Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"இலங்கைக்கு இன்று நவநீதம் காய்ச்சல்'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுக்கு நேர்மாறாகச் செயற்பட்டவாறு ஐ.நா.வுக்கு கொடுத்த வாக்குறுதி எதனையும் நிறைவேற்றாதுள்ள இலங்கைதரப்பு இன்று  ஐ.நா.வையும் அதன் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையையும் திட்டித் தீர்க்கின்றது. இவர்களுக்கு இன்று நவநீதன் காய்ச்சல் பிடித்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற அதிகாரப்பகிர்வு ஐக்கிய இயக்கம் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய மனோகணேசன் மேலும் கூறியதாவது,


13 ஆம் திருத்தத்தை அமுல் செய்து அதை மேலும் அபிவிருத்தி செய்து அரசியல் தீர்வு காண்பது, வட மாகாணசபை தேர்தல், காணாமல் போனோர் விவகாரம், சரணடைந்தோர் விவகாரம், கைது செய்து வைக்கப்பட்டிருப்போரது வழக்குகளை துரிதப்படுத்துவது, வடக்கிலிருந்து இராணுவ பிரசன்னம் குறைப்பு ,சிவில் நிர்வாகத்தில் இராணுவ தலையீடு, போரில் மரணமடைந்தவர்களை நினைவுகூறும் உரிமை, குறிப்பிட்ட போர் குற்ற விசாரணைகள், புனர்வாழ்வுக்கு பின் விடுதலையாவோர் மீண்டும் கைதாகாமை, ஒரு மாகாணத்தின் இனம்பரம்பலை மாற்றியமைக்காத காணி கொள்கை ஆகியவை தொடர்பாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ள சிபாரிசுகளை நிறைவேற்றுவதாக அரசாங்க பிரதிநிதிகள் ஐ.நா. செயலாளர் நாயகத்திடமும் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவிடமும் வாக்குறுதியளித்துள்ளார்கள்.
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூனுக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவுக்கும் வழங்கிய இந்த வாக்குறுதிகள் எதையும் இன்றுவரை நிறைவேற்றாத இந்த அரசாங்கத்தின் அமைச்சர்களும்,அடிவருடிகளும் தான் இன்று ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதன்பிள்ளையை திட்டிதீர்க்கிறார்கள். இது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. இவர்களுக்கு இன்று நவநீதன் காய்ச்சல் பிடித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் நெருங்க நெருங்க இந்த காய்ச்சல் இன்னும் அதிகரிக்கும்.


2009 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி யுத்தம் முடிந்தவுடன் இலங்கை வந்த ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூனுடன் இணைந்து இலங்கை ஜனாதிபதி ஒரு கூட்டறிக்கை வெளியிட்டார். அதில் 13 ஆம் திருத்தத்தை அமுல் செய்து அதை மேலும் அபிவிருத்தி செய்து அரசியல் தீர்வு காண்பதாக சொல்லப்பட்டது . அது எள்ளளவும் இதுவரை செய்யப்படவில்லை.


அது மாத்திரம் அல்ல 13 ஆம் திருத்தம் குறைக்கப்பட்டு அதில் உள்ள அதிகாரங்கள் மீளப்பெறும் போக்கை பகிரங்கமாக காண்கிறோம். வடக்கில் இன்னும் மாகாணசபை தேர்தல் இல்லை. நாடு முழுக்க இருக்கின்ற மாகாணசபைகள் வடக்கில் இல்லை, இதுதான் ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதியின் இன்றைய இலட்சணம்.


2012 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் நடந்த ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கை அரசாங்க தூதுக்குழுவினால் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு வழங்கிய அறிக்கையில் உள்ள சிபாரிசுகளை நிறைவேற்றுவதாக ஐ.நா.வுக்கு அரசாங்கம் உறுதியளித்தது.


இந்த உறுதிமொழிகளை அமைச்சர்கள் மகிந்த சமரசிங்க, ஜி.எல்.பீரிஸ் ஆகியோருடன் இன்றைய பிரதம நீதியரசர் மொஹான் பீரிசும் சேர்ந்து வழங்கினார். பிரதம நீதியரசராக மொஹான் பீரிசை நாம் ஏற்றுகொள்ள மாட்டோம், ஆனால் அரசு அவரை நியமித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் அவர் முன்னாள் சட்ட மா அதிபர், அமைச்சரவையின்  சட்ட ஆலோசகர் அது மட்டும் அல்ல , நல்லிணக்க ஆணைக்குழு சிபாரிசுகளை அமுல்படுத்தும் தேசிய மனித உரிமை செயலணியிலும் மொஹான் பீரிஸ் பெரும் பங்கு வகித்ததை அவருக்கு நான் ஞாபகப்படுத்துகின்றேன்.
 

வடக்கில் இராணுவ பிரசன்னத்தை படிப்படியாக குறைக்க வேண்டும் என்று நல்லிணக்க ஆணைக்குழு சொல்கிறது. இவர்கள் இன்று வடக்கில் இராணுவ பிரசன்னம் அதிகரித்து. புதிய இராணுவ முகாம்களை அமைக்க காரணிகளை அபகரித்து கொண்டிருக்கிறார்கள்.
சிவில் நிருவாகத்தில் இராணுவ தலையீடு குறைய வேண்டுமென அந்த ஆணைக்குழு சொல்கிறது. இன்று யாழ் கட்டளை தளபதி ஹத்துருசிங்கவை மீறி வட பகுதி அரச அதிபர்கள் செயல்பட முடியாதுள்ளது. வட மாகாண சபை செயலாளர் மற்றும் அதிகாரிகள் தங்களுக்கான உத்தரவுகளை முன்னாள் இராணுவ அதிகாரி, ஆளுநர் சந்திரசிறியிடம் தான் பெறுகிறார்கள்.
 

காணாமல் போனோரது குடும்பங்களுக்கு பண நஷ்டஈடு உட்பட உரிய பதில்கள் வழங்கப்பட வேண்டும் என நல்லிணக்க ஆணைக்குழு சொல்கிறது. ஆனால் நடப்பது என்ன? சரணடைந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் பெயர் பட்டியலை வெளியிடும்படி நல்லிணக்க ஆணைக்குழு சொல்கிறது. இது இதுவரை நடக்கவில்லை தமது உறவுகள் உயிரோடு இருக்கிறார்களா என தேடிதிரியும் குடும்பத்தவர்களுக்கு எந்த பதிலும் இல்லை
கைது செய்து சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் துரித கதியில் விசாரிக்கப்பட்டு இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும் என அந்த ஆணைக்குழு சொல்கிறது. கைதிகள் பிரச்சினையில் நாம் சொல்லும் பிணை அல்லது புனர்வாழ்வு அல்லது விடுதலை எதுவும் நடைபெறவில்லை ஆனால் தமிழ் கைதிகள் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்கள்.
 

போரில் மரணமடைந்தவர்களுக்காக ஒரு நாளை அறிவித்து உயிரிழந்தவர்களை நினைவுகூற வேண்டுமென நல்லிணக்க ஆணைக்குழு சொல்கிறது. ஆனால் யுத்தம் முடிந்து நான்கு வருடமாகியும் இன்னும் அப்படி ஒருநாள் அறிவிக்கப்படவில்லை இன்று தாமாகவே தமது உறவுகளை நினைவுகூர்ந்தவர்களை தூக்கி புனர்வாழ்வு முகாம்களில் அடைத்துள்ளீர்கள்.
 

ஒரு மாகாணத்தின் இன குடிபரம்பலை செயற்கையாக மாற்றி அமைக்காத காணிக்கொள்கை பற்றி கற்றுக்கொண்ட ஆணைக்குழு சொல்கிறது. ஆனால் நீங்கள் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை செய்கிறீர்கள் நிலங்களை அபகரிக்கிறீர்கள்.
 

மூதூர் தொண்டர் நிறுவன படுகொலைகள், திருகோணமலை மாணவர் படுகொலைகள் ஆகியவை உட்பட குறிப்பிட்ட சம்பவங்கள் தொடர்பில் உள்ளூர் சட்டப்படி விசாரணைகள் நடைபெற வேண்டுமென ஆணைக்குழு சொல்கிறது. இது தொடர்பாக இங்கு இன்று என்ன நடக்கிறது? எதுவும் இல்லை .
புனர்வாழ்வு  அளிக்கப்பட்டு விடுதலைபெறும் முன்னாள் போராளிகள் மீண்டும் கைது செய்யப்படாத இயல்பு வாழ்க்கை என்பதை பற்றி நல்லிணக்க ஆணைக்குழு சொல்கிறது. ஆனால் இன்று இங்கே என்ன நடக்கிறது? புனர்வாழ்வு பெற்று வீடு திரும்பும் முன்னாள் போராளிகள் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுகிறார்கள்.
 

எனவே ஐ.நா. சபைக்கு கொடுத்த எந்த ஒரு வாக்குறுதியையும் நீங்கள் இதுவரை அமுல் செய்யவில்லை. இது உங்களுக்கு நன்கு தெரியும் இது ஒரு உள்நாட்டு, வெளிநாட்டு ஏமாற்று மோசடி, வஞ்சகம் இந்த மோசடி மோடி மஸ்தான் வேலையை மறைக்கமுடியாமல் நீங்கள் இன்று ஐ.நா. சபையையும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதன்பிள்ளையையும் திட்டி தீர்க்கிறீர்கள்.
 

நவநீதன் காய்ச்சல் பிடித்து கத்துகிறீர்கள் மார்ச் மாதம் நெருங்க இந்த  காய்ச்சல் அதிகரிக்கின்ற போக்கை நாம் பார்க்கிறோம். உங்கள் பொய்யும், புரட்டும் இனி நீண்ட காலம் துணை வராது என இந்த அரசாங்கத்துக்கு கூறி வைக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

http://www.thinakkural.com/index.php?option=com_content&view=article&id=1703:q---&catid=54:local&Itemid=458

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.