Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

48 மணிநேர தடுத்துவைப்பும்: 15 தவறுகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
48 மணிநேர தடுத்துவைப்பும்: 15 தவறுகளும்
செவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2013 11:35 
-அழகன் கனகராஜ்
 
பிடியாணையின்றி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்கும் அதிகாரத்தை பொலிஸாருக்கு வழங்கும் சட்டமூலமொன்று நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது.
 
பிடியாணையின்றி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தாமல் 24 மணித்தியாலங்கள் மட்டுமே தடுத்து வைத்து விசாரிக்கலாம் என்றிருந்த சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுடனேயே குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது.
 
இந்த சட்டமூலத்தின் 8 ஆம் வாசகமானது அரசியலமைப்புக்கு அமைவாக இல்லையெனவும் இதனால் இந்த குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தை விசேட பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
பிடியாணையின்றி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவரை 48 மணித்தியாலங்கள் தடுத்துவைப்பதற்காக 15 வகையான தவறுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவையாவன...
 
1.    கொலை.
2.    கொலையாகாத குற்றமுடைய மரணம் (கைமோச கொலை).
3.    கொலை முயற்சி.
4.    கொலை புரிவதற்காக ஆட்கவர்தல் அல்லது ஆட்கடத்தல்.
5.    தவறாக ஆடைத்துவைக்கும் நோக்கில் ஆளொருவரை ஆட்கடத்தல் அல்லது ஆட்கவர்தல்.
6.    கடுங்காயத்திற்கு உட்படுத்தும் உளக்கருத்துடன் (நோக்கத்துடன்) ஆட்கடத்தல் அல்லது ஆட்கவர்தல்.
7.    ஆளொருவரை மறைத்துவைத்தல் அல்லது அடைத்துவைத்தல்.
8.    பாலியல் வல்லுறவு.
9.    மரணத்தை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு புரியப்படும் திருட்டு.
10.    மரணம் அல்லது கடுங்காயம் விளைவிக்கும் வகையில் கொள்ளை.
11.    மரணம் விளைவிக்கக்கூடிய ஆயுதந்தாங்கிய படுகொலை.
12.    மேற்கூறப்பட்ட எவையேனும் தவறுகளுக்கு புரியும் முயற்சி.
13.    வெடிப்பொருட்களை, தீங்குவிளைவிக்கும் ஆயுதம் ஒன்றை அல்லது துவக்கு ஒன்றைப் பயன்படுத்தி        புரியப்படும் தவறு.
14.    மேற்கூறப்பட்ட தவறொன்றுக்கு உடந்தையாக செயற்படல்.
15.    மேற்கூறப்பட்ட தவறொன்றுக்கு உடந்தையளிப்பதற்கு அல்லது தவறைப்புரிவதற்கு சூழ்ச்சி செய்தல்.
 
இந்த குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நீதியமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதைவிட கடத்தினால், எத்தனை நாளும் வைத்திருக்கலாம்,

 

இவன்களும் இவன்களின் சட்டமும்.

 

தமிழர் என்றால் எந்த சட்டத்தையும் கான்ஷடபிள் கூட மாற்றியமைக்கலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
48 மணிநேரம் காவல்நிலையத்தில் தடுத்துவைக்கும் சட்டமூலம் 110 வாக்குகளால் நிறைவேற்றம்!
ஜன 22, 2013
 
பிடியாணையின்றி காவல்துறையால் கைது செய்யப்பட்ட ஒருவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாமல் 48 மணித்தியாலங்கள் காவல்நிலையத்தில் தடுத்துவைக்கலாம் என்ற குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை சட்டமூலம் 77 மேலதிக வாக்குகளினால் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
 
இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 110 வாக்குகளும் எதிராக 33 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளது.
சிறீலங்காவில் எந்தா ஒரு சந்தேக நபரினையும் கைதுசெய்து 48 மணி நேரங்கள் காவல் நிலையத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் அதன் பின்னரே நீதி மன்றில் முன்னிலைப்படுத்தப்படலாம் என்ற சட்டத்தினை சிறீலங்கா அரசு நிவேற்றியுள்ளது.
வடக்கு கிழக்கில் தமிழ்மக்களை கைதுசெய்து காவல்துறை நிலையங்களிலே கடுமையான விசாரணைக்கு உட்படுத்தலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழர்களை இலக்கு வைக்கும் இந்த சட்டம் என்றாலும் நாளை இதில் சிங்களவர்களும் கைதாகலாம்.

5.    தவறாக அடைத்துவைக்கும் நோக்கில் ஆளொருவரை ஆட்கடத்தல் அல்லது ஆட்கவர்தல்.

 

இலங்கை அரசையே 48 மணித்தியாலம் உள்ளே போடவேண்டும்.

 

 

புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் கூட இந்த  சட்டத்தின் கீழ் கைதாகி அடைக்கப்படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சுத்தி வளைத்து இத்தனை பட்டியல்

 

தமிழனாக இருக்கணும்  என்று மட்டும் போட்டால் காணும். :(

இவர்கள் தமக்கேற்ற வகையில் சட்டத்தை கையாள்வார்கள். அதிகளவில் தமிழர்கள் மேல் தான் இந்த சட்டம் செயற்படுத்தப்படும். பெண்களும் இதனால் பாதிக்கப்படலாம். :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
48 மணிநேரத்தை அரசு கொண்டுவந்தது ஏன்?: கிரியெல்ல
வியாழக்கிழமை, 24 ஜனவரி 2013 02:13 0 COMMENTS
பிடியாணையின்றி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தாமல் 48  மணித்தியாலங்கள் தடுத்துவைக்கலாம் என்ற குற்றவியல் நடவடிக்கைமுறை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தை அரசாங்கம் ஏன்? கொண்டுவந்தது. என்பது சகலருக்குமே புரியும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
 
எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
 
யுத்தத்திற்கு பின்னர் கடுமையான சட்டங்களை குறைத்து சுதந்திரம் மற்றும் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கு பதிலாக குற்றவியல் குற்றவியல் நடவடிக்கைமுறை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி என்ன? செய்யபோகின்றது. என்பதனை சகலரும் அறிந்து வைத்துள்ளனர்.
 
ஏகாதிபத்திய பயணத்தை மேற்கொள்வதற்கே இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் பொலிஸ், தேர்தல் திணைக்களம், சட்டவாக்கம் மற்றும் நீதிமன்றம் உள்ளிட்டவை நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதற்கு பின்னர் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை இரண்டாவது தவணைக்கு நீடித்துக்கொள்ளும் வகையில் புதிய சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டது. அதற்கு பின்னர் தனியார் சொத்துக்களை கைப்பற்றுவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது.
 
நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பயன்படுத்திக்கொண்டு மக்களுக்கு இடையூறுகளை விளைவிக்கும் சட்டங்களை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்வதற்கே குற்றவியல் நடவடிக்கை முறை சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொண்டுள்ளது.

இந்த சட்டத்தை பற்றி UNP,JVP அதிகம் அலட்டிக்கொள்ளத்தேவை இல்லை. இது புத்த பிக்குகளுக்காக கொண்டுவரப்பட்டது. இலங்கை பௌத்த சிங்கள நாடு அல்ல என்பதை அவர்கள் சில சமயம் மறந்து போகிறார்கள். இதனால் அரசு கைமுணுப்பாகம் மெல்ல மெல்ல நகரத்தொடங்க அவர்கள் இடைஞ்சல் கொடுக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.