Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது நிலத்தை விட்டு எங்கு செல்வது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் எனக்குப் பின்னர் மாணவர் ஒன்றியத்தில் தலைவராக இருந்த மாணவ நண்பன் ஒருவன் முகப்புத்தகம் வழியாக “நீங்கள் இப்பொழுது நாட்டுக்கு வராதீர்கள்” என்று ஒரு தகவலை எனக்கு அனுப்பியிருந்தான். அவனுடைய தகவலைப் பார்க்கும் பொழுது நான் கொழும்பு பண்டாரநாயக்கா விமான நிலையத்திலிருந்து தமிழ் ஈழத்திற்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். நான் சென்னையிலிருந்து புறப்படுவதற்கு முதல்நாள் எனது கல்லூரி நண்பன் ஒருவன் “நீ இப்ப உள்ள நிலமைக்கு நாட்டுக்குப் போகத்தான் வேணுமா?” என்று கேட்டுக்கொண்டிருந்தான். நாட்டிற்கு செல்லாமல் என்னால் இருக்க முடியாது என்று தெரிந்தருந்தும் அப்படிக் கேட்டான். 

நாட்டை விட்டு ஒவ்வொருமுறையும் நான் பிரியும் பொழுது எப்பொழுது திரும்புவேன் என்றே நினைத்துக்கொள்வேன். முதன்முதலில் இந்தியாவுக்கு படிக்க வருகையில் யாழ் நகரத்தைவிட்டு செல்லும் பொழுது பேரூந்தில் நான் விம்மி விம்மி அழுதேன். அம்மாவை பிரியும் பொழுது அண்ணாவை இழந்த பொழுது தங்கயை பிரியும் பொழுது காதலியைப் பிரியும் பொழுது அழுததைவிட என்னை வருத்திய துயரம் அது. எப்பொழுதிலும் என்னுடைய நிலத்திலேயே நான் வாழ விரும்புகிறேன். எங்களுடைய வாழ்வு என்பது எங்கடைய நிலத்தில்தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் பொழுதெல்லாம் ஒரு பயணத்தின் இடையில் தரித்திருப்பதுபோலவே இருக்கும். 

வராதே என்று அந்த நண்பன் சொன்னதுக்கு என்ன காரணம்? 

கடந்த கார்திகை மாதம் மாவீரர் தினத்தன்று யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் விளக்கேற்றி ஈழப்போராட்டத்தில் போராடி மாணடவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தினர். போரால் மாண்ட புலிகளுக்கு அஞ்சலி செலுத்தினால் அவர்கள் உயிர்தெழக்கூடும் எனறு அஞ்சிய இராணுவத்தினர் மாணவர்கள்மீது தாக்குதல்களை மேற்கொண்டனர். இராணுவத்தின் அராஜகத்தைக் கண்டித்து மறுநாள் நடத்திய போராட்டத்தில் இராணுவத்தினரும் காவல்துறையினரும் மாணவர்கள் மீது கடும் தாக்குதல்களை நடத்தினார்கள். 

இந்த நிகழ்வுக்குப் பின்னர் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அடுத்த ஆண்டு மாவீரர் தினத்தை மாணவர்களுடன் இணைந்து தாமும் கொண்டாடப்போகிறோம் என்று தெரிவித்தது. இறந்தவர்களுக்கு விளக்கேற்ற ஏன் தடைவிதிக்க வேண்டும் என்றும் ஆசிரியர் சங்கத் தலைவர் இராசகுமாரன் கேள்வி எழுப்பினார். 

எங்களுடைய போராட்ட வரலாற்றில் யாழ் பல்லைக்கழகததின் பங்கு முக்கியமானது. அந்தப் பங்கின் முக்கியத்துவம் காரணமாகவே யாழ் பல்கலைகழகம்மீது தொடர்ந்து இலங்கை அரச இராணுவம் தனது கண்காணிப்பை செலுத்தி வருகிறது. மாணவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் ஒரு துரும்பைப் பற்ற வைத்தாலும் அது தமிழர் தேசத்தின் எழுச்சியாக மாறிவிடும் என்ற பயம் இலங்கை அரசுக்கு எப்பொழுதுமுண்டு. இதற்காக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ச்சியாக பலத்த இழப்புக்களையும் தாக்குதல்களையும் எதிர்கொண்டே போராடிவருகிறார்கள். 

புலிகள் வழிகாட்டுகிறார்கள், முன்னாள் தலைவர்கள் வழிகாட்டுகிறார்கள் என்றே அரசும் இராணுவமும் நினைக்கிறது. உண்மையில் ஒவ்வொருமுறையும் மாணவர் ஒன்றியங்கள் மாறும் பொழுது வரலாற்று ரீதியான பணியை செய்ய மாணவர்களுக்கு யாரும் வழிகாட்டுவதில்லை. வரலாறுதான் வழிகாட்டுகிறது. ஒவ்வொரு மாணவர் ஒன்றியத்தையும் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்குவது, மாணவர்களை தாக்குவது, கொலை செய்வது, கைது செயவது என்று பல நடவடிக்கைகளை இராணுவம் மேற்கொண்டிருக்கிறது.

வருடம் தோறும் மாணவர்களை கொலைப்பட்டியலில் அறிவித்தது, பகீரதனின் கைது, தவபாசிங்கம்மீதான தாக்குதல், தர்சானந்மீதான தாக்குதல் எவையும் மாணவர்களது செயற்பாடுகளை அடக்க முடியவில்லை. இப்பொழுது இலங்கை அரசு மிகவும் கொடுமையான ஒரு உபாயத்தை கையாள்கிறது. மாவீரர் நாளைக் கொண்டாடியமைக்காகவும் போராட்டத்தில் ஈடுபட்டமைக்காகவும் மாணவர்களின் தலைவர்களை கைது செய்துள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத தடுப்பு புலனாய்வுத்துறையால் மாணவத்தலைவர்க் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்க முடியாது என்று ராஜபக்சவின் தம்பி பாதுகாப்பு அமைச்சு செயலார் கோத்தபாய சொல்லியுள்ளார். 

இறந்தவர்களை நினைவுகூர எங்களுக்கு தடையா? என்றுதான் ஒவ்வொரு ஈழத் தமிழரும் ஆவேசம் கொள்கிறார்கள். இம்முறை மாவீர்தினத்தன்றுதான் கார்த்திகை தீபமும் வந்தது. அதனால் உலகமெங்கும் தமிழர்கள் வசிக்கும் வீடுகளிலெல்லாம் விளக்கு ஏற்றப்பட்டது. வன்னியில் வீடுகளுக்குள் நுழைந்த இராணுவம் கண்ணுக்குத் தெரிந்த விளக்குகளை எல்லாம் அணைத்தனர். கால்களால் மிதித்துப் போட்டனர். போரில் மாண்ட புலிகளுக்கும் தமிழர் நிலத்தில் எரியும் விளக்குகளுக்கும் இராணுவமும் அரசும் அஞ்சுகிறது. மாண்ட புலிகளின் நினைவுலிருந்து அவர்களுக்காக ஏற்றப்படும் விளக்குகளிலிருந்து மீண்டும் புரட்சி வெடிக்கும் என்று அஞ்சுகின்றனர். அந்த அச்சத்திற்கு காரணமும் இருக்கிறது. தொடர்ந்தும் ஈழதேசத்தை சிங்கள அரசும் அதன் இராணுவமும் இப்படி ஆக்கிரமித்து நின்று அநீதிகளை செய்தால் புரட்சி வெடிக்கத்தான் செய்யும். 

இந்த அநீதியின் உச்சம் என்பது போரில் மாண்ட வீடுதலைப் புலிகளை நினைவுகூர மாத்திரம் இராணுவத்தினர் தடைவிதிக்கவில்லை. முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரவும் தடைவிக்கப்படட்டது. சிங்கள இராணுவத்தின் போர்வெற்றிக் களிப்பை நினைவுகூர தமிழர் நிலத்தில் பெரும் நினைவுத்தூபிகளை கட்டிக்கொண்டு எங்கள் நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டு தமிழர்நிலத்திற்காய் போராடி மாண்ட புலிகளையும் தமிழ் நிலச் சனங்கனையும் நினைவுகூர படையினர் தடைவிதிக்கின்றனர். இது எவ்வளவு அநீதியும் அநியாயமும் நிறைந்தது? 

கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கப்படவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய சொல்லியுள்ளார். ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி புனர்வாழ்வு அளிப்பதாகச் சொல்லி பல ஆயிரக்ணக்கான போராளிகள் சிறைவைக்கப்படடார்கள். 

பல்கலைக்கழக மாணவர்கள் மனிதாபிமான முறையில் போராடியதற்காக அவர்களுக்கும் புனர்வாழ்வு கொடுப்பது எந்த வகையில் நியாயம்? மாணவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும்படி எந்தச் சட்டத்திலும் இடமில்லை. இது மிகவும் சட்ட விரோதமானது. இங்கு போராட்ட வழிமுறைகளுக்காக போராளிகளோ மாணவர்களோ தண்டிக்கபடவில்லை. போராடும் இலக்கிற்காகவே தண்டிக்கப்படுகிறார்கள். 

இலங்கை அரசுக்கு எதிராக போராடினால் குரல் எழுப்பினால் அவர்களை புனர்வாழ்வு என்ற பெயரில் சிறையில் அடைத்து அந்தப் போராட்டத்தை அழிக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. உண்மையில் புனர்வாழ்வு அளித்தல் என்ற பெயரில் யாரையும் சிறையில் வைக்கலாம் என்ற அச்சுறுத்தலைத்தான் இலங்கை அரசு தமிழ் மக்களை நோக்கி விடுகிறது. 

இம்முறை யாழ்ப்பாணம் செல்லும் பொழுது மாலை நேரமாக இருந்தது. யாழ்ப்பாணம் ஒரு கொலையுறைந்த நகரமாக பேசாமல் இருந்தது. யாருக்கும் சொல்லவும் இல்லை. யாரையும் சந்திக்கவில்லை. பல நண்பர்கள் தலைமறைவாகிவிட்டார்கள். யாரையும் பார்க்காமல் என்னை மறைத்துக்கொண்டு யாழ் நகருக்குச் சென்றேன். 

இப்பொழுது போர்க்காலத்தைப் போன்தொரு பதற்ற நிலைமைக்கும் கொலையமைதிக்கும் வந்துவிட்டது யாழ்நகரம். மர்மமாக ஆட்கள் கடத்திச்செல்லப்படுகிறார்கள். முக்கியமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், முன்னாள் போராளிகள் படையினரால் பயங்கரவாத தடைப்புலனயர்வுப் பிரிவுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். யாழ் பல்கலைக்கழகமோ பெரும் பத்தற்ற சூழலில் இருக்கிறது. மீண்டும் இந்தக் காலம் எல்லோரையும் வாய் மூட வைக்கிறது. தெருக்களை இரத்தம் உறையச் செய்கிறது. எல்லோரையும் அச்சமூட்டுகிறது. நாங்கள் எங்கள் நகரஙகளையும் நிலத்தையும் வாழ்க்கையையும் இழந்து கொண்டிருக்கிறோம். 

இம்முறை நாட்டிற்கு வருவதற்கு முன்பு வழமைக்கு மாறாக நான் மகிழச்சியாக இருக்கிறேன் என்று எனது கல்லூரி நண்பன் ஒருவன் சொல்லிக்கொண்டிருந்தான். முன்னைய காலங்களில் நாட்டிற்குச் செல்ல முதல்நாள் மிக துக்கமாய் இருப்பேன். நிச்சயமற்ற அந்த சூழல்களினால் நாட்டிற்கு போவற்கு முதலில் எழுதிய சில குறிப்புக்களை அழித்துமிருக்கிறேன். மீண்டும் மோசமாகிய ஒரு காலத்தில் வந்திருக்கிறேன். 

நாட்டுக்கு வந்ததும் எதற்கு நீ இப்பொழுது வந்தாய்? என்றுதான் பலர் கேட்டார்கள். இப்படியெல்லாம் எழுதிவிட்டு எப்படி நாட்டுக்கு போய்வருகிறாய்? ஏன் வருகிறாய்? எப்படி வந்துபோகிறாய் என்ற கேபள்விகளளைய பலர் என்னைப் பார்த்து பலர் கேட்டதுண்டு. 

நாட்டிற்கு வராமல் இருக்க எப்படி முடியாதோ அப்படித்தான் எழுதாமல் இருக்கவும் என்னால் முடிவதில்லை. நிச்சயமில்லாதது என்னுடைய வாழ்க்கை மட்டுமல்ல. எங்கள் ஒவ்வொரு சனத்தின் வாழ்வும் அப்படித்தான். சிங்கள இராணுவத்தின் ஆட்சியில் அதன் உச்சமான அநீதிகள் மேற்கொள்ளப்படும் காலத்தில் வாழ்கிறோம் என்பதற்காக அதைப் பற்றிப் பேசாமல் இருக்க இயலுமா? நாட்டிற்கு போய் வரவேண்டும் அங்கு வாழ வேண்டும் என்பதுற்கு ஏற்ப பேச இயலுமா? 

எந்த தருணத்திலும் நாங்கள் எங்கள் நிலத்தில் வாழவேண்டும் என்பதற்காகவே பேசவேண்டும். தமிழ் ஈழத்தில் போர் நடந்து ஆயுதப்போராட்டம் அழிக்கப்பட்டு போராளிகள் சிதைக்கப்பட்டு பேரழிவு நிகழ்த்தப்பட்ட பொழுதிலும் நாம் தமிழ் ஈழத்தில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்த நிலத்தில் வாழ்வதற்காகவே இவ்வளவு தியாகங்களைச் செய்து போராடினோம். 

புலிகள் இருந்தபொழுது கறுப்பாக தெரந்தது இன்று சிங்கள அரச ஆட்சியில் வெள்ளையாக தெரிவதாக விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் சொல்லுகின்றனர். இப்பொழுதும் எழுதவும் வேண்டும் எனபதற்காக இப்படியெல்லாம் எழுத வேண்டுமா? மெனமாயிருத்தல் என்பது சாவுக்கு சமனானதல்ல. காலத்திற்கு ஏற்ப வார்த்தைகளையும் வர்ணங்கiயும் மாற்றி மாற்றிப பேசுதலே சாவுக்குச் சமனானது. தாங்கள் சொல்ல விரும்புவதை எழுத விரும்புவதை சொல்லவும் எழுதவும் முடியாதவர்கள் பலர் இன்னும் ஈழத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறாரகள்.

அந்த நண்பன் தனக்கு சில பொருட்களை சென்னையிலிருந்து வாங்கி வரும்படி என்னிடம் கேட்டிருந்தான். யாரோடும் தொடர்புகொள்ள விரும்பாத அவனுடைய செல்பேசி அணைக்கபட்டிருக்கிறது. அவன் தலைமறைவாக இருக்கிறான். இப்பொழுது எல்லோருடைய வாழ்வும் தலைமறைவானதுபோல ஆகிக் கொண்டிருக்கிறது. இங்கு என்னை வரவேண்டாம் என்ற அந்த நண்பனின் தகவலுக்கு என்னுடைய பதிலை அனுப்பியிருந்தேன். இதுதான் அந்தப் பதில். 

“என்னுடைய நிலத்தை விட்டு நான் எங்கு செல்லுவது?”

தீபச்செல்வன்

உயிர்மை

 புலிகள் வழிகாட்டுகிறார்கள், முன்னாள் தலைவர்கள் வழிகாட்டுகிறார்கள் என்றே அரசும் இராணுவமும் நினைக்கிறது. உண்மையில் ஒவ்வொருமுறையும் மாணவர் ஒன்றியங்கள் மாறும் பொழுது வரலாற்று ரீதியான பணியை செய்ய மாணவர்களுக்கு யாரும் வழிகாட்டுவதில்லை. வரலாறுதான் வழிகாட்டுகிறது.
 

 

உண்மை.


அத்துடன் புலம்பெயர் தமிழர்கள் கூட வழி காட்டுவதில்லை. அவர்கள் கூட ஒத்தாசையாகவே உள்ளார்கள், அப்படித்தான் இருக்கவும்  முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

 தாங்கள் சொல்ல விரும்புவதை எழுத விரும்புவதை சொல்லவும் எழுதவும் முடியாதவர்கள் பலர் இன்னும் ஈழத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறாரகள்.

 

 

ஈழத்தில் மட்டுமல்ல புலம்பெயர் தேசத்திலும் பலரின் நிலை அதுதான்.

அதுதான் டக்கிலஸ் இன்னமும் அங்கு இருக்கின்றார் .தேசியவாதிகள் மாதிரி நாட்டை விட்டு ஓடாமல் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.