Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேடர் பற்றிய ஒரு பார்வை

Featured Replies

227641_547047198639222_2044623822_n.jpg

 

 

இவர்கள் தான் இலங்கையின் பூர்வ குடிகள். "நாகரீகமடைந்த" சமுதாயத்தால் "வேடுவர்கள்" என்று அழைக்கப் படும் பழங்குடி இனம். தென்னிலங்கையில் ஊவா மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்தில் தொப்பிக்கல, வாகரை போன்ற பிரதேசங்களிலும் அதிகளவில் வாழ்கின்றனர். பெயர் மட்டுமே வேடுவர்கள். ஆனால், அந்த மக்கள் வேட்டையாடுவதுடன், விவசாயமும் செய்கின்றனர். இவர்களுக்கென்று தனியான மொழி உண்டு. "நாகரீகமடைந்த" சிங்களவர்களும், தமிழர்களும், மண்ணுக்காக உரிமைப் போரில் ஈடுபட்டமை, உலகம் முழுவதும் தெரிந்த விடயம். ஆனால், இலங்கையில் மூன்றாவதாக வேடுவ மொழி பேசும் மக்கள் வாழ்வதும், அவர்களது இனமும், மொழியும் அழிந்து கொண்டு வருவதும், வெளியுலகத்திற்கு தெரியாது. சிங்களப் பகுதிகளில் வாழும் வேடுவர்களின் மொழியில், ஆதிக்க மொழியான சிங்களத்தின் சொற்கள் கலந்துள்ளன. ஆனால், அது சிங்களத்தின் கிளை மொழியன்று. தனித்துவமான, 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மொழி. ஒரு காலத்தில் இலங்கை முழுவதும் வாழ்ந்து அழிந்து போன இயக்கர் இனத்தவர் பேசிய மொழியாக இருக்கலாம். ஏனெனில், இவர்களது தெய்வங்களின் பெயர்கள் "யக்கா" என்று முடிகின்றன.

 

"நாகரீகமடைந்த" சிங்களவர்கள், இலங்கையின் பழங்குடி இனத்தை சிறுமைப் படுத்தும் நோக்கில், "யக்கா" என்ற சொல்லை பேய்,பிசாசு என்ற அர்த்தத்தில் பயன்படுத்தினார்கள். கதிர்காமக் கந்தன் வேடுவரின் குல தெய்வம் ஆகும். மேலும் மட்டக்களப்பு தான்தோன்றீஸ்வரர் ஆலயமும், முற்காலத்தில் வேடுவரின் வழிபாட்டுத்தலமாக இருந்தது. இன்றைய வேடுவரின் மதத்தில், புத்த மதத்தின், இந்து மதத்தின் கூறுகள் கலந்துள்ளன. ஆனால், "நாகரீகமடைந்த" சிங்களவர்களும், தமிழர்களும், வேடுவரின் புராதன மத நம்பிக்கையை "சிறு தெய்வ வழிபாடு" என்று சிறுமைப் படுத்தி வருகின்றனர்.

 

 

வேடுவர்களுக்கு தனியான கலாச்சாரம் உண்டு. குறிப்பிட்ட நேரத்திற்கு ஒழுங்கு படுத்தினால், நேரம் தவறாமல் கலந்து கொள்வது அதில் ஒன்று. ஒரு முறை, ஸ்ரீலங்கா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்காக, வேடுவர் தலைவனை சந்திக்க சென்ற அரசு அதிகாரி, குறிப்பிட்ட இடத்திற்கு தாமதமாக சென்று அசடு வழிந்தார். நேரம் தவறாமை மட்டுமல்ல, சூழலியல் சமநிலை பேணுவதற்காக இயற்கையோடு ஒன்றி வாழ்வது குறித்தும், வேடுவர்கள் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எடுத்துக் கூறினார்கள். இருந்தாலும் நாங்கள் இன்னமும் வேடுவர்களை "நாகரீகமடையாத பழங்குடி இனம்" என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

 

நன்றி முகநூல்

 

http://vedda.org/

  • கருத்துக்கள உறவுகள்

"யக்கா" என்று சிங்களமொழியில்  பேய், பிசாசுகளை கூறுவர். இது உண்மையில் "இயக்க"ர் என்ற சொல்லின் திரிபு ஆகும். வடவர் எப்போதும் தென்னாட்டினரை மானிடராகக் கருதியதே இல்லை. அவர்களுக்கு அரக்கன், பேய், பிசாசு, குரங்கு தானே நாங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

நல்லகாலம் வேடுவர்களின் வழிதோன்றல் தான் தமிழர் என்று சொல்லவில்லை இப்ப எல்லாம் உலகில் உள்ள பழம் பெரும் மக்களுடன் தமிழர்களை இணைத்து பேசுவது தான் பேஷன்..... சுமேரியரின் வழித்தோன்றல் தான் தமிழர் என்று சொன்னமாதிரி :D

நல்லகாலம் வேடுவர்களின் வழிதோன்றல் தான் தமிழர் என்று சொல்லவில்லை இப்ப எல்லாம் உலகில் உள்ள பழம் பெரும் மக்களுடன் தமிழர்களை இணைத்து பேசுவது தான் பேஷன்..... சுமேரியரின் வழித்தோன்றல் தான் தமிழர் என்று சொன்னமாதிரி :D

 

சுண்டல் உங்களது கருத்து என்னுள் கடும் வேதனையயும்  ஆற்றாமையையும் உண்டாக்குகிறது. சுமேரியர்களின் மொழி அவர்களது பழக்க வழக்கங்கள் தமிழர்களை ஒத்து இருக்கிறது என்று ஆய்ந்து அறிந்து சொல்லி இருக்கிறார்கள். நீங்கள் எப்பொழுதாவது அதை முழுவதும் வாசித்து இருக்கிறீர்களா? பல்லாயிரம் வருடங்கள் கடந்த வரலாறைக் கொண்டது தமிழர் நாகரீகம். சுமேரியர்கள் ஏன் தமிழர்களாக இருக்க கூடாது. உங்களுக்கு அதில் உடன்பாடு இல்லையெனில் நீங்கள் எந்த கருத்துடன் முரண்படுகிறீர்கள் என்று சொல்ல வேண்டும். அதைப் பற்றி கிஞ்சித்தும் அறியாமல் பொத்தாம் பொதுவாக எதாவது சொல்ல வேண்டும் என்று சொல்லக் கூடாது.  உங்களது கருத்துக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எதிர்ப்பு உள்வாங்கப்பட்டு பகிரங்க மன்னிப்பு கோரப்படுகின்றது

மன்னிப்பு கோர வைப்பது என் நோக்கமல்ல. உங்களது கருத்தை வாசிக்கும் சிலர் இதை நகைப்புக்குரிய விடயமாக கருதிவிடக் கூடாது. அதனாலேயே என எதிர்ப்பைக் பதிய வேண்டியதாயிற்று. நேரம் கிடைப்பின் சுமேரியர் தமிழர்களே என்ற திரியை முழுமையாக வாசிக்கவும். இது எனது தாழ்மையான வேண்டுகோள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.