Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் வாழ்வியல் கருவூலம் பாகம் இரண்டு

Featured Replies

வணக்கம் வாசகர்களே கள!!!!! உறவுகளே !!!!!!!

 

சிறிது இடைவெளியின் பின்பு தமிழர் வாழ்வியல் கருவூலம் பாகம் இரண்டின் மூலம் உங்களைச் சந்திக்கின்றேன் . பலர் கருத்திடத் தவறினாலும் ,  பல்லாயிரக்கணக்கான வாசகர்களை சென்றடைந்தது எனது முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியாகும் . அது தந்த உந்துதலினால் இரண்டாவது பாகத்தை ஆரம்பிக்கின்றேன் . இந்தத் தொடரில் உங்கள் கருத்துக்களுக்கு என்று நான் தனியாகத் திரி திறக்கவில்லை . இதிலேயே உங்கள் கருத்துக்களை தேவயற்ற அரட்டைகளைத் தவிர்த்துப் பதிந்தால் நான் மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன் . வழமைபோலவே உங்கள் ஆதரவினையும் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன் .

 

நேசமுடன் கோமகன்

 

பாகம் ஒன்றிற்கு இங்கே அழுத்துங்கள்

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=96394

 

******************************************************************************

 

 

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி ( The Greatness of a King ,Des qualités du Roi 380- 381 )

 

படைகுடி கூழ்அமைச்சு நட்பு அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு. 381

 

படையும், செல்வமும், கூழும்,( குடிமக்கள் )அமைச்சும் , நட்பும் , அரணும் ,( கோட்டை ) என்று சொல்லப்பட்ட ஆறு உறுப்புகளையும் உடையவன் அரசருள் ஆண்சிங்கம் போன்றவன்.

 

என்கருத்து:

 

வீரம் மிக்க படை, நாட்டுப்பற்று மிக்க மக்கள், எடுக்கக் குறையாத செல்வம், நாட்டின் நலம் அறிந்து செயல்படும் அமைச்சர், துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு, அழிக்கமுடியாத காவல் இந்த ஆறு விசையதிலையும் ஒரு அரசு முழுமையாய் இருந்தால் தான் அது ஒழுங்கான அரசு எண்டு ஐயன் சொன்னாலும் , இந்த அரசுகளுக்கு கோமாளியள் அல்லோ ஐயா அரசர்மாராய் வாறாங்கள் . அரசரும் மண்டையுக்கை சரக்கு இருக்கிற அரசர் வந்தால்தானே அரசும் ஒழுங்காய் இருக்கும் .

 

An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings.

 

C’est un lion parmi les Rois, que celui qui est doté des six choses suivantes : armée, territoire peuplé, richesse, ministre, alliance et fortresse.

  • Replies 146
  • Views 10.7k
  • Created
  • Last Reply

என்ன செய்யிறது கோமகன் பலனை எதிர்பாராமல் உங்கள் கடமையை சரிவரச் செய்யுங்கள். நிச்சயம் ஒரு நாள் பலன் கிட்டும்.

  • தொடங்கியவர்
என்ன செய்யிறது கோமகன் பலனை எதிர்பாராமல் உங்கள் கடமையை சரிவரச் செய்யுங்கள். நிச்சயம் ஒரு நாள் பலன் கிட்டும்.

 

முதல் பிள்ளையார் சுழி போட்டிருக்கின்றீர்கள் . உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் மயூரன்  :)  :)  .

  • தொடங்கியவர்

அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க்குஇயல்பு. 382

மனவுறுதி , கொடை , அறிவு , ஊக்கம் எனப்படும் நான்கு சிறிதும் குறையாதிருத்தாலே அரசர்க்கு இயல்பாகும் .

என்கருத்து:

ஐயன் நீங்கள் சொல்லுறியள் நெஞ்சிலை துணிவும் , சனத்துக்கு தேவையான உதவியளை செய்யிறது , வாற பிரச்சனையளை முதலே அறியிற புத்தி , ஆபத்து வந்தாலும் அதைக்கண்டு பயப்பிடாமல் முன்னுக்கு வைச்ச காலை பின்னுக்கு வைக்காமல் முன்னேறிற குணமெல்லாம் , எங்கடை தம்பிக்கு இருந்திது . ஆனால் நீங்கள் முதல் குறளிலை சொன்ன " துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு " எண்ட நசலைப் பாவிச்சுதான் ஐயா கவிட்டாங்கள் .

 

Courage, a liberal hand, wisdom, and energy: these four Are qualities a king adorn for evermore.


Voici les quatre qualités naturelles du Roi : vaillance, libéralité, sagesse et énergie.

  • தொடங்கியவர்

தூங்காமை கல்வி துணிவு உடைமை இம்மூன்றும்
நீங்கா நிலன்ஆள் பவர்க்கு. 383

 

நாட்டை ஆளும் அரசனுக்கு ஒரு செயலைச் செய்வதில் காலம் தாழ்த்தாமை. கல்வி , துணிவு ஆகிய மூன்றும் எப்போதும் நீங்காமல் இயல்பாக இருத்தல் வேண்டும் .

 

என்கருத்து:

 

இப்பிடியான அரசர்களை நானுந்தான் தேடிறன் , கிடைச்சால்தானே ? இப்பத்தையான் அரசர்மார் லெக்சன் நேரத்தில மட்டும்தான் சனத்திட்டை வருவினம் . தாங்கள் போட்ட காசுகளை வளக்கிற அலுவலுகளை தங்கடை ஆட்சிக்காலத்திலை பாத்துக்கொள்ளுவினம் ஐயன் .

 

A sleepless promptitude, knowledge, decision strong: These three for aye to rulers of the land belong.


Trois vertus sont inhérentes à ceux qui gouvernent terre : l’activité, l’instruction et la décision.

  • தொடங்கியவர்

அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா
மானம் உடையதுஅரசு. 384

 

ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி ,வீரத்தில் குறைவுபடாது மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான் .

 

என்கருத்து:

 

இண்டையான் திகதியிலை இந்த மூண்டுக்கும் எதிராய் நடக்கிற அரசர்மார்தான் ஐயன் சீவிக்கினம் . அவைக்குத் தான் சனமும் சப்போர்ட் பண்ணிது . லெக்சன் நேரத்திலை இப்பிடியான அரசர்மார் இல்லாதபொல்லாத பொய்யளைச் சொல்லி சனங்களை செம்மறிக்கூட்டங்களாய்தான் நடத்துவினம் .

 

Kingship, in virtue failing not, all vice restrains, In courage failing not, it honour's grace maintains.


Ne pas faillir à la vertu, abolir ce qui n’est pas vertueux, garder l’honneur en ne manquant jamais aux lois de la bravoure : voilà le propre du Roi.

 

  • தொடங்கியவர்

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லதுஅரசு. 385

 

பொருள் வரும் வழிகளை உண்டாக்குவதிலும் , வரும் பொருளைச் சேமித்தலும் , பாதுகாத்தலிலும் தக்க வழியில் செலவிடுதலிலும் வல்லதே அரசே .

 

என்கருத்து:

 

இதிலை இப்பத்தையான் அரசர்மார் முதல் ரெண்டையும் வலுகிளீனாய் செய்யினம் . ஆனால் மூண்டாவதை மட்டும் தங்களுக்குத்தான் செய்யினம் . குடிமக்கள் எப்பிடிபோனாலும் இவைக்கு கவலை இல்லை பாருங்கோ .

 

A king is he who treasure gains, stores up, defends, And duly for his kingdom's weal expends.


Celui qui a le pouvoir de développer les moyens des revenues, de les thésauriser, de les préserver et des les dépenser dignement est le Roi.

 

  • தொடங்கியவர்

காட்சிக்குஎளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம். 386

 

அரசன் தன்னைக் காண வருபவர்க்கு எளியனாகவும் , கடுஞ்சொல் பேசாதவனாகவும் இருப்பானாயின் அவன் நாட்டை உலகத்தார் உயர்த்திப் புகழ்வர் .

 

என்கருத்து:

 

இதுக்கு எதிர்மாறாய் இருக்கிற அரசைத்தான் ஐயன் இண்டைக்கு உலகம் புகழிது . நாங்களும் நீதி கேக்கிறம் . எங்களுக்கு நடந்த அனியாயம் உலகத்துக்கே தெரியும் . ஆனால் உலகமோ அல்லது இந்த அரசர்மாரோ நீங்கள் சொன்னபடியோ நடக்கீனம் ??

 

Where king is easy of access, where no harsh word repels, That land's high praises every subject swells.


 

Si le roi est d’un abord facile et s’il n’use pas de paroles dures,
son royaume sera considéré parmi tous les autres.

  • தொடங்கியவர்

இன்சொலால் ஈத்துஅளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டு அனைத்துஇவ் உலகு. 387

 

இனிமையான சொல்லோடு துன்புறுவோர்க்கு வேண்டியதைக் கொடுத்துக் காப்பாற்றவல்ல அரசன் தன் மனதில் கருதியவாறே உலகமும் அமையும் .

 

என்கருத்து:

 

சரி ஐயன்........ தமிழருக்கு துன்பங்கள் இண்டைக்கு நேற்றைக்கு வரேலை . எங்கடை பரம்பரையே அழிஞ்சிது . ஒரு நல்ல சொல்லையோ , எங்கடை துன்பத்துக்கோ எந்த சிங்க அரசர்களும் செய்யேலை . எப்பிடி ஐயா அவைக்கு நினைச்ச மாதிரி உலகம் அமைஞ்சுது ??

 

With pleasant speech, who gives and guards with powerful liberal hand, He sees the world obedient all to his command.


Si le Roi a le pouvoir de donner avec des paroles gracieuses et de protéger (ses sujets), ce monde est rempli de sa gloire et il obtient tous les Biens qu’il souhaite.

  • தொடங்கியவர்

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன், மக்கட்கு
இறைஎன்று வைக்கப் படும். 388

 

நீதி செலுத்தி பகைவர் வருந்தாமல் பாதுகாத்து வரும் மன்னன் மக்களால் கடவுள் என்று சிறப்பித்து மதிக்கப்படுவான் .

 

என்கருத்து:

 

இந்த நீதி வழங்கிறதுக்கும் ,அரசுக்கும் எட்டில வியாழன் கண்டியளோ . றோட்டிலை பஸ்சில பெண்பிரசுகள் போகேலாது . கொலையை செய்யிறவன் , சனங்களிட்டை காசுகளை ஆட்டையை போடிறவன் ராசாவாய் திரியிறான். அப்பாவியள் பேருக்கு சிறையிலை இருக்கிதுகள் . ஒருகாலத்தில நீங்கள் சொன்ன இலக்கணங்களோடை ஒரு அரசர் இருந்தவர் . எல்லாரும் சேந்து அவரையும் போட்டுத்தள்ளியாச்சு . நீங்கள் சொல்லிற சனத்தால கடவுள் எண்டு சொல்லிற அரசர்மார் ஒருத்தரும் இப்ப இல்லை .

 

Who guards the realm and justice strict maintains, That king as god o'er subject people reigns.


Le Roi qui’ en leur rendant la justice, protège (ses sujets) est considéré comme Dieu par les hommes.

  • தொடங்கியவர்

செவிகைப்பச் சொல்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. 389

 

அமைச்சர் முதலியோர் கூறும் உறுதிப் பொருள்கள் வெறுப்பாயிருந்தாலும் அவற்றின் பயன் கருதி அவற்றைப் பொறுத்துக் கொள்ளும் நற்பண்புடைய வேந்தனது குடை நிழலில் உலகமே தங்கும் .

 

என்கருத்து:

 

இப்பிடியான அரசுகளையும் அரசர்களையும் மியூசியத்திலை தேடினாலும் கிடைக்காது கண்டியளோ . ஈராக்குக்கு மேலை படையெடுக்காதையெண்டு எல்லாரும் தலைகீழாய் நிண்டாங்கள் . கேட்டாரோ அமெரிக்க அரசர் . இவரோடை லண்டன் சிங்சாக் வேறை . ரெண்டு கள்ளரும் ஈராக்கை ஆட்டையைப் போட்டதுதான் மிச்சம் .

 

The king of worth, who can words bitter to his ear endure, Beneath the shadow of his power the world abides secure.


Le monde restera (d’une façon permanente) sous l’ombrelle du Roi,
qui a la force de supporter les paroles (de son ministre) qui blessent les oreilles.

  • தொடங்கியவர்

கொடைஅளி செங்கோல் குடிஓம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க்கு ஒளி. 390

 

கொடையும் , இரக்க குணமும் , நீதி தவறாமையும் , ஏழ்மையான மக்களைக் காத்தலும் ஆகிய நான்கையும் உடைய வேந்தன் வேந்தர்க்கெல்லாம் ஒளிமிக்க விளக்காவான் .

 

என்கருத்து:

 

இப்பிடியான வேந்தருகளுக்கு இந்தக்காலத்திலை மதிப்பு இல்லை ஐயன் . மொள்ளைமாரியளுக்கும் முடிச்சவிக்கியளுக்கும் தான் ஐயன் காலம் . நீங்கள் சொன்ன இலக்கணங்களோடை ஒரு வேந்தர் இருந்தவர்தான் . ஆனால் நல்லவனை எல்லா மொள்ளைமாரியளும் சேந்து சீவிக்கவிடமாட்டாங்கள் , போட்டுத்தள்ளிப்போட்டாங்கள் .

 

Gifts, grace, right sceptre, care of people's weal; These four a light of dreaded kings reveal.


Le Roi qui a ces quatre qualités: faire des libéralités, accueillir avec grâce, appliquer équitablement les lois et recouvrer l’impôt suivant la capacité contributive du contribuable, est une lumière parmi les Rois.

  • தொடங்கியவர்

                பொருட்பால் - அரசியல் - கல்வி ( Learning , De l’Instruction.  )

 

கற்க கசடுஅறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. 391

 

ஒருவன் கற்றற்குரிய நூல்களை ஐயம் திரிபு ஆகிய குற்றங்கள் நீங்கக் கற்கவேண்டும் அங்கனம் கற்றபிறகு அவை கூறிய ஒழுக்க நெறியில் வழுவாது ஒழுக வேண்டும்

 

எனது கருத்து :

 

ஐயா ஒருத்தன் எல்லா காலத்திலையும் படிக்கிறான் . ஒரு காலத்திலை பூமி தட்டை எண்டு அவன் படிச்ச கல்வி சொல்லீச்சுது . கொஞ்சக்காலம் போக இல்லை பூமி உறுண்டை எண்டு அதே கல்வி சொல்லீச்சுது . அப்பிடி பாத்தால் கல்வி கற்றல் எண்டதே மாறுகின்ற விசையம்தானே ?? இந்த கல்வியில் " ஏன் " " எப்பிடி" எண்ட கேள்வியள் வந்ததாலைதானே இண்டைக்கு இவ்வளவு தூரத்துக்கு முன்னேறினம் .

 

So learn that you may full and faultless learning gain,

Then in obedience meet to lessons learnt remain.

Etudiez (les ouvrages). Etudiez-les de maniêre à détruire les doutes injustes. A près les avoir étudiés, conformez votre conduite à leur doctrine.

 

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.. 392

எண் என்று சொல்லப்படுவனவும் , எழுத்து என்று சொல்லப்படுவனவுமாகிய இரண்டினையும் மக்கள் உயிர்க்குக் கண்கள் என்பர் கற்றறிந்த பெரியோர்கள் .

எனது கருத்து :

ஐயா நீங்கள் சொல்லுஇறது சரிதான் . ஆனால் ஒருத்தன் எண்ணையும் எழுத்தையும் படிச்சால மட்டும் காணாது , வாழ்கையிலை அனுபவம் எண்டதையும் படிக்கவேணும் . இல்லாட்டில் அவனினரை எண்ணும் எழுத்தும் ஏட்டு சுரக்காயா போடும் .

 

The twain that lore of numbers and of letters give

Are eyes, the wise declare, to all on earth that live.

Ce qu’on appelle nombre et lettre: tous les deux sont les yeux du genre humain.



 

  • தொடங்கியவர்

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு
புண்ணுடையர் கல்லா தவர். 393

கல்வி கற்றாரே உண்மையில் கண்களையுடையவர்கள் என்று உயர்த்திச் சொல்லப்படுவர் . கல்லாதவர்கள் முகத்தில் புண்கள் இரண்டு உடையவராக இழித்துக் கூறப்படவர் .

எனது கருத்து :

இதிலை கற்றவர் எண்டால் ஆர் ??? படிச்சு பட்டம் எடுதவன் கற்றவனா ?? அப்பிடி பாத்தால் இந்தக்குறள் சொல்லிற கருத்து பக்கசார்பாய் இருக்கு . இண்டைக்கு படிச்சு பட்டம் பெற்றவை எல்லாம் " அனுபவம் " எண்ட கல்வி இல்லாமல் படிச்ச கோமாளியளாய் இருக்கினம் . வாழக்கை அனுபவத்தாலை படிச்ச கல்விமான்கள் எவ்வளவோ பேரை சரித்திரம் கண்டிருக்கு . அப்ப அவையும் இந்த குறளின்படி இரண்டு புண்களை கொண்டவையோ ??

 

Men who learning gain have eyes, men say ;

Blockheads' faces pairs of sores display.

 

Ceux qui l’on dit avoir des yeux, sont les hommes instruits;
ceux qui ne sont pas instruits ont deux plaies au visage.

 

  • தொடங்கியவர்

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில். 394

 

பலரும் மகிழுமாறு அவர்களுடன் கூடிப்பழகி , பின்னர் இவரை இனி எப்போது காண்போமோ என்று அவர்கள் எண்ணி ஏங்குமாறு அவர்களை விட்டுப் பிரிதலே கற்றறிந்த புலவர் தொழிலாகும்.

 

எனது கருத்து :

 

இண்டைக்கு படிச்சவை சந்திச்சால் " போத்தில் " அதிலை கட்டாயம் இருக்கும் . இல்லாட்டில் அது அவைக்கு மரியாதைக் குறைச்சல் . முதலிலை பம்பலாத்தான் போகும் பேந்து போகப் போக சுதி ஏற படிச்சவை தலைகீழாய் நிண்டு ஏன்ரா சந்திச்சம் எண்ட அளவுக்கு போகும் . என்னை பொறுத்தவரையிலை மற்றவனை சந்தோசப்படுத்த படிப்பு தேள்வையில்லை . மனுசனை மனுசன் மதிக்கிற குணம் இருந்தாலே காணும் .

 

You meet with joy, with pleasant thought you part; Such is the learned scholar's wonderous art!

 

La conduite des hommes instruits a le don de rejouir tous ceux qui les approchant et d’attrister tous ceux qui prennent congé d’eux.

 

  • தொடங்கியவர்

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர். 395

 

செல்வர் முன்பு வறியவர் ஏங்கி நின்று யாசித்தல் போலக் கல்வி உடையவர் முன்பு வணக்கத்தோடு பணிந்து நின்று கற்பவர்களே உயர்ந்தவராவர் . அவ்வாறு கல்லாதவர் தாழ்ந்தவரேயாவர்.

 

எனது கருத்து :

 

ஒரு பணக்காறனுக்கு முன்னாலை ஒரு கஸ்ரப்ட்டவன் எப்பிடி கூனிக்குறுகி நிக்கிறானோ , அதுமாதிரி தன்ரை ஆசிரியரிட்டை பணிவோடை கற்றவைதானாம் உயர்ந்தவை . அப்பிடி படிக்காதவை கல்லாதவை எண்டு நீங்கள் சொன்னாலும் , இண்டைக்கு ஆர் வாத்திமாரை மதிக்கினம் ?? வாத்திமாரை இண்டைக்கு கொமடி பீசாக்கி போட்டாங்கள் பிள்ளையள் .

 

With soul submiss they stand, as paupers front a rich man's face; Yet learned men are first; th'unlearned stand in lowest place.

 

Les hommes instruits se tiennent devant les possédants comme des pauvres, dans la même attitude humble (qu’ils ont eue devant leur Maître) tandis que ceux qui ne sont pas instruits (parce qu’ils ont eu honte d’observer une telle attitude) sont les derniers des hommes.

  • தொடங்கியவர்

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி; மாந்தர்க்குக்
கற்றனைத்துஊறும் அறிவு. 396

 

மணற்பங்கான இடத்தில் உள்ள கிணற்று நீர் , தோண்டும் அளவுக்கு ஏற்பச் சுரக்கும் . அதுபோல மக்களுக்கு அவர்கள் கற்ற கல்வியின் அளவுக்கு ஏற்ப அறிவு வளரும் .

 

எனது கருத்து :

 

எங்கடை பெரிசுகள் சொல்லுவினம் , சட்டியிலை இருக்கிறதுதான் அகப்பையிலை வருமெண்டு . இதைமாதிரித்தான் ஒருத்தன் எவ்வளவுக்கு எவ்வளவு படிக்கிறானோ அவ்வளவுக்கு அறிவிலை உயருவான் .

 

In sandy soil, when deep you delve, you reach the springs below;

The more you learn, the freer streams of wisdom flow.

 

La source jaillit dans le sable dans la mesure, où celui-ci est creusé; la connaissance jaillit chez les hommes, dans la mesure où ils ont étudié.

  • தொடங்கியவர்

யாதானும் நாடாமால், ஊர்ஆமால் ,என்ஒருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு. 397

கற்றவனுக்கு எந்த நாடும் சொந்த நாடாகும் ; எந்த ஊரும் சொந்த ஊராகும் . அப்படியிருக்க ஒருவன் சாகும் வரைக்கும் கல்லாமல் இருப்பது எதனால் ?

எனது கருத்து :

நல்ல கேள்வி ஐயன் . ஒருத்தன் படிக்காமல் விடுகிறதுக்கு எக்கச்சக்கம் காரணங்கள் இருக்கு . சில இடங்களில சாதி , கன இடங்களில படிக்க காசு இல்லை , அதுகளையும் தாண்டி இந்தக்காலத்திலை படிச்சால் நிறபேதம் எண்ட விசையத்தாலை ஒருத்தனை தரம் பிரிக்கிற அலுவலும் நடக்கிது . என்னைக்கேட்டால் வாழ்க்கையைப் படிச்சவன் உலகத்திலை எந்த மூலையிலையும் வெட்டி ஆடுவான் .

 

The learned make each land their own, in every city find a home;

Who, till they die; learn nought, along what weary ways they roam!

Pour l’hommes instruit, un pays quelconque est le sien; une ville quelconque est la sienne. Pourquoi donc ne pas s’instruire jusqu’à la mort.

 

  • தொடங்கியவர்

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து. 398


ஒருத்தனுக்கு அவன் ஒரு பிறவியில் கற்ற கல்வியானது அப்பிறவியோடு போகாது . ஏழு பிறவிகளிலும் தொடர்ந்து சென்று உதவும் இயல்பு உடையதாகும் .

எனது கருத்து :

உங்கடை கதைப்படிபாத்தால் ஒருத்தன் படிச்சால் அவன்ரை சந்ததியளும் படிச்சு அறிவாளியாகும் எண்டு . அது எத்தினை சதவீதம் ஐயன் ? பாட்டன் அப்பன் பெரிய படிச்சவங்களாய் இருப்பாங்கள் . பேரப்பெடி தலைகீழாய் நிக்கும் . அதின்ரை பெடி வேறை வழியாலை நிக்கும் . இதை ஏன் சொல்லிறன் எண்டால் ஒருத்தன்றை கல்வி அறிவை அவனின்றை சுற்றம் சூழல்தான் முடிவு செய்யும் .

 

The man who store of learning gains, In one, through seven worlds, bliss attains.

 

L’instruction reçue dans une existence a l’avantage de servir à l’homme pendant ses sept naissances.

 

  • தொடங்கியவர்

தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு
காம்உறுவர் கற்றறிந் தார். 399

 

கற்றறிந்தவர் தாம் இன்பமடையக் காரணமாகிய கல்வியால் , உலகத்தினரும் இன்பமடையும் சிறப்பைக் கருதி அக் கல்வியை மேலும் விரும்பிக் கற்பர் .

 

எனது கருத்து :

 

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எண்டு பெரிசுகள் தெரிஞ்சுதான் சொல்லியிருக்கினம் . படிக்கிறது நல்ல விசையம்தான் . ஆனால் வாழ்க்கை முழுக்க படிச்சுக் கொண்டிருந்தால் எப்ப வேலை செய்யிறது ?? தொடர்ந்து படிச்சு கொண்டிருந்தா வேலையில்லாத பிரச்சனையள் வராதோ ஐயன் ??

 

Their joy is joy of all the world, they see; thus more The learners learn to love their cherished lore.


Le hommes instruits se délectant à l’étude et constatent que le monde s’y délecte également: aussi désirent-ils s’instruire davantage.

 

  • தொடங்கியவர்

கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடுஅல்ல மற்றை யவை. 400

 

ஒருத்தனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியேயாகும். ஏனைய மணி , பொன் முதலிய செல்வங்கள் அழியக்கூடியன ஆதலால் அவை செல்வங்கள் ஆகா

 

எனது கருத்து :

 

நீங்கள் சொல்லிறது நூறுவீதம் ஞாயம் எண்டாலும் , இண்டைக்கு காசு எண்டிற அழியிற செல்வம்தான் , அழியாத கல்வியை கட்டி அவுக்கிது . எல்லாரும் காசு உழைக்கவேணும் எண்டிறதுக்காக கல்வி எண்ட சாமானை புறோக்கறாய் வைச்சிருக்கிறாங்கள் ஐயன் . இது கொஞ்சம் குழப்பமாய் இருந்தாலும் இண்டைக்கு அதுதான் உண்மை .

 

Learning is excellence of wealth that none destroy; To man nought else affords reality of joy.


La richesse glorieuse et impérissable d’un homme est l’instruction;
tous les autres Biens ne sont pas biens.

 

  • தொடங்கியவர்

பொருட்பால் - அரசியல் -கல்லாமை (  Ignorance , Du Défaut d'Instruction. )

 

 

அரங்குஇன்றி வட்டுஆடி அற்றே நிரம்பிய
நூல்இன்றிக் கோட்டி கொளல். 401

 

நிரம்பிய நூல் அறிவு இல்லாமல் ஒருவன் அறிவுடையோர் சபையில் சென்று பேசுதல், அரங்கம் இல்லாமல் வட்டாடுதல் போன்றதற்கு ஒப்பாகும்.

 

எனது கருத்து:

 

இதைத்தான் ஆழம் அறிஞ்சு காலை விடவேணும் எண்டு சொல்லுவினம் . ஒரு இடத்திலை ஒருவிசையத்தை பத்திக் கதைக்கவேணுமெண்டால் அதுசம்பந்தமய் சரியா தெரியவேணும். ஆனால் இந்த குப்பையில கிடக்கிற குண்டுமணி போலை இருக்கிற அறிவாளியளை எந்தவகையிலை சேர்க்கிறது ?? அவை எந்தப் புத்தகத்தை படிச்சவை ??

 

Like those at draughts would play without the chequered square, Men void of ample lore would counsels of the learned share.

 

Discourir dans une réunion, sans avoir une instruction pleine et entière,
c'est jouer aux dés sans damier.

  • தொடங்கியவர்

கல்லாதான் சொற்கா முறுதல் முலைஇரண்டும்
இல்லாதாள் பெண்காமுற்றுஅற்று. 402

 

கல்லாதவன் தானும் அவையில் பேசவேண்டும் என்று விரும்புதல் , இரண்டு முலைகளும் இல்லாத ஒருத்தி பெண்மையை விரும்பியது போலாகும்

 

எனது கருத்து:

 

ஐயன் இதிலை நல்லாய் குளப்பிறர் . படிக்காதவன் படிச்ச இடத்திலை பேச ஆசைப்படுகிறது , மார்பகம் இல்லாத ஒருத்தி உடலுறவு கொள்ள ஆசைப்படுகிறதை போல எண்டு . ஏன் மார்பகம் இல்லாதவள் உடலுறவு கொள்ள முடியாதா ?? இது தாய்குலத்தை கேவலப்படுதிற மாதிரி இருக்கு . அதோடை பணம் எண்ட விசையம் தான் படிக்காதவனையும் படிச்சவனாக்குது ஐயன் .

 

Like those who doat on hoyden's undeveloped charms are they, Of learning void, who eagerly their power of words display.


Prendre plaisir à écouter les paroles d'un homme sans instruction, c'est ressembler à la femme qui, privée des deux seins, désire exercer les attributs de la femme (plaire aux hommes).

  • தொடங்கியவர்

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லாது இருக்கப் பெறின்.403

 

கற்றவர் முன்னிலையில் ஒன்றையும் பேசாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் , கல்லாதவர்களும் நல்லவரேயாவர் .

 

எனது கருத்து:

 

இதை இப்பிடியும் சொல்லலாம் , பச்சோந்தி வேலை எண்டு . அதாவது எல்லாருக்கும் நல்லபிள்ளையாய் இருக்கிறது . ஒருத்தனுக்கு கடவுள் ஐஞ்சு புலனையும் குடுத்தது , தான் நினைச்சதை மற்றவனோடை பகிர வேணுமெண்டதுக்காக . ஒருத்தன் படிச்சவனோ இல்லையோ எண்டதை அவனை சுத்தியிருக்கிற சனம் சொல்லவேணும் .

 

Like those who doat on hoyden's undeveloped charms are they, Of learning void, who eagerly their power of words display.


Même, les hommes sans instruction se rendent meilleurs, en s'abstenant de parler, dans une assemblée d'hommes instruits.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.