Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடிதமொன்றின் மூலம் நாட்டை ஆட்சி செய்த காலம், மீண்டும் உருவாக இடமளிக்க முடியாது - ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
mahinda-seithy-2-150.jpg

கடுதாசித் துண்டொன்றில் நாட்டை ஆட்சி செய்த காலம் மீண்டும் இந் நாட்டில் உருவாக இனிமேலும் யாருக்கும் இடமளிக்கப் போவதில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். நாட்டின் சட்டங்களை அலட்சியம் செய்து அரசியல் இலாபம் தேட முனையும் குழுக்களை இனங்காண்பது நாட்டை நேசிக்கும் சகலரதும் பொறுப்பாகுமெனவும் மஹிந்த தெரிவித்தார்.

  

நேற்று அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினருக்கும் இடையிலான விசேட சந்திப்பில் உரையாற்றிய போதே மஹிந்த இவ்வாறு தெரிவித்தார்.

 

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் விஜயதாச ராஜபக்ச உட்பட இலங்கை நீதித்துறையின் 14 சட்டத்தரணிகள் சங்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளும் இச்சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர். நீதித்துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் இவர்கள் ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்தினர்.

 

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மஹிந்த ராஜபக்‌ஷ துண்டுக் கடிதமொன்றின் மூலம் நாட்டை ஆட்சி செய்த காலம் மீண்டும் உருவாக இடமளிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

 

இங்கு கருத்து வெளியிட்ட இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அதிகாரிகள், சில குழுக்கள் தமது சங்கத்தில் ஊடுருவி அரசியல் இலாபம் தேட முனைவதாகத் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் சட்டத்துறையில் இடம்பெற்ற விவகாரங்களுக்கும் தமது சங்கத்திற்கும் எத்தகைய சம்பந்தமுமில்லை எனவும் சட்டத்தரணிகள் சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=73891&category=TamilNews&language=tamil

கடுதாசித் துண்டொன்றில் நாட்டை ஆட்சி செய்த காலம்

அதன் கருத்து?

அதன் கருத்து?

 

87,89 களில் ஜேவிபி தமக்கு எதிரானவர்கள், அமைப்புகள், அரச அலுவலகங்கள், அதிகாரிகளுக்கு 'இன்ன இன்ன மாதிரி நடக்க வேண்டும்' என்று உத்தரவிடுவார்கள். அப்படி நடக்கவில்லையாயின் சுட்டுக் கொல்லப்படுவார்கள். ஒரு கடிதமே போதும் பல அரச நிறுவனங்களை முடக்குவதற்கு என்று ஒரு காலம் இருந்தது அன்று.

 

மகிந்த ஜேவிபி க்கு பெரிய ஆபத்தைக் கொண்டு வரப் போகின்றார் என்பதுதான் உண்மையான அர்த்தம்!

அடிக்கிறகைதான் அணைக்கும். UNHRC க்கு போய் வேள்விக்கு கடா வளர்த்தவர்.

 

அவங்க என்னடாப்பா, மகிந்தாவின் வேள்விக்கு அளவாக திரும்ப வளர்ந்துவிட்டார்கள்....? அல்லது கடா இல்லாவிட்டால் குட்டியாடு தன்னும் பரவாயில்லை என்கிறாரா?

 

வெட்ட வெட்ட தளைக்கிற வாளைமரம் மாதிரி.... சிறிமா வேள்வி நடத்தி, பிறேமதாச வேள்வி நடத்தி, அதே வாளையில் மகிந்தாவும் தயாராகிறார்.

 

கடதாசித் துண்டு ஆட்சி வேண்டாம் .இப்போது இருப்பது போலவே வெள்ளை வான் ஆட்சியும் ,இராணுவ,புலனாய்வு ,கைதுகள்,ஜனநாயக வழியில் செயற்படுவோரை பயங்கரவாதிகள் ஆக்கும் ஆட்சியும் இருப்பது தாராளாமாய் போதுமே.

ஆட்டைக் கடித்து,மாட்டைக் கடித்து,கடைசியில் தன் ஆட்சியில் தானே அமர்த்திய பிரதம நீதியரசரையும் கடித்து போட்டாயிற்று ,இனி வேறு என்ன வேண்டும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.