Jump to content

ரங்கன் போய்விட்டான் !


Recommended Posts

kuperan.jpg?fit=500%2C350

 

ரங்கன் போய்விட்டான் ! அன்று அதிகாலை வந்த தொலைபேசி அழைப்பு ! 

 

27ம் திகதி அதிகாலை. விடிந்தும் விடியாத ஒரு இருள்காலையாத பொழுதில் தொலைபேசி அழைப்பொன்று. இப்படியான பொழுதில் வருவது இரண்டு அழைப்புகள்தான்.உயிரான உறவின் அழைப்பு.அது இல்லை என்றால் உறவொன்றின் உயிர்பிரிந்த அழைப்பு. மறுமுனையில் நண்பனொருவன். தொலைபேசிக்குள்ளாக வரப்போகும் செய்திக்காக காதுகளையும் இதயத்தையும் தயார்செய்படியே கேட்டபோதுதான் அவன்சொன்னான் ‘ரங்கன் இப்ப கொஞ்சநேரத்துக்கு முந்தி போய்விட்டானாம்’.வலிக்க வலிக்க மரணங்களை பாத்தும் கேட்டும் மரத்துப்போனதாக நம்பிக்கொண்டிருந்த மனது உடையத்தொடங்கியது. ரங்கன் எத்தகைய உறவாக இருந்தான் என்பதைவிட அவன் தான் நம்பிய இலட்சியத்தின் மீதான நம்பிக்கையையும் அந்த இலட்சியத்துக்காக உறுதியுடன் வழிநடாத்தும் தலைமைமீதான நம்பிக்கையையும் இறுதி வைத்திருந்தானே,அதுதான் அவனுடனான உறவாக இருந்திருக்கும்.

 

இத்தனைக்கும் ரங்கனின் சொந்தப்பெயர்கூட அவனுடன் பழகிய அனைவருக்கும் தெரிந்திருக்கவில்லை.அவன் தனது இயக்கப்பெயருடனேயே பழகினான்.அதனுடாகவே தனது வேலைகளையும் செய்தான். பயிற்சிக்காக வரும் புதியவர்களை மதுரையில் ஒரு தங்குமிடத்தில்வைத்திருந்து அதன்பின்னரேயே பலதரப்பட்ட பயிற்சிமுகாம்களுக்கும் பிரித்து அனுப்புவார்கள்.அப்படியான ஒரு

 

தங்குமிடத்துக்கு சென்றபோதுதான் ரங்கனை முதன்முதலில் சந்திக்க நேர்ந்தது.அங்குதான் அவன் குபேரான மாறினான்.அவனின் இயக்கப்பெயர் குபேரன்.அதிலும் ‘சிரிப்புக்குபேரன்’ என்றால்தான் அதிகமானவர்களுக்கு தெரியும். 3வது பயிற்சிஅணியில் பயிற்சிபெற்றபோதே பயிற்சியாளர்களால் சிறந்தவீரனாக இனங்காணப்பட்டு அதன்பின் அதே பயிற்சிமுகாமின் 6வது 9வது பயிற்சிஅணிகளுக்கு பயிற்சி அளிக்கும் ‘மாஸ்டராகவும்’ விளங்கினான்.பொன்னம்மானின் அன்புக்கும் அவரின் வியப்புகளுக்கும் ரங்கன் உரியவனாக இருந்தான்.அதனால்தான் பொன்னம்மான் தாயகம் திரும்பும்போது ரங்கனும் அவருடன் தாயகம் திரும்புகிறான்.தாயகம்வந்ததும் யாழ்அணியில் குபேரனும் ஒருவனாகிறான்.

 

தளபதி கிட்டுவின் மெயின்பேஸான நம்பர் 3ல் ரங்கனும் உள்வாங்கப்படுகின்றான்.அதன்பின் யாழ்கோட்டைமீதான் முற்றுகைப்போரில் முக்கியபங்காற்றிய நம்பர் 3 முகாம் வீரர்களில் ஒருவனாக ரங்கனும் களமாடுகின்றான்.அதற்குபின் இந்தியப்படை வருகையின்போது அவர்களுடான சண்டையின்போது பாராஅண்ணை தம்பதிகளின் பாதுகாப்புக்கான முக்கியவீரர்களில் ஒருவானாகவும் ரங்கன் விளங்குகின்றான். அதன்பின் பாலாஅண்ணையுடனேயே இந்தியாவந்த ரங்கன் அங்கேயே தங்கிவிடுகின்றான்.கேட்டால் ‘அமைப்பைவிட்டு தான் விலகிவிட்டதாகவும் துண்டுகொடுத்து விட்டு
இங்கு இருப்பதாகவும்’ சென்னையில் சொல்லிக்கொண்டிருந்தான்.விலகி வந்துவிட்டதக சொல்லிக்கொண்டே வேறு வேலைகள் செய்துகொண்டிருக்கும் ஒருவனாகவே நினைத்தேன். என்னதான் விலகியதாக சொல்லிக்கொண்டிருந்தாலும் அவனால் தன்னை உருமறைக்க தெரியவில்லை. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி செத்தபோது யாரையாவது பிடித்து தண்டனைவாங்கி கொடுத்தே ஆகவேண்டிய நிர்வாக அழுத்தங்கங்கள் ஆளுவோருக்கும் ஆள்வோரை தாங்கிநிற்கும் காவல்துறைக்கும் உறவுத்துறைக்கும் ஏற்பட்டபோதில் நிறைய கைதுகள் மிகநிறைய மிகமிகநிறைய சித்திரவதைகளும் நடந்தேறின.அவற்றினுடாக கிடைத்த வாக்குமூலங்களைவைத்து வழக்கும் தொடுக்கப்பட்டது.

 

முதலில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருக்கும் (இருபதுக்கும்மேற்பட்டோர்) மரணதண்டனையை நீதிமன்றம் வழங்கியது.புலன்விசாரணையை தலைமைதாங்கி நடாத்திய கார்த்திகேயன் ‘இது வாய்மையின் வெற்றி’ என்று புளகாங்கிதம் அடைந்ததார்.அப்போது மரணதண்டனை பெற்றவர்களில் ரங்கனும் ஒருவன்.ஆனாலும் பின்னர்நடந்த உச்சநீதிமன்ற தீர்ப்பில் ரங்கன் விடுதலையானான்.ஆனால் இந்த காலத்தில் பத்துவருடங்களுக்கும் மேலாக ரங்கன் சிறையில் வாடிஇருக்கின்றான். அதன்பின்பான ஒரு பொழுதில் லண்டனில் ரங்கனை கண்டபோதும் தமிழீழவிடுதலைமீதான அவனின் பற்றும் உறுதியும் இன்னும் அதிகமாகி இருந்ததையே காணமுடிந்திருந்தது.ஏதாவது ஒரு வேலையாக எந்தநேரமும் அலைந்துகொண்டே இருப்பான்.

 

முள்ளிவாய்க்கால் எல்லோர் மீதும் எறிந்துவிட்டுபோன தாக்கங்கள் ரங்கனிலும் தெரிந்தது.ஆனாலும் அவன் சோர்ந்திருக்கவில்லை.மறுநாளே அங்கிருப்பவர்களுக்கு புனர்வாழ்வுக்கு ஏதாவது செய்தாகவேண்டும் என்று வேலை செய்யதொடங்கிவிட்டான்.இதுதான் ரங்கன் என்று எந்தவொரு வறையறைக்குள்ளும அடக்கிவிடமுடியாத ஒரு உற்சாகமனிதன் அவன். இப்போதெல்லாம் அதிகமாக அவனை கோவில்களிலேயே காணமுடிந்தது.அவன் மரணித்த அந்த நாளின் முன்னிரவும்கூட கோவிலுக்கு போய்விட்டுவந்து அதே வேட்டியுடனேயே படுத்திருந்திருக்கிறான்.அதிகாலை மாரடைப்பு அவனை பிரித்துவிட்டது. அதே வேட்டியுடனேயே அவனின் மரணம் நிகழ்ந்தும் இருக்கிறது. இறுதிவரைக்கும் தமிழீழநினைப்புடனேயே வாழ்ந்த ஒருவனாக வரலாறு ரங்கனை பதியும் என்று நம்புகின்றேன்.


ச.ச.முத்து

 

http://rste.org/2012/12/29/%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D/

Link to comment
Share on other sites

இறந்தவருக்கு அஞ்சலி அனால் இவரது கதைதான் புரியவில்லை இந்திய பிரதமர் கொலை வழக்கு விபரங்களில் இவரது விவரங்களை படித்தாக எனக்கு நினைவில்லை விபரங்கள் இருந்தால் இணைத்து விடலாம் அல்லவா ?

Link to comment
Share on other sites

ராஜீவ் காந்தி கொலையில், சந்தேக நபர்களாகக் கைதான முருகன் நளினி போன்றவர்களுடன் கைதாகிய நடராஜா ராஜசூரியர் (ரங்கன்) நேற்றிரவு லண்டனில் மாரடைப்பால் காலமானார்.

 

சிறுவயதிலேயே புலிகள் இயக்கத்துக்கு உதவியாளராக செயல்பட்டு வந்த இவர் இந்தியாவில் இருந்தவேளை ராஜீவ் காந்தி கொலைசெய்யப்பட்டார். கைதான ரங்கனுக்கு, பழ.நெடுமாறன் ஐயா , வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் அவர்கள், மற்றும் வைகோ அவர்கள் உதவினார்கள். இவர்கள் உதவியால் விடுதலையான, ரங்கன் பின்னர், பிரித்தானியாவில் வசித்துவந்தார். லண்டனில் உள்ள ஸ்டோன்லி அம்மன் கோவில், தொண்டராகப் பணி புரிந்துவந்த இவர், முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை மணம் முடிக்கவேண்டும் என்று கூறிவந்தார்.


பல வருடங்களாக திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்துவந்த ரங்கன் சில மாதங்களுக்கு முன்னர், தாம் குறிப்பிட்டதுபோல, முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை மணம் முடிக்க விரும்பி அவரை லண்டனுக்கு அழைத்துள்ளார். வழமைபோல ஆலய திருப்பணிகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய அவர் உறங்கியவேளை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமான அவர் இன்று அதிகாலை மரணமானார் என்று மேலும் அறியப்படுகிறது.

Link to comment
Share on other sites

பல தகவல்கள் தவறானவை. ஆனாலும் குபேரனிற்கு அஞ்சலிகள்.85 ம் முதன் முதலாக பலாலி முகாமை சுற்றி காவலரண் அமைக்கும் பணியில் என்னோடு வந்து வசாவிளான் ஒட்டகப்புலம் முகாமில் ஒன்றாக இருந்தவன். பின்னர் ராஜுவ் கொலையுடன் சட்பந்தப் பட்ட சிவராசன் குழுவினருடன் பெங்களுரில்  ரங்கநாத்தின் வீட்டில் தங்கியிருந்த போது குபேரன் வெளியே பெற்றோல் வாங்க போயிருந்தான்  அவன் திரும்பி வந்போது ரங்கநாத் வீடு சுற்றி வழைக்கப்பட்டிருந்தது அங்கிருந்து தப்யோடி தமிழ் நாட்டிற்குள் வர முயன்றபோது வழியில் வைத்தே காவல்துறையால் கைது செய்யப் பட்டு சிறையில் இருந்தான்.பொன்னம்மான்  ஊருக்கு வந்தது  86ம் ஆண்டு  நாவற்குழி முகாம் தாக்குதலிற்கு சில காலத்திற்கு முன்னர். குபேரன் 84ல் இருந்தே யாழில்தான் இருந்தான். லண்டனில் வசித்த இவர் ஏற்கனவே  திருமணமாகி மறமுறிவு பெற்றவர். அண்மையில்தான் யுத்தத்தால் பாதிக்கப் பட்ட ஒரு பெண்ணை திருமணம் செய்ய லண்டனிற்கு அழைத்திருந்தார். இவரது மரணம் நடந்த வேளை நான் இலண்டனில் நின்றிருந்தேன் மரண வீட்டிற்கு போவதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை.

 

ஜனனம்: 29.12.63 மரணம்: 27.12.12
காரைநகர் இடைப்பிட்டியை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட
ரங்கன் மற்றும் குபேரன் என அழைக்கப்படும் நடராஜா இராஜசூரியர் இன்று 27.12.12 காலமானார்.
அன்னார் நடராஜா, தனபாக்கியம் (இந்தியா) ஆகியோரின் அன்பு மகனும், இராஜமோகனா (ரதி - இலண்டன்), இராஜயோகன் (ரமணன் -கனடா), இராஜாம்பிகை (ரூபி - இலண்டன்), இராஜபிரகாஸ் (ருத்திரா - இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிவரஞ்தித் (இலண்டன்), சகுந்தலா (கனடா), சதீஸ்குமார் (இலண்டன்), சமரன், சரித்திரா (இலண்டன்) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னார் காரைநகர் சின்னாலடியைச் சேர்ந்த காலம் சென்ற கந்தையாபிள்ளை, வள்ளிப்பிள்ளை மற்றும் இடைப்பிட்டியைச் சேர்ந்த காலம் சென்ற சோமநாதர் சின்னத்தம்பி, மீனாட்சிபிள்ளை ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இறுதிக்கியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். . லண்டனில் உள்ள ஸ்டோன்லி அம்மன் கோவில், தொண்டராகப் பணி புரிந்துவந்த இவர்,வழமைபோல ஆலய திருப்பணிகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய அவர் உறங்கியவேளை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமான அவர் இன்று அதிகாலை மரணமானார் என்று மேலும் அறியப்படுகிறது.

தொடர்புகளுக்கு:

சிவரஞ்சித் - மைத்துனர் - இலண்டன்
07850648395

இராஜாம்பிகை - ருபி - சகோதரி - இலண்டன் - 07413726545

இராஜயோகன் - ரமணன் - சகோதரன் - கனடா -
00 1 4389 309 241

இராஜபிரகாஸ் - ருத்திரா - சகோதரன் இந்தியா -
00 91 44 245 10 468

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல தகவல்கள் தவறானவை. ஆனாலும் குபேரனிற்கு அஞ்சலிகள்.85 ம் முதன் முதலாக பலாலி முகாமை சுற்றி காவலரண் அமைக்கும் பணியில் என்னோடு வந்து வசாவிளான் ஒட்டகப்புலம் முகாமில் ஒன்றாக இருந்தவன். பின்னர் ராஜுவ் கொலையுடன் சட்பந்தப் பட்ட சிவராசன் குழுவினருடன் பெங்களுரில்  ரங்கநாத்தின் வீட்டில் தங்கியிருந்த போது குபேரன் வெளியே பெற்றோல் வாங்க போயிருந்தான்  அவன் திரும்பி வந்போது ரங்கநாத் வீடு சுற்றி வழைக்கப்பட்டிருந்தது அங்கிருந்து தப்யோடி தமிழ் நாட்டிற்குள் வர முயன்றபோது வழியில் வைத்தே காவல்துறையால் கைது செய்யப் பட்டு சிறையில் இருந்தான்.பொன்னம்மான்  ஊருக்கு வந்தது  86ம் ஆண்டு  நாவற்குழி முகாம் தாக்குதலிற்கு சில காலத்திற்கு முன்னர். குபேரன் 84ல் இருந்தே யாழில்தான் இருந்தான். லண்டனில் வசித்த இவர் ஏற்கனவே  திருமணமாகி மறமுறிவு பெற்றவர். அண்மையில்தான் யுத்தத்தால் பாதிக்கப் பட்ட ஒரு பெண்ணை திருமணம் செய்ய லண்டனிற்கு அழைத்திருந்தார். இவரது மரணம் நடந்த வேளை நான் இலண்டனில் நின்றிருந்தேன் மரண வீட்டிற்கு போவதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை.

 

ஜனனம்: 29.12.63 மரணம்: 27.12.12

காரைநகர் இடைப்பிட்டியை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட

ரங்கன் மற்றும் குபேரன் என அழைக்கப்படும் நடராஜா இராஜசூரியர் இன்று 27.12.12 காலமானார்.

அன்னார் நடராஜா, தனபாக்கியம் (இந்தியா) ஆகியோரின் அன்பு மகனும், இராஜமோகனா (ரதி - இலண்டன்), இராஜயோகன் (ரமணன் -கனடா), இராஜாம்பிகை (ரூபி - இலண்டன்), இராஜபிரகாஸ் (ருத்திரா - இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிவரஞ்தித் (இலண்டன்), சகுந்தலா (கனடா), சதீஸ்குமார் (இலண்டன்), சமரன், சரித்திரா (இலண்டன்) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னார் காரைநகர் சின்னாலடியைச் சேர்ந்த காலம் சென்ற கந்தையாபிள்ளை, வள்ளிப்பிள்ளை மற்றும் இடைப்பிட்டியைச் சேர்ந்த காலம் சென்ற சோமநாதர் சின்னத்தம்பி, மீனாட்சிபிள்ளை ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இறுதிக்கியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். . லண்டனில் உள்ள ஸ்டோன்லி அம்மன் கோவில், தொண்டராகப் பணி புரிந்துவந்த இவர்,வழமைபோல ஆலய திருப்பணிகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய அவர் உறங்கியவேளை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமான அவர் இன்று அதிகாலை மரணமானார் என்று மேலும் அறியப்படுகிறது.

தொடர்புகளுக்கு:

சிவரஞ்சித் - மைத்துனர் - இலண்டன்

07850648395

இராஜாம்பிகை - ருபி - சகோதரி - இலண்டன் - 07413726545

இராஜயோகன் - ரமணன் - சகோதரன் - கனடா -

00 1 4389 309 241

இராஜபிரகாஸ் - ருத்திரா - சகோதரன் இந்தியா -

00 91 44 245 10 468

 

தகவலுக்கு நன்றி சாத்திரி  :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நிலாமதியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. கிறுக்க முயற்சிக்கிறேன்.  நாம்தானே ஓடிவந்துவிட்டோம். எங்கோ ஒதுங்கி ஓடிய காலங்களைத் திரும்பிப்பார்க்கும் போது வெறுமையாய் தெரிகிறது.    நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி சுவியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. நீங்களே ஒரு சிறந்த படைப்புகளைப் தருபவர். உங்கள் வரிகள் உற்சாகம் தருவனவாக உள்ளன.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி ஈழப்பிரியனவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. உண்மைதான். ஆனால், சிங்களத்தின் சிந்தனையல்லவா எம்மை ஆக்கிரமித்துள்ளது.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
    • ஸ்துமாரி (Stumari) ஸ்துமாரி (Stumari) என்கிற ஜார்ஜியா மொழி வார்த்தைக்கு விருந்தினர் என்ற பொருள்.  இன்றைக்கு இந்த வார்த்தையை நான் தெரிந்து கொள்ள காரணமாக இருந்தது இன்றைய சிறப்பு தினம்! ஆம் இன்றைக்கு உலக சுற்றுலா தினம் - 27 செப்டம்பர் - ஒவ்வொரு வருடமும் இந்த தினத்தினை உலக சுற்றுலா தினமாக, உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள்.  இந்தப் பழக்கம் ஆரம்பித்தது எப்போது தெரியுமா? 1980-ஆம் ஆண்டு. ஒவ்வொரு வருடமும் இந்த தினத்திற்கான நோக்கம் ஒன்று தான் - அது சுற்றுலா. தவிர ஒவ்வொரு வருடத்திற்கான Theme மட்டும் மாறுபடுகிறது.  இந்த வருடத்திற்கான உலக சுற்றுலா தினத்தின் Theme - Tourism and Peace! இந்த வருடம் உலக சுற்றுலா தினம் கொண்டாட தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் இடம் Georgia! அதனால் தான் எனக்கும் ஜார்ஜியா மொழியில் இருக்கும் ஸ்துமாரி (Stumari) என்கிற வார்த்தை தெரிந்தது.  அவர்கள் விருந்தினரை கடவுளின் அன்பளிப்பாக கருதுகிறார்கள் (Stumari is a gift of God!). ஸ்துமாரி குறித்த ஒரு காணொளியை பாருங்களேன். சுற்றுலா குறித்த எனது ஆர்வம் குறித்து எனது தொடர்பில் இருக்கும் பலரும் அறிந்திருப்பார்கள். நான் சென்ற சுற்றுலாக்கள் பொதுவாக சராசரியை விட அதிகம் என்றாலும் ஒரு சிலருடன் ஒப்பிடும்போது குறைவு தான் 🙂ஹாஹா…  எத்தனை பயணம் செய்தாலும் இன்னும் வேண்டும், இன்னும் இன்னும் பயணிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் குறைவதே இல்லை.  பயணம் மீது ஒரு வெறுப்பு வருவதே இல்லை.  எப்போது பயணிக்க வேண்டும் என்று சொன்னாலும் உடனே மனதில் புத்துணர்வு வந்து விடுகிறது.  சூழல்கள் காரணமாக கடந்த சில மாதங்களாக எந்த வித சுற்றுலாவும் செல்லவில்லை என்றாலும் சுற்றுலா மீதான ஆர்வம் இன்னும் குறையவே இல்லை.  வாழ்க்கையில் இருக்கும் ஒரு ஆசை தொடர்ந்து சுற்றுலா செல்வதும், அந்தப் பயணங்கள் வழி பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதும் தான்.  வேறு பெரிய ஆசைகள் எதுவும் இல்லை. பார்த்தது கையளவு என்றால் பார்க்காதது உலகளவு.  உலகம் முழுதும் பார்க்க வேண்டும் என்று கூட இல்லை, பாரதம் முழுவதும் பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே ஒரு ஆசையாக இருக்கிறது.  இந்த வருடத்தின் உலக சுற்றுலா தினம் குறித்த Concept Note UN தளத்தில் பார்க்கக் கிடைத்தது.  உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதனை இங்கே படிக்கலாம். இந்தக் குறிப்பின் படி, 2024-ஆம் ஆண்டின் உலக சுற்றுலா தினம், சுற்றுலா மற்றும் அமைதியை உருவாக்குவதற்கான தொடர்பினை சந்திப்பை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  பயணம், கலாச்சார பரிமாற்றம் மற்றும் நிலையான சுற்றுலா நடைமுறைகள், அமைதியை உலகம் முழுவதும் நிலைநிறுத்த எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதையும் நாடுகளுக்கு இடையேயான மோதல்களுக்கு தீர்வு, நாடுகளுக்கு இடையே நல்லிணக்கம் மற்றும் உலகளவில் அமைதியை மேம்படுத்துதல் ஆகியவற்றை பிரதான நோக்கமாக கொண்டு கொண்டாடப்படுகிறது.  எங்கு பார்த்தாலும் நாடுகளுக்கு இடையே சண்டைகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் என்று ஒவ்வொரு நாளும் செய்திகளில் படிக்கையில் சுற்றுலா இந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக இருக்க முடியும் என்றே தோன்றுகிறது.   நம் நாட்டில் மட்டுமே எத்தனை எத்தனை சுற்றுலா தலங்கள்? ஒரு பிறப்பில் இவை அனைத்தையும் பார்த்து விட முடியுமா என்ன?  அதனால் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு விட வேண்டும்.  சுற்றுலா/பயணம் மூலம் பல இடங்களை பார்க்க முடியும் என்பதோடு விதம் விதமான மனிதர்களையும் சந்திக்க முடிகிறது.  பல வித அனுபவங்களையும் பயணங்கள் நமக்குத் தருகின்றன.  ஆதலினால் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!  இந்த உலக சுற்றுலா தினத்தில் நமக்கு பயணம் செய்ய கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வோம் என்று தீர்மானம் செய்து கொள்வோம்.  தொடர்ந்து பயணிப்போம்.  பல அனுபவங்களைப் பெறுவோம். பயணம் நல்லது ஆதலினால் பயணம் செய்வீர்! https://venkatnagaraj.blogspot.com/2024/09/World-Tourism-Day-2024.html
    • பட மூலாதாரம்,X/2D ENTERTAINMENT 27 செப்டெம்பர் 2024, 06:35 GMT புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில், 2018ஆம் ஆண்டு வெளியான ‘96’ திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தைப் பெருமளவில் ஈர்த்தது. அப்படத்தை இயக்கிய பிரேம் குமாரின் இரண்டாவது படமான மெய்யழகன் இன்று (வெள்ளி, செப்டம்பர் 27) வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண், தேவதர்ஷிணி, இளவரசு, ஸ்ரீதிவ்யா, சுவாதி கொண்டே ஆகியோர் நடித்திருக்கின்றனர். 96 படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். சூர்யா-ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2D எண்டர்டெய்ன்மெண்ட் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. கார்த்தி-அரவிந்த்சாமி இருவரும் ஒன்றாகத் தோன்றும் இப்படத்தின் ஸ்டில்கள், ட்ரெய்லர் ஆகியவை வெளியாகியதில் இருந்தே ரசிகர்களிடையே இப்படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்தது. காரணம், கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி கூட்டணி. இந்நிலையில், இப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? ஊடக விமர்சனங்கள் என்ன சொல்கின்றன? மெய்யழகன் படத்தின் கதை என்ன? '96' திரைப்படம் போன்றே இந்தப் படமும் 1996-ஆம் ஆண்டு துவங்குகிறது. அருள்மொழி வர்மன் (அரவிந்த்சாமி) ஒரு குடும்பப் பிரச்னையால் தஞ்சாவூரில் தனது சொந்த ஊரையும் குடும்பத்தையும் விட்டு வெளியேறுகிறார். அவருக்கு உறவினர்களுடன் முற்றிலும் தொடர்பற்றுப்போகிறது. இந்த நிலையில், சுமார் 20 ஆண்டுகள் கழித்து, தனக்குப் பிரியமான உறவுப்பெண்ணான புவனாவின் (சுவாதி கொண்டே) திருமணத்துக்காக, மீண்டும் தனது சொந்த ஊருக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை அரவிந்த்சாமிக்கு ஏற்படுகிறது. பல மனக்குழப்பங்களைக் கடந்து சொந்த ஊருக்குச் செல்லும் அரவிந்த்சாமி, அங்கு அவர் பாசமாக இருக்கும் ஒரே உறவினர் ராஜ்கிரணைச் சந்திக்கிறார். அங்குதான், அரவிந்த்சாமியை ‘அத்தான்’ என்றழைத்தபடி, அவரை உபசரிக்கும் கார்த்தி அறிமுகமாகிறார். இருவரிடையே ஒரு மெல்லிய பாசம் உண்டாகி, அது ஆழமாகிறது. இருவரும் ஒன்றாகச் சுற்றித்திரிந்து, பல விஷயங்களைப் பற்றிப்பேசுகிறார்கள். அதன்பின் அரவிந்த்சாமியின் உணர்வுகள் அவரிடம் என்ன சொல்லின? இதுதான் இப்படத்தின் கதை.   பட மூலாதாரம்,X/2D ENTERTAINMENT ‘உணர்வுகளே படத்தின் அடித்தளம்’ இப்படத்திற்கு விமர்சனம் எழுதியுள்ள ஊடகங்கள், மனிதர்களிடையே, உறவுகளிடையே உள்ள உணர்வுகள் தான் படத்தின் அடித்தளம் என்று குறிப்பிடுகின்றன. தினமணி இணையதளம், தனது விமர்சனத்தில், இயக்குநர் பிரேம் குமார், ‘உறவுகளின் நீட்சியை அழகியல் தன்மையுடன் காட்சிப்படுத்தியிருப்பதாகக்’ கூறுகிறது. “பிறந்து, பால்யத்தை எதிர்கொண்ட ஊரின் திசைகளை பல ஆண்டுகள் கழித்துத் தேடும் ஒருவனின் நினைவாக உறவுகளின் மேன்மையை அழகாகக் கையாண்டிருக்கிறார்,” என்றும் கூறியிருக்கிறது. ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில இணையதளம், தனது விமர்சனத்தில், இப்படம் அதீத நாடகத்தனமாக முடிந்துவிடும் அபாயம் இருந்தபோதிலும், அப்படிச் செய்யாமல், மெல்லிய சோகம்-இதயத்தை வருடும் காட்சிகள் ஆகியவற்றுக்கு இடையே பயணிப்பதாகச் சொல்கிறது. “படத்தின் சில காட்சிகளில், நமது கண்களில் நீர் துளிர்க்கிறது. குறிப்பாக அரவிந்தசாமியும், சுவாதி கொண்டேவும் பேசிக்கொள்ளும் காட்சிகள். அதேபோல் உறவினர்கள் பேசிக்கொள்ளும் சிறிய காட்சிகள் கூட சிறப்பாகவே அமைந்திருக்கின்றன,” என்கிறது இந்த விமர்சனம்.   பட மூலாதாரம்,X/2D ENTERTAINMENT கார்த்தி, அரவிந்த்சாமியின் நடிப்பு எப்படி? இப்படத்திலுள்ள நடிகர்களின் நடிப்பைப் பற்றிப் பேசும் ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில இணையதள விமர்சனம், அனைத்து நடிகர்களின் நடிப்பும் ‘முதல் தரம்’ என்கிறது. “படம் மொத்தத்தையும் அரவிந்த்சாமியும் கார்த்தியுமே தாங்குகிறார்கள். இருவரும் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தனது கடந்த காலத்திலிருந்து விலகிவர முடியாத ஒருவனது தவிப்பை அரவிந்த்சாமி அற்புதமாகச் வெளிப்படுத்தியிருக்கிறார்,” என்கிறது இந்த விமர்சனம். அதேபோல் கார்த்தியின் நடிப்பைப் பற்றிப் பேசும் தினமணி விமர்சனம், “காட்சிக்கு காட்சி கள்ளமில்லாத ஆன்மாவாக [கார்த்தி] பேசும் வசனங்களும் உடல்மொழியும் ரசிக்க வைக்கின்றன,” என்கிறது. மேலும், “இப்படத்திற்காக கார்த்திக்கு விருதுகள் கிடைக்க வேண்டும். ரசிகர்களுக்கு, ‘விருந்து கொடுக்கும்’ வணிக குட்டிக்கரணங்களை அடிக்காமல் முழுமையாகத் தன்னை கதைக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்,” என்கிறது. இந்த இருவர் மட்டுமல்ல, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் ஒருசில காட்சிகளிலேயே தோன்றினாலும், அவர்கள் தங்கள் கதாபாத்திரங்களை நினைவில் நிற்கும்படிச் செய்திருக்கிறார்கள், என்கிறது ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில இணையதளம். கருணாகரன், இளவரசு, ரேச்சல் ரெபெக்கா, ஸ்ரீதிவ்யா ஆகியோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாக இந்த விமர்சனம் கூறுகிறது. படத்தின் மிகப்பெரிய குறை இவையனைத்தும் இருந்தும், கிட்டத்தட்ட அனைத்து விமர்சனங்களும் படத்தின் மிகப்பெரிய குறை என்று ஒரு விஷயத்தைச் சொல்கின்றன. அது, இப்படத்தின் நீளம். சுமார் 3 மணிநேரம் (177 நிமிடங்கள்) ஓடும் இப்படம் ஆங்காங்கே ரசிகர்களின் பொறுமையைச் சோதிக்கிறது, படத்தின் நீளத்தை 20-30 நிமிடங்கள் குறைத்திருக்கலாம், என்கின்றன விமர்சனங்கள். இந்தக் குறையைப் பிரதானமாகச் சுட்டியிருக்கும் ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ தமிழ் இணையதளம், “உறவுகளையும், உணர்வுகளையும் சொல்ல நினைத்த படம் தான். ஆனால், சொல்லிக் கொண்டே இருந்தால் எப்படி?” என்று கேட்கிறது. ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில இணையதளம் இப்படத்தை ‘மிக நீளமானது’ என்று குறிப்பிட்டு, சில பகுதிகள் படத்தை மிக நீளமாக்குகின்றன, என்கிறது. அதேபோல், படம் பெரும்பாலும் வசனங்களாலேயே நகர்கிறது என்பதும் ஒரு குறை என்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ் விமர்சனம். “3 மணி நேரத்திற்கு 3 நிமிடம் மட்டுமே குறைவு என்கிற கால அளவில் படம் ஓடுகிறது. படம் ஆரம்பிக்கும் போது பேச ஆரம்பிப்பவர்கள், முடியும் வரை பேசுகிறார்கள். பேசிக்கொண்டே இருக்கிறார்கள்,” என்று இந்த விமர்சனம் குறிப்பிடுகிறது.   பட மூலாதாரம்,YOUTUBE/THINK MUSIC INDIA சொல்ல வந்ததை விட்டுவிட்டு… படத்தின் மற்றொரு குறை, மனித உறவுகளைப் பற்றிச் சொல்ல வந்ததை விட்டுவிட்டு, சம்பதமில்லாமல், அரசியல், சமூக, வரலாற்று விஷயங்களைப் பேசுவது என்கின்றன சில விமர்சனங்கள். ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில இணையதளம், “காளைமாடு தோன்றும் ஒரு காட்சி, வரலாறு, போர்கள் ஆகியவற்றைப் பற்றி கார்த்தி பேசும் வசனங்கள் மிக நீளமாகத் தோன்றுகின்றன,” என்கிறது. ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ தமிழ் இணையதளத்தின் விமர்சனம், ‘திடீரென ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு, ஈழத்தமிழர் படுகொலை’ என கதைக்குச் சம்மந்தமே இல்லாத விஷயங்களைப் பற்றிப் படம் பேசுகிறது என்கிறது. இன்னொரு அன்பே சிவம்? இப்படத்தில், அரவிந்த்சாமி-கார்த்தி இருவருக்கிடையே உருவாகும் புரிதலும் பிணைப்பும், ‘அன்பே சிவம்’ படத்தின் கமல்ஹாசன்-மாதவனை நினைவுறுத்துவதாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில இணையதளம் தெரிவிக்கிறது. ஆனால், ‘அன்பே சிவம்’ படம் இரண்டு வேறுபட்ட நபர்கள் ஒருவருக்கொருவரில் தோழமையைக் கண்டடைவது பற்றிய படம். மெய்யழகனோ, ஒருவருக்கொருவர் அன்பாக இருப்பது மிகவும் எளிமையான விஷயம் என்று கூறுகிறது, என்கிறது இந்த விமர்சனம். கிராமத்தில் இருந்து நகரத்துக்குக் குடிபெயரும் அனைவருக்கும் மனதில் இருக்கும் ஒரு வீடற்ற உணர்வினை அரவிந்த்சாமி வெளிப்படுத்துகிறார் என்கிறது இந்த விமர்சனம். https://www.bbc.com/tamil/articles/cwyv6q7yg2eo
    • நல்ல ஒரு காணொளி. இணைப்பிற்கு நன்றி சுவியர். 👍
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.