Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூடு விட்டுக் கூடுபாயும் பயங்கரவாதச் சட்டம்

Featured Replies

அண்மையில் முன்னாள் பிரதம நீதியரசர் திருமதி ஷிராணி பண்டாரநாயக்க அவர்களை பதவியிலிருந்து நீக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தொடர்பாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தனது வன்மையான அதிருப்தியை வெளியிட்டது.

 

 

அப்போது ஊடகவியலாளர்களால் இலங்கைக்கு வழங்கப்படும் அமெரிக்க உதவிகள் பற்றிக் கேள்வி எழுப்பப்பட்ட போது 2012 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நிதியுதவிகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டுக்கான நிதியுதவி தொடர்பாக அவ்விடயம் தற்சமயம் பரிசீலனையில் இருப்பதாகவும், அது தொடர்பாக இச்சமயத்தில் பதிலளிக்க முடியாதெனவும் தெரிவிக்கப்பட்டது.


இச்செய்தி வெளிவந்ததை அடுத்து இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் அமெரிக்கா இலங்கைக்கான உதவிகளை நிறுத்தினால் தங்களுக்கு சீனா உதவி வழங்கும் என சவால்விட்டுள்ளார்.

இலங்கையின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாகவும் சர்வதேசத்துடனான உறவுகள் குறித்தும் ஒரு அரச பணியாளரான பாதுகாப்புச் செயலாளர் தீர்மானமெடுக்கவோ கருத்து வெளியிடவோ உரிமை உண்டா எனக் கேள்வி எழலாம். ஆனால் அவர் அப்படி நடந்து கொள்வது இதுதான் முதற் தடவையல்ல.


தற்சமயம் இலங்கையில் குடிசார் உரிமைகள் தொடர்பாகக் காட்டப்படும் அக்கறை போதுமானதாக இல்லையெனவும் கருத்துகளை வெளிப்படுத்தல், மனித உரிமைச் செயற்பாடுகள், சுதந்திரமான நீதித்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ளல் என்பன தொடர்பான உரிமைகள் அனு மதிக்கப்படுவது திருப்திகரமாக இல்லையெனவும் அமெரிக்க தரப்பிலிருந்து காட்டமான ஒரு கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

 

இப்படியாக இலங்கையில் ஜனநாயக வழிமுறைகள் நிராகரிக்கப்படுவது தொடர்பாக அமெரிக்கா,  கனடா, பிரிட்டன் போன்ற பல நாடுகளிலிருந்தும் கண்டனங்கள் எழும் வேளையில் இலங்கை நாடாளுமன்றத்தில் மேலும் ஒரு புதுச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


இச்சட்டத்தின் மூலம் பொலிஸார் சில குற்றங்கள் தொடர்பாக நீதிமன்ற அனுமதியின்றியே சந்தேக நபர்களை பொலிஸ் நிலையத்தில் 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய முடியும். கடந்த 100 ஆண்டுகளாக இருந்து வந்த சட்டத்தின் படி ஒருவரைப் பொலிஸ் நிலையத்தில் 24 மணிநேரமே தடுத்து வைக்க முடியும்.

 

ஏற்கனவே அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பன மூலம் ஒருவரைக் கைது செய்யவும், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படாமலே எவ்வளவு காலமும் தடுத்து வைத்து விசாரிக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. போர் முடிவுக்கு வந்த பின்பு தொடர்ந்து விடுக்கப்பட்ட சர்வதேச அழுத்தங்கள் காரணமாக அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டது.


ஆனால் அதன் சில விதிகள் பயங்கரவாத தடைச் சட்டத்திற்குள் புகுத்தப்பட்டன. தற்சமயம் நாடாளுமன்றத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தால் வழங்கப்பட்ட சில அதிகாரங்கள் சாதாரணக் குற்றவியல் நீதிச் சட்டத்தில் புகுத்தப்பட்டு விட்டன.

 

அதாவது பொலிஸாரோ அல்லது புலனாய்வுப் பிரிவினரோ ஒருவரைத் தடுத்து வைத்து தொடர்ச்சியாக சித்திரவ தைகளுக்கு உட்படுத்தவும் தாங்கள் விரும்பும் வகையிலான ஒப்புதல் வாக்கு மூலங்களைப் பெறவும் இக்காலவரை அவசரகாலச்சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம் போன்ற விசேட சட்டங்கள் வழங்கிய அதிகாரங்களை இப்போது சாதாரண குற்றவியல் சட்டங்கள் வழங்குகின்றன.


இன்னும் சொல்லப் போனால் இத்தகைய மனிதகுல விரோத நடவடிக்கைகளை  மேற்கொள்ளும் அதிகாரம் சட்டம் மாறி சட்டத்திற்கு கூடு விட்டுக் கூடுபாய்வதற்கு  நிலைபெற்றுக் கோலோச்சுகின்றன.

 

குற்றவியல் நடவடிக்கைக் கோவை விசேட ஏற்பாடுகள் சட்டம் நாடாளுமன்றத்தில் 77 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. மூன்றில் இரண்டுக்கு அதிகமான பெரும்பான்மையைக் கொண்ட ஒரு அரசாங்கம் 77 மேலதிக வாக்குகளால் ஒரு பிரேரணையை நிறைவேற்றுவது அப்படி ஒன்றும் பெரிய அதிசயமென்று சொல்லி விட முடியாது.


இச்சட்டம் 15 குற்றச்சாட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் இதைப் பிரயோகிக்க ஒரு உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் அல்லது அதற்கு மேம்பட்ட அதிகாரம் உள்ளவரின் அனுமதி தேவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள குற்றங்கள் ஏற்கனவே உள்ள சட்டங்கள் மூலம் விசாரிக்கப்பட்டு வந்தன. அப்படி விசாரணையை நடத்தி முடிக்க அவகாசம் போதாத பட்சத்தில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் தடுத்து வைக்கப்படும் வாய்ப்பும் வழங்கப்பட்டிருந்தது.


இப்போது 24 மணிநேரம் தடுத்து வைப்பை நீடிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திலிருந்து பறித்தெடுக்கப்பட்டு பொலிஸ் உயர் பீடத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

ஏற்கனவே நீதிச்சேவை தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தேசிய அளவிலும் சர்வதேச மட்டத்திலும் கடும் விமர்சனங்களுக்கு உட்பட்டுள்ள நிலையில் நீதிமன்றுக்கு உள்ள அதிகாரங்களுள் ஒன்று பறிக்கப்பட்டு பொலிஸ் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


பிரதம நீதியரசராக முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டதை அடுத்து இலங்கையின் நீதிச்சேவைகள் சுயாதீனத்தன்மையை இழந்த முடமாக்கப்பட்டு விட்டதாகக் கண்டனங்கள் எழுந்தன.

 

ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையில் காணாமற் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட வெளிநாடு ஒன்றில் உயிருடன் இருப்பதாகத் தெரிவித்த அவர் இலங்கையில் ஒரு நீதிபதி முன் பிரகீத் எங்குள்ளார் என்பது கடவுளுக்குத் தான் தெரியும் எனக் கூறியது தொடர்பாகக் குறிப்பிட்ட பிரகீத்தின் மனைவி இப்படியான ஒருவர் பிரதம நீதியரசரானால் நீதிகிட்டுமா எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.


அது மட்டுமன்றி காணாமற் போனோர் தொடர்பான அமைப்புகள் எதிர்க்கட்சியினர் ஆகியோரும் மொஹான் பீரிஸ் தொடர்பான தமது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியுள்ளனர்.

 

மொஹான் பீரிஸ் அவர்களின் நியமனம் போன்றே இந்தச் சட்ட மூலமும் நீதித் துறையைப் பலவீனப்படுத்தும் ஒன்றாகவே பலரும் கூறுகின்றனர்.


ஏற்கனவே பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு, தேசியப் புலனாய்வுக் கட்டமைப்பு இராணுவப் புலனாய்வுப் பிரிவு போன்ற விசேட அதிகாரம் கொண்ட அமைப்புகள் எவரையும் கைது செய்யவும், காலவரையின்றித் தடுத்து வைத்து விசாரணை செய்யவும் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்றியே புனர்வாழ்வு என்ற பேரில் தடைமுகாம்களுக்கு அனுப்பவும் அதிகாரம் கொண்டுள்ளன.

 

இப்பிரிவுகளில் விசாரணை என்பது கொடிய சித்திரவதைகளுக்கு உட்படுத்தி ஒப்புதல் வாக்குமூலம் பெறுதல் என்பதே அர்த்தமாகும் இப்படியான விசாரணைகளில் கொல்லப்படுபவர்கள் காணமற் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டு விடுவார்கள்.


இப்போது குற்றவியல் நடவடிக்கைச் சட்டக்கோவையின் விசேட ஏற்பாடுகள் அதிகாரங்களை சாதாரண பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்குகிறது. நிறைவேற்று அதிகாரத்துக்கும் நீதித்துறைக்குமிடையே எழுந்த முரண்பாட்டில், நாடாளுமன்றத்தின் முன்றில் இரண்டு பெரும்பான்மை நீதித்துறையின் சுதந்திரமான செயற்பாட்டுக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது.

 

இதற்கெதிரான போராட்டங்கள் தொடர்ந்த போதிலும் நீதித்துறை நிறைவேற்று அதிகாரத்துடன் இணைந்து போகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு விட்டது. அதற்குப் பொருத்தமானவராகவே பிரதம நீதியரசரின் நியமனம் அமைந்துள்ளது என்ற குற்றச்சாட்டையும் எவரும் இலகுவில் மறந்துவிட முடியாது.


இவ்வாறு நீதித்துறை பல வீனப்படுத்தப்படும் ஒரு நிலையில் மறு புறத்தில் இச்சட்டத்தின் மூலம் பொலிஸாரின் அதிகாரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆயுதப் படையினருக்கு ஏற்கனவே அதிக அதிகாரம் வழங்கப்பட்டது மட்டுமன்றி சிவில் நிர்வாகத்திலும் அவர்களின் தலையீடுகள் அதிகரித்துள்ளன

 

குறிப்பாக கிழக்கின் ஆளுநர், திருமலை அரச அதிபர், வடமாகாண சபையின் ஆளுநர் ஆகியோர் இராணுவ அதிகாரிகளே மேலும் வடக்கில் ஒவ்வொரு சிவில் நிர்வாக விடயங்களிலும் படையினரின் தலையீடு இருக்கிறது.

ஒட்டுமொத்தத்தில் இது ஒரு சர்வாதிகார அரசியல் அதிகாரத்தை நோக்கி நகர்த்தப்படுவது தெளிவாகவே வெளிப்படுத்தப்படுகிறது. இதற்கமையவே சட்டவிதிகள் கூடுவிட்டுக் கூடு பாய்கின்றன. பொலிஸ், ஆயுதப்படை என்பன பலப்படுத்தப்படுகின்றன.

 

தமிழ் மக்கள் மீதும் முஸ்லிம் மக்கள் மீதும் புலிகள் மீள் எழுகிறார்கள் எனவும், அல்கெய்தா ஊடுருவி விட்டது எனவும் சில மாயைகளை சிங்கள மக்கள் முன்காட்டி அவர்கள் உட்பட முழு நாட்டையுமே ஒரு சர்வதிகாரப் படுகுழியில் தள்ளும் சதி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கூடு விட்டுக் கூடு பாயும் சட்டங்கள் அவர்களின் கழுத்தையும் நெரிக்கும் நாள்கள் வெகு தொலைவில் இல்லை.


இச்சட்டத்தின் மூலம் பொலிஸார் சில குற்றங்கள் தொடர்பாக நீதிமன்ற அனுமதியின்றியே சந்தேகநபர்களை பொலிஸ் நிலையத்தில் 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய முடியும். கடந்த 100 ஆண்டுகளாக இருந்து வந்த சட்டத்தின் படி ஒருவரைப் பொலிஸ் நிலையத்தில் 24 மணிநேரமே தடுத்து வைக்க முடியும்.

 

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=8675945629624439

  • தொடங்கியவர்

இந்த தடைச்சட்டங்கள் நாளை தம்மையே பதம்பார்க்கும் என்பது சிராணி விடயத்தில் சிங்களவர்களின் ஒரு பகுதியினர் உணர ஆரம்பித்துள்ளனர்.

ரணில் சர்வதேசத்துக்கு அடிமையாய் இருக்கும் சிராணியின் நீதிமன்றம் பாராளுமன்றத்தின் இறமையில் கைவைக்க கூடாது என்றவர்.

 

எதிர்க் கட்சித்தலைவரின் கொள்கை அப்படி இருக்க எத்தனை சிங்களவர்கள் உண்மையான நீதிக்காக குரல்கொடுக்க தாயார்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.