Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்களமயமாக்குகிறது இலங்கை அரசு .. தவிக்கும் ஈழத் தமிழர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சிங்களமயமாக்குகிறது இலங்கை அரசு .. தவிக்கும் ஈழத் தமிழர்கள்
Posted by: Sudha Published: Tuesday, January 22, 2013, 12:27 [iST]
கொழும்பு: ஈழத்தை முற்றிலும் சிங்களமயமாக்கும் முயற்சிகளை இலங்கை அரசு ரகசியமாக தொடங்கி விட்டது. முதல் கட்டமாக தமிழ்ப் பெயர்களில் உள்ள நகரங்களின் பெயர்களை சிங்களத்தில் மாற்றவுள்ளது. இதற்காக 89 நகரங்களின் பெயர்களைத் தேர்வு செய்துள்ளது சிங்கள அரசு.
ஈழப் போரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஈழத்தை சிங்களர்கள் கைப்பற்றி முழுமையாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். அங்கு குவிக்கப்பட்ட ராணுவத்தினர் இன்னும் போகவில்லை. தமிழர்கள் அனாதைகளாக்கப்பட்டு விட்டனர். அடுத்தவர் கையை ஏந்திப் பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஒன்றுமில்லாமல் போய் விட்ட தமிழர்களை மேலும் கஷ்டப்படுத்தும் வகையில், தமிழ் நகரங்களின் பெயர்களையெல்லாம் சிங்களமயமாக்கும் முயற்சிகளை இலங்கை அரசு தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக 89 நகரங்களின் பெயர்களை சிங்களத்தில் மாற்றவுள்ளனராம். கடந்த அக்டோபர் மாதம் இலங்கை அரசானது ஒரு ரகசிய சுற்றறிக்கையை தயாரித்துள்ளது. இதன் அடிப்படையில் 89 தமிழ் நகரங்களுக்கு சிங்களப் பெயரைச் சூட்ட இலங்கை அரசு முடிவு எடுத்துள்ளது.
22-1358837288-sri-lanka-600.jpg
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தன் ஐயாவுக்கு  இந்தியாவிலை கண் ஒப்பிறேசன் எல்லாம் நல்லவடிவாய் முடிந்சுதாம்.........இப்ப அவருக்கு கண் அந்தமாதிரி கிளியர்........இனி சிங்களவனாலை ஒண்டும் ஏமாத்தேலாது.....

  • கருத்துக்கள உறவுகள்
சம்பந்தன் ஐயாவுக்கு  இந்தியாவிலை கண் ஒப்பிறேசன் எல்லாம் நல்லவடிவாய் முடிந்சுதாம்.........இப்ப அவருக்கு கண் அந்தமாதிரி கிளியர்........இனி சிங்களவனாலை ஒண்டும் ஏமாத்தேலாது.....

கண் நல்ல கிளியராக இருக்காம் ஆனால் இப்போது சம்பந்தன் ஐயாவுக்கு மூளையில் பிரச்சனையாம்.  

397552_402889746464279_492490320_n.jpg

 

 

89 தமிழ் நகரங்களுக்கு சிங்களப் பெயரைச் சூட்ட சிறீலங்கா அரசு முடிவு எடுத்துள்ளது!
==========================
============


இனி இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்கள் அம்மாவை அம்மே என்று தான் கூப்பிடவேண்டிய நிலை தோன்றவுள்ளது. இது உண்மை தான் ஆச்சரியப்படவேண்டாம் தமிழர்களே ! கடந்த அக்டோபர் மாதம் சிறீலங்கா அரசானது ஒரு இரகசிய சுற்றறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது. இதன் அடிப்படையில் 89 தமிழ் நகரங்களுக்கு சிங்களப் பெயரைச் சூட்ட சிறீலங்கா அரசு முடிவு எடுத்துள்ளது.

வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கொட்டை : பட்டகொட்ட என்றும்...... பருத்தித்துறையை பேதுருதொடுவ என்றும்..... நைனா தீவு நாகதீப என்றும்..... கிளிநொச்சி கரணிக என்றும் ...... முல்லைத்தீவு மோலடோவா என்றும் மாற்றப்படவுள்ளது தற்போது ஆதாரங்களோடு அம்பலமாகியுள்ளது. சுமார் 89 தமிழ் நகரங்கள் படிப்படியாக மாற்றம் பெறவுள்ளது என்றால் நினைத்துப் பார்க்க முடியுமா ? இனி தமிழர்கள் இலங்கையில் வாழத் தான் முடியுமா ? ஈழத் தமிழர்களுக்கு ஒரு பாரிய அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பதனை எத்தனை தமிழர்கள் உணர்கிறார்கள் ? என்று தெரியவில்லை. ஆனால் தற்போது நடைபெறவுள்ள விடையமானது இலங்கையில் விடுதலைப் புலிகள் வெல்லப்பட்டதை விட மிகவும் அபாயகரமான ஒரு செயலாகக் கருதப்படுகிறது !

இலங்கையில் உள்ள 89 தமிழ் நகரங்கள் எவ்வாறு மாற்றப்படவுள்ளது என்பதனை தமிழ் மக்களாகிய நீங்களும் ஒரு முறை பாருங்கள் ! இனி உங்கள் சொந்த ஊர்களை நீங்கள் பாவிக்க முடியாத நிலை தோன்றும் ! உங்கள் பிள்ளைகளுக்கு இப்படி ஒரு ஊர் இருந்தது என்று தான் இனி நீங்கள் கூறவேண்டி இருக்கும். பிறந்த ஊர் ... பிறந்த நாடு ... பிறந்த மண் எல்லாவற்றையும் தொலைத்த ஒரே இனம் எம் தமிழ் இனமாகத் தான் இருக்கும் ! என்ன பாவம் செய்தோமோ தெரியவில்லை... ? இவை அனைத்தும் இலகுவாக நடக்க சிங்கள அரசுக்கு துணை நிற்ப்பதும் சில தமிழர்கள் தான் ! இவர்களின் நண்பர்களே புலம்பெயர் நாடுகளில் மேலும் சிக்கலை ஏற்படுத்துகிறார்கள். இதனால் புலம்பெயர் தமிழ் சமூகம் வேறு திசையில் செல்கிறது. இதேவேளை இந்த இடைவெளியைப் பயன்படுதி சிங்களம் தாம் நினைத்ததை சாதித்து முடிக்கிறது. எனவே இத் தருணத்திலாவது நாம் ஒன்றுபடவேண்டியது எவ்வளவு அவசியம் என்பதனை உணருங்கள்.

 

- மூலம்: முகநூல் -
 

ஒன்றுக்கும் பயப்பிட வேண்டாம் புலம் பெயர்ந்த தமிழர்கள் எல்லாம் பார்த்துக்கொள்வார்கள் .தலைவர் கூட அவர்களைத்தானே இறுதியில் நம்பினவர் .யாழிலேயே பலரை வைத்துக்கொண்டு இப்படியெல்லாம் யோசிக்ககூடாது. 

ஒன்றுக்கும் பயப்பிட வேண்டாம் புலம் பெயர்ந்த தமிழர்கள் எல்லாம் பார்த்துக்கொள்வார்கள் .தலைவர் கூட அவர்களைத்தானே இறுதியில் நம்பினவர் .யாழிலேயே பலரை வைத்துக்கொண்டு இப்படியெல்லாம் யோசிக்ககூடாது. 

இங்கும் நக்கலா அண்ணா? :D

 

புலம்பெயர் தமிழர்கள் சர்வதேசத்தின் கவனத்துக்கு இதை ஆதாரத்துடன் சமர்ப்பிக்கவாவது முயல்வார்கள்.

சரி புலம்பெயர் தமிழர்கள் பார்ப்பது இருக்கட்டும். நீங்கள் சப்போர்ட் பண்ணுபவர்கள் கூட நாட்டில் இருக்கிறார்கள் தானே. அவர்கள் இதற்கு என்ன செய்கிறார்கள் அல்லது செய்யப்போகிறார்கள்? :icon_idea:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.