Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகாராணி இல்லாத மாநாடா? உலகத் தலைவர்களும் வரார்; பொதுநலவாய விவகாரத்தில் இலங்கைக்கு பேரிடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மகாராணி இல்லாத மாநாடா? உலகத் தலைவர்களும் வரார்; பொதுநலவாய விவகாரத்தில் இலங்கைக்கு பேரிடி
elisapeth.jpg
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் உச்சிமாநாட்டைப் புறக்கணிப்பதற்கு கனடா, பிரிட்டன் உள்ளிட்ட முக்கிய சில நாடுகள் தீர்மானித்துள்ளன என்று இராஜ தந்திர வட்டாரங்களிலிருந்து நம்பகரமாக அறியமுடிகின்றது.
 
அதேவேளை, இந்த மாநாட்டை வைபவரீதியாக ஆரம்பித்து வைப்பதற்கு இலங்கை வரவிருந்த பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவரும், பிரிட்டனின் மகாராணியுமான எலிசபெத் தனது பயணத்தை இரத்துச் செய்வார் என்றும் அந்தவட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. 
 
இதனால் இனிவரும் காலங்களில் இலங்கை அரசு அரசியல், பொருளாதார ரீதியில் பல நெருக்கடிகளைச் சந்திக்குமென எச்சரிக்கைப்பட்டுள்ளது. 
 
இலங்கையில் மோசமாக இடம் பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள், சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிரான அடக்குமுறை, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் அரசின் அசமந்தப் போக்கு ஆகியவை உட்பட மேலும் சில காரணங்களைக் கருத்திற்கொண்டு அவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவே மேற்படி நாடுகள் இலங்கையில் நடைபெறும் மாநாட்டைப் புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளன என்று தெரிய வருகிறது.
 
அத்துடன், பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க பதவிநீக்கப்பட்ட விவகாரத்தையும் பொதுநலவாய நாடுகள் தற்போது கையிலெடுத்து இலங்கைக்கு அழுத்தங்களைப் பிரயோகித்துவருகின்றன.
 
முன்னெச்சரிக்கை
 
இலங்கையில் மனித உரிமை விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் தாம் அங்கு நடைபெறும் பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிப்பார்கள் எனப் பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூனும், கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹர்பரும் முன்னதாகப் பல தடவைகள் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
  
அண்மையில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட கனேடிய குடிவரவுத்துறை அமைச்சர் கொழும்பில் வைத்தே மேற்படி கருத்தைக் காட்டமாகத் தெரிவித்துவிட்டு நாடு திரும்பினார் என்பதும் தெரிந்ததே.
 
அதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை இலங்கை அரசு முழுமையாக அமுல்படுத்துவதற்குக் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறுவதாலும்  இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வது குறித்துத் தீவிரமாகப் பரிசீலிக்கவேண்டியுள்ளது என ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, நைஜீரியா ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன. 
 
வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு
 
குறிப்பாக, பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் உச்சிமாநாடு நடைபெறுவதற்கு முன்னர் அதில் அங்கம் வகிக்கும் 54 நாடுகளைச் சேர்ந்த வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் முக்கிய மாநாடொன்று நடைபெறும். 
 
அவ்வேளை தமது நிலைப்பாட்டைப் கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகள் பகிரங்கமாக அறிவிக்கும் என்றும், இதர நாடுகளும் தத்தமது தீர்மானங்களை அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
கொழும்பில் நடைபெறும் மாநாட்டை பகிஷ்கரிக்குமாறு மலேசியாவிடம் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தாலும், இது விடயத்தில் தமது முடிவை மலேசியா இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. 
 
இதற்கிடையில், சிங்கப்பூர், இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு, பங்களாதேஷ் உள்ளிட்ட இலங்கை சார்பான நாடுகள் கொழும்பில் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்ளும் என்று தெரியவருகிறது. 
 
கமலேஷ் சர்மா இலங்கை பயணம்
 
பொதுநலவாய மாநாடு நடைபெறுவதற்கு முன்னர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள அதன் செயலாளர் கமலேஷ் சர்மாவிடம் இலங்கை அரசு தமது நியாயாதிக்கங்கள் தொடர்பில் விளக்கமளித்தாலும், தமக்கு நேரடியாகக் கிடைக்கப்பெறும் தகவல்களை அடிப்படையாகக்கொண்டே கனடா, பிரிட்டன் போன்ற நாடுகள் இலங்கை விடயத்தில் தீர்க்கமானதொரு முடிவை அறிவிக்கவுள்ளன.
 
1976இற்குப் பின்னர் முக்கிய மாநாடு
 
அதேவேளை, இவ்வாறான சவால்களுக்கு மத்தியில் பொதுநலவாய மாநாட்டை அம்பாந்தோட்டையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்துவருகின்றது. 1976ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் மாநாட்டுக்குப் பின்னர் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் முக்கிய மாநாடு இதுவாகும். 
 
எனினும், பலம்பொருந்திய நாடுகள் மாநாட்டைப் புறக்கணிக்கவுள்ளதால், இலங்கைக்கு எதிர்காலத்தில் அரசியல், பொருளாதார ரீதியில் சிக்கல்கள் ஏற்படும் நிலை உருவாகும் என எதிர்வு கூறப்படுகின்றது. 
 
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவராகச் செயற்படும் பிரிட்டன் மகாராணிதான் இந்த மாநாட்டை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைப்பார். 
 
அதன்பொருட்டு அவர் 2013இல் இலங்கை வருவார் எனக் கூறப்பட்டிருந்தாலும், அது தற்போது தலைகீழாக மாறியுள்ளது.
 
18 ஜனவரி 2013, வெள்ளி 8:35 மு.ப

பொதுநலவாய நாடுகளின் கொழும்பு மாநாட்டில் கனடா, பிரித்தானியா பங்கேற்குமா?

 

எதிர்வரும் நவம்பர் மாதம் சிறிலங்காவில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் உச்சிமாநாட்டைப் புறக்கணிப்பதற்கு கனடா, பிரித்தானியா உள்ளிட்ட முக்கிய சில நாடுகள் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

இந்த மாநாட்டை வைபவரீதியாக ஆரம்பித்து வைப்பதற்கு சிறிலங்கா வரவிருந்த பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவரான எலிசபெத் மகாராணி தனது பயணத்தை இரத்துச் செய்வார் என்றும் அந்த வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

 

இதனால் இனிவரும் காலங்களில் சிறிலங்கா அரசு அரசியல் ரீதியில் பல நெருக்கடிகளைச் சந்திக்க நேரலாமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

இலங்கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள், சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிரான அடக்குமுறை, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் மஹிந்த அரசின் அசமந்தப்போக்கு போன்ற காரணங்களைக் கருத்திற்கொண்டு அவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவே மேற்படி நாடுகள் இலங்கையில் நடைபெறும் மாநாட்டைப் புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளதாக நம்பப்படுகிறது.

 

அத்துடன், பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க பதவிநீக்கப்பட்ட விவகாரத்தையும் பொதுநலவாய நாடுகள் தற்போது கையிலெடுத்து இலங்கைக்கு அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றன.

 

 

முன்னெச்சரிக்கை

 

இலங்கையில் மனித உரிமை விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் தாம் அங்கு நடைபெறும் பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிப்போமென பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரூனும், கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹர்பரும் முன்னதாக பல தடவைகள் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட கனேடிய குடிவரவுத்துறை அமைச்சர் கொழும்பில் வைத்தே மேற்படி கருத்தைத் தெரிவித்திருந்தார்.


அதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை சிறிலங்கா அரசு முழுமையாக அமுல்படுத்துவதற்கு காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிடுவதால் அங்கு நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வது குறித்துத் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டியுள்ளது என ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, நைஜீரியா ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.

 


வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு

குறிப்பாக, பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் உச்சிமாநாடு நடைபெறுவதற்கு முன்னர் அதில் அங்கம் வகிக்கும் 54 நாடுகளைச் சேர்ந்த வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் முக்கிய மாநாடொன்று நடைபெறும். இதன்போது தமது நிலைப்பாட்டைக் கனடா, பிரித்தானியா ஆகிய நாடுகள் பகிரங்கமாக அறிவிக்கும் என்றும், இதர நாடுகளும் தத்தமது தீர்மானங்களை அறிவிக்கும் என்றும் தெரியவருகின்றது.


கொழும்பில் நடைபெறும் மாநாட்டை பகிஷ்கரிக்குமாறு மலேசியாவிடம் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துவந்தாலும், இது விடயத்தில் தமது முடிவை மலேசியா இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. இதற்கிடையில், சிங்கப்பூர், இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு, பங்களாதேஷ் உள்ளிட்ட சிறிலங்கா சார்பான நாடுகள் இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் என உறுதியாகத் தெரியவருகிறது.

 

கமலேஷ் சர்மா இலங்கை விஜயம்

பொதுநலவாய மாநாடு நடைபெறுவதற்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அதன் செயலாளர் கமலேஷ் சர்மாவிடம் இலங்கை அரசு தமது நியாயாதிக்கங்கள் தொடர்பில் விளக்கமளித்தாலும், தமக்கு நேரடியாகக் கிடைக்கப்பெறும் தகவல்களை அடிப்படையாகக்கொண்டே கனடா, பிரித்தானியா போன்ற நாடுகள் இலங்கை விடயத்தில் தீர்க்கமானதொரு முடிவை அறிவிக்கவுள்ளன.

 

1976 இற்குப் பின்னர் முக்கிய மாநாடு

அதேவேளை, இவ்வாறான சவால்களுக்கு மத்தியில் பொதுநலவாய மாநாட்டை அம்பாந்தோட்டையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மஹிந்த அரசு செய்துவருகின்றது. 1976ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் மாநாட்டுக்குப் பின்னர் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் முக்கிய மாநாடு இதுவாகும்.

 

எனினும், பலம்பொருந்திய நாடுகள் மாநாட்டைப் புறக்கணிக்கவுள்ளதால், இலங்கைக்கு எதிர்காலத்தில் அரசியல் ரீதியில் சிக்கல்கள் ஏற்படும் நிலை உருவாகும் என எதிர்வு கூறப்படுகின்றது. இதனால் மகிந்த அரசு பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவராகச் செயற்படும் பிரித்தானிய மகாராணிதான் இந்த மாநாட்டை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைப்பார். இதன்பொருட்டு அவர் 2013இல் இலங்கை வருவார் எனக் கூறப்பட்டிருந்தாலும், அது தொடர்பாக தற்போது சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=e0acd430-d9ca-4119-aef0-a71ed4e79852

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி ஒன்று நடந்தால் தமிழர் புத்துயிர் பெறுவர்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி ஒன்று நடந்தால் தமிழர் புத்துயிர் பெறுவர்.

பொ.ந.நா. அமைப்பை ஆரம்பித்த‌ பிரித்தானியா கலந்து கொள்ளாமல் விட்டால்... அது பெரிய, அவமானமாக இருக்கும்.

இதற்கு, இந்தியா... பிரித்தானியாவை கலந்து கொள்ளச் சொல்லி, கெஞ்சிக் கேட்கும். அதற்குப் பிறகு, கனடாவும்.. ஆட்டோமெற்றிக்காக... பொ.நா. மாநாட்டில் கலந்து கொள்ளும்.

பொ.ந.நா. அமைப்பை ஆரம்பித்த‌ பிரித்தானியா கலந்து கொள்ளாமல் விட்டால்... அது பெரிய, அவமானமாக இருக்கும்.

இதற்கு, இந்தியா... பிரித்தானியாவை கலந்து கொள்ளச் சொல்லி, கெஞ்சிக் கேட்கும். அதற்குப் பிறகு, கனடாவும்.. ஆட்டோமெற்றிக்காக... பொ.நா. மாநாட்டில் கலந்து கொள்ளும்.

 

தமிழின அழிப்பை சிங்கள அரச பயங்கரவாதிகளுடன்  கைகோர்த்து செய்யும் இந்தியக் காட்டுமிராண்டிகளை எம்மவர் சிலர் தூக்கிப் பிடிப்பதால்தான் இது சாத்தியம் ஆகலாம்.

எனவே இந்திய காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகளின் சுயரூபத்தையும் சர்வதேச அரங்கில் வெளிப்படுத்த வேண்டும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழின அழிப்பை சிங்கள அரச பயங்கரவாதிகளுடன்  கைகோர்த்து செய்யும் இந்தியக் காட்டுமிராண்டிகளை எம்மவர் சிலர் தூக்கிப் பிடிப்பதால்தான் இது சாத்தியம் ஆகலாம்.

எனவே இந்திய காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகளின் சுயரூபத்தையும் சர்வதேச அரங்கில் வெளிப்படுத்த வேண்டும்.

இப்பிடியான... மாநாட்டில், விடிவு கிடைக்கும்... என்று, ஏங்கும்... அப்பாவிகளுக்கு... அல்வா கொடுப்பாங்கள்.

 

 

நியானி: ஒரு வரி தணிக்கை

Edited by நியானி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.