Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்துக்களின் ஓட்டுகளை பெறுவதற்காக பிரியங்காவை கும்பமேளாவில் குளிக்க வைக்க காங்கிரஸார் ஏற்பாடு.

Featured Replies

resize_20130119084323.jpg

 

 

ஜூனா அகாடா என மொத்தம் உள்ள 13 வகை சாதுக்கள் ராஜ குளியல் போட்டனர். அவர்கள் நீராடிய பிறகே பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

 

''இங்கே நீராடினால் பாவங்கள் தீரும் என் பதால் வந்திருக்கிறேன். சாதுக்கள்தான் இந்த கும்ப மேளாவின் வி.ஐ.பி-க்கள். எந்த நேரமும் ஒரு கையை உயர்த்தித் தியானம் செய்யும் பாபா, உலக அமைதிக்காக இரவு பகலாக விழித்து இருக்கும் பாபா, பல வருடங்களாக ஒரு காலில் நின்று தியானம் செய்யும் பாபா, ஊசிப் படுக்கை பாபா, கயிறு பாபா, நான்கு அடி நீளக் கூந்தல்கொண்ட சந்நியாசினி எனப் பலவகைச் சாதுக்களை ஒரே இடத்தில் காண, கும்ப மேளாவைத் தவிர வேறு இடம் கிடைக்காது. மனிதனாகப் பிறந்த ஒவ்வொரு​வரும் வாழ்க்கையில் ஒரு முறையாவது கும்ப மேளாவுக்கு வர வேண்டும்'' என்கிறார் உத்தரகண்ட் மாநிலத்தில் இருந்து வந்த சுசில்குமார் பாதக்.

 

ஜூனா அகாடாவின் நாகா சாதுக்கள் தங்கியுள்ள கூடாரங்களில் அனுமதி இல்லாமல் யாரும் நுழைய முடியாது. சாதுக்களையே பாதுகாப்புக் காவலர்களாகப் பணி அமர்த்தி உள்ளனர். மொத்தம் ஆறு முக்கியப் புனிதக் குளியல்கள் இந்த கும்ப மேளாவில் உண்டு. முதலாவது மட்டும் கடந்த 14-ம் தேதி மகர சங்கராந்தியில் முடிந்து இருக்கிறது. அடுத்து, ஜனவரி 27-ம் தேதி பவுசு பூர்ணிமா, பிப்ரவரி 10-ம் தேதி மவுணி அமாவாசை, 15-ம் நாள் வசந்த் பஞ்சமி, 25-ம் தேதி மாகி பூர்ணிமா மற்றும் மார்ச் 10-ம் தேதி மகா சிவராத்திரி என ஐந்து குளியல்களும் தொடர்ந்து நடக்கும். இதில், மவுனி அமாவாசை அன்று மட்டும் சுமார் மூன்று கோடி மக்கள் வருவார்கள் என்கிறார்கள்.

 

கும்ப மேளா அதிகாரிகளில் ஒருவரான ஓ.பி.ஸ்ரீவாத்சவாவிடம் பேசினோம். ''கும்ப மேளாவில் பலர் காணாமல் போவது வழக்கம். இந்தமுறை அதைத் தடுக்கும் வகையில் குளோ பல் மேப்பிங் சிஸ்டம், வை-மேக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர்களை அரசு அறி முகப்படுத்தி உள்ளது. இதன்மூலம் எத்தனை பேர் நீராடுகிறார்கள், எத்தனை பேர் கரை ஏறினர் என்பதைக் கண்டு​பிடிக்கலாம்'' என்றார்.

 

கங்கை நதி பாயும் ஐந்து மாநிலங்களான உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காள முதல்வர்​களையும் கலந்துகொள்ள வைக்க முயற்சிகள் நடக்கின்றன. அத்துடன் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அரசியலும் அரங்கேறாமல் இல்லை.

 

துவாரகா பீடம் மற்றும் ஜோதி பீடத்தின் சங்கராச்சாரியரான சுவாமி சொரூபானந்த், நான்கு சங்கராச்சாரியார்களுக்குத் தனி இடம் ஒதுக்காதது உட்பட சில காரணங்களுக்காக கும்ப மேளாவைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார். இவரைச் சமாதானப்படுத்தி அழைத்து வரும் முயற்சிகளும் உ.பி. அரசு தரப்பில் நடக்கிறது. சோனியா ஒரு முறை சொரூபானந்தாவிடம் ஆசி வாங்கினார். அதனால், அவர் காங்கிரஸ் ஆதரவாளர் என்ற  கோணத்திலும் இந்தப் பிரச்னை பார்க்கப்படுகிறது. கும்ப மேளாவில் குளிக்கும் சாக்கில் அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த முறையும் இந்து ஓட்டுக் களை அள்ளத் திட்டம் போடுகின்றனர். இந்தப் பட்டியலில் பி.ஜே.பி. தலைவர்களுடன் சேர்த்து சோனியா, அகிலேஷ் சிங், முலாயம் சிங் ஆகியோரின் பெயர்களும் இருக்கின்றன. அத்துடன், ராகுல் மற்றும் பிரியங்காவையும் அழைத்துவந்து குளிக்க வைக்கும் முயற்சியில் உ.பி-காங்கிரஸ் தலைவர்கள் சிலர் தீவிரம் காட்டுகிறார்கள்.

 

''சாதுக்கள் சபைத் தலைவர்களை காங்கிரஸ், பி.ஜே.பி. மற்றும் சமாஜ்வாடி என பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பார்த்து ஆசி பெற்று தங்கள் வசப்படுத்துகிறார்கள். இத்துடன் அவர்​களுக்கு நிதி உதவியும் கோடிக்கணக்கில் கிடைத்து விடுகிறது. மகர சங்கராந்தி நாளுக்கு முந்தைய சில தினங்களில் சாதுக்கள் நடத்திய ஊர்வலங்களும், அவர்கள் வந்த சொகுசு வாகனங்களுமே அதற்கு சாட்சி. ஒவ்வொரு சபையும் தன் பலத்தைக் காட்ட லட்சக்கணக்கில் செலவிடுகிறது. இங்கு சாதுக்கள் தங்கி இருக்கும் டென்ட்கள், நட்சத்திர ஓட்டல் அந்தஸ்துக்குக் குறைந்தவை அல்ல. இவ்வளவு பணம் சாதுக்களிடம் எப்படி வந்தது என்பதை யோசித்தாலே போதும். சாதுக்களின் நட்பை வைத்து அரசியல் கட்சிகள் தம் தேவைக்கு ஏற்ப கும்ப மேளாக்களில் பிரச்னைகளைக் கிளப்புவார்கள். இப்போது என்ன பிரச்னைக் கிளம்பப்போகிறதோ?'' என்று எதிர்பார்ப்பைக் கூட்டுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

 

கும்ப மேளா நிம்மதியாய் முடிந்தால் போதும்!

 

Junior Vikatan.com

 

 

 

மேலும் இந்திய, உலக செய்திகளுக்கு....

  • கருத்துக்கள உறவுகள்

 

 

இந்துக்களின் ஓட்டுகளை பெறுவதற்காக பிரியங்காவை கும்பமேளாவில் குளிக்க வைக்க காங்கிரஸார் ஏற்பாடு.

கும்ப மேளா முடிச்சு தமிழ்நாட்டுப்பக்கம் கூட்டி வந்து ஒருக்காகூவத்திலை இறங்க ஏற்பாடு பண்ணுங்க...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.