Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லங்காதீப அடிக்கும் அதிரடி ஜோக்..வாசித்து வாய்விட்டு சிரிக்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் நான்காவது ஈழப்போரை ஆரம்பித்துவிட்டார்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் நான்காவது ஈழப் போரை திட்டமிட்ட முறையில் மெதுவாக ஆரம்பித்துவிட்டார் என்பது இரகசியமல்ல. சர்வதேச சமூகத்தின் காதுக்குள் நுழைந்து போக்குக் காட்டி விட்டு பிரபாகரன் மெல்ல மெல்ல தனது இலக்கை நோக்கி நகர்ந்து வருகிறார். தினமும் ஐந்து முதல் பத்து வரையான பாதுகாப்பு படையினரைக் கொல்லும் நோக்கில் நாள் ஒன்றுக்கு இரண்டு, மூன்று தாக்குதல்கள் திட்டமிட்ட முறையில் புலிகள் இயக்கத்தினரால் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு கடந்த ஆறு மாதங்களில் புலிகள் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்ட பாதுகாப்பு படையினரதும் பொதுமக்களினதும் எண்ணிக்கை கொஞ்சநஞ்சமல்ல.

முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு ஆயுதப் பயிற்சியளிக்கும் திட்டம் விடுதலைப் புலிகள் அமைப்பினரால் மிக வேகமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக பாதுகாப்புப் புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கடந்த வாரத்தில் முல்லைத்தீவிலுள்ள புதுக்குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள மாளினி விளையாட்டரங்கில் வைத்து பெருந்தொகையான தமிழ் இளைஞர், யுவதிகள் உட்பட 11,000 பேருக்கு யுத்தப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வெளியேறி உள்ளதாக விடுதலைப் புலிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. திருகோணமலை மாவட்டம் ஈச்சிலம்பற்று பிரதேசத்திலும் முல்லைத்தீவைச் சேர்ந்த மல்லாவி பிரதேசத்திலும் இருக்கும் புலிகள் இயக்கத்தின் யுத்தப் பயிற்சி முகாம்களில் வயதில் கூடியவர்கள், குறைந்தவர்கள், ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடின்றி பெருந்தொகையான மக்களுக்கு "கப்டன் யோகன்" எனப்படும் பிரபல யுத்தப் பயிற்சி அணித் தலைவர் சிறந்த முறையில் யுத்தப் பயிற்சிகளை வழங்கியிருப்பதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பெருந் தொகையானோர் பயிற்சிகளைப் பெற்று வெளியேறியதைக் கொண்டாடுவதற்காக திருகோணமலை ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் நடத்தப்பட்ட விழாவில் கலந்து கொண்ட திருகோணமலை பிரதேச விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் எழிலன் இராணுவத்தின் ஆட்சியிலிருந்து தமிழ் மக்கள் விடுவிக்கப்படும் காலமும் சுதந்திரம் பெறும் காலமும் தோன்றிவிட்டது என்று கூறியுள்ளார். கடந்த ஒரு சில மாதங்களில் ஆண்களும் பெண்களுமாகச் சுமார் 70,000 தமிழ்ப் பொதுமக்களுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பால் இதுவரை யுத்தப் பயிற்சி அளிக்கப்பட்டுவிட்டது என்ற உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளதாக பாதுகாப்புத்துறை புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு புலிகள் இயக்கத்தினரையும் பொதுமக்களையும் யுத்தம் ஒன்றுக்காகப் பிரபாகரன் தயார் செய்துள்ளது இரகசியமல்ல. ஆனால், எமது படையினரும் பொதுமக்களும் யுத்தத்திற்குத் தயாராக உள்ளனரா என்பதே கேள்வி. -லங்காதீப விமர்சனம்: 11.06.2006-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீரச்சாவை தளுவிய போராளிகள் எல்லாம் மீண்டும் வந்து இருக்கிறார்கள் யுத்த பயிற்சி அளிக்க... :(:lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவையின்ர கணக்குப்படி பாத்தால் வீரச்சாவடைந்த போராளிகளும் பயிற்சிக்கு வந்திருக்கிறார்கள் போல் உள்ளது :-)

  • கருத்துக்கள உறவுகள்

சொல்ஹெய்ம் இரட்டை வேடம் போடுகிறார்

தமிழ்ச்செல்வன் தலைமையிலான விடுதலைப் புலிகள் அமைப்பின் குழுவினர் பேச்சுவார்த்தைக்கென நோர்வே சென்ற பயணம் முற்றிலும் புலிகள் இயக்கத்தால் திட்டமிடப்பட்ட ஒன்று என்பது உறுதியாகியுள்ளது. ஏனெனில், கடந்த 8 ஆம் திகதி ஒஸ்லோவில் உத்தியோக பூர்வமான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும் முன்னரே தமிழ்ச் செல்வன் உட்பட்ட புலிகளின் தூதுக் குழுவினர் எரிக் சொல்ஹெய்மினால் நோர்வே வெளிவிவகார அமைச்சு அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அமைச்சு அலுவலகத்தில் 2 மணித்தியாலங்களுக்கும் மேலாக புலிகள் அமைப்பின் தூதுக் குழுவினரும் எரிக் சொல்ஹெய்மும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் இந்த இரகசியப் பேச்சுவார்த்தையின் போது நோர்வேயின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் விதார் ஹெல்கீசனும் கலந்து கொண்டுள்ளார்.

இவ்வாறு எரிக் சொல்ஹெய்முடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அன்று முற்பகல் 9 மணியளவில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தமிழ்ச் செல்வன் தலைமையிலான குழுவினர் ஷ்ரீலங்கா அரசின் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாதென மறுத்துள்ளனர். இதன் பின்னர் அன்று பிற்பகல் புலிள் இயக்கக் குழுவினர் எரிக் சொல்ஹெய்ம் உட்பட நோர்வே குழு மத்தியஸ்த குழுவினரை மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தையின் போது நோர்வே முன்னைய அரசு புலிகள் அமைப்புக்கு அரச ரீதியிலான சம அந்தஸ்தும் கௌரவமும் வழங்கியது போலவே தற்போதைய நோர்வே அரசும் அவ்வாறான சம அந்தஸ்தை அளிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

மேலும் மேற்படி நோர்வே வெளிவிவகார அமைச்சு அலுவலகத்தில் புலிகள் இயக்கக் குழுவினருக்கும் நோர்வே மத்தியஸ்த குழுவினருக்கும் இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை நிகழ்ச்சியை வீடியோ படம் பிடிப்பதற்கும் ஒளிபரப்புவதற்குமாக பிரான்ஸ் நாட்டின் ரி.ரி.என்.(T.T.ண்.) தொலைக்காட்சிச் சேவையினர் அழைக்கப்பட்டிருந்தனர்.

ஷ்ரீலங்கா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாதென புலிகள் இயக்கப் பிரதிநிதிகள் குழுவினர் மறுத்திருப்பது மேற்கூறப்பட்ட வகையில் எரிக் சொல்ஹெய்மின் அழைப்பின் பேரில் தமிழ்ச்செல்வன் குழுவினர் நோர்வே வெளிவிவகார அமைச்சு அலுவலகத்துக்குச் சென்று இரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே ஆகும்.

தமிழ்ச் செல்வன் குழுவினர் பேச்சுவார்த்தைக்கான மறுப்பைத் தெரிவித்ததற்குக் காட்டியுள்ள காரணம் ஷ்ரீலங்கா அரசு தரப்பு குழுவில் எந்தவொரு அமைச்சரும் இடம்பெறவில்லை என்பதே. இதுபற்றிப் புலிகள் இயக்கக் குழுவினர் முன்னரே அறிவித்திருந்த நிலையில் அந்தப் பிரச்சினை ஒஸ்லோவில் கிளப்பப்பட்டதற்குக் காரணம் என்ன? எனவே, இந்தப் பேச்சுவார்த்தை எரிக் சொல்ஹெய்ம், தமிழ்ச்செல்வன் ஆகியோரின் ஏதோ ஒரு திட்டத்திற்கேற்ப ஷ்ரீலங்கா அரசுக்கு வைத்த பொறியாகும். -திவயின விமர்சனம்: 11.06.2006-

-தின்க்குரல்

இது என்னடா? சிலதுகளுக்கு மேல் மாடி ஆட்டம்காணுது போல!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.