Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் எப்போது அணிலாக அவதாரமெடுக்கப் போகிறோம்???

Featured Replies

வரிசைப் படுத்தி எண்களைக் கணக்கிட்டால் 5 சிறியது 6 பெரியது. ஆனால் இங்கே ஐந்து பெரிதென்றும் ஆறு சிறிதென்றும் குறிப்பிடுவதற்குக் காரணம் ஆறறிவு உயிரான மனிதர்களை விட ஐயறிவுயிர்களான விலங்குகளும் பறவைகளும் பண்பில், பழகும் தன்மையில், பாசம் காட்டுவதில், தொலைநோக்குச் சிந்தனையில் மனிதனைக் காட்டிலும் உன்னதமானதாக விளங்குகின்றன. நுகர்வுக் கலாசாரத்தின் நுகர்தன்மையில் பூட்டப்பட்ட மனிதன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் தன் இயல்பை இழந்து இருப்பைத் தொலைத்து மீண்டும் அவன் பழைய கற்காலத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறான். காலம் எத்தனை கோலம் போட்டாலும் ஐயறிவுயிர்கள் தத்தம் இயல்பை இழந்துவிடாமல் தங்களைத் தற்காத்துக் கொள்கின்றன. இதை சம கால மனிதனுக்கு உணர்த்தத்தான் விருதுகள் பல பெற்று தமிழுக்கு நாளும் விருந்து படைக்கிற கவிஞன் வைரமுத்து ஐந்து பெரிது ஆறு சிறிதென்றான். அதுவே இந்தக் கட்டுரைக்கு வித்தாயிற்று.

 
birds.png
 
எச்சரிக்கை உணர்வும் முயற்சியின்மையும் மனிதனை இன்று முடமாக்கி விடுகின்றன. ஆயிரம் பூக்கள் மலர்ந்தாலும் அதன் மணத்தை நுகர்வதற்கு அவன் தயாராக இல்லை. வாய்ப்பின் வாசலைத் தட்ட மறுத்து கருமம் தலையெழுத்து கடவுள் வகுத்த விதி என்று சோம்பிக் கிடக்கிறான் மனிதன். சவால்களைச் சந்திப்பதற்கும் அறைகூவலைத் துணிச்சலாக எதிர்கொள்வதற்கும் மனிதன் தயங்குவதால் தான் முன்னேற முடியாமல் தத்தளிக்கிறான். தவிக்கிறான். ஆனால் விலங்குகளைப் பாருங்கள். ஆப்பிரிக்கக் காடு, ஒவ்வொருநாள் காலையிலும் அந்தக் காட்டில் மான் விழித்து எழுகிறது. அந்தக் காட்டிலேயே அதிவேகமாக ஓடக்கூடிய சிங்கத்தை விட வேகமாக ஓட வேண்டும். இல்லையெனில் சாவு தான் என்பது மானுக்குத் தெரியும். அதே காட்டில் ஒவ்வொரு நாள் காலையிலும் ஒரு சிங்கமும் விழித்து எழுகிறது. தன்னை விட வேகமாக ஓடும் மானைவிட வேகமாக ஓட வேண்டும். இல்லையெனில் பட்டினி தான் என்பது அந்த சிங்கத்துக்குத் தெரியும். மனிதன் இன்று சிங்கமாகவும் இல்லை மானாகவும் இல்லை.

எப்படி இருக்கிறீர்கள் என்று யாரைக் கேட்டாலும் நலமாக இருக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று பதில் வருகிறதா என்றால் இல்லை. ஏதோ இருக்கிறேன் என்று முணு முணுக்கிறானே தவிர முகத்தில் மலர்ச்சி இல்லை காரணம் இவன் தன்னை அடுத்தவனோடு ஒப்பிட்டு இளைத்துப் போகிறான். இல்லாவிட்டால் அடுத்தவனைக் கெடுக்க வேண்டும் என்ற நினைப் போடு ஒவ்வொரு நாளையும் நகர்த்துகிறேன்.
 
squirrel+2.jpg
 
ஆனால் இதற்கு மாறாக ஒரு குட்டி அணில் மரத்தில் தாவித் தாவி மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அது தவறிப் போய் மரத்துக்குக் கீழே தூங்கிக் கொண்டிருந்த ஒரு ஓநாய் மேல் விழுந்தது. உடனே அந்த ஓநாய் அணிலைப் பிடித்துக் கொண்டது. ஓநாய் அண்ணா! குட்டி அணிலான என்னைத் தின்றால் உன் பசி தீருமா ? தயவு செய்து என்னை விடு என்று கெஞ்சியது. நான் ஒரு கேள்வி கேட்கிறேன். இதற்கு சரியான பதில் தந்தால் உன்னை விட்டு விடுகிறேன் என்றது ஓநாய். வேறு வழி இல்லாமல் அணிலும் சரி என்றது. என் கடைவாய்க்குக் கூடப் பத்தாத சின்ன அணிலான நீங்கள் எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என தாவித் தாவி ஓடி விளையாடுகிறீர்கள். ஆனால் உங்களை விட ரொம்ப சக்தியுள்ள நாங்கள் கோபமாக இல்லாவிட்டால் சோகமாக இருக்கிறோம். எங்களால் ஏன் உங்களை மாதிரி மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை என்று கேட்டது ஓநாய். என்னை மரத்துக்கு மேல் போகவிட்டால் நான் உங்கள் கேள்விக்குத் திருப்தியான பதிலைத் தர முடியும் என்றது அணில். ஓநாயும் சம்மதித்தது. அணிலை மரத்துக்குப் போகவிட்டது. மரத்தின் உச்சிக்குச் சென்று அணில் சொன்னது ” ஓநாய்களான நீங்கள் எப்போதுமே அடுத்தவர்களுக்குக் கெட்டதையே செய்கிறீர்கள். கெட்டது செய்கிறவர்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும். அதனால் நீங்கள் கோபமாகவும் வெறுப்பாகவும் சோகமாகவும் இருப்பதில் ஆச்சரியமில்லை. அணிலான நாங்கள் யாருக்கும் எப்போதும் எந்தக் கெடுதலும் செய்வதில்லை. நினைப்பதும் இல்லை. அதனால் மனம் சுத்தமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்றது அணில்.
 
grey-wolf_565_600x450.jpg
 
 
நாம் எப்போது அணிலாக அவதாரமெடுக்கப் போகிறோம்?
 

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் நாங்கள், புலியாக... இருப்பதே.. நல்லது.
அணிலும், ஓநாயும்... ஏட்டுச் சுரைக்காய், கறிக்குதவாது.

தமிழர் நாங்கள், புலியாக... இருப்பதே.. நல்லது.

அணிலும், ஓநாயும்... ஏட்டுச் சுரைக்காய், கறிக்குதவாது.

 

 நீங்க நீங்க புலி! இது பெரிய பகிடி! டிசம்பர் மாத பொற்கிளிக்காவா!ஆஹா!ஆஹா!

  • தொடங்கியவர்

தமிழர் நாங்கள், புலியாக... இருப்பதே.. நல்லது.

அணிலும், ஓநாயும்... ஏட்டுச் சுரைக்காய், கறிக்குதவாது.

 

புலிக்கும் அணிலுக்கும் இதில் என்ன சம்பந்தம் ??

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

கோமகன் அண்ணா,  அபோகலிப்ஸ் 2012 என்று ஒரு விவரண படம் பார்த்தேன்.  அதில் வாட்டலூ பல்கலைகழக முனைவர் மனிதரின் மன உளைச்சலுக்கு கூறிய காரணங்கள்.

1)  மக்கள் தொழில்நுட்பத்தால் உலகத்துடன் தம்மை ஒவ்வொரு நாள் வாழ்க்கையிலும் ஈடுபடுத்தியது.

2) மக்கள் தாம் வாழ்க்கைக்கு தங்கி இருக்கும் தமது ஊர்களோடு தொடர்பை இழந்தது.

3) மற்றும் சொந்த பந்தங்களோடு தொடர்புகளை குறைத்தது.

போன்ற காரணங்களை வைத்து வாதாடினார்.  

இந்த காரணங்களால் நாம் நம்பிக்கை இழந்து 

கிரேக்கத்தில் கடன் என்றால் கனடாவில் வேலை போய்விடுமோ என்ற பயம் பீடித்துவிடுகிறது.

அதனால் எல்லாம் இருந்தும் அது இல்லாமல் போய்விடும் என்று பயம்.

மற்றும் நல்ல ஒரு அலசல் கட்டுரையை இந்த அணில் ஓநாய் கதை சிதைக்கிறது என்பது என் கருத்து.

 

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் விவசாயி விக் . என்னைப் பொறுத்தவரையில் அணில் ஓனாயை இதில் ஓர் உருவகமாகவே பார்க்கின்றேன் . அதாவது ஒரு பரியாரி தேனைத் தடவிக் கசப்பான மருந்தை நோயாளிக்குக் கொடுப்பது போல .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.