Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கூலி வேலை செய்து பிழைக்க காத்திருப்பவர்கள் புலிகளா?

Featured Replies

image001.jpg

 

 

செங்கல்பட்டு ‘சிறப்பு’ முகாமில் இருந்து  தமிழ் உணர்வைத் தவிர மற்ற எல்லாவற்றையும் இழந்துவிட்ட உங்கள் சகோதரன் பேசுகிறேன், எழுதுகிறேன்... கெஞ்சவில்லை!

 

இங்கே பெயர்தான் சிறப்பு முகாம். மற்றபடி இது ராஜபக்சேவின் வதை முகாமுக்கு முன்னோடியான முகாம்தான்.

தமிழகத்தில் ஈழத் தமிழர் ஏதிலிகள் முகாம்கள் நிறைய உள்ளன. அவற்றில் எந்த அடிப்படை வசதிகளும் கிடையாது. யுத்தகாலத்தில் இங்கே வந்த எங்கட ஜனங்களுக்கு, வீடுகள் கட்டித் தாரோம் என்ற பெயரில் சில கொட்டகைகளை எழுப்பித் தந்திருக்கிறார்கள். மற்றபடி அவர்கள் தினம்தோறும் தங்களது அன்றாடத்தை நகர்த்த அரும்பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

 

ஒரு நாடு இன்னொரு நாட்டிடமிருந்து அகதிகளை ஏற்கிறது என்றால்...  சர்வதேச சட்டங்கள் கிடக்கட்டும், மனித நேய சட்டப்படி நடத்திட வேண்டுமல்லவோ? எந்த சட்டத்துக்கும் சம்மதிக்காமல் எங்களை இப்படி கூண்டுக்கிளிகளாக அடைத்து வைப்பதற்கு ஏன் எங்களை அகதிகளாக ஏற்றுக் கொள்ளவேண்டும்?

மற்ற முகாம்களிலேயே இந்த நிலைமை என்றால், சிறப்பு முகாம்களின் நிலை அதையும் தாண்டிக் கொடுமையானது.


தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கான சிறப்பு முகாம்கள் இரண்டு இடங்களில் உள்ளன. பூந்தமல்லி சிறப்பு முகாம், செங்கல்பட்டு சிறப்பு முகாம்.

அதென்ன சிறப்பு?

 

மற்ற முகாம்களில் இருக்கும் எமது தமிழ் சகோதரர்கள் திறந்த வெளிமுகாமில் இருக்கிறார்கள். அவர்களுக்கு க்யூ பிராஞ்ச் போலீஸாரின் கண்காணிப்பு இருந்தாலும் பக்கத்து நகரங்களுக்கு வேலைக்கு செல்லலாம், தன் பெண்டு பிள்ளைகளுக்கு சம்பாதித்துக் கொண்டுவரலாம். ஆனால் சிறப்பு முகாம் என்பது சிறையின் மறுபெயர்.

 

இலங்கை  அதிபர் ராஜபக்சே புலிகளை ஒழித்துவிட்டோம் என்று தம் மண்ணை முத்தமிட்டார். எக்காளமிட்டார்.

ஆனால், இன்று அவரும் அவரது படைத் தளபதிகள், ராஜாங்க முக்கியஸ்தர்கள் அனைவரும் புலிகள் இன்னும் இருக்கிறார்கள் என்ற பல்லவியை மீளவும் பாட ஆரம்பித்திருக்கிறார்கள். பின் அப்போது ஏன் புலிகளை முற்றிலும் ஒழித்துவிட்டதாக சொன்னார்கள் என்றால் சிங்கள வாக்காளர்களின் வாக்குகளைப் பெருமதியாக பெறுவதற்குத்தான்.

 

சரி... இலங்கையில் புலிகள் இருக்கிறார்களா, இல்லையா என்பதல்ல இங்கே விவாதம்!

இந்தியாவில் புலிகள் இயக்கம் இன்னும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக இருக்கிறது. பாண்டி பஜார் துப்பாக்கி ச் சூடு வழக்கில் பிரபாகரனின்  பெயரை நீக்கிவிட்டது தமிழக அரசு. ஆயினும் இந்தியா இன்னும் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக வைத்திருக்கிறது.

 

image002.jpg

 

இந்திய சட்டங்களின்படி ஒரு இயக்கம் தடை செய்யப்படுகிறது என்றால்,அது ஏன் தடை செய்யப்பட்டிருக்கிறது, அதன் செயல்பாடுகள் பொதுமக்களுக்கு விரோதமாக ஏதேனும் இருக்கின்றனவா என்ற தரவுகளை சட்டம் கேட்கும்.

இந்தியச் சட்டமும் அதுபோல கேட்கிறது.அதற்காக சட்டத்தை ஏமாற்றும் இந்திய அரசின் சமயோசித உத்திகளில் ஒன்றுதான் செங்கல்பட்டு சிறப்பு முகாம். செங்கல்பட்டு சிறப்பு முகாம் இந்திய அரசின் புலிகள் தடைக்கு ஒரு கட்டாய சாட்சி ஆக்கப்பட்டிருக்கிறது.

 

தமிழகத்தின் மற்ற இடங்களில் உள்ள முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்கள் மீது கணக்கு காட்டுவதற்காக வழக்குப்போடும் தமிழக காவல்துறையினர் அவர்களை மத்திய சிறைகளுக்கு அனுப்புகிறார்கள். பிழைக்க வந்த இடத்தில் தமிழக போலீஸாரின் காட்டுமிராண்டித் தனத்தை சமாளித்து, இருக்கும் நகைகளை விற்று வைத்து ஒருவழியாக பிணையில் வெளியே வந்தால்...

மத்திய சிறை வாசலியேயே தயாராகக் காத்திருக்கிறார்கள் க்யூ பிராஞ்ச் போலீஸார்.

எதற்காக?

ஒரு சாதாரண வழக்குக்காக மத்திய சிறைக்குச் சென்ற ஈழத் தமிழன், பிணை கிடைத்து வெளியே வரும் தகவல் க்யூ பிராஞ்ச்சுகு உடனடியாகக் கிடைக்கிறது. அதனால்தான் அவர்கள் மத்திய சிறை வாசலில் காத்திருக்கிறார்கள் மப்டியில்.

அந்த ஈழத் தமிழன் மீண்டும் தன் முகாமுக்குத் திரும்பலாம், தன் மனைவி, மக்களைப் பார்க்கலாம் என்ற ஆசையில் வெளியே வரும்போதுதான் சிறை வாசலிலேயே அவனைக் கொத்தாகத் தூக்குகிறது க்யூ பிராஞ்ச் போலீஸாரின் கைகள்.

அவ்வளவுதான்.

சித்திரவதைகளுக்கான அடுத்த கட்டம்தான் இந்த சிறப்பு முகாம்!

சிறப்பு முகாமுக்கு ஒரு ஈழத்தமிழ் சகோதரன் வந்துவிட்டால் அவன் பெயர் புலி. இதுதான் க்யூ பிராஞ்சின் அகராதியில் எழுதப்படாத ஆனால் எடுத்துக் கொள்ளப்படும் அர்த்தம்.

 

மத்திய அரசு எப்போது கேட்டாலும் சிறப்பு முகாம்களில் சுமார் 45 புலிகள் இருக்கிறார்கள்,தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற அறிக்கை அனுப்பவேண்டியது மாநில அரசுக்கு நேர்ந்திருக்கும் கட்டாயம். இதெல்லாம் அரசியல் சார்ந்தது அல்ல. எல்லாமே நிர்வாகக் கூட்டணி!

இந்த சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு... எங்களை திறந்த வெளி முகாமுக்கு மாற்றுங்கள் என்று கோரிக்கை வைத்து உணவு அருந்தாமல் டிசம்பர் 23-ம் தேதி முதல் போராடி உடல் வற்றிக் காட்சி தருகிறோமே... நாங்கள்தான் இந்திய ஏகாதிபத்தியத்தின் பார்வையில் புலிகள்!

பூந்தமல்லி, செங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் புலிகள் இருக்கிறார்கள். அவர்களை வெளியே விட்டால் தமிழ்நாட்டி புலிகளின் செயல்பாடு தொடங்கக்கூடும் என்ற ஒரு சாக்கு சொல்லித்தான் இன்றுவரை விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்து வைத்திருக்கிறது இந்திய அரசு.

 

image003.jpgநாங்கள் புலிகளா?

நீங்கள் தரும் சோறு கூடவேண்டாம், எங்களை திறந்தவெளி முகாமுக்கு மாற்றுங்கள். அங்கே ஏதாவது கூலி வேலை செய்தாவது எங்கள் பொண்டு பொடிசுகளுடன் வாழ்ந்துவிட்டுச் சாகிறோம் என்று கேட்கும் நாங்கள் புலிகளா?

சாதாரண திருட்டு வழக்கு சுமத்தப்பட்டு மத்திய சிறைக்கு அனுப்பப்பட்ட ஓர் ஈழத் தமிழ் அகதி... சிறையிலிருந்து பிணை கிடைத்து வெளியே வந்ததும் சிறைவாசலியே எப்படி புலியாகிறான்? இந்த மந்திரத்தை க்யூ பிராஞ்ச் போலீஸார் வெளியிட்டால் நன்றாக இருக்குமே!

 

நீங்கள் புத்தாண்டுக்கு பீர் அருந்தி, பெண்களோடு கும்மாளமிட்டபோது...

எங்கள் அடிவயிறு ஆறாவது நாள் பட்டினியால் சுருங்கிக் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருந்தோம்.

இந்திய ஏகாதிபத்தியம் புலிகள் தடையை நீட்டிக்க, நாங்கள் பகடைக்காய்களாகிறோம்.

 

வழக்கம்போல் எங்கள் நெடுநாள் கதறலுக்கு சற்றே தலை திரும்பிப் பார்த்த தமிழக அரசு இங்கிருந்து ஐந்துபேரை விடுதலை செய்வதாக சொல்லியிருக்கிறது.

ஒவ்வொரு  முறை தாசில்தார்கள் எங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை பார்க்கவரும்போதும் கண்ணீர் வடிக்கிறார்கள், ஒரு தனிமனிதனாக. ஆனால்...தாசில்தாராக  கல்லிதயம் கொண்டு செல்கிறார்கள்.


இந்திய விமான நிலையங்களில்... எந்த வகைச் சோதனையும் இல்லாமல் விமானம் ஏறும் வாய்ப்பு அதிமுக்கியமான இருபத்து இரண்டு பேருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் திபெத் அகதியாக இந்தியாவுக்கு வந்த தலாய் லாமாவும் ஒருவர். இது அவருக்கு இந்தியா தரும் உச்சபட்ச மரியாதை!

அவ்வளவு பெரிய சீனாவைப் பகைத்துக் கொண்டு தலாய்லாமாவுக்கு மரியாதையும் பாதுகாப்பும் தருகிறது இந்தியா!

 

ஆனால், சுண்டைக்காய் இலங்கையைப் பகைத்துக் கொள்ள முடியாது என்று காரணம் சொல்லி... பொய் அடுக்குகளால் சிறப்பு முகாம்கள் என்னும் மாயப் புலிகளைக் காட்டி தன் சட்டத்தை தானே ஏமாற்றுகிறது!

திபெத்தியனும், தமிழனும் இந்தியாவிடம் அடைக்கலம்தான் கேட்டான்.

திபெத்தியனுக்கு உச்சபட்ச மரியாதை கிடைக்கிறது. தமிழனுக்கு சிறப்பு முகாம் சித்திரவதைதான் கிடைக்கிறது.

 

புலி என்ற பெயரில் பலியாடுகளாக பயன்படுத்தப்படுகிறோம்.

எங்கட நிலைமையைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

இப்போதும் நாம் கேட்பது யாசகமல்ல... எம் உரிமை, சர்வதேசம் வகுத்த அகதி என்பதற்கான உரிமை!

இப்படிக்கு

சிறப்பு முகாமில் இறப்பின் விளிம்பில் இருக்கும் ஈழத் தமிழ் சகோதரர்கள்!

 

http://www.tamilleader.in/Content.aspx?ArticleId=3049&CategoryId=3#.UOriZuRQaFA

இந்திய விமான நிலையங்களில்... எந்த வகைச் சோதனையும் இல்லாமல் விமானம் ஏறும் வாய்ப்பு அதிமுக்கியமான இருபத்து இரண்டு பேருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் திபெத் அகதியாக இந்தியாவுக்கு வந்த தலாய் லாமாவும் ஒருவர். இது அவருக்கு இந்தியா தரும் உச்சபட்ச மரியாதை!

அவ்வளவு பெரிய சீனாவைப் பகைத்துக் கொண்டு தலாய்லாமாவுக்கு மரியாதையும் பாதுகாப்பும் தருகிறது இந்தியா!

 

ஆனால், சுண்டைக்காய் இலங்கையைப் பகைத்துக் கொள்ள முடியாது என்று காரணம் சொல்லி... பொய் அடுக்குகளால் சிறப்பு முகாம்கள் என்னும் மாயப் புலிகளைக் காட்டி தன் சட்டத்தை தானே ஏமாற்றுகிறது!

திபெத்தியனும், தமிழனும் இந்தியாவிடம் அடைக்கலம்தான் கேட்டான்.

திபெத்தியனுக்கு உச்சபட்ச மரியாதை கிடைக்கிறது. தமிழனுக்கு சிறப்பு முகாம் சித்திரவதைதான் கிடைக்கிறது.

தமிழ் நாட்டு புலியானது சோனியாவின் தமிழ் எதிர்ப்புக்கு பாவிக்கப்படும் முகமூடி சொல்தான்.

 

இலங்கையின் சிராணி அளவுக்கு தன்னும் துணிச்சல் இல்லாத அடிமைகள்தான், அடிமை மன்மோகன் சிங்கும், மற்ற தமிழ் நாடு அடிமைகளும். இதனால் தங்கள் தமிழ் எதிர்ப்பு போர்குற்றங்களில் இருந்து தப்ப வக்கில்லாதவர்களை கேடயமாக பாவிக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.