Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வால்மார்ட்டை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம்: - சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Namthamilar-wallmart-221212-news-400-150

தமிழ்நாட்டில் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் பல்லாயிரக்கணக்கான சிறு கடைகளையும், மளிகை கடைகளையும் முடக்கும் வகையில் சென்னையில் திறக்கப்படவுள்ள வால்மார்ட் நிறுவனத்தின் சில்லரை வணிக கடையை செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கூறினார். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததை எதிர்த்தும், யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலையும் கண்டித்தும், பல மணி நேர மின்வெட்டைக் கண்டித்தும் சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே நாம் தமிழர் கட்சியின் சார்ப்பில் வெள்ளிக்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய செந்தமிழன் சீமான், சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை எதிர்ப்பதாக கூறிவிட்டு, நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் அந்த முடிவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பில் தி.மு.க. உறுப்பினர்கள் ஆதரித்தது, அக்கட்சித் தலைவர் கருணாநிதி நடத்திய கபட நாடகம். அந்நிய நேரடி முதலீட்டிற்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு, இங்கு சென்னையில் வால்மார்ட் நிறுவனம் கட்டிவரும் கட்டடத்தை தடுத்து நிறுத்துமாறு தமிழக அரசுக்கு கருணாநிதி கோரிக்கை விடுப்பது தொட்டிலை ஆட்டுவதற்கு பிள்ளையை கிள்ளிவிடுவது போன்ற மோசடி அரசியலாகும் என்று கூறினார்.

 

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=geovdHxen_A[/xml]

 

"சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை எதிர்ப்பதில் தமிழக அரசு உள்ளபடியே உறுதியாகவும், நேர்மையாகவும் இருக்குமானால், சென்னையில் வால்மார்ட் நிறுவனம் கட்டடம் கட்ட அனுமதிப்பது ஏன்? கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடி வரும் மக்களுக்கு ஆதரவாக இருப்பேன் என்று கூறிவிட்டு, சங்கரன் கோயில் இடைத்தேர்தல் முடிந்த மறுநாளே அணு உலை செயல்படுவதற்கான ஆதரவு தந்ததுபோல், சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை இப்போது எதிர்க்கும் தமிழக முதல்வர், தனது முடிவை மாற்றிக்கொண்டு ஆதரிப்பாரா? என்கிற ஐயம் ஏற்படுகிறது.

நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை, வால்மார்ட் உள்ளிட்ட பன்னாட்டு சில்லரை வர்த்தக நிறுவனங்கள் எதுவும் தமிழ்நாட்டில் கால் பதிக்க விடமாட்டோம். அவற்றை எதிர்த்து நாங்கள் போராட்டம் நடத்தும்போது தமிழக அரசு என்ன செய்கிறது என்பதைப் பொறுத்து, அதனுடைய நேர்மையை தமிழக மக்கள் புரிந்துகொள்வார்கள்.

 

Namthamilar-wallmart-221212-news-400-001

 

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டைக் கண்டித்து தி.மு.க. போராட்டம் நடத்துவதுதான் மிகப் பெரிய அரசியல் கபட நாடகமாகும். தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டு இல்லாமலா இருந்தது. அப்போதும் மின்வெட்டு, இப்போதும் மின்வெட்டு. திராவிட அரசுகளின் ஆட்சியில் தமிழ் நாடு இருட்டில் தள்ளப்பட்டுள்ளது.

காவிரி நதியில் தமிழ்நாட்டிற்குரிய பங்கு கிடைக்காததால், தஞ்சை தரணியில் வரப்பளவிற்கு வளர்ந்துவிட்ட நெற்பயிர்கள் காய்ந்துபோகும் நிலை ஏற்பட்டு, பல இலட்சக்கணக்கான விவசாய பெருமக்களின் வாழ்க்கை கேள்விக்குரியதாகியுள்ளது. காவிரி நதியில் நமக்குரிய பங்கை கர்நாடக அரசு தர மறுக்குமானால், நெய்வேலியில் இருந்து போகும் மின்சாரத்தை நிறுத்துவோம் என்று தமிழக முதல்வர் எச்சரிக்க வேண்டும்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நம் இனத்தின் விடுதலைகாக நடந்த போரில் தம் இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களுக்கு விளக்கேற்றி வீரவணக்கம் செய்த மாணவர்கள் மீது சிங்கள் இராணுவமும், காவல் துறையும் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை இந்திய மத்திய அரசு ஏனென்று கேட்கவில்லை. டெல்லியில் ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதற்கு இந்தியாவின் அனைத்து ஊடகங்களும் எதிர்த்து குரல் கொடுக்கின்றன. ஆனால் தமிழீழத்தில் நமது பெண்கள் சிங்கள இராணுவத்தினரால் பல்லாயிரக்கணக்கில் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொல்லப்பட்டத்தை இந்திய நாட்டின் ஒரு ஊடகம் கூட கண்டிக்கவில்லையே ஏன்? தமிழன் அடிப்பட்டால் அதனை தட்டிக்கேட்க ஒருவரும் இல்லை. ஆனால் தமிழன் திருப்பி அடித்தால் அதனை பயங்கரவாதம் என்று சர்வதேசம் கூறுகிறது, இது நியாயம்தானா?

தமிழ் இனமும், தமிழ்நாடும் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளை கையில் எடுத்துக்கொண்டு தீர்வு காண எந்த அரசும் வரவில்லை. இந்த நிலையை மாற்ற வேண்டும். நம் பிரச்சனைகளை கையெடுக்க மறுக்கும் அரசுகளை நாம் கைபற்ற வேண்டும். அது மட்டுமே தமிழினம் சந்தித்துவரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வைத் தரும்� என்று சீமான் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கலைக்கோட்டுதயம், கா. அய்யநாதன், அன்புத் தென்னரசன், வெற்றிக்குமரன், அமுதா நம்பி, மருத்துவர் இளவஞ்சி, குமுதவல்லி, பெரியார் அன்பன், காஞ்சி எழிலரசன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும், உறுப்பினர்களும், ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=72476&category=IndianNews&language=tamil

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

சிறு வியாபாரத்தில் கோலோச்சி வந்த நாடார் சமூகத்தின் முதலாளிகள் தொன்றுதொட்டு காங்கிரஸ்காரர்கள். இன்று அவர்கள் பிழைப்பிலேயே காங்கிரஸ் மண்ணள்ளிப் போட்டுவிட்டது. :rolleyes:

 

இப்போது சீமானைக் கூப்பிடுகிறார்களாம்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் வால்மார்டை எதிர்ப்பது அமெரிக்காவை எதிர்ப்பது போல்.

இது எமது ராஜதந்திர முன்னெடுப்புகளுக்கு இடையூறு வகுக்கும்.

 

விக்..

 

அமெரிக்கா ஜி.எஸ்.பி சலுகைகளை இன்னும் வழங்கிக் கொண்டுள்ளது. காரணம் அமெரிக்க முதலாளிகள். இலங்கையைக் கைவிட்டால் முதலாளிகள்பாடு திண்டாட்டம்.

 

இப்போது தமிழகத்திலும் பல அமெரிக்க முதலாளிகள் கால்பதித்துவிட்டார்கள். இந்த முதலீட்டின் அளவு இலங்கையில் செய்ததை விட பன்மடங்கு அதிகம்.

 

இந்த முதலீட்டுக்குப் பங்கம் வருமாக இருந்தால், தமிழக அரசியல் வலுவுக்கு அமெரிக்காவில் கூடுதல் மரியாதை ஏற்படும். :rolleyes:

 

இலங்கை உற்பத்தியா.. அல்லது தமிழகத்தின் வியாபாரமா என்று வரும்போது மக்கள் தொகை கூடிய இடமே தெரிவு பெறும். அவர்களது அரசியல் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கப்படும்.

 

ஆகவே, ஈழத்தின் திறவுகோல் என்பது தமிழகத்தின் எழுச்சியிலேயே தங்கியுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

 

சும்மா  இருப்பதைவிட பேரம் பேசும் சக்தியாகவாவது வளர்வது நல்லது

 

அந்தவகையில் சீமானது பார்வை  சரியானதே.

நாம் தமிழர் கட்சி பொதுக்குழுவில் சீமான் உரை

 

மார்கழி 21, 2012

நேற்று (20-12-12)நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுவில் கட்சியினர் மத்தியில் செந்தமிழன் சீமான் அவர்கள் ஆற்றிய கட்சியினருக்கான அறிவுரை உரை

 

 

 

http://urumal.com/archives/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.