக்காவைக் கண்டு பிடித்தான். வரலாற்றிலே நிலையான புகழைப் பெற்றுவிட்டான்


நம்பிக்கை இழக்காத நெஞ்சுரம் கொண்ட தமிழக மன்னர்கள்


நம்பிக்கை இழக்காத நெஞ்சுரம் கொண்டதால், கடாரம் சிங்களம், சாவகம் போன்ற நாடுகளைக் கைப்பற்றி வெற்றி வீரனாக விளங்கினான், கரிகாலன். தமிழ் மன்னர்களைக் கேவலமாகப் பேசிய கனக, விசயரை வெல்வதற்குக் கங்கையைக் கடந்து சென்றான், சேரன் செங்குட்டுவன். கனக விசயரின் கொட்டத்தை அடக்கியதோடு, இமயமலையில் தன்னுடைய நாட்டுக் கொடியைப் பொறித்ததோடு, அங்கேயிருந்து கல் எடுத்துவந்து, கண்ணகிக்குச் சிலை அமைத்துத் தமிழர்களின் புகழை உலகெங்கும் பரப்பினானே, சேரன் செங்குட்டுவன். நம்பிக்கை இழக்காத நெஞ்சுரம் கொண்டதால் தானே, இவைகளையெல்லாம் சாதிக்க முடிந்தது.

 

குறைகளை உடையவர்கள் நெஞ்சுரம் கொண்டு சாதித்தார்கள்.


விறகு வெட்டியின் மகனாகப் பிறந்தவர் ஆபிரகாம் லிங்கன். அருவருக்கத்தக்க உருவத்தைப் பெற்றிருந்த இவர், பல இன்னல்களுக்கிடையே கல்வி கற்றார். “நிறவெறிக் கொடுமைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண்பேன். அமெரிக்க அரசியலில் முதல் இடம் பெறுவேன்” என்று மனதில் உறுதி கொண்டார். நம்பிக்கை இழக்காத நெஞ்சுரத்தைப் பெற்றதால் தான் அமெரிக்காவின் அதிபராக விளங்கினார், ஆபிரகாம் லிங்கன். ஜனாதிபதி பதவி ஏற்றதும் நிறவெறிக் கொடுமைகளுக்கு நிரந்தரத் தீர்வைக் கண்டார்.


விழிகளை இழந்த ஜான்மில்டன், “மீண்ட சொர்க்கம்” என்ற அழியாத காவியத்தை இயற்றுவதற்குக் காணரமாக இருந்தது, அவருடைய நம்பிக்கை இழக்காத நெஞ்சுரமே.


“காதலித்துக் காதலில் தோல்வி அடைவது என்பது, காதலிக்காமல் இருப்பதைக் காட்டிலும் சிறந்தது” என்ற வரிகள் அழியாப் புகழ் பெற்றவை. இவ்வரிகளை எழுதிய கவிஞர் லார்டு டென்னிசன், ஆங்கில இலக்கியத்தின் சிறந்த கவிஞராகப் போற்றப்படுகிறார். வலிப்பு நோயால் இவர் வாடிய போதும், உலகப்புகழ்பெற்ற கவிதை நூல்களை எழுதினார். அவருடைய நம்பிக்கை இழக்காத நெஞ்சுரம், சிறந்த இலக்கியங்களைப் படைக்க வைத்தது.
நம்பிக்கை இழக்காத நெஞ்சுரம் உங்களுக்கும் வேண்டும்.


இவ்வாறு எண்ணற்ற சாதனையாளர்கள் தங்களுக்கிருந்த குறைபாடுகளையும் – ஊனங்களையும் – பிணிகளையும் பொருட்படுத்தாமல் மிகச்சிறந்த சாதனைகளைப் படைத்திருக்கிறார்கள் என்று சொன்னால் அதற்குக் காரணம், அவர்களிடத்திலுள்ள நம்பிக்கை இழக்காத நெஞ்சுரமே ஆகும்.


நீங்களும் இவர்களைப் போல மிகச்சிறந்த சாதனைகளைப் படைக்க முடியாதா? இந்த உலகம் உங்களை ‘உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா’ என்று அழைக்கிறது. ‘நாம் விரும்பும் துறையில் சிறந்த சாதனைகளைப் படைப்பேன்’ என்று நம்பிக்கை இழக்காத நெஞ்சுரத்தோடு நீங்கள் உழைத்தால், இந்த உலகமே உங்களின் பின்னால் வரும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் – கேலி பேசுகிறார்களே – நக்கல் செய்கிறார்களே – பொறாமைத் தீயை என்மேல் உமிழ்கிறார்களே – வசைச் சொற்களால் என்னைத் திட்டுகிறார்களே என்று கொஞ்சமும் வருத்தப்படாமல், நம்பிக்கை இழக்காத நெஞ்சுரத்தோடு முன்னேற்றப் பாதையில் நீங்கள் சென்று கொண்டிருங்கள். சாதனை என்ற காதலி, உங்களை ஆர்வத்தோடு வரவேற்று உங்களை ஆலிங்கனம் செய்யக் காத்துக் கொண்டிருப்பாள்.

 

தாராபுரம் சுருணிமகன்

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.