Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாரை முட்டாள் ஆக்க பார்க்கிறார்கள்????????????

Featured Replies

உயிரிழந்த படைவீரரின் சடலத்தை இராணுவம் கையேற்க முன்வந்ததாக புலிகள் தெரிவிப்பு

[15 - June - 2006] [Font Size - A - A - A]

-பொய்ப் பிரசாரமென கூறுகிறது பாதுகாப்பு அமைச்சு

வன்னியில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் ஆழ ஊடுருவி தாக்குதல் நடத்த முற்பட்ட போது இடம் பெற்ற மோதலில் உயிரிழந்த இராணுவச் சிப்பாயின் சடலத்தை கையேற்க படையினர் முன்வந்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினூடாக இந்தச் சடலத்தை பொறுப்பேற்க படையினர் முன் வந்துள்ளதாகவும், முதலில் சடலத்தை ஏற்க மறுத்த படையினர் பின்னர் அதற்கு இணங்கியதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சடலத்தை ஓமந்தை சோதனை நிலையத்தினூடாக பொறுப்பேற்க படையினர் தயாராயிருப்பதாக கண்காணிப்புக் குழுவினருக்கு படையினர் தெரிவித்திருந்தனர்.

இதேநேரம் இந்த இராணுவச் சிப்பாயின் சடலத்தை கிளிநொச்சியில் வைத்து கண்காணிப்புக் குழுவினரின் முன்னிலையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாகக் கையளிப்பதற்கான ஏற்பாடுகளை விடுதலைப் புலிகள் நேற்று மேற்கொண்டிருந்தனர்.

இந்தச் சடலம் நேற்று கையளிக்கப்படுமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும், ஏற்பாடுகளில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக இன்றே சடலம் படையினரிடம் கையளிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை காலை நெடுங்கேணி வீதியில் சந்நாசி பரந்தனுக்கும் புளியங்குளத்திற்குமிடையில், புலிகள் மீது கிளேமோர் தாக்குதலை நடத்தும் முயற்சியில் இவரும் வேறு சில ஆள ஊடுருவும் படையினரும் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த தமிழீழ தேசிய துணைப் படையினர் இவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் ஒரு சிப்பாய் கொள்ளப்பட்டதுடன் இரு படையினர் படுகாயங்களுடன் தப்பிவிட்டதாக புலிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரை சந்தித்த புலிகளின் வவுனியா மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் ஞானம், கொல்லப்பட்ட சிப்பாயின் சடலத்தை படையினரிடம் ஒப்படைக்க முன் வந்திருந்தார்.

இதையடுத்தே இந்தச் சடலப் பரிமாற்றத்திற்கான ஏற்பாடு நடைபெற்றுள்ளது.

படையினர் மறுப்பு

இதேவேளை, வன்னிக்குள் புலிகளின் பகுதிக்குள் ஊடுருவி இராணுவத்தினர் தாக்குதல் நடத்த முற்பட்ட போது தங்களது தேசிய துணைப் படையினரின் தாக்குதலில் இராணுவச் சிப்பாயொருவர் கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகள் கூறியுள்ளதை பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.

சர்வதேச ரீதியில் படையினருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்தப் பொய்ப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேநேரம், கடந்த 12 ஆம் திகதி ஓமந்தை முன்னரங்க காவல் நிலையத்திலிருந்து ஒரு இராணுவ வீரரும் கடந்த 5 ஆம் திகதி வவுனியாவிலிருந்து மற்றொரு இராணுவ வீரரும் காணாமல் போயுள்ளனர்.

இந்தச் சடலம் இவர்களில் ஒருவருடையதாயிருக்கலாமென்பத

கவலை என்னவென்றால் வெளிநாட்டு ஊடகங்களும் இவர்களின் நகைச்சுவைகளை செய்தியாய் வெளியிடுவதுதான்
  • தொடங்கியவர்

படையினரின் சடலம் ஒப்படைப்பு மேலுமொரு படையினனின் சடலம் கண்டெடுப்பு

Editor

Thursday, 15 June 2006

நேற்று முன்தினம் ஆழஊடுருவி தாக்கமுற்பட்ட படையினர் மீது தமிழீழ துணைப்படை வீரர்கள் நடாத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட படையினனின் சடலம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்;ட அரசியல் துறை செயலகத்தில் வைத்து போர்நிறுத்த கண்காணிப்புக்குழு, சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் ஆகியன சடலத்தை பொறுப்பேற்றுள்ளன.

நேற்று முன்தினம் ஆழஊடுருவி தாக்கமுற்பட்ட படையினர் மீது தமிழீழ துணைப்படை வீரர்கள் நடாத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட படையினனின் சடலம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்;ட அரசியல் துறை செயலகத்தில் வைத்து போர்நிறுத்த கண்காணிப்புக்குழு, சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் ஆகியன சடலத்தை பொறுப்பேற்றுள்ளன.

கொல்லப்பட்ட படையாள் நிட்டம்புவ மிகிரிகம வீதியைச் சேர்ந்த சுஊஊ ராஜபக்ச என அடையாளம் காணப்பட்பட்டுள்ளார். இந்நிலையில் தாக்குதல் நடைபெற்ற அதே பகுதியிருந்து மேலுமொரு படையினனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது

http://www.battieelanatham.com/newsite/ind...d=556&Itemid=37

  • தொடங்கியவர்

கவலை என்னவென்றால் வெளிநாட்டு ஊடகங்களும் இவர்களின் நகைச்சுவைகளை செய்தியாய் வெளியிடுவதுதான்

ஆமா சண்டை நடந்து உடலை ஒப்படைக்கும் வரை அவர்களுக்கு தெரியாது 2 இரானுவத்தை காணவில்லை என்று கொடுக்கும் போது தான் தெரிந்தது :P :P

  • தொடங்கியவர்

வவுனியாவில் மற்றொரு கிளைமோர்த் தாக்குதல் முயற்சி முறியடிப்பு

[வியாழக்கிழமை, 15 யூன் 2006, 16:19 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

வவுனியா வடக்கில் சிறிலங்கா இராணுவத்தினரின் மற்றொரு கிளைமோர்த் தாக்குதல் முயற்சி இன்று வியாழக்கிழமை முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்த முறியடிப்புத் தாக்குதலில் இராணுவத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார்.

சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர்த் தாக்குதல் முயற்சி நேற்று முன்னாள் தமிழீழத் தேசிய துணைப்படை சிறப்பணியினரால் முறியடிக்கப்பட்டு இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். அப்போது இராணுவத்தினர் தமது உடமைகளை விட்டுத் தப்பினர். ஒருவர் கொல்லப்பட்டார். அந்நபர் விடுதலைப் புலிகளின் இராணுவச் சீருடையை அணிந்திருந்தார்.

இதையடுத்து ஊடுருவியுள்ளோரைத் தேடும் நடவடிக்கையை விடுதலைப் புலிகள் தொடர்ந்து மேற்கொண்டனர்.

இந்த தேடுதல் நடவடிக்கையின் போது வவுனியாவின் வடக்கில் கிளைமோர்த் தாக்குதல் நடத்த முயற்சித்த இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இத்தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவத்தைச் சேர்ந்தவரும் விடுதலைப்புலிகளின் இராணுவச் சீருடையணிந்திருந்தார். அவரிடம் துப்பாக்கி குண்டுகள் இருந்துள்ளன.

http://www.eelampage.com/?cn=26882

புலிகள் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டு ஒப்படைக்கப்படுகுது. இவர்கள்தான் சென்ற கிழமை கிளைமோர் தாக்குதல்கள் நடத்தினார்கள் என்றும் நிரூபிக்கப்பட்டிருக்கு. 22 இற்கு மேற்பட்ட பொதுமக்களையும் புலிகளின் தளபதி, போராளிகளையும் கொன்றிருக்கிறார்கள். ஆனால் இது ஒன்றும் யுத்தநிறுத்தமீறல் இல்லைப்போல.

  • தொடங்கியவர்

சீ சீ மக்களால் தேர்ந்து எடுக்கப்பட அரசுக்கு எதிராக எது நடந்தாலும் அது தான் யுத்த நிறுத்த மீறல்லாம் அது தான் உலக சன(?)நாய்)கம் :P

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த உலகத்தை? :oops: :oops: :oops: :oops:

  • கருத்துக்கள உறவுகள்

செய்தித்திருத்தம்

வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினருடனான மோதலில் இராணுவத் தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

நெடுங்கேணி புளியங்குளம் வீதியில் மதியாமடு மற்றும் நைனாமடு பகுதியில் கிளைமோர் கண்ணிவெடியை பொருத்த முயற்சித்த போது இம்மோதல் நடந்தது.

இத்தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவத்தைச் சேர்ந்தவரின் சடலம் தற்போது கிளிநொச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த சடலம் நாளை சிறிலங்கா இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

கொல்லப்பட்ட சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்தவர், தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையை அணிந்திருந்தார்.

வவுனியாவில் கடந்த மூன்று நாட்களில் இரண்டாவது முறையாக இத்தகைய மோதல் நடந்துள்ளது. வவுனியா மாவட்டத்தில் இரு நாட்களுக்கு முன்னர் நடந்த மோதலில் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். அவரும் விடுதலைப் புலிகளின் இராணுவச் சீருடையை அணிந்ந்திருந்தார்.

-புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.